Tuesday, June 02, 2015

மாதவியை மகளாக ஏற்ற காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 115

Galava accepted Madhavi as daughter | Udyoga Parva - Section 115 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –44)

பதிவின் சுருக்கம் : காலவர் கேட்ட குதிரைகளைக் கொடுக்க இயலாத யயாதி, தனது மகளை காலவரிடம் கொடுப்பது; யயாதி தனது மகள் மாதவியைத் திருமணம் செய்து கொடுப்பதால் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு காலவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொன்னது; காலவர் மாதவியை ஏற்றுக் கொள்வது; கருடன் தனது நண்பன் காலவன் தன் நோக்கத்தை அடைய ஒரு வழி கிடைத்த மனநிறைவுடன் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பியது; மாதவியை மணமுடித்துக் கொடுத்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்ள அயோத்யா மன்னன் ஹர்யஸ்வனிடம் காலவர் சென்றது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "உண்மை நிறைந்த அற்புத வார்த்தைகளைக் கொண்டு சுபர்ணனால் {கருடனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனும், தானமளிப்பவர்களில் முதன்மையானவனும், காசி நாட்டவர் அனைவரிலும் தயாளமான ஆட்சியாளனுமான தலைவன் யயாதி, தன் மனதில் அவ்வார்த்தைகளைச் சுழற்றி, தன்னிடம் கேட்கப்பட்ட யாசகத்தால் கிடைக்கும் பெருமையையும், (காலவரின்) தவத்தகுதியையும் கருதிப் பார்த்து, சூரிய குல மன்னர்கள் அனைவரையும் கடந்து, குறிப்பாகத் தன்னிடம் இந்த இருவரும் {கருடனும் காலவரும்} வந்ததை நோக்கில் கொண்டு, "இன்றைய எனது வாழ்வு அருளப்பட்டதே. உண்மையில், நான் பிறந்த குலமும் இன்று அருளப்பட்டதாகியது. ஓ! பாவமற்ற தார்க்ஷியா {கருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ! நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்துவிட்டது. எனினும், ஓ! விண்ணதிகாரியே {கருடா}, நீ இங்கே வந்த நோக்கம் கனியற்றதாகச் {பலனற்றுப் போகச்} செய்ய என்னால் இயலாது. மேலும் இந்த மறுபிறப்பாள முனிவரின் {பிராமண முனிவர் காலவரின்} நம்பிக்கைகளையும் நான் வீணாக்க விரும்பவில்லை.


எனவே, அவரது நோக்கம் எதனால் நிறைவேறுமோ, அதை {குதிரையை} நான் கொடுப்பேன். இரந்து கேட்டு வரும் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினால், அவர் {தானமளிக்க வேண்டியவரின்} குலத்தையே எரித்துவிடக் கூடும். ஓ! வினதையின் மகனே {கருடா}, "கொடு" என்று கேட்டு வருபவரின் நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிட்டு, "என்னிடம் ஏதும் இல்லை" என்று சொல்வதை விட வேறு பெரிய பாவச்செயல் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. {உலகில் ஆசையை நாசம் செய்வதான "கொடு" மற்றும் "இல்லை" என்ற வார்த்தைகளைக் காட்டிலும் மிகப் பாவமானது வேறு எதுவும் இல்லை}. தனது நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்து, தன் நோக்கமும் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்த ஒரு மனிதர், தனக்கு நன்மை செய்யத்தவறிய ஒருவனுடைய மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அழித்துவிடக்கூடும்.

எனவே, ஓ! காலவரே, நான்கு குடும்பங்களைத் தழைக்க வைக்கவல்ல [1] இந்த எனது மகளை {மாதவியைப்} பெற்றுக் கொள்ளும். அழகில் இவள் {மாதவி} தேவர்களுக்கு நிகரானவளாவாள். இவளிடம் நற்குணங்களால் ஆன திறன்கள் அனைத்தும் உள்ளன. உண்மையில், இவளது அழகுக்காகவே, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் {தாங்கள் மணமுடித்துக்கொள்ள} (என்னிடம்) இவளைக் கேட்கின்றனர். ஒரு காது கருப்பாக உள்ள எண்ணூறு குதிரைகளைக்கூட விடும், பூமியில் உள்ள மன்னர்கள் தங்கள் முழு நாடுகளையும் இவளுக்கு வரதட்சணையாக கொடுப்பார்கள். எனவே, மாதவி என்ற பெயர் கொண்ட எனது இந்த மகளை நீர் பெற்றுக் கொள்வீராக. நான், எனது மகள் மூலமாகப் பெறப்படும் மகனைக் {தௌஹித்ரர் = மகளின் மகன்} கொண்டவனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றான் {யயாதி}.

[1] நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும். நான்கு பிள்ளைகளைப் பெற்று, நான்கு வம்சங்களைப் பெறுவாள் இந்த மாதவி என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த மகளைப் {யயாதியின் மகளாகிய மாதவியைத் தன் மகளாகப்} பெற்றுக் கொண்ட காலவர், "நான் மீண்டும் உம்மைக் காண்பேன்" என்று சொல்லியபடி கருடனுடன் சென்றுவிட்டார். அவர்கள் {காலவரும் கருடனும்} அந்த மங்கையை {மாதவியை} தங்களுடன் அழைத்துச் சென்றனர். முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த {பறவையினத்தைச் சேர்ந்த} காலவரின் நண்பன் {கருடன்}, அவரிடம் {காலவரிடம்}, "இறுதியாக குதிரைகளை அடைவதற்கான வழி கிடைத்தது" என்று சொன்னான். இதைச் சொன்ன கருடன், பிறகு, காலவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டான். அந்தப் பறவைகளின் இளவரசன் {கருடன்} சென்ற பிறகு, தன்னுடன் அந்த மங்கையை {மாதவியை} அழைத்துச் சென்ற அவர் {காலவர்}, அந்த மங்கைக்கான (தகுந்த) வரதட்சணையைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனிடம் செல்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.

பெரும் சக்தி கொண்டவனும், நால்வகை அணிகளுடன் கூடியபெரும் படையைக் கொண்டவனும், கருவூலம் நிரம்பியவனும், அபரிமிதமான தானியங்களைக் கொண்டவனும், தனது குடிகளால் அன்புடன் விரும்பப்படுபவனும், அந்தணர்களால் விரும்பப்படுபவனும், அயோத்யா நகரத்தை ஆள்பவனுமான இக்ஷவாகு குலத்தின் ஹர்யஸ்வனிடம் [2] செல்ல அவர் முதலில் நினைத்தார். வாரிசை அடையும் விருப்பத்துடன் இருந்த அவன் {ஹர்யஸ்வன்}, அற்புதமான தவங்களில் ஈடுபட்டு, சமாதானத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வந்தான்.

[2] ஹர்யஸ்வன் என்றால் பச்சைக் குதிரைகளை உடையவன் என்று பொருள்.

பிறகு அந்த அந்தணரான காலவர், ஹர்யஸ்வனிடம் சென்று, "ஓ! மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ! ஹர்யஸ்வா, எனக்கு வரதட்சணையைக் கொடுத்துவிட்டு, இவளை {மாதவியை} உனது மனைவியாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. நீ என்ன வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் [3] என்பதை நான் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பாயாக" என்றார் {காலவர்}.

[3] மணமகளின் பெற்றோருக்கு, மணமகன் வரதட்சணை கொடுப்பதை "சுல்கம்" என்று சொல்வார்கள்.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்