Wednesday, May 20, 2015

ஆர்யகனின் பேரன் சுமுகன்! - உத்யோக பர்வம் பகுதி 103

Aryaka's grandson Sumukha! | Udyoga Parva - Section 103 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –32)

பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் நாகலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; வாசுகியின் பெருமை மற்றும் தன்மை, நாகர்களின் தன்மைகள், மற்றும் நாகர்களில் புகழ்பெற்றவர்களின் பெயர்கள் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது; நாகன் சுமுகன் தனது மகளுக்குத் தகுந்தவனாக இருப்பான் என மாதலி சொன்னது; சுமுகன் பற்றி நாரதர் மாதலிக்கு உரைப்பது...

நாரதர் {மாதலியிடம்} சொன்னார், "நீ காணும் இது, தேவர்கள் தலைவனின் {இந்திரனின் தலைநகரமான} அமராவதியை ஒத்திருக்கும் நகரங்களில் முதன்மையான நகரமாகும். இந்நகரம் போகவதி என்ற பெயரால் அறியப்படுகிறது. இது நாகர்கள் மன்னன் வாசுகியால் ஆளப்படுகிறது. கடும் தவங்களில் முதன்மையான தவத்தின் விளைவாகப் பெரும்பரப்புடன் கூடிய பூமிதேவியைத் தாங்க இயன்ற அந்தச் சேஷன் {வாசுகி} இங்கே வசிக்கிறான். அவனது உடல் வெண்மலையைப் போன்றதாகும். தெய்வீக ஆபரணங்களைப் பூண்டவனான அவனுக்கு {வாசுகிக்கு} ஆயிரம் {1000} தலைகள் உண்டு. நெருப்புத் தழல்கள் போன்ற சுடர்மிக்க நாக்குகளைக் கொண்ட அவன் {வாசுகி} பெரும்பலம் கொண்டவனாவான்.


சுரசையின் மகன்களும், பல்வேறு வடிவங்கள் கொண்டவர்களும், விதவிதமான ஆபரணங்களைப் பூண்டவர்களும், ரத்தினங்கள் {நாகரத்தினம்}, சுவஸ்திகா {சுவஸ்திகாரேகை}, {காரேகை}, வட்டங்கள் {சக்ரரேகை}, நீர்ப்பாத்திரங்கள் {கமண்டலுரேகை} ஆகிய குறிகளைத் தாங்கியவர்களுமான எண்ணிலடங்கா நாகர்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சிலர் ஆயிரம் தலைகளுடனும், சிலர் ஐநூறுடனும் {500}, சிலர் மூன்று {3} தலைகளுடனும் இருக்கின்றனர். சிலர் இரண்டும் {2}, சிலர் ஐந்து {5} தலைகளும் கொண்டுள்ளனர். சிலர் ஏழு {7} முகங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் மலைகளை நிகர்த்த பெரும் உடல்களுடன் பூமியில் நீண்டு கிடக்கின்றனர். பல ஆயிரங்களாகவும், பத்து லட்சங்களாகவும், பத்து கோடிகளாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உண்மையில், ஒரே குலத்தைச் சேர்ந்த அவர்களை எண்ணவே முடியாது. எனினும், அவர்களில் புகழ்பெற்ற ஒரு சிலரின் பெயர்களை நான் சொல்கிறேன் கேள்.

வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளீயன், நகுஷன், {கம்பளன்}, அஸ்வதரன், பாக்யகுண்டன், மணி, அபூரணன், ககன், வாமனன், எலபத்திரன், குகுரன், குகுணன், ஆர்யகன், நந்தகன், கலசன், போதகன், கலிலாஸகன், பிஞ்சரகன், ஐராவதன், சுமனோமுகன், ததிமுகன், சங்கன், நந்தன், உபநந்தகன், ஆப்தன், கோடரகன், சிகி, நிஷ்தூரகன், தித்திரி, ஹஸ்திபத்திரன், குமுதன், மயிலப்பிண்டகன், பத்மர்கள் இருவர், புண்டரீகன், புஷ்பன், முத்கரபர்ணகன், கரவீரன், பீதரகன், ஸம்விருத்தன், விருத்தன், பீண்டாரன், பில்வபத்ரன், மூஷிகாதன், சிரீஷகன், திலீபன், சங்க-சீர்ஷன், ஜியோதிஷகன், அபராஜிதன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், குஹுரன், கிருசகன், விரஜஸ், தாரணன், சுபாகு, முகரன், ஜயன், பிதிரன், அந்தன், விசுண்டி, விரஸன், சுரஸன் ஆகியோரே அவர்கள். காசியபர் மகன்களில் இன்னும் பலரும் இவர்களும் இருக்கின்றனர். ஓ! மாதலி, நீ தேர்ந்தெடுக்கும் வகையில் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்?" என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அதேவேளையில், மாதலி, அருகே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பேசுவதை நாரதர் நிறுத்தியதும், மனநிறைவு கொண்ட அந்தத் தெய்வீகத் தேரோட்டி {மாதலி} அந்த முனிவரிடம் {நாரதரிடம்}, "கௌரவ்யன் வம்சாவளியைச் சார்ந்த ஆர்யகனின் முன்பு நின்று கொண்டிருப்பவனும், காந்தியுள்ளவனும், அழகும் இளமையும் பொருந்தியவனுமான இந்த இனியவன் எக்குலத்தைச் சார்ந்தவன்? இவனுடைய தந்தையும் தாயும் யார்? எந்த நாகக் குலத்தைச் சேர்ந்தவன் இவன்? உண்மையில், பெரிய கொடிக்கம்பம் {த்வஜம்} போன்றிருக்கும் இவன் எந்த வம்சாவளியைச் சேர்ந்தவன்? இவனது புத்திக்கூர்மை, பொறுமை, அழகு, இளமை ஆகியவற்றின் விளைவால், ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, எனது இதயம் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. இந்த இளைஞனே என் {மகள்}குணகேசிக்குச் சிறந்த கணவனாக இருப்பான்" என்றான் {மாதலி}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "சுமுகன் என்று அழைக்கப்படும் நாகனைப் பார்த்து மாதலி அடைந்த மனநிறைவைக் கண்ட நாரதர், அவனுடைய பெருமையையும், பிறப்பையும் செய்கைகளையும் தெரிவித்தார். அவர் {நாரதர் மாதலியிடம்}, "ஐராவதனின் குலத்தில் பிறந்த இந்த நாகர்களின் இளவரசன் சுமுகன் என்ற பெயர் கொண்டவனாவான். இவன் ஆர்யகனுக்குப் பிடித்தமான பேரனும், வாமனனின் மகளுடைய மகனும் ஆவான். ஓ! மாதலி, இந்த இளைஞனின் {சுமுகனின்} தந்தை, சிகுரன் என்று அழைக்கப்பட்ட நாகனாவான். சமீபத்தில்தான் அவன் {சிகுரன்} வினதையின் மகனால் {கருடனால்} கொல்லப்பட்டான்" என்றார் {நாரதர்}.

இதைக்கேட்ட மாதலி மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு நாரதரிடம் பேசிய அந்தத் தேரோட்டி {மாதலி}, "ஓ! ஐயா, நாகர்களில் சிறந்த இவன் {சுமுகன்}, எனது மருமகனாவதற்கு மிகவும் ஏற்றவனாக இருக்கிறான். அவனை அடைய ஒரு முயற்சி செய்யும். ஏனெனில், ஓ! முனிவரே, நான் எனது அன்புக்குரிய மகளை {குணகேசியை} இந்த நாகனுக்குக் கொடுக்கும் நினைப்பே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதே" என்றான் {மாதலி}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்