Sunday, April 12, 2015

தேவர்களைவிட என் சக்தி பெரிது! - உத்யோக பர்வம் பகுதி 61

My energy is greater than the gods!| Udyoga Parva - Section 61 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 21) {யானசந்தி பர்வம் - 15}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவ மாட்டார்கள் என்று துரியோதனன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; அப்படி உதவியிருந்தால் பதிமூன்று வருடங்களாகத் துன்பத்தை  ஏன் பாண்டவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும், தேவர்கள் உலகியல் காரியங்களில் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவார்கள் என்றும் சொன்னது; அப்படியே தேவர்கள் இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டாலும், தன்னால் அவர்களை வசீகரித்துவிட முடியும் என்றும் சொன்னது; தேவர்கள் கொண்டிருக்கும் சக்தியைவிட, தான் கொண்டிருக்கும் சக்தி பெரிது எனச் சொன்னது; தான் பெற்றிருக்கும் மந்திர வித்தைகளைக் குறித்துச் சொன்னது;  புத்தி, சக்தி, அறிவு, வளம் ஆகிய அனைத்திலும்,  தானே பாண்டவர்களை விட மேன்மையானவனாக இருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரனின் பாசமிகு மகன் {துரியோதனன்}, பெரும் கோபத்தில் பற்றி எரிந்தபடி, பொறாமையால், மீண்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "தேவர்களைத் தங்கள் கூட்டாளிகளாகப் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்றும் நீர் நினைக்கிறீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இந்த உமது அச்சம் விலகட்டும். இச்சை, பேராசை மற்றும் பகை ஆகியவற்றைக் கைவிட்டும், உலகளாவிய காரியங்களில் பாகுபாடற்று நடந்துமே தேவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை அடைந்தார்கள். துவைபாயன வியாசர், பெரும் தவத்துறவுகள் கொண்ட நாரதர், ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்} ஆகியோர் முன்பே இதை நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இச்சை, கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு போதும் மனிதர்களைப் போலத் தேவர்கள் வேலையில் ஈடுபடுவதில்லை. உண்மையில், அக்னியோ, வாயுவோ, தர்மனோ {யமனோ}, இந்திரனோ, அசுவினிகளோ உலகளாவிய ஆசைகளின் காரணமாக எப்போதாவது தங்களை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் துயரத்தில் விழுந்திருக்க மாட்டார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்களுக்குத் தகுந்த காரியங்களிலேயே தேவர்கள் தங்கள் கண்களை எப்போதும் நிலைத்து வைத்திருப்பர் என்பதால், இத்தகு கவலைகளில் நீர் ஈடபடலாகாது.

எனினும், {தாங்கள் கொண்ட} ஆசையின் விளைவால், தேவர்கள் பொறாமையையோ காமத்தையோ கவனிக்கிறார்கள் என்றானால், பிறகு, அந்தத் தேவர்களாலேயே விதிக்கப்பட்ட பொறாமையோ, நீதியோ மேலோங்க முடியாது. அக்னி, அனைத்து உயிர்களையும் எரித்துவிடும்படி சுற்றிலும் சுடர் விட்டெரிந்தாலும், என்னால் வசீகரிக்கப்படும் அவன் {அக்னி}, உடனடியாக அணைக்கப்படுவான். தேவர்கள் பெற்றிருக்கும் சக்தி பெரிதே. ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேவர்களை விட எனது சக்தி பெரியது என்பதை அறிவீராக.

கல் மழை
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி இரண்டாகப் பிளந்தாலும், மலைமுகடுகள் பிளந்தாலும், அனைவரின் கண்களுக்கும் முன்பாக, என் மந்திரங்களின் மூலம், மீண்டும் அவற்றை என்னால் ஒன்றிணைக்க முடியும். இயக்கமுடையன, இயக்கமற்றன, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் அழிவுக்காக ஒரு பயங்கரப் புயலோ, பெரும் கர்ஜனை கொண்ட கல் மழையோ ஏற்படுமானால், படைக்கப்பட்ட உயிரினங்கள் மேல் நான் கொண்ட இரக்கத்தின் காரணமாக, அனைவர் கண் முன்பாகவும் எப்போதும் என்னால் அதைத் தடுக்க முடியும்.
நீர் திடமாதல்
(பனிக்கட்டியாதல்)
என்னால் நீர்நிலைகள் திடமாக்கப்படும்போது, அவற்றில் தேர்களும், காலாட்படையும் நடக்கலாம்.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருதரப்பினரின் விவகாரங்கள் அனைத்தையும் நானே அமைக்கிறேன். என்ன காரியத்திற்காகவும், என் அக்ஷௌஹிணிகளுடன் நான் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், நான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் எனது குதிரைகள் நகர்கின்றன. என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அச்சமூட்டும் பாம்புகள் எதுவும் கிடையாது. என் பகுதிக்குள் இருக்கும் உயிரனங்கள் {மனிதர்களும் சேர்த்து}, என் மந்திரங்களால் பாதுகாக்கப்பட்டு, பயங்கரமானவற்றால் எப்போதும் காயப்படுத்தப்படுவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரைப் பொறுத்தவரை, மேகங்களே கூட [1], {என் மக்கள்} விரும்பும் அளவுக்கும், விரும்பும் நேரத்திலும் {மழையைப்} பொழிகின்றன. மேலும், எனது குடிமக்கள் அனைவரும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் {தர்மத்தை அனுசரிக்கிறார்கள்}. எனவே காலத்தால் ஏற்படும் துயரங்களுக்கு [2] அவர்கள் {என் மக்கள்} ஆட்படுவதில்லை. அசுவினிகள், வாயு, அக்னி, மருதர்களுடன் கூடிய இந்திரன், தர்மன் {யமன்} ஆகியோர் என் எதிரிகளைப் பாதுகாக்கத் துணியவில்லையே. இவர்களால் {மேற்சொன்ன தேவர்களால்} என் பகைவர்களைப் பாதுகாக்க முடிந்திருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இத்தகு துன்பத்தில் பதிமூன்று வருடங்கள் வீழ்ந்திருக்கமாட்டார்கள்.

[1] மேகங்கள் = பர்ஜனயன் = இந்திரனின் ஓர் உருவம்
[2] அதிக மழை, மழையின்மை, வெட்டுக்கிளிகள், எலிகள், கிளிகள் போன்றவை

எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியவனை {என்னால் பகைக்கப்பட்டவனை} தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ காக்க இயலாது என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். என் நண்பனுக்கோ பகைவனுக்கோ, நான் அளிக்கவோ, தண்டிக்கவோ நினைத்த வெகுமதியில் இருந்து தண்டனை வரை எதுவும் இதற்கு முன்பு பொய்த்ததில்லை. ஓ! பகைவரை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, “இது நடக்கும்” என்று நான் சொன்னால், அஃது எப்போதும் நடந்தே இருக்கிறது. எனவே, மக்கள் என்னை எப்போதும் உண்மை பேசுபவனாகவே அறிந்திருக்கிறார்கள். அனைத்துப் புறங்களிலும் பரவிய புகழைக் கொண்ட எனது பெருமையை மக்கள் அனைவரும் சாட்சியாகக் காண்கிறார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவற்றையும் உமது தகவலுக்காகவே சொல்கிறேன்; செருக்காலல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது இழிவானது. ஆகையால், இதற்கு முன்னர் ஒருபோதும் என்னை நானே புகழ்ந்து கொண்டதில்லை. பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், சாத்யகி, வாசுதவேன் {கிருஷ்ணன்} ஆகியோர் என் கைகளில் தோற்றனர் என்பதை நீர் கேள்விப்படுவீர்.

உண்மையில், கடலுக்குள் நுழையும் ஆறுகள் எப்படி முழுதும் தொலைந்து போகுமோ, அப்படி, என்னை அணுகும்போது, தங்கள் தொண்டர்களுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரும் அழிவார்கள். எனது புத்தி மேன்மையானது, எனது சக்தி மேன்மையானது, எனது ஆற்றல் மேன்மையானது, எனது அறிவு மேன்மையானது, எனது வளங்களோ, பாண்டவர்களை விட மிக மேன்மையானது. பாட்டனிடமும் {பிதாமகரான பீஷ்மரிடமும்}, துரோணரிடமும், கிருபரிடமும், சல்லியனிடம், சலனிடமும் என்னவெல்லாம் ஆயுத ஞானம் இருக்குமோ, அவை அனைத்தும் என்னிடமும் உள்ளன” என்றான் {துரியோதனன்}.

இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஓ! பாரதா {ஜமனேஜயா}, எதிரிகளை ஒடுக்குபவனான துரியோதனன், போரிடும் விருப்பமுள்ள யுதிஷ்டிரனின் நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்வதற்காக, மீண்டும் சஞ்சயனிடம் வினவலானான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்