Thursday, April 09, 2015

கிருஷ்ணனின் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 59

The speech of Krishna! | Udyoga Parva - Section 59 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 19) {யானசந்தி பர்வம் - 13}

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன், சத்யபாமா, அர்ஜுனன் மற்றும் திரௌபதி ஆகியோர் அந்தப்புரத்தில் இருந்தபோது சஞ்சயன் சந்தித்தது; கிருஷ்ணனின் கால்கள் அர்ஜுனனின் மடியிலும், அர்ஜுனனின் கால்கள் சத்யபாமா மற்றும் திரௌபதியின் மடியிலும் கிடந்ததைச் சஞ்சயன் கண்டது; அர்ஜுனனின் பாதங்களில் மங்களக்குறிகளைச் சஞ்சயன் கண்டது; திருதராஷ்டிரனுக்குச் சொல்லுமாறு எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கிருஷ்ணன் சஞ்சயனிடம் சொன்னது; கிருஷ்ணன் பேசி முடித்ததும், அர்ஜுனனும் அதே போன்ற வார்த்தைகளைச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {சஞ்சயா}, உயர் ஆன்ம வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மேலும் என்ன சொன்னார்கள் என்பதை எனக்குச் சொல். இது குறித்து அனைத்தையும் நான் உன்னிடம் கேட்க ஆவலாக இருக்கிறேன்”


அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பணிந்த பார்வையுடனும், கூப்பிய கரங்களுடனும், நன்கு அடக்கப்பட்ட புலன்களுடனும், அந்த மனிதர்களில் தேவர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடன்} கலந்துரையாடுவதற்காக அந்தரப்புரத்திற்குள் நான் நுழைந்தேன்.

அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்_கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனும்}, திரௌபதியும், பிராட்டி சத்யபாமாவும் {the two Krishnas and Draupadi and lady Satyabhama } இருந்த அந்த இடத்திற்கு, அபிமன்யுவோ, இரட்டையர்களோ {நகுலன் மற்றும் சகாதேவனோ} கூடச் செல்ல முடியாது. மலர்மாலைகளால் உடல் அலங்கரிக்கப்பட்டு, இலுப்பம்பூ மதுவினால் மயங்கியிருந்த {exhilarated with Bassia wine} அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை} அங்கே நான் கண்டேன்.

சிறந்த ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களாலும், எண்ணிலடங்கா ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள், பல்வேறு இழையமைப்புகளும், நிறங்களும் கொண்ட தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்த தங்க மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

கேசவனின் {கிருஷ்ணனின்} பாதங்கள் அர்ஜுனன் மடியிலும், உயர் ஆன்ம அர்ஜுனனின் பாதங்கள் கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் சத்யபாமா ஆகியோர் மடிகளிலும் இருந்ததை நான் கண்டேன்.

அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, (நான் அமர்வதற்காக), தங்கத்தாலான ஒரு பாதபீடத்தை எனக்குச் சுட்டிக்காட்டினான். அதை என் கையால் தொட்டபடி, நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். அவன் {அர்ஜுனன்} தனது காலை அந்தப் பாதபீடத்தில் இருந்து எடுத்தபோது, அவனது {அர்ஜுனனின்} இரு பாதங்களிலும் மங்களக்குறிகளை நான் கண்டேன். குதிகால்களில் இருந்து கட்டை விரல் வரை ஓடும் இரு நெடுக்கான கோடுகளை அவை {பாதங்கள்} கொண்டிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கரிய நிறமும், உயரமான தோற்றமும், ஆச்சாமரத் {சாலமரத்} தண்டுகளைப் போன்ற உறுதியும் கொண்ட இளமை நிறைந்த அந்த வீரர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} ஒரே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, பெரும் அச்சம் என்னைப் பீடித்தது.

ஒன்றாக அமர்ந்திருந்த இந்திரனையும், விஷ்ணுவையும் போல அவ்விருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} எனக்குத் தெரிந்தார்கள். ஆயினும், துரோணர் மற்றும் பீஷ்மரையும், வீண்வீராப்புகளை உரத்துப் பேசும் கர்ணனையும் நம்புவதன் விளைவாக, இந்த மந்த புத்தி கொண்ட துரியோதனன் இதை அறியவில்லை. அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும், அந்த நீதிமானான யுதிஷ்டிரனின் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அந்தக் கணமே நான் உறுதியடைந்தேன்.

உணவு மற்றும் பானங்களால், விருந்தோம்பலோடு உபசரிக்கப்பட்டு, மற்ற உபசாரங்களாலும் கௌரவிக்கப்பட்ட நான், எனது கூப்பிய கரங்களைத் தலையில் வைத்துக் கொண்டு, உமது செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தேன்.

பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, நாண்கயிற்றால் தழும்பேறிய தனது கரங்களைக் கொண்டு தன் மடியில் இருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} மங்களகரமான பாதங்களை அகற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பேசத் தூண்டினான். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சக்தியில் இந்திரனைப் பிரதிபலித்த கிருஷ்ணன், இந்திரனின் கொடி போல உறுதியாக அமர்ந்த பிறகு என்னிடம் பேசினான். பேச்சாளர்களில் சிறந்த அவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகள், திருதராஷ்டிரன் மகன்களுக்குத் துயர் நிறைந்தவையாகவும் அச்சம் தருவனவையாக இருந்தாலும், இனிமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருந்தன. எவன் ஒருவன் மட்டுமே பேசத் தகுந்தவனோ, அந்தக் கிருஷ்ணன், உச்சரித்த வார்த்தைகள், முடிவில் இதயத்தை உருக்குவதாக இருந்தாலும், உண்மையில் அவை, சரியான முக்கியத்துவம் கொண்டவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! சஞ்சயரே, ஓ! சூதரே {சஞ்சயரே}, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, முதலில் முதியோர் அனைவரையும் வணங்கி, இளையோரின் நலன்களையும் விசாரித்த பிறகு, குருக்களின் முதன்மையானவரான பீஷ்மரும், துரோணரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஞானியான திருதராஷ்டிரரிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லும். “பெரிய ஆபத்து ஒன்று உம்மை அச்சுறுத்தும் போது, அந்தணர்களுக்குப் பரிசுகளை அளித்து, பல்வேறு வேள்விகளைச் செய்து, உமது மகன்கள் மற்றும் மனைவியருடன் மகிழ்ந்திருப்பீரோ? மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ?” என்று அவன் {கிருஷ்ணன், உம்மிடம்} சொல்லச் சொன்னான்.

நான் தொலைவில் இருந்த போது, கண்ணீருடன் கூடிய அந்தக் கிருஷ்ணன் என்னிடம், “காலத்தோடு திரட்டப்பட்ட கடன், என்னால் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. எரிக்கும் சக்தி கொண்ட காண்டீவத்தைத் தனது வில்லாகவும், உதவும் துணைவனாக என்னையும் கொண்ட சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} நீர் பகை கொண்டிருக்கிறீர். புரந்தரனாகவும் {இந்திரனாகவும்}, ஆயுள் நிரம்பியவனாகவும் இருந்தாலும் கூட, என்னைத் துணைவனாகக் கொண்ட பார்த்தனுக்கு அறைகூவல் விடுக்கத்தகுந்தவன் எவன்? போரில் அர்ஜுனனை {அர்ஜுனனுக்கு} வீழ்த்தவல்ல ஒருவனால், உண்மையில், தன் இரு கரங்களைக் கொண்டு பூமியைத் தாங்கிக் கொள்ள முடியும்; படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் கோபத்தில் எரித்துவிட முடியும்; சொர்க்கத்தில் இருந்து தேவர்களை அவனால் வீசி எறிந்துவிட முடியும்.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுக்கு மத்தியிலும்; யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் நாகர்களுக்கு மத்தியிலும், அர்ஜுனனுடன் போரில் மோதவல்ல ஒரு நபரை என்னால் காண முடியவில்லை.

ஒரு புறத்தில் ஒரு தனி மனிதனையும் {அர்ஜுனனையும்ம்}, மறுபுறத்தில் எண்ணிலடங்கா வீரர்களையும் {கௌரவர்களையும்} கொண்டு, விராட நகரத்தில் நடந்த மோதல் குறித்து, என்னால் கேட்கப்பட்ட அற்புதக் கதையே இதற்குப் போதுமான சான்றாக இருக்கும். அதாவது, ஒருவனாக இருந்த பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்}, விராட நகரத்தில் இருந்து நீங்கள் முற்றாக விரட்டப்பட்டீர்கள் என்பதே இதற்குப் போதுமான சான்றல்லவா?

வலிமை, ஆற்றல், சக்தி, வேகம், கரங்களின் இலகு, அயராத்தன்மை, பொறுமை ஆகிய பண்புகள் அனைத்தும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனிடமும் காணப்படாது” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிப் பேசிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தன் வார்த்தைகளால் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உற்சாகமூட்டியபடி, ஆகாயத்தில் இருக்கும் மழை நிறைந்த மேகங்களைப் போலக் கர்ஜனை செய்தான். கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனும் அதே தாக்கத்துடன் பேசினான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்