Wednesday, May 20, 2015

குணகேசியை மணந்த சுமுகன்! - உத்யோக பர்வம் பகுதி 104

Sumukha married Gunakesi! | Udyoga Parva - Section 104 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –33)

பதிவின் சுருக்கம் : ஆர்யகனிடம் நாரதர் மாதலியை அறிமுகப்படுத்தியது; மாதலி தன் மகள் குணகேசியை ஆர்யகனின் பேரன் சுமுகனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்வது; கருடன் மீது கொண்ட அச்சத்தால் ஆர்யகன் தயங்கியது; மாதலி சுமுகனையும், ஆர்யகனையும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றது; அங்கே இந்திரனுடன் விஷ்ணுவையும் காண்பது; இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது; சுமுகன் குணகேசி திருமணம் நடந்தேறுவது...

பிறகு நாரதர் {ஆர்யகனிடம்} சொன்னார், "இவன் மாதலி என்ற பெயரையுடைய தேரோட்டியாவான். அது தவிர, இவன் {மாதலி} சக்ரனின் {இந்திரனின்} அன்புக்குரிய நண்பனாவான். தூய்மையான நடத்தை கொண்ட இவன் {மாதலி} அற்புதமான மனநிலையையும், எண்ணற்ற நற்பண்புகளையும் கொண்டிருக்கிறான். மனோபலமும், பெரும் சக்தியும் பலமும் கொண்டவன் இவன். இவன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நண்பனும், ஆலோசகனும், தேரோட்டியுமாவான். அனைத்துப் போர்களிலும் இவனுக்கும் வாசவனுக்கு {இந்திரனுக்கும்}, ஆற்றல் மற்றும் பலத்தைப் பொறுத்தவரையில் சிறு வித்தியாசமே காணப்பட்டிருக்கிறது.


தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும், ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதும், எப்போதும் வெற்றிகரமானதுமான இந்திரனின் தேரை, தனது மனதை மட்டுமே கொண்டு, மாதலியே இயக்கி வருகிறான். இவனது குதிரைகளை ஓட்டும் திறனால், வாசவன் {இந்திரன்} தேவர்களின் பகைவர்களை அடக்கியிருக்கிறான். ஏற்கனவே மாதலியிடம் தோல்வியுற்ற அசுரர்கள், அதன் தொடர்ச்சியாக இந்திரனால் கொல்லப்பட்டார்கள்.

உலகில் ஒப்பற்ற அழகுடன் கூடிய அற்புத மகள் ஒருத்தியை மாதலி கொண்டிருக்கிறான். உண்மைநிறைந்தவளும், அனைத்து குணங்களும் நிரம்பியவளுமான அவள், குணகேசி என்ற பெயரால் அறியப்படுகிறாள். இவன் {மாதலி} தகுந்த மணமகனுக்காக மூவுலகங்களிலும் தேடிக் கொண்டிருந்தான். ஓ! தெய்வீக காந்தியைக் கொண்டவனே {ஆர்யகா}, உனது பேரனான சுமுகன் இவனது {மாதலியின்} மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனாக இருப்பான்.

ஓ! பாம்புகளில் சிறந்தவனே {ஆர்யகா}, இந்த முன்மொழிவு உனக்கு ஏற்புடையதாக இருப்பின், ஓ! ஆர்யகா, உனது பேரனுக்குரிய பரிசாக இவனது மகளைப் பெற, விரைந்து முடிவெடுப்பாயாக. விஷ்ணுவின் இல்லத்தில் இருக்கும் லட்சுமியைப் போல, அல்லது அக்னியின் இல்லத்தில் உள்ள சுவாகாவைப் போல, கொடியிடை கொண்ட குணகேசி உனது குலத்தில் ஒரு மனைவியாக இருக்கட்டும். எனவே, சச்சியைப் பெறத் தகுந்த வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் உனது பேரன் {சுமுகன்} குணகேசியை ஏற்கட்டும். இந்த இளைஞன் தனது தந்தையை இழந்திருப்பினும், இவனது நற்குணங்கள், ஐராவதன் மற்றும் உன் மேல் கொண்ட மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் இவனைத் தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், சுமுகனின் சிறப்புகள் {புண்ணியங்கள்}, அவனது மனநிலை, தூய்மை, தன்னடக்கம் மற்றும் பிற தகுதிகளின் விளைவாக, மாதலி தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்புகிறான். எனவே, நீ மாதலியைப் பெருமைப்படுத்துவதே தகும்" என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட ஆர்யகன், தனது பேரன் {சுமுகன்} மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டு, தனது மகனின் மரணத்தையும் நினைத்து, ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் நிறைந்தான். அவன் {ஆர்யகன்} நாரதரிடம், "ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, குணகேசியை மருமகளாக்கிக் கொள்ள நான் எப்படி விரும்ப முடியும்? ஓ! பெரும் முனிவரே, இதனால், உமது வார்த்தைகளை நான் உயர்வாக மதிக்கவில்லை என்றாகாது. ஏனெனில், இந்திரனின் நண்பனுடன் {மாதலியுடன்} சம்பந்தம் வைத்துக் கொள்ள எவன்தான் விரும்பமாட்டான்?

எனினும், ஓ! பெரும் முனிவரே, உறுதியற்ற தன்மையின் விளைவால் அந்தச் சம்பந்தம் வெகுநாளைக்கு நீடிக்காது என்பதாலேயே நான் தயங்குகிறேன். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, இந்த இளைஞனைப் படைத்த எனது மகன் {சிகுரன்}, கருடனால் விழுங்கப்பட்டுவிட்டான். நாங்கள் அதன் காரணமாகத் துயரத்தில் இருக்கிறோம். ஓ! தலைவா {நாரதரே}, ஆனால் அதற்கு மேலும் மோசமான நிலையென்னவென்றால், அந்த வினதையின் மகன் {கருடன்} இந்தப் பகுதியை விட்டுச் செல்லும்போது, "ஒரு மாதத்திற்குப் பிறகு நான் இந்தச் சுமுகனையும் விழுங்குவேன்" என்றான். அவன் {கருடன்} சொன்னது போலவே அது நிச்சயம் நடக்கும். ஏனெனில் நாங்கள் யாரைச் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவோம். சுபர்ணனின் {கருடனின்} இவ்வார்த்தைகளால் நாங்கள் மகிழ்ச்சியற்றுப் போனோம்" என்றான் {ஆர்யகன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பிறகு மாதலி ஆர்யகனிடம், "நான் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த உனது பேரன் {சுமுகன்}, என்னால் எனது மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். என்னுடனும் நாரதருடனும் இந்த நாகன் {சுமுகன்} சொர்க்கத்தின் தலைவனான தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்} வரட்டும். பிறகு நான் சுபர்ணனின் {கருடனின்} வழியில் தடைகளை உண்டாக்க முயல்வேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. எனவே, ஓ! நாகா {ஆர்யகா}, தேவர்கள் தலைவனின் முன்னிலைக்குச் சுமுகன் என்னுடன் வரட்டும்" என்றான் {மாதலி}. இதைச் சொன்ன அவர்கள் சுமுகனைத் தங்களோடு அழைத்துச் சென்றனர். பெரும் பிரகாசத்துடன் கூடிய அந்த நால்வரும், விண்ணுலகம் வந்து, பெரும் புகழுடன் அமர்ந்திருந்த தேவர்கள் தலைவனான சக்ரனைக் {இந்திரனைக்} கண்டனர். நான்கு கரங்களைக் கொண்ட ஒப்பற்ற விஷ்ணுவும் அந்த இடத்தில் இருக்கும்படி அப்போது நேர்ந்தது. பிறகு, நாரதர் மாதலியையும் அவனது {மணமகன்} தேர்வையும் குறித்த முழுக் கதையையும் சொன்னார்."

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட விஷ்ணு, அண்டத்தின் தலைவனான புரந்தரனிடம் {இந்திரனிடம்}, "இந்த இளைஞனுக்கு {சுமுகனுக்கு} அமிர்தம் கொடுக்கப்படட்டும், இவனும் தேவர்களைப் போல இறவாதவனாகட்டும். ஓ! வாசவா {இந்திரா}, மாதலி, நாரதர், சுமுகன் ஆகிய அனைவரின் விருப்பமும் உனது அருளால் நிறைவேறட்டும்" என்றான்.

எனினும், வினதை மகனின் {கருடனின்} ஆற்றலை எண்ணிய புரந்தரன் {இந்திரன்}, விஷ்ணுவிடம், "உன்னாலேயே அமிர்தம் அவனுக்கு வழங்கப்படட்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு, "அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்துக்கும் தலைவன் நீ. ஓ தலைவா {இந்திரா}, உன்னால் கொடுக்கப்படும் பரிசை மறுப்பவன் எவன் இருக்கிறான்?" என்றான்.

{விஷ்ணுவின்} இந்த வார்த்தைகளால் சக்ரன் அந்த நாகனுக்கு {சுமுகனுக்கு} நீண்ட ஆயுளைக் கொடுத்தான். வலனையும் விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்}, அவனை {சுமுகனை} அமிர்தத்தைக் குடிக்கச் செய்யவில்லை. {நீண்ட ஆயுளெனும்} அந்த வரத்தைப் பெற்ற சுமுகன், தனது முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகளைப் பரவவிட்டதால், (உண்மையிலேயே) அவன் சுமுகன் [1] ஆனான். மாதலியின் மகளை {குணகேசியைத்} திருமணம் செய்து கொண்ட அவன் {சுமுகன்}, மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான். தங்கள் நோக்கம் நிறைவேறிய நாரதரும், ஆர்யகனும் மகிழ்ச்சியால் நிறைந்து, பெருமைமிக்கத் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டுவிட்டுத் தங்கள் வழியே சென்றனர்" என்றார் {கண்வர்}.

[1] அழகிய அற்புதமான முகம் கொண்டவன் என்று பொருள்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்