Sunday, July 19, 2015

"பாண்டியன் ஒரு மகாரதன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 172

"Pandya is a maharatha!" said Bhishma! | Udyoga Parva - Section 172 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : சிகண்டி, திருஷ்டத்யும்னன், திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மன், திருஷ்டகேது,  ஜெயந்தன், அமிதௌஜஸ், கேகயத்தின் ஐந்து சகோதரர்களான காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகியோர், வார்த்தக்ஷேமி, சித்திராயுதன், சேகிதானன், சத்யத்ருதி, வியாக்ரதத்தன், சந்திரசேனன், சேனவிந்து, காசியன், துருபதனின் மகனான சத்யஜித், பாண்டிய மன்னன், த்ருடதன்வான், சிரேணிமத், வசுதானன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "எதிரி நகரங்களை அடக்குபவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான சிகண்டி, ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி யுதிஷ்டிரனின் ரதர்களில் முதன்மையானவர்களில் ஒருவனாவான். தனது பழைய பாலினத்தை விட்ட அவன், ஓ! பாரதா {துரியோதனா}, உனது துருப்புகளுடன் போரிட்டு பெரும் புகழை அடைவான். தன் உதவிக்குப் பாஞ்சாலர்களும், பிரபதரர்களும் அடங்கிய பெரும் எண்ணிக்கையிலான துருப்புகளைக் கொண்டிருக்கிறான். அந்தத் தேர்ப்படைகளைக் கொண்டு அவன் {சிகண்டி} பெரும் செயல்களைச் செய்வான்.


யுதிஷ்டிரனின் படை அனைத்துக்கும் தலைவனும், துரோணரின் சீடனான வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி ஓர் அதிரதனாவான். போரில் எதிரிகள் அனைவரையும் துன்புறுத்தும் அவன் {திருஷ்டத்யும்னன்}, அண்டத்தின் அழிவின் போது உலவும் பினகைதாங்கியான தெய்வத்தைப் {சிவனைப்} போல, தனியொருவனாகவே போர்க்களத்தில் உலவுவான். அவனது {திருஷ்டத்யும்னன்} தேர்ப்பிரிவுகள் {எண்ணிக்கையில்} பலவாக இருப்பதால், போரில் அவை கடலைப் போலவோ, தேவர்களைப் போலவோ இருப்பதாகப் பெரும் வீரர்களும் பேசுவார்கள்.

திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மனோ, முதிரா வயதுடையவனாகவும், ஆயுதங்களில் போதிய பயிற்சி இல்லாதவனாகவும் இருப்பதால், எனது மதிப்பீட்டின்படி, ஓ! மன்னா {துரியோதனா}, அவன் பாதி ரதனே ஆவான் {அர்த்தரதனே ஆவான்}.

{சிசுபாலனின் மகனும், வீரனும், சேதி நாட்டு மன்னனும், பெரிய வில்லை உடையவனும், பாண்டவர்களுக்குச் சம்பந்தியுமான திருஷ்டகேது எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான். ஓ! பாரதா {துரியோதனா}, துணிச்சல் மிக்கவனான இந்தச் சேதி நாட்டு மன்னன், தன் மகனோடு சேர்ந்த மகாரதர்கள் செய்யும் பெருஞ்செயல்களை எளிதில் செய்துவிடுவான்}. [1]

[1] இந்தப் பத்தி கங்குலியில் இல்லை.

பாஞ்சாலர்களுக்கு மத்தியில் இருக்கும் துணிச்சல்மிக்க வீரர்களான ஜெயந்தன், அமிதௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சத்யஜித் ஆகிய அனைவரும், ஓ! மன்னா, உயர் ஆன்மா கொண்ட மகாரதர்கள் ஆவர். ஓ! ஐயா, அவர்கள் அனைவரும் போரில் சினங்கொண்ட யானைகளைப் போலப் போரிடுவார்கள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட இருவரான அஜன் மற்றும் போஜன் ஆகிய இருவரும் மகாரதர்கள் ஆவர். பெரும் வலிமையைக் கொண்ட இந்த வீரர்கள் இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இந்த இருவரும் பெரும் கைவேகத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் போர்முறைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நல்ல திறமை பெற்றவர்களாகவும், ஆற்றலில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வீழ்த்துவதற்குக் கடினமானவர்களும், இரத்தச் சிவப்பு கொடிகளைக் கொண்டவர்களுமான {கேகயத்தின்} க்ஷத்திரிய வீரர்கள் ஐவரும் ரதர்களில் முதன்மையானோராவர். காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகிய அனைவரும் எனது மதிப்பீட்டின் படி ரதர்களில் முதன்மையானோர் ஆவர். போருக்குத் தகுந்த அனைத்துத் தகுதிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஓ! மன்னா {துரியோதனா}, வார்த்தக்ஷேமி, எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான்.

மன்னன் சித்திராயுதன் எனது மதிப்பீட்டின்படி, சிறந்த ரதர்களில் ஒருவனாவான். மறுபுறம், போரில் அவன் {சித்திராயுதன்} ஒரு சொத்தாகவும், கிரீடம் சூடியவனிடம் (அர்ஜுனனிடம்) அர்ப்பணிப்புடன் இணைந்தவனாகவும் இருக்கிறான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளுமான சேகிதானன் மற்றும் சத்யத்ருதி ஆகியோர் பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என்பது எனது மதிப்பீடாகும்.

வியாக்ரதத்தனும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சந்திரசேனனும், ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என நான் நினைப்பதில் சந்தேகமில்லை.

வேறுபெயரில் குரோதஹந்திரி என்று அழைக்கப்படும் சேனவிந்து, ஓ! மன்னா {துரியோதனா}, வாசுதேவனுக்கும், பீமசேனனுக்கும் இணையானவன் என்று கருதப்படுபவனாவான். போரில் அவன் {சேனவிந்து}, உனது வீரர்களிடம் பெரும் ஆற்றலுடன் போரிடுவான். உண்மையில், என்னையும், துரோணரையும் கிருபரையும் எப்படி நீ மதிப்பாயோ, அப்படி உன்னால் மதிக்கத் தகுந்தவன் இந்த மன்னர்களில் சிறந்தவனாவான்.

மனிதர்களில் சிறந்தவனும், புகழுக்குத் தகுந்தவனுமான காசியன் {காசி நாட்டு மன்னன்} ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் கைவேகம் கொண்டவனாவான். உண்மையில், பகை நகரங்களை அடக்கும் அவன் ஒரு ரதனுக்கு இணையானவன் என்று என்னால் அறியப்படுகிறான்.

துருபதனின் மகனும், வயதில் இளையவனும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்துபவனுமான சத்யஜித், எட்டு ரதர்களுக்கு இணையானவனாகக் கருதப்பட வேண்டும். உண்மையில் திருஷ்டத்யும்னனுக்கு இணையான அவன் ஓர் அதிரதனாவான். பாண்டவர்களின் புகழைப் பரப்ப விரும்பும் அவன் {சத்யஜித்} பெரும் செயல்களைச் செய்வான்.

பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், வலிய சக்தி கொண்ட வில்லாளியுமான பாண்டிய மன்னன், பாண்டவர்களுக்கு மற்றுமொரு பெரும் ரதனாக {மகாரதனாக} இருக்கிறான். [2] 

[2] இதே இடத்தில், வேறு பதிப்பில், "அன்பு கொண்டவனும், துணிவுமிக்கவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனும், பாண்டவர்களின் சுமையைத் தாங்குபவனுமான இந்தப் பாண்டிய மன்னன் மற்றும் ஒரு மகாரதனாவான்" என்று வருகிறது.

வலிமைமிக்க வில்லாளியான திருடதன்வான் பாண்டவர்களின் மற்றும் ஒரு மகாரதனாவான்.

ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {துரியோதனா}, குருக்களில் முதன்மையானோரான சிரேணிமத் {சிரேணிமான்} மற்றும் மன்னன் வசுதானன் ஆகிய இருவரும் எனது மதிப்பீட்டின்படி அதிரதர்களாவர்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்