Tuesday, June 02, 2015

மீண்டும் கன்னியான மாதவி! - உத்யோக பர்வம் பகுதி 116

Madhavi became a maiden once more! | Udyoga Parva - Section 116 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –45)

பதிவின் சுருக்கம் : ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு  குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, "உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதியாக, சிவந்திருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஹர்யஸ்வன்}.


[1] அழகைக் குறிக்கவோ, மங்கலத்தைக் குறிக்கவோ உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஆறு {6} எவை என்பது பலவாறாகச் சொல்லப்படுகிறது.
உள்ளங்கைகளின் பின்புறம் இரண்டும்{2},பின்தட்டுகள் இரண்டும் {2}, கொங்கைகள் இரண்டும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது. கொங்கைகள் இரண்டும் {2}, இடைகள் இரண்டும் {2}, கண்கள் இரண்டும் {2} தான் அவை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.

மென்மையாக இருக்க வேண்டிய ஏழு {7} அங்கங்கள் என்பன, தோல், மயிர், பற்கள், கைவிரல்கள், கால்விரல்கள், இடை, கழுத்து ஆகியன என்று ஒரே கருத்தாகக் குறிக்கப்படுகிறது. ஆழமாக இருக்க வேண்டிய மூன்று {3} அங்கங்கள் என்பன தொப்புள் {நாபி}, குரல் மற்றும் புத்தி என்று சொல்லப்படுகிறது. சிவந்திருக்க வேண்டிய ஐந்து {5} அங்கங்கள் என்பன உள்ளங்கைகள், கடைக்கண்கள், நாக்கு, உதடுகள், முகம் ஆகியன ஆகும். இந்த ஐந்தும் கூடப் பலவாறாகச் சொல்லப்படுகின்றன என்கிறார் கங்குலி.

கீழ்க்கண்டவை வேறொரு பதிப்பில் கண்ட அங்கலட்சணங்கள் ஆகும். இவை கங்குலியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றன.

பெண்களுக்கான அங்கலட்சணம்: பின்தட்டுகள், நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயர்ந்திருக்க வேண்டும்; விரல்களின் கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் {கங்குலி ஏழு என்கிறார்} மென்மையாக இருக்க வேண்டும். குரல், மனம், நாபி ஆகிய மூன்றும் ஆழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கைகள், உள்ளங்களால்கள், கடைக்கண்கள், நகங்கள் ஆகியன {இந்த அங்கங்கள் ஐந்து என்கிறார் கங்குலி} சிவந்திருக்க வேண்டும்.

ஆண்களின் லட்சணம் என்பது : அங்கங்கள் ஐந்தில் {5} நீளமும், நாலில் {4} குட்டையும், ஐந்தில் {5} மென்மையும், ஆறில் {6} உயர்வும் {உன்னதமும்}, ஏழில் {7} சிவப்பும், மூன்றில் {3} விரிவும், மூன்றில் {3} ஆழமும் {கம்பீரமும்} இருக்க வேண்டும். கன்னம், கண், கை, தொடை, மூக்கு ஆகிய ஐந்தும் {5} நீண்டு இருந்தால் நன்மையை அளிக்கின்றன. லிங்கம் {ஆண்குறி}, பின்தட்டு, கழுத்து, கணுக்கால் ஆகிய நான்கும் {4} குட்டையானால் நன்மையை அளிக்கின்றன. பல், விரல்கணு, கேசம், தோல், விரல் ஆகிய ஐந்தும் {5} மென்மையாக இல்லாவிட்டால் துக்கத்தைத் தரும். மார்பு, கக்ஷம், நகம், நாசி, தோள், பிடரியெலும்பு ஆகிய ஆறும் {6} உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டும். கடைக்கண், பாதம், கை, கன்னம், உதடுகள், நாக்கு, நகம் ஆகிய ஏழும் {7} சிவந்திருந்தால் அனைத்து நன்மைகளையும் அளிக்கும்.

அதற்குக் காலவர், "நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்" என்றார்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், "பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ! காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்" என்றான் {ஹர்யஸ்வன்}.

மன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், "பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ! அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே" என்றாள்.

அந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், "ஓ! ஹர்யஸ்வா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.

சிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், "ஓ! மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது" என்றார்.

ஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். "இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்" என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்" என்றார் {நாரதர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்