Friday, June 26, 2015

"அர்ஜுனனைத் தவிர நால்வரை கொல்லேன்!" என்ற கர்ணன் - உத்யோக பர்வம் பகுதி 146

Except Arjuna, four will not be slained by me!" said Karna| Udyoga Parva - Section 146 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –75)

பதிவின் சுருக்கம் : குந்தி சொன்ன கதை உண்மையே எனச் சூரியன் கர்ணனுக்கு உறுதி அளித்தது; குந்தியை நிந்தித்த கர்ணன், அவள் செய்த குற்றங்களையும், தான் இழந்த சுகங்களையும் சுட்டிக் காட்டியது; துரியோதனானால் விரும்பிய அனைத்தையும் அடைந்த தான் உரிய நேரத்தில் அவனைக் கைவிட முடியாது என்று கர்ணன் சொன்னது; அர்ஜுனனைத் தவிரக் குந்தியின் மற்ற நான்கு மகன்களைக் கொல்ல மாட்டேன் எனக் குந்தியிடம் உறுதியளித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), "பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்" என்றது {சூரியனின் குரல்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.

அவன் {கர்ணன் குந்தியிடம்}, "ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.

ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}

ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?

இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.

அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, "உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக" என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், "நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்" என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்."



*போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன்...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:779.

இழைத்தது        இகவாமைச்     சாவாரை            யாரே        
பிழைத்தது        ஒறுக்கிற்            பவர்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்