Monday, April 13, 2015

“நீர் ஒழிந்த பிறகே போரில் பங்கேற்பேன்!” என்றான் கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 62

“I will take part in war, after you cease” said KarnA!| Udyoga Parva - Section 62 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 22) {யானசந்தி பர்வம் - 16}

பதிவின் சுருக்கம் : கௌர்வர்களுக்கு உற்சாகமூட்டும்படி கர்ணன் பேசியது; பரசுராமரிடம் தான் பெற்ற பிரம்மாஸ்திரத்தைக் குறித்துச் சொன்னது; தான் ஒருவனாகவே சென்று பாண்டவர்களையும் அவர்களது கூட்டணியையும் வென்று திரும்புவதாகக் கர்ணன் சொன்னது; பீஷ்மர் கர்ணனைக் கண்டு எள்ளி நகையாடியது; சக்தி ஆயுதத்தைக் கிருஷ்ணன் தவிடுபொடியாக்குவான் என்றும், நாகாஸ்திரத்துடன் சேர்த்து அர்ஜுனன் கர்ணனையும் அழிப்பான் என்றும் பீஷ்மர் சொன்னது;  இதனால் கோபமுற்ற கர்ணன், பீஷ்மர் ஒழிந்த பிறகே, தான் போரில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு சபையைவிட்டு வெளியேறியது; கர்ணனின் பொய்மை குறித்துப் பீஷ்மர் இடித்துரைத்தது; பீஷ்மருக்குப் பதிலுரைக்கத் துரியோதனன் எத்தனித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்துக் {சஞ்சயனிடம்} கேட்பதற்கு இருந்த விசித்திரவீரியன் மகனான திருதராஷ்டிரனைப் பொருட்படுத்தாத கர்ணன், அங்கே கூடியிருந்த குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} உற்சாகத்தை ஊட்டும்படி, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {கர்ணன்}, “பழங்காலத்தில், போலிப் பாசாங்கால் [1], பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்தேன் என்பதை அறிந்த ராமர் {பரசுராமர்}, என்னிடம், “உனது நேரம் {கடைசிக்காலம்} வரும்போது, இவ்வாயுதம் குறித்த உனது நினைவு பொய்த்து விடும். {இந்த ஆயுதம் உனக்குத் தோன்றாமல் போகும்}” என்றார்.

[1] false pretence = பொய் சொல்லி


அப்படிப்பட்ட ஒரு பெரிய குற்றத்திற்கு, எனது ஆசானான அந்தப் பெருமுனிவரால் {பரசுராமரால்} இப்படிச் சாதாரணமாகவே நான் சபிக்கப்பட்டேன். கடும் சக்தி கொண்ட அந்தப் பெரும் முனிவர் {பரசுராமர்}, கடல்களுடன் கூடிய முழுப் பூமியையும் எரித்துவிடவல்லவர். {என்} பணிவிடை மற்றும் தனிப்பட்ட வீரத்தின் காரணமாக நான் அவரது {பரசுராமரின்} இதயத்தை அமைதியடையச் செய்தேன். என்னிடம் அந்த ஆயுதம் {பிரம்மாஸ்திரம்} இன்னும் இருக்கிறது. எனது காலமும் இன்னும் இருக்கிறது. எனவே, (வெற்றியடையத்தக்க அளவில்} நான் முழுத் திறமையுடனேயே இருக்கிறேன். {எதிரியை வெல்லும் இந்தப்} பொறுப்பு எனதாகட்டும். அம்முனிவரின் {பரசுராமரின்} அருளைப் பெற்றிருப்பதால், பாஞ்சலர்கள், கரூசர்கள், மத்ஸ்யர்கள், மகன்கள் மற்றும் பேரர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று, எனது ஆயுதங்களால் வெல்லப்பட்ட எண்ணற்ற பகுதிகளை நான் உனக்கு அளிப்பேன்.


பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்}, துரோணர் மற்றும் மன்னர்கள் அனைவரும் உன்னுடன் இருக்கட்டும். எனது படையின் தலைமை {முக்கிய} போர்வீரர்களுடன் அணிவகுத்துச் செல்லும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களைக்} கொல்வேன். இப்பணி எனதாகட்டும்” என்றான் {கர்ணன்}.

இப்படிப் பேசிய அவனிடம் {கர்ணனிடம்}, பீஷ்மர், “ஓ! கர்ணா, நீ என்ன சொல்கிறாய்? {என்ன பிதற்றுகிறாய்?}, நேரம் நெருங்கி வருவதால் உனது புத்தி மறைக்கப்படுகிறது. ஓ! கர்ணா, தலைவன் {கர்ணனான நீ} [2] கொல்லப்பட்டால், திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? கிருஷ்ணனை மட்டுமே துணைவனாகக் கொண்டு, காண்டவ வனத்தை எரித்து, தனஞ்சயன் {அர்ஜுனன்} செய்த சாதனையைக் கேட்ட பிறகு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீ, மனதை அடக்கிக் கொள்வதே தகும்.

[2] //இங்கே “தலைவன் தலைவனாக இருக்க வேண்டும், நீ தகுதியில்லாதவன்” என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, “குருகுலத்தலைவனான நான் இறந்தால், கௌரவர்கள் இறப்பார்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்// என்று சொல்லப்படுகிறது. இங்கே பீஷ்மர் வஞ்சப்புகழ்ச்சியைக் கையாள்வதாகத் தெரிகிறது. எனவே, கர்ணனைக் கேலி செய்கிறார் என்றே நாம் கொள்ளலாம்.

ஒப்பற்றவனும் வழிபடத்தகுந்தவனும், தேவர்கள் தலைவனுமான பெரும் இந்திரன் உனக்கு அளித்த கணை {சக்தி ஆயுதம்}, கேசவனின் {கிருஷ்ணனின்} சக்கரத்தால் தாக்கப்படும்போது, {அந்த சக்தி ஆயுதம்} உடைந்து சாம்பலாகப் போவதை நீ காண்பாய். மலர் மாலைகளைக் கொண்டு உன்னால் மரியாதையாக வழிபடப்படுவதும், பாம்பு வாய்க் கொண்டதும், (உனது அம்பறாத்தூணியில்) ஒளிர்ந்து கொண்டிருப்பதுமான மற்றொரு கணை {நாகாஸ்திரம்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் அடிக்கப்படும்போது, உன்னோடு சேர்ந்து அழிந்து போகும். பாணன், பூமியின் மகன் {நரகன்} ஆகியோரைக் கொன்றவனும், கடும்போரில் உனக்கு நிகரான மற்றும் உன்னைவிட மேம்பட்ட எதிரிகளைக் கொன்றவனுமான வாசுதேவனே {கிருஷ்ணனே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.

அதற்குக் கர்ணன் {சபையோரிடம்}, “விருஷ்ணிகளின் தலைவன் {கிருஷ்ணன்} அப்படியே இருக்கிறான். அதில் ஐயமில்லை. மேலும், அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்} அதற்கும் மேலானவனே. எனினும், அவர் உச்சரித்திருக்கும் சிறிய கடும் உரையின் விளைவைப் பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்} கேட்கட்டும். நான் எனது ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன். இனிமேல் பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சபையில் மட்டுமே காண்பார்; போர்க்களத்தில் அல்ல. நீர் அமைதியடைந்த {ஒழிந்த} பின்பே, எனது ஆற்றலை, இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் இவ்வுலகத்தில் காண்பார்கள்” [3] என்றான் {கர்ணன்}.

[3] Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world.

இதற்குச் சற்று முன்புதான் "தன் விருப்பம் இல்லாமல் மரணம் தன்னை அண்டாது என்று தன் தந்தை சந்தனுவிடம் வரம்பெற்றவர் பீஷ்மர்" என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் (உத்யோக பர்வம் பகுதி 55ல்} சொல்கிறான். பீஷ்மர் விருப்பப்பட்டாலொழிய அவருக்கு மரணம் கிடையாது என்பதை அறிந்தும், "நீர் ஒழிந்த பிறகே போரில் பங்கேற்பேன்" என்று கர்ணன் போரில் இருந்து விலகுகிறான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்தப் பெரும் வில்லாளி (கர்ணன்), அந்தச் சபையை விட்டகன்று தனது வசிப்பிடம் சென்றான். எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பீஷ்மர் உரக்கச் சிரித்தபடி, குருக்கள் {கௌரவர்கள்} மத்தியிலிருந்த துரியோதனனிடம், “இந்தச் சூதனின் மகன் {கர்ணன்} வாக்கில் எவ்வளவு உண்மையுள்ளவன்? “அவந்தி மற்றும் கலிங்கத்தின் மன்னர்கள், ஜெயத்ரதன், சேதித்தஜன், வால்ஹீகன் ஆகியோரைப் பார்வையாளர்களாகக் கொண்டு, பகைவீரர்களை ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் நான் கொல்வேன்” என்று மீண்டும் மீண்டும் சூளுரைத்தானே. {இனி} எப்படி அந்தக் கடமையை அவன் {கர்ணன்} நிறைவேற்றுவான்?

எதிர் வியூகத்தால் தனது பிரிவுகளைப் பகிர்ந்து, தலைகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, பீமன் இழைக்கப்போகும் பேரழிவைப் பார். புனிதமானவரும், பழியற்றவருமான ராமரிடத்தில் {பரசுராமரிடத்தில்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன்னை ஒரு பிராமணன் என்று காட்டி, அந்த ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்த அந்தக் கணத்தில்தான், உண்மையில், அந்தப் பாவி {கர்ணன்}, தனது அறம் மற்றும் தவம் ஆகிய இரண்டையும் இழந்தான்” என்றார் {பீஷ்மர்}. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, தனது ஆயுதங்களைக் கைவிட்டு கர்ணன் சென்றதும், பீஷ்மர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட விசித்திரவீரியன் மகனின் {திருதராஷ்டிரனின்} மூட மகனான துரியோதனன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம் பின்வரும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” என்றார் {வைசம்பாயனர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்