Tuesday, May 26, 2015

"மரணமே கடவுள்!" என்ற கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 112

"Death is God himself!" said Garuda! | Udyoga Parva - Section 112 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –41)

பதிவின் சுருக்கம் : கிழக்கு திசையை நோக்கிச் செல்லுமாறு கருடனிடம் காலவர் கேட்டுக் கொண்டது; கருடன் தனது முதுகில் காலவரை ஏற்றிக் கொண்டது; கருடனின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காலவர் அதைக் கருடனிடம் சொன்னது; ரிஷப மலையில் ஓய்ந்து போகலாம் என்று கருடன் சொன்னது...

காலவர் {கருடனிடம்} சொன்னார், "ஓ கருடா, பாம்புகளில் முதன்மையானோரைக் கொல்பவனே, ஓ! அழகிய சிறகுகள் கொண்டவனே, ஓ! வினதையின் மகனே {கருடனே}, ஓ! தார்க்கியா {தார்க்ஷயா}, தர்மத்தின் கண்கள் இரண்டும் எங்கு விழித்தனவோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னைச் சுமந்து செல்வாயாக. எங்கே தேவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நீ முதலில் சொன்னாயோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னை அழைத்துச் செல். உண்மையும், அறமும் அங்கே வசிக்கின்ற என்று நீ சொல்லியிருக்கிறாய். தேவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன். எனவே, அருணனின் தம்பியே {கருடா}, நான் தேவர்களைக் காணும் வகையில் என்னை அங்கே {கிழக்குத் திசைக்கு} அழைத்துச் செல்" என்றார் {காலவர்}.


நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட வினதையின் மகன் {கருடன்}, அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "என் முதுகில் ஏறுவாயாக" என்றான். பிறகு, காலவ முனிவர் கருடனின் முதுகில் ஏறினார்.

காலவர் {கருடனிடம்}, "ஓ! பாம்புகளை உண்பவனே {கருடா}, நீ பறந்து செல்கையில், ஆயிரம் கதிர்களைக் கொண்டவனும், நாள் படைப்பனுமான சூரியன் காலை வேளையில் இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறாய். ஓ! விண்ணதிகாரியே {கருடா}, உனது சிறகடிப்பால் உண்டான புயல் காற்றில் மரங்களே உடைந்து உனது பாதையில் தொடரும் அளவுக்கு உனது வேகம் பெரியதாக இருக்கிறது.

ஓ! வானவாசியே {கருடா}, உனது சிறகுகளால் உண்டான புயலைக் கொண்டு கடல்களில் இருக்கும் நீர், மலைகள், காடுகளுடன் கூடிய பூமியையே இழுத்துவிடுவாய்ப் போலிருக்கிறது. உண்மையில், உனது சிறகுகளின் அசைவால் உண்டான பெருங்காற்று, மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகள் நிரம்பிய கடல் நீரை ஆகாயத்தின் மத்தியப்பகுதி வரை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரே முகம் கொண்ட மீன்களும், மனித முகங்களைக் கொண்ட திமிகள், திமிங்கலங்கள் மற்றும் பாம்புகளும் உனது சிறகுகள் எழுப்பும் பெருங்காற்றால் நசுக்கப்படுகின்றன. அந்த ஆழ்ந்த கர்ஜனையால் எனது காதுகள் செவிடாகின்றன. எதையும் கேட்கவோ, பார்க்கவோ முடியாதபடி நான் மலைத்துப் போயிருக்கிறேன். உண்மையில், எனது சொந்த நோக்கத்தைக்கூட நான் மறந்து விட்டேன்.

ஓ! விண்ணதிகாரியே {கருடா}, ஓர் அந்தணனின் உயிர் ஆபத்தில் இருப்பதை நினைவுகூர்ந்து உனது வேகத்தைத் தளர்த்துவாயாக. ஓ! ஐயா, சூரியனையோ, திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் ஓர் அடர்த்தியான இருளையே நான் காண்கிறேன். உடலை என்னால் காண முடியவில்லை. ஓ! முட்டையிடும் இனத்தவனே {கருடா}, ஒளிமிக்க இரண்டு ரத்தினங்களைப் போல ஒளிரும் உனது கண்கள் இரண்டை மட்டுமே நான் காண்கிறேன். என்னால் உனது உடலையோ, எனது உடலையோ காண முடியவில்லை.

ஒவ்வொரு அடியிலும் உனது உடலில் இருந்து தீப்பொறி பறப்பதை நான் காண்கிறேன். இந்தத் தீப்பொறிகளை விரைவில் நிறுத்து, மேலும் உனது கண்களின் ஒளிர்வையும் நிறுத்து. ஓ! வினதையின் மகனே {கருடா}, உனது வழியில் நீ செல்லும் இந்த அபரிமித வேகத்தைத் தளர்த்துவாயாக. சந்திரப் பிரகாசத்துடனும், ஒரு காதில் கருப்பு நிறத்துடனும் கூடிய எண்ணூறு {800} குதிரைகளை எனது ஆசானுக்கு {விசுவாமித்திரருக்கு} கொடுப்பதாக நான் வாக்களித்திருக்கிறேன். ஓ! முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எனது வாக்குறுதியை நிறைவேற்றும் எந்த வழியையும் நான் காணவில்லை. ஆனால் ஒரு வழியை என்னால் காண முடிகிறது. அஃது எனது உயிரை விடுவதுதான். எனக்குச் சுயமாக எந்தச் செல்வமும் இல்லை, செல்வமிக்க எந்த நண்பரும் எனக்குக் கிடையாது, மேலும் அபரிமிதமான செல்வத்தாலும் எனது நோக்கத்தை அடைய துணை நிற்க முடியாது" என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதையும் இன்னும் பிற சோகமான வார்த்தைகளையும் சொன்ன காலவரிடம், வினதையின் மகன் {கருடன்}, தனது வேகத்தைக் குறைக்காமல் சிரித்துக் கொண்டே, "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவா {காலவா}, உனது வாழ்வுக்கு ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உனக்குச் சிறுமதியே இருக்கிறது. ஒருவனது முயற்சியால் அவனுக்கு மரணம் ஏற்படாது. உண்மையில் மரணமே கடவுள். உனது நோக்கத்தை இதற்கு முன் நீ எனக்கு ஏன் சொல்லவில்லை? இவை அனைத்தையும் சாதிக்கப் பல அற்புத வழிகள் இருக்கின்றன. இங்கே கடலின் அருகே ரிஷபம் என்றழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே சிறிது நேரம் நாம் ஓய்வெடுப்போம். உணவால் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, ஓ! காலவா மீண்டும் நான் திரும்புவேன்" என்றான் {கருடன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்