Monday, June 15, 2015

கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 132

Kunti spoke to Krishna! | Udyoga Parva - Section 132 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –61)

பதிவின் சுருக்கம் : குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.


துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

குந்தி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, "ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.

இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், "எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான். 

மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).

கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.

உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.

என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.

தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ},  எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.

(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்; 
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்; 
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.

நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.

நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம்  இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்