Monday, May 25, 2015

வடதிசையை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 111

Garuda described the north! | Udyoga Parva - Section 111 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –40)

பதிவின் சுருக்கம் : வடக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {முனிவர் காலவரிடம்} சொன்னான், "ஓ! அந்தணா, ஒருவன் இங்கே முக்தி அடைவதால் இந்தத் திசை பாவத்தில் இருந்து அவனைக் காக்கிறது. இதற்காகவே இத்திசை சக்திவாய்ந்தது (உத்தாரணம் = தீங்கிலிருந்து மீட்டல் = uttarana) என்பதற்காகவே இத்திசை வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! காலவா, செல்வங்கள் அனைத்தின் வசிப்பிடம் இங்கே கிழக்காகவும் மேற்காகவும் வடக்கில் நீண்டு கிடப்பதால், சில சமயங்களில் இந்த வடக்குப் பகுதி மத்திய பகுதி (மத்திமம்) என்றும் அழைக்கப்படுகிறது.


ஓ! இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {காலவா}, இந்தப்பகுதியே அனைத்துக்கும் மேன்மையானது. இனிமையற்றவர்களோ, கட்டற்ற உணர்வுகள் கொண்டவர்களோ, அநீதிமிக்கவர்களோ இங்கே வாழ இயலாது. இங்கேதான், பதரி என்று அழைக்கப்படும் ஆசிரமத்தில், நாராயணனின் சுயமான கிருஷ்ணனும், மனிதர்களில் மேன்மையான ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, (படைப்பாளனான) பிரம்மனும் நித்தியமாக வசிக்கிறார்கள். {நரன், நாராயணன், பிரம்மன் ஆகியோர் வசிக்கின்றனர்}.

இங்கே, இமயத்தின் மார்பில், யுகத்தின் முடிவில், நெருப்பு போன்ற பெரும் பிரகாசத்துடன் மகேஸ்வரன் சுடர்விட்டு எரிகிறான். புருஷனாக {காலப் புருஷனாக}, அவன் பிராக்ருதியுடன் (அண்டத்தின் தாயுடன்) விளையாடிக் கொண்டிருக்கிறான். நரன் மற்றும் நாராயணனைத் தவிர முனிவர்களின் பல்வேறு வர்க்கங்களாலோ, வாசவனைத் {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, சித்தர்களாலோ காணமுடியாதவனாக அவன் {அந்த சிவன்} இங்கே இருக்கிறான். மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கால்களும் கொண்ட நித்தியமான விஷ்ணு மட்டுமே {நரன் மற்றும் நாராயாணனைத் தவிர்த்து} அவனைக் காண முடியும்.

இங்கேதான் மறுபிறப்பாள வகை {அந்தண வகை} முழுவதற்கும் அரசனாகச் சந்திரன் நியமிக்கப்பட்டான். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {காலவா}, இங்கேதான் கங்கையைத் தனது தலைக்குள் முதலில் ஏற்றிய மஹாதேவன் {சிவன்}, பிறகு, (புனித ஓடையாக) சொர்க்கத்தில் இருந்து மனிதர்களின் உலகில் அவளை {கங்கையை} விழ வைத்தான். இங்கேதான் (உமா) தேவி, மகேஸ்வரனை (தனது தலைவனாக அடைய) அடையும் தனது விருப்பத்தால் கடும் தவம் செய்தாள். இந்தப் பகுதியில்தான் காமன், (சிவனின்) கோபம், இமயம், உமை ஆகிய அனைவரும் ஒன்றாகிப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

இங்கேதான், கயிலாயத்தின் மார்பில், ஓ! காலவா, ராட்சசர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை ஆள குபேரன் நிறுவப்பட்டான். இந்தப் பகுதியில்தான் (அந்தக் குபேரனின் நந்தவனமான) சித்திரரதம் இருக்கிறது. இங்கேதான் வைகனசர்களின் {என்ற முனிவர்களின்} ஆசிரமம் அமைந்திருக்கிறது.

ஓ! இருபிறப்பாளர்களில் காளையே {காலவா}, இங்கேதான் மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையும், மந்தர மலையும் காணப்படுகின்றன. ராட்சசர்களால் எப்போதும் பாதுகாக்கப்படும் சௌகந்த கனகம் என்று அழைக்கப்படும் நந்தவனம் இங்கேதான் இருக்கிறது. இங்கேதான் புசுமையான புல்லால் மூடப்பட்டிருக்கும் பல சமவெளிகளும், வாழைமரக் காடுகளும், சொதனகங்கள் என்று அழைக்கப்படும் தெய்வீக மரங்களும் இருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் ஓ! காலவா, தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், எப்போதும் விருப்பப்படி விளையாடுபவர்களுமான சித்தர்களின் வசிப்பிடங்கள் இருக்கின்றன. அவற்றில் இன்பத்திற்கான அனைத்துவிதமான பொருட்களும் நிறைந்திருக்கும்.

இங்கேதான் ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} அருந்ததியையும் காண முடியும். இங்கே தான் சுவாதி நட்சத்திரக்கூட்டத்தைக் காண முடியும். இங்கேதான் அது {சுவாதி நட்சத்திரம்} முதலில் காட்சியில் எழுகிறது {கண்ணுக்குத் தெரிகிறது}. இந்தப் பகுதியில் தான் பெரும்பாட்டனான பிரம்மன் யக்ஞத்தின் அருகில் {வேள்வி பொருந்திய வடிவில்} வசிக்கிறான். இந்தப் பகுதியில் தான் சூரியன், சந்திரன் மற்றும் பிற ஒளியுடல்கள் {நட்சத்திரங்கள், கோள்கள்} சுழல்வது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இந்தப் பகுதியில்தான், ஒப்பற்றவர்களும், உண்மை பேசுபவர்களுமான, தர்மர்கள் என்ற பெயரில் அறியப்படும் முனிவர்கள் கங்கையின் ஊற்றுக்கண்ணைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முனிவர்களின் தோற்றம், உருவத்தின் தன்மைகள், தவநோன்புகளை யாரும் அறிய மாட்டார்கள். அவர்களால் சுயமாகத் தங்கள் விருப்பத்தின் பேரில் படைக்கப்படுவதும், விருந்தோம்பலுக்காக வழங்கப்படுவதும், பரிமாறப்பட்டு, பயன்படுத்தப்படுவதுமான ஆயிரம் உணவு வகைகளின் தயாரிப்பு {அனைவருக்கும்} புதிராகவே இருக்கின்றன. ஓ! காலவா, இந்த முனிவர்களால் {தர்மர்களால்} பாதுகாக்கப்படும் இடத்தைக் கடக்க முயல்பவர்கள், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே, அழிவார்கள் என்பது நிச்சயம். ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, தெய்வீகமான நாராயணன் மற்றும் ஜிஷ்ணு என்று அழைக்கப்படும் நித்தியமான நரனைத் தவிர வேறு யாராலும் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கடக்க முடியாது.

ஐலவிலனின் (குபேரனின்) வசிப்பிடமான கயிலாய மலைகள் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. வித்யுத்பிரபைகள் என்று அறியப்படும் பத்து அப்ரசஸ்களின் தோற்றம் இங்கேதான் நிகழ்ந்தது. ஓ! அந்தணா {காலவா}, (அசுர மன்னனான) பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் உலகை அளந்த விஷ்ணு, இந்த வடக்குப் பகுதி முழுமையையும் அளந்தான். அதனால் இந்த இடம் விஷ்ணுபாதம் என்று அழைக்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் அது விஷ்ணுவின் கால்தடம் என்றும் அழைக்கப்பட்டது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இங்கே, இந்தப் பகுதியில் உள்ள உசிரவிஜம் என்று அழைக்கப்படும் இடத்தில், தங்கத் தடாகத்தின் அருகில், மன்னன் மருத்தன், ஒரு வேள்வியைச் செய்தான். இங்கேதான் இமயம் தன்னிடம் உள்ள தங்கச்சுரங்கங்களை ஒப்பற்ற மறுபிறப்பாள முனிவரான ஜிமுதருக்குத் வெளிக்காட்டியது. அந்த ஜிமுதர் அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அந்தணர்களுக்கே கொடுத்தார். அவற்றைக் கொடுத்த பிறகு, அந்தப் பெரும் முனிவர், அவர்கள் அனைவரிடமும், அவை {அந்தத் தங்கங்கள்} தன் பெயராலே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுமுதல், அந்தச் செல்வங்கள் ஜைமுத தங்கம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.

இங்கே, இந்தப் பகுதியில்தான், ஓ! பாரதர்களில் காளையே [1], ஓ! காலவா, தினமும் காலையிலும் மாலையிலும், லோகபாலகர்கள், "எந்த நபரின் எந்தக் காரியத்தை நாம் பார்க்கலாம்?" என்று பிரகடனம் செய்து கொள்கின்றனர். இதற்காகவும், இன்னும் பிற சம்பவங்களுக்காகவும், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, வடக்குப் பகுதி மற்ற பகுதிகள் அனைத்தையும் விட மேன்மையானதாக இருக்கிறது. இந்தப் பகுதி அனைத்திலும் மேன்மையானது (உத்தரம்) என்பதாலேயே, இது வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! ஐயா, இப்படியே நான் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து திசைகளையும் உனக்கு விவரித்துவிட்டேன். எந்தப் பகுதியை நோக்கி நீ செல்ல விரும்புகிறாய்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, பூமியின் அனைத்துப் பகுதிகளையும் உனக்குக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்" என்றான் {கருடன்}.

[1] அந்தணர் ஒருவர், பாரதர்களில் காளையே என்று அழைக்கப்படுவதை அநேகமாக இங்கேதான் காண்கிறோம் என நினைக்கிறேன்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்