Saturday, June 27, 2015

"என் நாடு! எவனுக்கு உரிமை?" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 147

"My kingdom! whose right?" said Bhishma | Udyoga Parva - Section 147 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –76)

பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து திரும்பிய கிருஷ்ணன் உபப்லாவ்யம் அடைந்தது; ஹஸ்தினாபுரத்தில் நடந்தது அத்தனையும் பாண்டவர்களிடம் தெரிவித்தது; யுதிஷ்டிரன் அதை மீண்டும் திரும்பச் சொல்லும்படி கேட்டதும், துரியோதனனிடம் பீஷ்மர் பேசிய பேச்சைக் கிருஷ்ணன் விவரித்துச் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுக்குமாறு பீஷ்மர் துரியோதனினடம் சொன்னைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஹஸ்தினாபுரத்தில் இருந்து உபப்லாவ்யத்திற்குத் திரும்பியவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, நடந்த அத்தனையும் பாண்டவர்களிடம் சொன்னான். நீண்ட நேரம் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} கலந்தாலோசித்து, மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் வழங்கிய சௌரி {கிருஷ்ணன்}, ஓய்வெடுக்கத் தனது பகுதிக்கு {மாளிகைக்குச்} சென்றான். விராடனுடன் கூடிய மன்னர்கள் அனைவரையும், அவர்கள் தலைமையில் இருந்த பிறரையும் அனுப்பிய பாண்டவர்கள், சூரியன் மறையும்போது, தங்கள் மாலைத் துதிகளைச் சொன்னார்கள். கிருஷ்ணனில் தங்கள் இதயங்களை நிலைக்க வைத்த அவர்கள், அவனைக் {கிருஷ்ணனைக்} குறித்தே சிந்திக்கலானார்கள். இறுதியாக, தாசார்ஹ குலத்துக் கிருஷ்ணனைத் தங்கள் மத்தியில் கொண்டு வந்து, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மீண்டும் விவாதித்தார்கள்.


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷனே} {கிருஷ்ணா}, நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்தின் மற்றொரு பெயர்} சென்று, (குருக்களின்) சபையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} நீ சொன்ன அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றான். அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "நாகபுரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்ற நான், நன்மையானவையும், {அறிவுக்குகந்த} காரணம் நிரம்பியவையும், உண்மையானவைமான சொற்களைத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னேன். எனினும், தீய மனம் கொண்ட அவன் {துரியோதனன்} அவற்றை ஏற்கவில்லை" என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தவறான வழியில் துரியோதனன் நடக்க விரும்பிய போது, குருக்களில் முதிர்ந்தவரான பாட்டன் {பீஷ்மர்}, பழியுணர்ச்சி கொண்ட அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? பரத்வாஜரின் மகனான பெரும் அருள் கொண்ட ஆசான் {துரோணர்} என்ன சொன்னார்? அவனைப் பெற்றோரான திருதராஷ்டிரரும், காந்தாரியும் என்ன சொன்னார்கள்? அறமறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், எங்கள் நிமித்தமாக எப்போதும் துயர் கொண்டவரும், எங்களை மகனாகக் கருதுபவரும், எங்கள் சிறிய தந்தையுமான க்ஷத்ரி {விதுரர்}, அந்தத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? அந்தச் சபையில் அமர்ந்திருந்த மன்னர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள்?

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நடந்ததை நடந்தவாறே எங்கள் அனைவருக்கும் சொல்வாயாக. தன்னைத்தானே அறிவாளியாகக் கருதுபவனும், பேராசை மற்றும் காமத்தில் மூழ்கியிருப்பவனுமான தீய துரியோதனனுக்கு ஏற்பில்லாத வகையில், குருக்களின் தலைவர்களும் (பீஷ்மரும், திருதராஷ்டிரரும்}, குருக்களின் அந்தச் சபையில் இருந்த மற்ற பிறரும் பேசிய பேச்சுக்களை ஏற்கனவே நீ {எங்களிடம்} சொன்னாய். எனினும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவ்வார்த்தைகள் எனது நினைவில் நிற்கவில்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, நான் அவ்வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, வாய்ப்பைக் கடந்துவிடாதபடியான ஒரு வழியில் நீ செயல்படுவாயாக. {காலங்கடத்தாமல் சொல்வாயாக}. ஓ! கிருஷ்ணா, நீயே எங்களது புகலிடம், நீய எங்களது தலைவன், நீயே எங்களது வழிகாட்டியுமாவாய்!", என்றான் {யுதிஷ்டிரன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மன்னன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, குருக்களின் சபைக்கு மத்தியில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்பீராக. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றை உமது மனத்தில் தாங்குவீராக. எனது வார்த்தைகள் முடிந்ததும், திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} உரக்கச் சிரித்தான். இதனால் பெரிதும் கோபமுற்ற பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, நமது குலம் ({குலத்தைப்} பாதுகாப்பது) குறித்து நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேள். அதைக் கேட்ட பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, உனது குடும்பத்திற்கு {குலத்திற்கு} நன்மையானதைச் செய்வாயாக.

ஓ! ஐயா {துரியோதனா}, ஓ! மன்னா, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவராக இருந்தார். முன்பு, நானே அவரது {சந்தனுவின்} ஒரே மகனாக இருந்தேன். "ஒரே மகனாக இருப்பவன் மகன் அல்ல {ஒரே மகன் உள்ளவன் மகனில்லாதவனே} என்பதே அறிவுள்ளோர் வாக்கு. எனது குலம் அழிவடையாதிருக்கட்டும், எனது புகழ் பரவ வேண்டும்" என்பதே அவரது {சந்தனுவின்} ஆசையாக இருந்தது. இதனால், இரண்டாவது மகனைத் தான் எப்படிப் பெறுவது என்ற விருப்பம் அவரது {சந்தனுவின்} இதயத்தில் எழுந்தது. இதுவே அவரது விருப்பம் என்பதை அறிந்த நான், எனது தந்தைக்காகவும், நமது குலத்திற்காகவும், நோற்க {நோன்பு ஏற்று வாழக்} கடுமையான உறுதிமொழியைச் செய்து, காளியை {சத்யவதியை} எனது தாயாக அழைத்து வந்தேன்.

னது உறுதிமொழியின் விளைவால், நான் மன்னனாக முடியவில்லை என்பதும், எனது உயிர்வித்தை நான் மேலெழச் செய்திருக்கிறேன் என்பதும் நிச்சயமாக உன்னால் நன்கு அறியப்பட்டவையே. (நான் அதற்காக வருந்தவும் இல்லை). எனது வாக்குறுதியை நோற்று, மகிழ்ச்சியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்து வரும் என்னை இதோ பார்.

ஓ! மன்னா {துரியோதனா}, குரு குலத்தைத் தாங்கியவர்களில் அழகனும், வலிய கரங்களைக் கொண்டவனும், அற ஆன்மா கொண்டவனுமான விசித்திரவீரியன், எனது தம்பியாக அவளிடம் {காளி என்ற சத்தியவதியிடம்} பிறந்தான். என் தந்தை {சந்தனு} விண்ணேகியதும், என்னை நான் விசித்திரவீரியனுக்குப் பணியாளாக நிறுத்திக் கொண்டு, எனது நாட்டின் ஆட்சியாளனாக அவனை {விசித்திரவீரியனை} நிறுவினேன். ஓ! மன்னர்களுக்கு மன்னா {துரியோதனா}, பிறகு பல ஏகாதிபதிகளின் கூட்டத்தை வீழ்த்தி, தகுந்த மனைவிகளை, நான் அவனுக்குக் {விசித்திரவீரியனுக்குக்} கொணர்ந்தேன். நீ அதை அடிக்கடி கேட்டிருக்கிறாய்.

சில காலத்திற்குப் பிறகு, நான் (பெரும்) ராமரிடம் {பரசுராமரிடம்} தனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால், எனது தம்பி {விசித்திரவீரியன்} ஓடிவிட்டான். மேலும் அவனது குடிமக்களும் {அப்போது} அவனைக் கைவிட்டனர். இந்தக் காலத்தில் தான், அவன் தனது மனைவியரிடம் மிகவும் பற்றுக் கொண்டான். அதன் காரணமாக அவனை உருக்கு நோய் {phthisis = உடலை மெலியச் செய்யும் காச நோய்; க்ஷய ரோகம்} தாக்கியது. அவனது மரணத்தை அடுத்து, நாட்டில் அரசின்மை ஏற்பட்டது. தேவர்கள் தலைவன் {இந்திரன்}, (நாட்டின் மீது) ஒரு துளி மழையும் பொழியாமல் இருந்தான்.

பிறகு, பட்டினி என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், என்னிடம் துரிதமாக வந்து, "உமது குடிமக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். எங்கள் நன்மைக்காக, நீர் எங்கள் மன்னனாவீராக. இந்த வறட்சியை விரட்டுவீராக. ஓ! சந்தனுவின் குலத்தைத் தழைக்க வைப்பவரே {பீஷ்மரே}, நீர் அருளப்பட்டிரும். உமது குடிமக்கள் கடுமையான மற்றும் பயங்கரமான நோய்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் {குடிமக்களில்} வெகு சிலரே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஓ! கங்கையின் மகனே {காங்கேயரே = பீஷ்மரே}, அவர்களைக் காப்பதே உமக்குத் தகும். இந்த வேதனைகளை {சித்திரவதைகளை} விரட்டுவீராக {நோய்களைப் போக்குவீராக}. ஓ! வீரரே {பீஷ்மரே}, உமது குடிமக்களை நீதியுடன் பேணிக் காப்பீராக. நீர் உயிரோடிருக்கையில், இந்த நாடு அழிவடையாதிருக்கட்டும்" என்று {குடிமக்கள்} கூறினர்.

அழுகுரலுடன் அவர்கள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும், எனது இதயம் கலங்காதிருந்தது. நல்லோரின் நடத்தையை நினைவுகூர்ந்த நான், எனது நோன்பைக் {வாக்குறுதியைக்} காக்கவே விரும்பினேன். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, குடிமக்கள், மங்கல குணம் கொண்ட எனது தாய் காளி {சத்தியவதி}, எனது பணியாட்கள், புரோகிதர்கள், (எங்கள் வீட்டைச் சார்ந்த) ஆசான்கள், கல்வி அறிவுள்ள பல அந்தணர்கள் ஆகிய அனைவரும் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டு, என்னை அரியணை ஏறும்படி வேண்டினார்கள்.

அவர்கள், "(பழங்காலத்தில்) பிரதீபனால் ஆளப்பட்ட நாடு, நீ உயிரோடிருக்கையில் {நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே} அழிந்து போகலாமா? ஓ! பரந்த இதயம் கொண்டவனே {பீஷ்மா}, எங்கள் நன்மைக்காக நீ மன்னனாவாயாக" என்றனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்டவனும், துன்பம் நிறைந்து பெரிதும் பாதிக்கப்பட்டவனுமான நான், எனது கரங்களை ஒன்றாகக் குவித்து, எனது பெற்றோரிடம் {தந்தையிடம்} கொண்ட மரியாதையால், நான் ஏற்ற நோன்பைத் தெரிவித்தேன். எங்கள் குலத்துக்காகவே நான் எனது உயிர் வித்தை மேலெழுப்பி, அரியணையை உதறி வாழும் நோன்பை நோற்றேன் என்று அவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறினேன். அதிலும் குறிப்பாக எனது தாய்க்காகவே {சத்தியவதிக்காகவே} நான் மீண்டும் அப்படிச் செய்தேன். எனவே, நான், "நுகத்தடியில் என்னைப் பூட்ட வேண்டாம்" என்று அவர்களிடம் இரந்து கேட்டேன்.

மீண்டும் நான் எனது கரங்களைக் கூப்பி, எனது தாயைச் {சத்தியவதியைச்} சமாதானப்படுத்தும் வகையில், "ஓ! தாயே, சந்தனுவால் பெறப்பட்டு, குரு குலத்தின் உறுப்பினராக இருக்கும் நான், எனது உறுதிமொழியைப் பொய்யாக்க முடியாது" என்று சொன்னேன். இதையே நான் மீண்டும் மீண்டும் அவளிடம் {சத்தியவதியிடம்} சொன்னேன். ஓ! மன்னா {துரியோதனா}, மேலும் நான் {சத்தியவதியிடம்}, "ஓ! தாயே, குறிப்பாக உனக்காகவே நான் இந்த நோன்பை நோற்றேன்; தாய்ப்பாசத்தின் சிறந்த அடையாளமான {எடுத்துக்காட்டான} உனக்கு, ஓ! தாயே, நிச்சயம் நான் பணியாளும் அடிமையுமாவேன்" என்றேன்.

இப்படி என் தாயிடமும், {குடி}மக்களிடமும் இரந்து கேட்ட நான், பிறகு, பெரும் தவசியான வியாசரை அணுகி, எனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறுமாறு வேண்டினேன். உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, நானும், எனது தாயும் {சத்தியவதியும்} அந்த முனிவரை {வியாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தோம். இறுதியில், ஓ! மன்னா {துரியோதனா}, பிள்ளைகள் குறித்த எங்களது வேண்டுதல்களை அந்த முனிவர் {வியாசர்} அருளினார். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, மொத்தமாக அவர் {வியாசர்} மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.

உன் தந்தை {திருதராஷ்டிரன்} பார்வையற்றவனாகப் {குருடனாகப்} பிறந்தான், ஒரு புலனில் பிறவிக் குறைபாடு கொண்டதன் விளைவாக, அவனால் {திருதராஷ்டிரனால்} மன்னனாக முடியவில்லை {முடியாது}. உயர் ஆன்மா கொண்டவனும், கொண்டாடப்பட்டவனுமான பாண்டுவே மன்னனானான். பாண்டு மன்னனானான் எனும்போது, அவனுடைய மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தந்தைவழி பரம்பரை உரிமையைப் பெற வேண்டும். ஓ! ஐயா {துரியோதனா}, சண்டையிடாதே, அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டைக் கொடு. நான் உயிரோடு இருக்கும்போது, வேறு எந்த மனிதன்தான் ஆட்சி செய்யத்தகுந்தவன்? எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.

உங்களுக்கு மத்தியில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். ஓ! ஐயா, ஓ! மன்னா {துரியோதனா}, உன்னிடமும், அவர்களிடமும் {பாண்டவர்களிடமும்} நான் எந்த வேறுபாடும் கொள்ளவில்லை {பாரபட்சமும் பார்க்கவில்லை}. (ஆனால் உங்கள் அனைவரையும் சமமாக விரும்புகிறேன்). நான் என்னென்ன சொன்னேனோ, அவையே, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, காந்தாரி மற்றும் விதுரன் ஆகியோரின் கருத்துகளுமாகும். இந்த எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே. இந்தப் பூமியையும், நீ கொண்ட அனைத்தையும் அழிக்காதிருப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்