Tuesday, March 03, 2015

அந்தணன் யார்? - உத்யோக பர்வம் பகுதி 42ஆ

Who is a Brahmana! | Udyoga Parva - Section 42b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 2)
பதிவின் சுருக்கம் : அறம் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்துத் திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் வினவுவது; அறப்பயிற்சி மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுமே மனிதனுக்கு வெற்றியைத் தரும் என்று சனத்சுஜாதர் சொல்வது; மண்ணுலகச் செழிப்பு மற்றும் விண்ணுலகச் செழிப்பு ஆகியவற்றைச் சனத்சுஜாதர் சொல்வது ...

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “இவ்வுலகில், சிலர் அறம் பயில்கிறார்கள், சிலர் செயல் அல்லது கர்மத்தைத் துறக்கிறார்கள் (சந்நியாச யோகம் என்று அழைக்கப்படுவதை மேற்கொள்கிறார்கள்). (அறம் பயில்வோரை மதித்து) நான் கேட்கிறேன். தீமையை அழிக்கும் திறன் அறத்திற்கு இருக்கிறதா? அல்லது தீமையால் அது {அறம்} அழிவுக்குள்ளாகிறதா?”


அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “அறத்தின் கனிகள் {பலன்கள்}, (முற்றான) செயலின்மை ஆகிய இரண்டும் அந்த வகையில் (விடுதலை பெறும் வகையில்) பயனுடையதே. உண்மையில், {இந்த} இரண்டும் விடுதலையை அடைவதற்கு உறுதியான வழிமுறைகளே. எனினும், அறிவுள்ள ஒருவன் {ஞானி}, அறிவால் (செயலின்மையால்) வெற்றியை அடைகிறான். மறுபுறம், ஒரு பொருள்முதல்வாதி (செயலால்) தகுதியை {புண்ணியத்தை} அடைந்து, அதன் விளைவால் விடுதலையை அடைகிறான். (அவனது நாட்டத்தின் போக்கில்) அவன் பாவத்துக்கும் ஆட்படுகிறான். நிலையற்றவையான அறம் மற்றும் மறம் {தீமை} ஆகிய இரண்டின் கனிகளையும் {பலன்களையும்} அடையும் செயல்பாடுள்ள ஒரு மனிதன் {செயலாற்றுபவன்}, (அறவோன் மற்றும் பாவி ஆகியோருக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டுக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதால்), தனது முந்தைய அறங்கள் மற்றும் மறங்களின் விளைவால், மீண்டும் செயலுக்கு அடிமையாகிறான். எனினும், செயல்புரியும் ஒரு மனிதன் அறிவுடையவனாக இருந்தால், அவன் தனது பாவங்களை அறச்செயல்கள் மூலம் அழிக்கிறான். எனவே, அறம் வலிமையானதே. எனவே, செயல்பாடுள்ள மனிதனும் வெற்றியடைகிறான்” என்றார் {சனத்சுஜாதர்}.

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “அறம் பயிலும் இருபிறப்பாளர்கள் {துவிஜர்கள்}, தங்கள் சொந்த அறச் செயல்களின் கனிகளால் {பலன்களால்} அடையத்தக்க அழிவற்ற உலகங்களை, அதனதன் படிநிலைகளின்படி {தரவரிசைப்படி} எனக்குச் சொல்லும். அதே போன்ற பிற உலகங்களையும் எனக்குச் சொல்லும். ஓ! கற்ற அய்யா {மேதையே} {வித்வானே}, (மனிதர்களின் இதயத்தால் இயல்பாக விரும்பப்படுவதும், எவ்வளவுதான் தலையிட்டாலும் பாவத்தைத் தருகின்ற) செயல்பாடுகளைக் {கர்மாவை} குறித்து நான் கேட்க விரும்பவில்லை!” என்றான் {திருதராஷ்டிரன்}

{தெய்வீக செழிப்பு}


சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “பலமிக்கவர்கள் தங்கள் பலத்தில் பெருமை கொள்வதைப் போல, தங்கள் யோகப் பயிற்சிகளில் பெருமை கொள்ளும் இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, இங்கிருந்து விடைபெற்றுப் பிரம்மலோகத்தில் ஒளிர்கிறார்கள். வேள்விகளையும், வேதச் சடங்குகளையும் பெருமையுடன் செய்யும் இருபிறப்பாளர்கள், அதன் பலனாக அறிவை அடைந்து, அந்தச் செயலின் விளைவால் இந்த உலகத்தில் இருந்து விடுதலையடைந்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருக்கும் உலகத்திற்குச் செல்கிறார்கள். மேலும் வேதமறிந்தவர்களில் சிலர், (வேதங்களால் விதிக்கப்பட்ட) வேள்விளையும் சடங்குகளையும் செய்வது கட்டாயம் (அவற்றைச் செய்யாமல் விடுவது பாவம்) என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அக வளர்ச்சிக்கு முயல்பவர்கள், வெளிப்புற வடிவங்களில் ஒன்றியிருப்பவர்கள், (அறத்தின் நிமித்தமாகவே இந்தச் சடங்குகளைச் செய்கிறார்கள், குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக இவற்றை அவர்கள் செய்வதில்லை என்பதால்), {இவர்களுக்குச் சில மரியாதைகள் அளிக்கப்பட வேண்டுமென்றாலும்} இவர்கள் மிக உயர்வாகக் கருதப்பட வேண்டியவர்கள் அல்ல.

மழைக்காலத்தில் ஓர் இடத்தில் உள்ள புல்லையும் நாணலையும் போல, ஓர் அந்தணனுக்குத் தேவையான உணவும், நீரும் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கே (சொற்பமான வழிமுறைகளையே கொண்ட இல்லறவாசிகளை வேதனைப்படுத்தாமல்) ஒரு யோகி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் அவன் பசி மற்றும் தாகத்தால் தனது சுயத்தை ஒடுக்காமல் இருக்க வேண்டும்.

ஒருவனின் மேன்மையைத் தெளிவு படுத்தும் இடத்தில், மற்றவனின் வெறுப்பைச் சம்பாதிக்கும் சிரமமும், ஆபத்தும் ஒருவனுக்கு இருந்தால், தனது மேன்மையை அறிவிக்காதவனே அறிவிப்பனை விடச் சிறந்தவனாவான். அடுத்தவன் தனது மேன்மையை வெளிப்படுத்தும்போது, அதைக் கண்டு துன்புறாதவன் அளிக்கும் உணவும், அந்தணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்காமல் உண்ணாதவன் அளிக்கும் உணவும் நீதிமிக்கவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. எப்படி ஒரு நாய் பல சமயங்களில் தன் சொந்த வெளியேற்றங்களையே {கழிவுகளை} உண்கிறதோ, அதே போல அந்த யோகியர், தங்கள் முக்கிய நிலையை வெளிப்படுத்தாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் சொந்த வாந்தியையே {Vomit} உண்கின்றனர்.

{அந்தணன்}


இரத்த உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு, தான் செய்யும் அறப் பயிற்சிகளை அவர்கள் {உறவுகள் கூட} எப்போதும் அறியாதிருக்க விரும்புபவனையே அந்தணன் என்று ஞானியர் அறிகிறார்கள். நிலையற்ற, குணங்களற்ற, மாற்றமற்ற, எந்த வகையான இருமையுமற்ற தனியனான பரமாத்மாவை அறிவதை விட ஓர் அந்தணன் வேறு எதை அறிய வேண்டும்? இத்தகு பயிற்சிகளின் விளைவாக ஒரு க்ஷத்திரியன் பரமாத்மாவை அறிந்து கொண்டு, தன்னைத் {அந்தப் பரமாத்மாவைத்} தனது சொந்த ஆன்மாவிலேயே காணலாம். ஆத்மா நடிப்பதாகவும் சுயத்தில் அதை உணர்வதாகவும் கருதி, ஆன்மாவிடமிருந்து அதன் குணங்களை அபகரிக்கும் ஒரு திருடன் என்ன பாவங்களைத்தான் செய்யமாட்டான்? {ஒரு விதமாக இருக்கும் ஆத்மாவை, மற்றொரு விதத்தில் இருப்பதாக அறிந்து, அந்த ஆத்மாவை அதன் குணங்களிடமிருந்து அபகரிக்கும் ஒரு திருடனால் எந்தப் பாவம் செய்யப்பட்டத்தகாது?}.

ஓர் அந்தணன் முயற்சி அற்றவனாக இருக்க வேண்டும், பரிசுகளை ஏற்கக்கூடாது, நீதிமான்களின் மதிப்பை வெல்ல வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், வேதங்களை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவனால் அறிவை {ஞானத்தை} அடைந்து பிரம்மத்தை அறிய முடியும். மண்ணுலக {மனித} செல்வத்தில் ஏழையாகவும், விண்ணுலக {தெய்வீக} செல்வம் மற்றும் வேள்விகளில் செல்வந்தனாகவும் இருப்பவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிரம்மத்தின் உருவம் {உடல்=சரீரம்} என்றே அவர்கள் கருதப்பட வேண்டும். (வேள்விகளைச் செய்வோர்) விரும்பும் அனைத்து வகையான பொருட்களையும் அளிக்கும் தேவர்களைச் சந்திப்பதில், (வேள்விகள் செய்வதால்) வென்றவனேயானாலும், பிரம்மத்தை அறிந்தவனுக்கு அவன் இணையாக முடியாது. ஏனெனில், வேள்விகளைச் செய்பவனோ முயற்சிக்கு ஆளாகிறான். (அதே வேளையில் பிரம்மத்தை அறிந்தவன் அத்தகு முயற்சிகள் ஏதுமில்லாமலே அவனை {அந்த தெய்வத்தை} அடைகிறானே). செயல்பாடுகள் அற்ற ஒருவன் தெய்வங்களால் மதிக்கப்பட்டால், அவனே உண்மையில் மதிப்படைந்தவனாகச் சொல்லப்படுகிறான். பிறரால் மதிக்கப்பட்டவன், தானே மதிக்கப்பட்டதாக எப்போதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் பிறரால் மதிக்கப்படாத போதும் வருந்தக்கூடாது.

தங்கள் கண் இமைகளைத் திறந்து மூடுவதைப் போலவே, மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகிறார்கள்; கற்றோர் மட்டுமே பிறருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மதிப்பைப் {மரியாதையைப்} பெற்ற ஒருவன் இப்படியே {அதை} நினைத்துக் கொள்ள வேண்டும்.

பாவம் செய்பவர்களும், ஏமாற்றுத்தனமுள்ளவர்களுமாக இருக்கும் இவ்வுலகத்தின் மூடர்கள், மரியாதைக்குத் தகுந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை; மறுபுறம், அத்தகு மனிதர்களுக்கு அவர்கள் அவமரியாதையே செய்கிறார்கள். உலகின் மதிப்பும் தவமும் (மௌனப் பயிற்சிகளும்) ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது. மரியாதைக்குரியவர்களுக்கே இவ்வுலகம் என்றும், அதே வேளையில் தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்களுக்குப் பிற உலகம் என்றும் அறிவாயாக. ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, இவ்வுலகத்தில், மகிழ்ச்சி (உலகின் மதிப்பு) மண்ணுலகச் செழிப்பில் வசிக்கிறது. எனினும், பிந்தையது {மண்ணுலகச் செழிப்பு}, {தெய்வீக அருளை அடையத்} தடையாகும். மறுபுறம், உண்மையான ஞானமில்லாதவனால் தெய்வீகச் செழிப்பை அடையவே முடியாது. இந்த வகைச் செழிப்பை அடைய, காக்க கடினமான பல்வேறு வகையான வாயில்கள் இருக்கின்றன என்று நீதிமான்கள் சொல்கின்றனர். அவை {வாயில்கள்}, உண்மை, நேர்மை, பணிவு, தற்கட்டுப்பாடு, மனத்தூய்மை, நடத்தை, (வேத) அறிவு ஆகியனவாகும். இந்த ஆறும் மாயை அறியாமை ஆகியவற்றை அழிக்கவல்லவையாகும்” என்றார் {சனத்சுஜாதர்}. 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்