Friday, April 10, 2015

சமாதானமே விருப்பம்; போரல்ல! - உத்யோக பர்வம் பகுதி 60

I wish for peace; not war! | Udyoga Parva - Section 60 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 20) {யானசந்தி பர்வம் - 14}

பதிவின் சுருக்கம் : இரு தரப்பு படைகளின் பலம் மற்றும் பலமின்மைகளையும் திருதராஷ்டிரன் நினைத்துப் பார்ப்பது; பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவி செய்வார்கள் என்றும், சமாதானமே தனக்கு விருப்பமானது என்றும் திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது கண்ணையே அறிவாகக் {ஞானமாகக்} கொண்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சஞ்சயனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, நன்மை {எது?} என்றும், தீமை {எது?} என்றும், தான் கருதுவதைக் குறித்துப் பேசினான். தன்னால் இயன்றவரை, நன்மைகள் மற்றும் தீமைகளை விவரமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டவனும், இரு தரப்பின் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாக உறுதி செய்து கொண்டவனும், தனது மகன்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவனும், கல்விமானுமான அந்தப் புத்திசாலி மன்னன் {திருதராஷ்டிரன்}, இரு தரப்புகளின் பலங்களைக் குறித்தும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தான்.

கடைசியாக, மனித வகையிலும், தெய்வீக வகையிலும் பாண்டவர்களே பலத்தோடு இருப்பதாகவும், குருக்கள் {கௌரவர்கள்} பலவீனமாக இருப்பதாகவும் உறுதி செய்து கொண்ட திருதராஷ்டிரன், துரியோதனனிடம், "இந்தப் பதட்டம், ஓ! துரியோதனா, எப்போதும் என்னில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அஃது என்னை விட்டு அகல மறுக்கிறது. அதை நான், எனது கண்களால் காண்பதாக எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. அனுமானத்தால் விளைந்த ஒரு காரியம் அல்ல இந்நம்பிக்கை. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், தங்கள் வாரிசுகளின் மேல் பெரும் பாசத்தைக் காட்டுகின்றன. மேலும், வாரிசுகளுக்கு எது ஏற்புடையதோ? எது நன்மையானதோ? அதைத் தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நன்மை செய்ய விரும்புகிறவர்களின் வழக்கில் எல்லாம் இதுவும் பொதுவாகக் காணப்படுகிறது.

காண்டவ வனத்தில் அக்னி உதவியஅர்ஜுனனும் கிருஷ்ணனும்
நல்லவர்கள், தங்களுக்குச் செய்யப்பட்ட நன்மையைத் திரும்பச் செய்யவும் மற்றும் தங்கள் நலன் விரும்பிகளுக்கு மிகவும் ஏற்புடையவற்றைச் செய்யவுமே எப்போதும் விரும்புகின்றனர். காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தனக்குச் செய்யப்பட்டதை {செய்யப்பட்ட நன்மையைக்} கருதும் அக்னி, குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் இந்தப் பயங்கர மோதலில், அர்ஜுனனுக்குத் தனது உதவியைத் தருவான் என்பதில் ஐயமில்லை. தந்தை பாசத்தால் தர்மனும் {யமனும்}, முறையாக எழுப்பப்பட்ட பிற தேவர்களும் சேர்ந்து பாண்டவர்களின் உதவிக்கு வருவார்கள்.

இடியைப் போன்ற விளைவுகளைக் கொடுக்கும் தேவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்து அவர்களைக் {பாண்டவர்களைக்} காப்பதற்காகவே {நம் மேல்} கோபத்தில் நிறைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

சக்தி கொண்டவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தேவர்களுடன் சேரும்போது, {நமது படையின்} மானுட வீரர்கள், அவர்களைக் காணவும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள்.

தடுக்கப்பட முடியாததும் அற்புதமானதும் தெய்வீகமானதுமான காண்டீவத்தை எவன் தனது வில்லாகக் கொண்டிருக்கிறானோ; பெரியதும், கணைகள் நிறைந்ததும், வற்றாததும், தெய்வீகமானதுமான இரு அம்பறாத்தூணிகளை எவன் கொண்டிருக்கிறானோ; புகை போன்ற செயல்பாடுடையதும், குரங்கு {அனுமன்} படத்தை தெய்வீக வடிவில் கொண்டதுமான கொடி எவனுக்கு உடையதோ; நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியில், ஈடு இணையற்றதும், மேகங்களின் கர்ஜனை போன்ற சடசடப்போசையை மனிதர்களைக் கேட்கச் செய்வதும், உருளும் இடியைப் போல எதிரிகளைப் அச்சங்கொள்ளச் செய்வதுமான தேரை எவன் கொண்டிருக்கிறானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என மக்களால் எவன் கருதப்படுகிறானோ; போர்க்களத்தில் தேவர்களையே கூட வீழ்த்தவல்லவன் எனப் பூமியில் உள்ள மன்னர்கள் எவனை அறிகிறார்களோ; ஐநூறு {500} கணைகளை ஒரே நேரத்தில் எடுத்து, ஒருமுறை கண்மூடித் திறப்பதற்குள், அவற்றைப் பிறர் காணாமல் பெருந்தூரத்திற்கு எவன் அடிப்பானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களான பூமியின் மன்னர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவனென்றும், போரிடத் தயாராக இருந்தால் ஒரே முறையில் ஐநூறு கணைகளை அடிக்க வல்லவன் என்றும், கரங்களின் பலத்தில் கார்த்தவீரியனுக்கு நிகரானவன் என்றும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர மன்னனான சல்யன் மற்றும் பாகுபாடற்ற மனிதர்கள் அனைவரும் உண்மையில் எவனைக் கருதுகிறார்களோ, அவன், தேர்வீரர்கள் மத்தியில் புலியானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பிருதையின் {குந்தியின்} மகனும், பெரும் வில்லாளியுமான அந்த அர்ஜுனன், ஆற்றலில், இந்திரனுக்கோ உபேந்திரனுக்கோ நிகரானவனே. இந்தக் கொடூரமான போரில் அந்தப் பெரும் வீரன் {அர்ஜுனன்} பெரும் அழிவை உண்டாக்குவதை நான் காண்கிறேன்.

ஓ! பாரதா {துரியோதனா}, குருக்களின் {கௌரவர்களின்} நலத்தில் உள்ள பதட்டத்தின் காரணமாக, பகலும் இரவும் இதையே நினைத்து, மகிழ்ச்சியற்றவனாகவும், உறக்கமற்றவனாகவும் நான் இருக்கிறேன். இந்தப் பூசலைத் தீர்க்க சமாதானத்தைத் தவிர வேறெதுவுமில்லை. குருக்களை {கௌரவர்களை} ஒரு பயங்கர அழிவு பீடிக்கப்போகிறது. பார்த்தர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானமே எனக்கு விருப்பமானது; போரல்ல! ஓ குழந்தாய் {துரியோதனா}, குருக்களை {கௌரவர்களை} விட எப்போதும் பாண்டவர்கள் வலிமைமிக்கவர்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்