Sunday, May 03, 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! - உத்யோக பர்வம் பகுதி 76

"Not from fear, only from compassion" said Bhima! | Udyoga Parva - Section 76 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –5)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்ள இயலாத பீமன், தனது ஆற்றல் குறித்தும், தன்னிடம் சிக்கியவர்கள் தப்ப முடியாது என்றும், தான் சொல்லிக் கொண்டதைவிடத் தனது ஆற்றல் பெரிது என்றும், இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எப்போதும் கோபம் நிறைந்த பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல், உயர்ந்த பொருளாலான குதிரையைப் [1] போல உடனே விழித்தெழுந்து, ஒரு நொடியும் தாமதிக்காமல், "ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ! கிருஷ்ணா, எங்களோடு வெகு காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் நீ நன்கு அறிந்திருப்பாய். அல்லது தடாகத்தின் ஆழம் தெரியாமல் அதில் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல, நீ என்னை அறியாதிருந்திருக்கலாம்.

[1] உயர்ந்த அழகுடைய குதிரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் a steed of high metal என்று இருக்கிறது. metal என்பதற்குத் தமிழில் உலோகம் என்றும், மாழை என்றும் பொருள் உண்டு. மாழை  என்பது இளமை, அழகு என்ற பொருள்களைத் தரும்.

இதன்காரணமாகவே, நீ தகாத வார்த்தைகளால் என்னைக் கடிந்து கொள்கிறாய். ஓ! மாதவா? நான் பீமசேனன் என்று அறிந்தும் இத்தகு தகாத வார்த்தைகளை என்னிடம் யாரால் பேச முடியும்? எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ! விருஷ்ணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுபவனே {கிருஷ்ணா}, எனது ஆற்றல் மற்றும் ஒப்பற்ற வலிமை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஒருவன், தனது சொந்த ஆற்றல் குறித்துப் பேசுவது எப்போதும் இழிவான செயலே என்றாலும், அன்பற்ற உனது கண்டனங்களால் துளைக்கப்பட்டிருக்கும் நான் எனது சொந்த வலிமையைக் குறித்துப் பேசுகிறேன்.

ஓ! கிருஷ்ணா, அசைக்க இயலாதவையும், மகத்தானவையும், எல்லையற்றவையும், பிறப்பெடுத்த எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக இருப்பவையுமான வானத்தையும், பூமியையும் பார். கோபத்தால் இவை இரு மலைகளைப் போல ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக் கொண்டால், அவற்றில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றோடு கூடிய அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க எனது கரங்களால் முடியும் [2]. கரங்களைப் போல இருக்கும் எனது கதாயுதத்தின் இணைப்புகளைப் பார். அவற்றின் பிடியில் ஒருமுறை சிக்கி, தப்பிக்க இயன்றவனை நான் காணவில்லை.

இமயம், பெருங்கடல், வலனைக் கொன்றவனான வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} ஆகிய மூவராலும் கூட, என்னால் தாக்கப்பட்டவனைத் தங்கள் பலத்தால் தப்புவிக்க முடியாது. போர்க்களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக வரக்கூடிய க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் எனது பாதத்தைக் கொண்டு எளிதாகத் தரையில் நசுக்கிவிடுவேன்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, என்ன ஆற்றலுடன் நான் பூமியில் உள்ள மன்னர்களை வீழ்த்தி அடக்கினேன் என்பது நீ அறியாததல்ல. உண்மையில், கடும் சக்தியுடன் இருக்கும் மதிய வேளை சூரியனைப் போன்ற எனது ஆற்றலை நீ அறியவல்லையெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் நடக்கும் கடும் கைக்கலப்பில் அதை அறிந்து கொள்வாய். நாற்றமிகுந்த கட்டியை உடைத்தால் ஏற்படும் வலியைப் போன்ற வலியைக் கொடுக்கும் வகையில் உனது கொடுஞ்சொற்களால் நீ என்னைக் காயப்படுத்துகிறாய்.

ஆனால், நான் சுயமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதைவிட வலியவனாக என்னை அறிவாயாக. அழிவையும், சீர்குலைவையும் தரும் உக்கிரமான போர் தொடங்கும் போது, நான், யானைகளையும், தேர்வீரர்களையும், குதிரைகளில் இருந்து போரிடுவோரையும், யானைகளில் இருப்போரையும் வீழ்த்தி, க்ஷத்திரிய வீரர்களில் முதன்மையானவர்களைக் கொல்வதையும் நீ காண்பாய்.

இவை யாவையும், போராளிகளில் முதன்மையானவர்களை நான் கலங்கடித்து வீழ்த்துவதையும் நீயும் பிறரும் காண்பீர்கள். எனது எலும்புகளின் மச்சை இன்னும் அழியவில்லை, எனது இதயமும் நடுங்கவில்லை. இவ்வுலகமே என்னை நோக்கிக் கோபத்துடன் விரைந்து வந்தாலும், நான் அச்சத்தை உணர மாட்டேன் [2]. ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, கருணையின் காரணமாகவே, நான் எதிரியிடம் நல்லெண்ணத்ததை வெளிப்படுத்துகிறேன். பாரதக் குலம் அழிவடையாதிருக்கவே, நான் காயங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.


[2] அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பாரதியின் மேற்கண்ட "பண்டாரப்பாட்டு" பீமனின் உள்ளநிலையை நன்கு பிரதிபலிப்பதாக உணர்கிறேன். மேற்சொன்ன அனைத்தும் பீமனுக்கு நேர்ந்த அனுபவமாகவோ, அவனது சொல்லாகவோ மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கின்றன.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்