Sunday, July 19, 2015

"சிகண்டியைக் கொல்லேன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 173

"I will not slay Sikhandin!" said Bhishma! | Udyoga Parva - Section 173 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ரோசமானான், குந்திபோஜன், கடோத்கசன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பிற மன்னர்களின் ஒன்று பட்ட சக்தியைக் குறித்துச் சொன்னது; சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவன் என்பதால் அவனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்னது; பிற மன்னர்களைக் கொல்லும் அதே வேளையில் தன்னால் பாண்டவர்களையும் கொல்ல முடியாது என்று பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் மற்றுமொரு மகாரதனாக ரோசமானன் இருக்கிறான். அவன் {ரோசமானன்}, ஓ! பாரதா {துரியோதனா}, இரண்டாவது தேவனைப் போலப் பகை வீரர்களுக்கு எதிரான போரில் களமாடுவான்.

எதிரிகளை அடக்குபவனும், வலிமைமிக்க வில்லாளியும், பெரும் பலம் கொண்டவனும், பீமனசேனனின் தாய்மாமனுமான [1] குந்திபோஜன் எனது மதிப்பீட்டின் படி ஓர் அதிரதனாவான். வலிமைமிக்கவனும், வீரனுமான இந்த வில்லாளி {குந்திபோஜன்}, போரில் உயர்ந்த திறம்படைத்தவனும் அதை முழுவதும் அறிந்தவனுமாவான். போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அவன் {குந்திபோஜன்}, மிகவும் திறமை வாய்ந்தவன் என்று என்னால் கருதப்படுகிறான். தானவர்களுக்கு எதிராகப் போரிடும் இரண்டாவது இந்திரனைப் போல, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அவன் {குந்திபோஜன்} போரிடுவான். அவனுக்குச் சொந்தமான புகழ்பெற்ற போர்வீரர்கள் அனைவரும் போரில் திறம்பெற்றவர்களாவர். பாண்டவர்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு ஏற்புடையதையும், அவர்களுக்கு நன்மையானவற்றையும் செய்யும் அந்த வீரன் {குந்திபோஜன்}, தனது தங்கையின் {குந்தியின்} மகன்களுக்காக {பாண்டவர்களுக்காக} இயல்புக்கு மிக்க {அசாதாரண} செயல்களைச் செய்வான்.


[1] குந்தியைப் பெற்ற தந்தையான சூரசேனனின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகன்தான் இந்தக் குந்திபோஜன். குந்திபோஜனுக்கு வாரிசில்லாததால், சூரசேனன் தனக்குப் பிறந்த முதல் குழந்தையான பிருதையைக் {குந்தியைக்} குந்திபோஜனுக்குக் கொடுத்தான். அது முதல் அந்தப் பிருதை குந்தி என்று அழைக்கப்பட்டாள். உறவுமுறையில் பிருதைக்குத் தமையனான குந்திபோஜன், அவளை எடுத்து வளர்த்ததால்தான் அவளுக்கு வளர்ப்புத் தந்தையானான். எனவேதான், இங்குப் பீஷ்மர் அவனைப் பீமனுக்குத் தாய்மாமன் என்று உண்மையான உறவுமுறையால் குறிப்பிடுகிறார்.

பீமனுக்கும், ஹிடிம்பைக்கும் பிறந்தவனும், மாய சக்திகள் பல கொண்டவனுமான அந்த ராட்சச இளவரசன் (கடோத்கசன்), எனது மதிப்பீட்டின்படி தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் {அதிரதர்களில்} ஒருவனாவான். போரில் விருப்பம் கொண்டவனும், மாய சக்திகளைக் கொண்டவனுமான அவன் {கடோத்கசன்}, ஓ! ஐயா, போரில் ஆர்வத்தோடு போரிடுவான். அவனது ஆலோசகர்களும், அவனைச் சார்ந்திருப்பவர்களுமான ராட்சச வீரர்களும் அவனுக்குக் கீழிருந்த போரிடுவார்கள்.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான இவர்களும், பல மாகாணங்களின் {நாடுகளின்} ஆட்சியாளர்களும், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காகக்} கூடியிருக்கிறார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, இவர்களே உயர் ஆன்ம பாண்டவர்களின் ரதர்கள், அதிரதர்கள் மற்றும் அரை ரதர்களில் முக்கியமானவர்கள். பெரும் இந்திரனைப் {மகேந்திரனைப்} போன்றவனும், கிரீடம் தரித்தவனுமான அந்த வீரனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் யுதிஷ்டிரனின் பயங்கரப் படையை இவர்களே போரில் வழிநடத்தப் போகிறார்கள்.

மாய சக்திகள் கொண்டவர்களும், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் எரிந்து கொண்டிருப்பவர்களுமான (இப்படிப்பட்ட) இவர்களுடனே நான் வெற்றியையோ மரணத்தையோ எதிர்பார்த்து போரிட வேண்டியிருக்கும். மாலை வேளையில் தெரியும் சூரியனையும் சந்திரனையும் போன்றவர்களும், (முறையே) காண்டீவம் மற்றும் சக்கரம் தரித்தவர்களும், முதன்மையான தேர்வீரகளில் இருவருமான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை எதிர்த்து நான் முன்னேறுவேன். முறையாகத் தங்கள் துருப்புகளின் தலைமையில் இருப்பவர்களான (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) அந்த யுதிஷ்ரனின் தேர்வீரர்களிடமும் போர்க்களத்தில் நான் மோதுவேன். ஓ! கௌரவர்களின் தலைவா {துரியோதனா}, அவரவரின் படிநிலைப்படி ரதர்கள் மற்றும் அதிரதர்கள் ஆகியோரையும், உனக்கும் அவர்களுக்கும் சொந்தமான அரை ரதர்களையும் {அர்த்த ரதர்களையும்} தீர்மானித்து நான் உனக்குச் சொன்னேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அங்கே இருக்கக்கூடிய பூமியின் பிற மன்னர்களில் யார் மீதெல்லாம் என் கண்கள் விழுகின்றனவோ, ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவர்களைத் தாக்குப்பிடிப்பேன்.

ஆனால், வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, உயர்த்திய ஆயுதங்களுடன் பாஞ்சலர்களின் இளவரசனான சிகண்டி என்னை நோக்கி விரைந்து வருவதை நான் கண்டாலும், அவனை அடிக்கவோ, கொல்லவோ மாட்டேன்.

எனது தந்தைக்கும் {மன்னன் சந்தனுக்கும்} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நான், எனது உடைமையாக இருந்த நாட்டைக் கைவிட்டு, பிரம்மச்சரிய நோன்பை ஏற்று எப்படி வாழ்ந்தேன் என்பதை உலகம் அறியும். பிறகு, கௌரவர்களின் அரசாட்சியில் சித்திராங்கதனை நிறுவிய அதே வேளையில் குழந்தையாக இருந்த விசித்திரவீரியனை இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} ஆக்கினேன்.

பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் தேவனைப் போல ஒரு சூளுரையைக் குறிப்பிட்டுவிட்டு, பெண் ஒருத்தியையோ, முன்பு பெண்ணாக இருந்த ஒருவனையோ நான் கொல்ல மாட்டேன். ஓ! மன்னா {துரியோதனா}, முன்பு, சிகண்டி பெண்ணாக இருந்தவன் என்பதை நீ ஏற்கனவே அறிந்திருப்பாய். மகளாகப் பிறந்த அவள் பிற்பாடு ஆண் பாலினத்திற்கு மாறினாள். ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவனுக்கு {சிகண்டிக்கு} எதிராகப் போரிடமாட்டேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, என்னோடு போரில் மோதும் அனைத்து பிற மன்னர்களையும் நான் நிச்சயம் அடிப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் குந்தியின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கொல்ல இயலாது" என்றார் {பீஷ்மர்}.

தாதிரதசங்கியான பர்வம் முற்றிற்று



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்