Showing posts with label ரதாதிரதசங்கியான பர்வம். Show all posts
Showing posts with label ரதாதிரதசங்கியான பர்வம். Show all posts

Sunday, July 19, 2015

"சிகண்டியைக் கொல்லேன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 173

"I will not slay Sikhandin!" said Bhishma! | Udyoga Parva - Section 173 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ரோசமானான், குந்திபோஜன், கடோத்கசன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பிற மன்னர்களின் ஒன்று பட்ட சக்தியைக் குறித்துச் சொன்னது; சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவன் என்பதால் அவனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்னது; பிற மன்னர்களைக் கொல்லும் அதே வேளையில் தன்னால் பாண்டவர்களையும் கொல்ல முடியாது என்று பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் மற்றுமொரு மகாரதனாக ரோசமானன் இருக்கிறான். அவன் {ரோசமானன்}, ஓ! பாரதா {துரியோதனா}, இரண்டாவது தேவனைப் போலப் பகை வீரர்களுக்கு எதிரான போரில் களமாடுவான்.

எதிரிகளை அடக்குபவனும், வலிமைமிக்க வில்லாளியும், பெரும் பலம் கொண்டவனும், பீமனசேனனின் தாய்மாமனுமான [1] குந்திபோஜன் எனது மதிப்பீட்டின் படி ஓர் அதிரதனாவான். வலிமைமிக்கவனும், வீரனுமான இந்த வில்லாளி {குந்திபோஜன்}, போரில் உயர்ந்த திறம்படைத்தவனும் அதை முழுவதும் அறிந்தவனுமாவான். போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அவன் {குந்திபோஜன்}, மிகவும் திறமை வாய்ந்தவன் என்று என்னால் கருதப்படுகிறான். தானவர்களுக்கு எதிராகப் போரிடும் இரண்டாவது இந்திரனைப் போல, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அவன் {குந்திபோஜன்} போரிடுவான். அவனுக்குச் சொந்தமான புகழ்பெற்ற போர்வீரர்கள் அனைவரும் போரில் திறம்பெற்றவர்களாவர். பாண்டவர்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு ஏற்புடையதையும், அவர்களுக்கு நன்மையானவற்றையும் செய்யும் அந்த வீரன் {குந்திபோஜன்}, தனது தங்கையின் {குந்தியின்} மகன்களுக்காக {பாண்டவர்களுக்காக} இயல்புக்கு மிக்க {அசாதாரண} செயல்களைச் செய்வான்.


[1] குந்தியைப் பெற்ற தந்தையான சூரசேனனின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகன்தான் இந்தக் குந்திபோஜன். குந்திபோஜனுக்கு வாரிசில்லாததால், சூரசேனன் தனக்குப் பிறந்த முதல் குழந்தையான பிருதையைக் {குந்தியைக்} குந்திபோஜனுக்குக் கொடுத்தான். அது முதல் அந்தப் பிருதை குந்தி என்று அழைக்கப்பட்டாள். உறவுமுறையில் பிருதைக்குத் தமையனான குந்திபோஜன், அவளை எடுத்து வளர்த்ததால்தான் அவளுக்கு வளர்ப்புத் தந்தையானான். எனவேதான், இங்குப் பீஷ்மர் அவனைப் பீமனுக்குத் தாய்மாமன் என்று உண்மையான உறவுமுறையால் குறிப்பிடுகிறார்.

பீமனுக்கும், ஹிடிம்பைக்கும் பிறந்தவனும், மாய சக்திகள் பல கொண்டவனுமான அந்த ராட்சச இளவரசன் (கடோத்கசன்), எனது மதிப்பீட்டின்படி தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் {அதிரதர்களில்} ஒருவனாவான். போரில் விருப்பம் கொண்டவனும், மாய சக்திகளைக் கொண்டவனுமான அவன் {கடோத்கசன்}, ஓ! ஐயா, போரில் ஆர்வத்தோடு போரிடுவான். அவனது ஆலோசகர்களும், அவனைச் சார்ந்திருப்பவர்களுமான ராட்சச வீரர்களும் அவனுக்குக் கீழிருந்த போரிடுவார்கள்.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான இவர்களும், பல மாகாணங்களின் {நாடுகளின்} ஆட்சியாளர்களும், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காகக்} கூடியிருக்கிறார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, இவர்களே உயர் ஆன்ம பாண்டவர்களின் ரதர்கள், அதிரதர்கள் மற்றும் அரை ரதர்களில் முக்கியமானவர்கள். பெரும் இந்திரனைப் {மகேந்திரனைப்} போன்றவனும், கிரீடம் தரித்தவனுமான அந்த வீரனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் யுதிஷ்டிரனின் பயங்கரப் படையை இவர்களே போரில் வழிநடத்தப் போகிறார்கள்.

மாய சக்திகள் கொண்டவர்களும், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் எரிந்து கொண்டிருப்பவர்களுமான (இப்படிப்பட்ட) இவர்களுடனே நான் வெற்றியையோ மரணத்தையோ எதிர்பார்த்து போரிட வேண்டியிருக்கும். மாலை வேளையில் தெரியும் சூரியனையும் சந்திரனையும் போன்றவர்களும், (முறையே) காண்டீவம் மற்றும் சக்கரம் தரித்தவர்களும், முதன்மையான தேர்வீரகளில் இருவருமான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை எதிர்த்து நான் முன்னேறுவேன். முறையாகத் தங்கள் துருப்புகளின் தலைமையில் இருப்பவர்களான (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) அந்த யுதிஷ்ரனின் தேர்வீரர்களிடமும் போர்க்களத்தில் நான் மோதுவேன். ஓ! கௌரவர்களின் தலைவா {துரியோதனா}, அவரவரின் படிநிலைப்படி ரதர்கள் மற்றும் அதிரதர்கள் ஆகியோரையும், உனக்கும் அவர்களுக்கும் சொந்தமான அரை ரதர்களையும் {அர்த்த ரதர்களையும்} தீர்மானித்து நான் உனக்குச் சொன்னேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அங்கே இருக்கக்கூடிய பூமியின் பிற மன்னர்களில் யார் மீதெல்லாம் என் கண்கள் விழுகின்றனவோ, ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவர்களைத் தாக்குப்பிடிப்பேன்.

ஆனால், வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, உயர்த்திய ஆயுதங்களுடன் பாஞ்சலர்களின் இளவரசனான சிகண்டி என்னை நோக்கி விரைந்து வருவதை நான் கண்டாலும், அவனை அடிக்கவோ, கொல்லவோ மாட்டேன்.

எனது தந்தைக்கும் {மன்னன் சந்தனுக்கும்} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நான், எனது உடைமையாக இருந்த நாட்டைக் கைவிட்டு, பிரம்மச்சரிய நோன்பை ஏற்று எப்படி வாழ்ந்தேன் என்பதை உலகம் அறியும். பிறகு, கௌரவர்களின் அரசாட்சியில் சித்திராங்கதனை நிறுவிய அதே வேளையில் குழந்தையாக இருந்த விசித்திரவீரியனை இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} ஆக்கினேன்.

பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் தேவனைப் போல ஒரு சூளுரையைக் குறிப்பிட்டுவிட்டு, பெண் ஒருத்தியையோ, முன்பு பெண்ணாக இருந்த ஒருவனையோ நான் கொல்ல மாட்டேன். ஓ! மன்னா {துரியோதனா}, முன்பு, சிகண்டி பெண்ணாக இருந்தவன் என்பதை நீ ஏற்கனவே அறிந்திருப்பாய். மகளாகப் பிறந்த அவள் பிற்பாடு ஆண் பாலினத்திற்கு மாறினாள். ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவனுக்கு {சிகண்டிக்கு} எதிராகப் போரிடமாட்டேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, என்னோடு போரில் மோதும் அனைத்து பிற மன்னர்களையும் நான் நிச்சயம் அடிப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் குந்தியின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கொல்ல இயலாது" என்றார் {பீஷ்மர்}.

தாதிரதசங்கியான பர்வம் முற்றிற்று



"பாண்டியன் ஒரு மகாரதன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 172

"Pandya is a maharatha!" said Bhishma! | Udyoga Parva - Section 172 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : சிகண்டி, திருஷ்டத்யும்னன், திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மன், திருஷ்டகேது,  ஜெயந்தன், அமிதௌஜஸ், கேகயத்தின் ஐந்து சகோதரர்களான காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகியோர், வார்த்தக்ஷேமி, சித்திராயுதன், சேகிதானன், சத்யத்ருதி, வியாக்ரதத்தன், சந்திரசேனன், சேனவிந்து, காசியன், துருபதனின் மகனான சத்யஜித், பாண்டிய மன்னன், த்ருடதன்வான், சிரேணிமத், வசுதானன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "எதிரி நகரங்களை அடக்குபவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான சிகண்டி, ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி யுதிஷ்டிரனின் ரதர்களில் முதன்மையானவர்களில் ஒருவனாவான். தனது பழைய பாலினத்தை விட்ட அவன், ஓ! பாரதா {துரியோதனா}, உனது துருப்புகளுடன் போரிட்டு பெரும் புகழை அடைவான். தன் உதவிக்குப் பாஞ்சாலர்களும், பிரபதரர்களும் அடங்கிய பெரும் எண்ணிக்கையிலான துருப்புகளைக் கொண்டிருக்கிறான். அந்தத் தேர்ப்படைகளைக் கொண்டு அவன் {சிகண்டி} பெரும் செயல்களைச் செய்வான்.


யுதிஷ்டிரனின் படை அனைத்துக்கும் தலைவனும், துரோணரின் சீடனான வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி ஓர் அதிரதனாவான். போரில் எதிரிகள் அனைவரையும் துன்புறுத்தும் அவன் {திருஷ்டத்யும்னன்}, அண்டத்தின் அழிவின் போது உலவும் பினகைதாங்கியான தெய்வத்தைப் {சிவனைப்} போல, தனியொருவனாகவே போர்க்களத்தில் உலவுவான். அவனது {திருஷ்டத்யும்னன்} தேர்ப்பிரிவுகள் {எண்ணிக்கையில்} பலவாக இருப்பதால், போரில் அவை கடலைப் போலவோ, தேவர்களைப் போலவோ இருப்பதாகப் பெரும் வீரர்களும் பேசுவார்கள்.

திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மனோ, முதிரா வயதுடையவனாகவும், ஆயுதங்களில் போதிய பயிற்சி இல்லாதவனாகவும் இருப்பதால், எனது மதிப்பீட்டின்படி, ஓ! மன்னா {துரியோதனா}, அவன் பாதி ரதனே ஆவான் {அர்த்தரதனே ஆவான்}.

{சிசுபாலனின் மகனும், வீரனும், சேதி நாட்டு மன்னனும், பெரிய வில்லை உடையவனும், பாண்டவர்களுக்குச் சம்பந்தியுமான திருஷ்டகேது எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான். ஓ! பாரதா {துரியோதனா}, துணிச்சல் மிக்கவனான இந்தச் சேதி நாட்டு மன்னன், தன் மகனோடு சேர்ந்த மகாரதர்கள் செய்யும் பெருஞ்செயல்களை எளிதில் செய்துவிடுவான்}. [1]

[1] இந்தப் பத்தி கங்குலியில் இல்லை.

பாஞ்சாலர்களுக்கு மத்தியில் இருக்கும் துணிச்சல்மிக்க வீரர்களான ஜெயந்தன், அமிதௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சத்யஜித் ஆகிய அனைவரும், ஓ! மன்னா, உயர் ஆன்மா கொண்ட மகாரதர்கள் ஆவர். ஓ! ஐயா, அவர்கள் அனைவரும் போரில் சினங்கொண்ட யானைகளைப் போலப் போரிடுவார்கள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட இருவரான அஜன் மற்றும் போஜன் ஆகிய இருவரும் மகாரதர்கள் ஆவர். பெரும் வலிமையைக் கொண்ட இந்த வீரர்கள் இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இந்த இருவரும் பெரும் கைவேகத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் போர்முறைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நல்ல திறமை பெற்றவர்களாகவும், ஆற்றலில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வீழ்த்துவதற்குக் கடினமானவர்களும், இரத்தச் சிவப்பு கொடிகளைக் கொண்டவர்களுமான {கேகயத்தின்} க்ஷத்திரிய வீரர்கள் ஐவரும் ரதர்களில் முதன்மையானோராவர். காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகிய அனைவரும் எனது மதிப்பீட்டின் படி ரதர்களில் முதன்மையானோர் ஆவர். போருக்குத் தகுந்த அனைத்துத் தகுதிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஓ! மன்னா {துரியோதனா}, வார்த்தக்ஷேமி, எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான்.

மன்னன் சித்திராயுதன் எனது மதிப்பீட்டின்படி, சிறந்த ரதர்களில் ஒருவனாவான். மறுபுறம், போரில் அவன் {சித்திராயுதன்} ஒரு சொத்தாகவும், கிரீடம் சூடியவனிடம் (அர்ஜுனனிடம்) அர்ப்பணிப்புடன் இணைந்தவனாகவும் இருக்கிறான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளுமான சேகிதானன் மற்றும் சத்யத்ருதி ஆகியோர் பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என்பது எனது மதிப்பீடாகும்.

வியாக்ரதத்தனும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சந்திரசேனனும், ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என நான் நினைப்பதில் சந்தேகமில்லை.

வேறுபெயரில் குரோதஹந்திரி என்று அழைக்கப்படும் சேனவிந்து, ஓ! மன்னா {துரியோதனா}, வாசுதேவனுக்கும், பீமசேனனுக்கும் இணையானவன் என்று கருதப்படுபவனாவான். போரில் அவன் {சேனவிந்து}, உனது வீரர்களிடம் பெரும் ஆற்றலுடன் போரிடுவான். உண்மையில், என்னையும், துரோணரையும் கிருபரையும் எப்படி நீ மதிப்பாயோ, அப்படி உன்னால் மதிக்கத் தகுந்தவன் இந்த மன்னர்களில் சிறந்தவனாவான்.

மனிதர்களில் சிறந்தவனும், புகழுக்குத் தகுந்தவனுமான காசியன் {காசி நாட்டு மன்னன்} ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் கைவேகம் கொண்டவனாவான். உண்மையில், பகை நகரங்களை அடக்கும் அவன் ஒரு ரதனுக்கு இணையானவன் என்று என்னால் அறியப்படுகிறான்.

துருபதனின் மகனும், வயதில் இளையவனும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்துபவனுமான சத்யஜித், எட்டு ரதர்களுக்கு இணையானவனாகக் கருதப்பட வேண்டும். உண்மையில் திருஷ்டத்யும்னனுக்கு இணையான அவன் ஓர் அதிரதனாவான். பாண்டவர்களின் புகழைப் பரப்ப விரும்பும் அவன் {சத்யஜித்} பெரும் செயல்களைச் செய்வான்.

பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், வலிய சக்தி கொண்ட வில்லாளியுமான பாண்டிய மன்னன், பாண்டவர்களுக்கு மற்றுமொரு பெரும் ரதனாக {மகாரதனாக} இருக்கிறான். [2] 

[2] இதே இடத்தில், வேறு பதிப்பில், "அன்பு கொண்டவனும், துணிவுமிக்கவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனும், பாண்டவர்களின் சுமையைத் தாங்குபவனுமான இந்தப் பாண்டிய மன்னன் மற்றும் ஒரு மகாரதனாவான்" என்று வருகிறது.

வலிமைமிக்க வில்லாளியான திருடதன்வான் பாண்டவர்களின் மற்றும் ஒரு மகாரதனாவான்.

ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {துரியோதனா}, குருக்களில் முதன்மையானோரான சிரேணிமத் {சிரேணிமான்} மற்றும் மன்னன் வசுதானன் ஆகிய இருவரும் எனது மதிப்பீட்டின்படி அதிரதர்களாவர்" என்றார் {பீஷ்மர்}.


"அபிமன்யு ஓர் அதிரதன்!" என்ற பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 171

"Abhimanyu is an atirata" said Bhishma! | Udyoga Parva - Section 171 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : திரௌபதியின் ஐந்து மகன்கள், அபிமன்யு, சாத்யகி,  உத்தமௌஜஸ், யுதாமன்யு, விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "திரௌபதியின் ஐந்து மகன்களும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மகாரதர்கள் ஆவார்கள். விராடனின் மகனான உத்தரன், எனது மதிப்பீட்டின்படி முதன்மையான ரதர்களில் ஒருவனாவான்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் ஒருவனாவான் {ஓர் அதிரதனாவான்}. ஆயுதங்களை அடிப்பதில் பெரும் கைவேகம் கொண்டவனும், போர்முறைகள் அத்தனையும் அறிந்தவனுமான அவன் {அபிமன்யு}, பெரும் சக்தி கொண்டவனும், நோன்புகள் நோற்பதில் உறுதியுள்ளவனும் ஆவான். தன் தந்தையின் {அர்ஜுனனின்} பாடுகளை நினைவுகூரும் அவன் தனது ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துவான்.

மது குலத்தின் துணிச்சல்மிக்கச் சாத்யகி, தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் ஒருவனாவான் {ஓர் அதிரதனாவான்}. விருஷ்ணி குலத்தின் வீரர்களுக்கு மத்தியில் முதன்மையானவனான அவன் {சாத்யகி}, பெரும் கோபமுடையவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாவான்.


ஓ! மன்னா {துரியோதனா}, உத்தமௌஜசும் ஓர் அற்புதத் தேர்வீரன் {ரதன்} என்பது என் மதிப்பீடு.

பெரும் ஆற்றல் கொண்ட யுதாமன்யுவும் எனது மதிப்பீட்டின்படி ஓர் அற்புதத் தேர்வீரனாவான் {ரதனாவான்}.

அந்தத் தலைவர்கள் அனைவரும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பல்லாயிரக்கணக்கில் கொண்டுள்ளனர். மேலும் குந்தியின் மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பும் அவர்கள், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போரிடுவார்கள். பாண்டவர்களோடு இணைந்த அவர்கள், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, நெருப்பு அல்லது காற்றைப் போல உனது போர்வீரர்களைச் சவாலுக்கழைத்து உனது படையணிகளை ஊடுருவிச் செல்வார்கள்.

போரில் வெல்லப்பட முடியாதவர்களும், மனிதர்களில் காளையரும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான முதிர்ந்த விராடன் மற்றும் முதிர்ந்த துருபதன் ஆகிய இருவரும் எனது மதிப்பீட்டின்படி மகாரதர்கள் ஆவர். வயதில் முதிர்ந்திருந்தாலும், க்ஷத்திரிய அறங்களை நோற்பதில் அவர்கள் இருவரும் அர்ப்பணிப்புக் கொண்டவர்களே. வீரர்கள் நடக்கும் பாதையில் நடக்கும் அவர்கள் {விராடனும், துருபதனும்} தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்துவார்கள் {என்பது உறுதி}. (பாண்டவர்களுடன்) அவர்கள் கொண்ட உறவுமுறையின் விளைவாகவும், பலமும், ஆற்றலும் கொண்டவர்கள் அவர்கள் என்பதாலும், ஓ! மன்னா {துரியோதனா}, தூய நோன்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அவர்கள், தங்கள் பாசத்தின் பலத்தால் அதிக வலுவை அடைந்திருக்கிறார்கள்.

அந்தக் காரணத்தின் படியே, ஓ! குருகுலத்தின் காளையே, பலம் வாய்ந்த கரங்களைக் கொண்ட அனைவரும் வீரர்களாகவோ, கோழைகளாகவோ ஆகிறார்கள். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, நோக்கத்தின் ஒற்றுமையால் இயக்கப்படுபவர்களும், வலிமைநிறைந்த வில்லாளிகளுமான இந்த மன்னர்கள் இருவரும் {விராடனும், துருபதனும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி உனது துருப்புகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தித் தங்கள் உயிரையே கூட விடுவார்கள். போரில் கடுமையானவர்களும் புகழ்பெற்ற வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான இவர்கள், ஓ! பாரதா {துரியோதனா}, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, தங்கள் அக்ஷௌஹிணிகளின் தலைமையில் இருந்து, தங்கள் உறவுமுறைக்கும், (பாண்டவர்கள்) தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் நீதியைச் செய்யும் வகையில் பெரும் சாதனைகளைச் செய்வார்கள்" என்றார் {பீஷ்மர்}.


Friday, July 17, 2015

அர்ஜுனன் குறித்துப் பீஷ்மரின் மதிப்பீடு! - உத்யோக பர்வம் பகுதி 170

Arjuna in the judgement of Bhisma! | Udyoga Parva - Section 170 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் நகுல சகாதேவர்களின் வீரத்தைக் குறித்துப் பீஷ்மர் துரியோதனிடம் சொன்னது; மொத்தமாகப் பாண்டவர்கள் அனைவரும் மனித சக்திக்ககு அப்பாற்பட்டவர்கள் என்று சொன்னது; ராஜசூய வேள்வியின் போது துரியோதனன் கண்ணெதிரிலேயே நிகழ்ந்தவற்றை நினைவுப்படுத்திச் சொன்னது; அர்ஜுனனின் வீரத்தையும், அவனது தகுதிகளையும், அவனுக்கு இணையான வீரன் இந்த உலகத்திலேயே எவனும் இல்லை என்றும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பாண்டவர்கள் மற்றும் அர்ஜுனனின் வீரத்தை நினைத்துப் பார்த்த கௌரவத் தரப்பு மன்னர்கள் உற்சாகமிழந்ததாக வைசம்பாயனர் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, உனது ரதர்களும், அதிரதர்களும், பாதி ரதர்களும் யார் என்பதைக் குறித்து இப்போது நான் சொன்னேன். பாண்டவர்களில் ரதர்கள் மற்றும் அதிரதர்களின் கணக்கை இப்போது கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் படையில் உள்ள ரதர்களின் கணக்கில் ஏதாவது ஆவலை நீ உணர்ந்தால், இந்த ஏகாதிபதிகளுடன் சேர்ந்து கேட்பாயாக.


பாண்டு மற்றும் குந்தியின் மகனான மன்னனே {யுதிஷ்டிரனே} ஒரு பலமிக்க ரதனாவான். ஓ! ஐயா {துரியோதனா}, சுடர்மிகும் நெருப்பைப் போல அவன் போர்க்களத்தில் உலவுவான்; ஓ! மன்னா {துரியோதனா}, பீமசேனன் எட்டு {8} ரதர்களுக்கு இணையாகக் கருதப்படுகிறான். கதாயுத மோதலிலோ, கணைகளின் மோதலிலோ அவனுக்கு {பீமனுக்கு} இணையாக எவனும் இல்லை. பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், செருக்கு நிறைந்தவனுமான அவன் {பீமன்}, ஆற்றலில் மனிதசக்திக்கு ஆப்பாற்பட்டவனாவான். மனிதர்களில் காளையரான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் ரதர்களாவர். அழகில் அசுவினி இரட்டையர்களைப் போன்ற அவர்கள், பெரும் சக்தியை உடையவர்களாக இருக்கிறார்கள்.
தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் இருக்கும் அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, தங்கள் பாடுகளை நினைவுக்கூர்ந்து, பல இந்திரர்களைப் போலப் போர்க்களத்தில் உலவுவார்கள் என்பதில் ஐயமில்லை. உயர் ஆன்மா கொண்ட அவர்கள் அனைவரும் உடற்கட்டில் உயரமாகச் சால மரத்தண்டுகளைப் போல இருக்கிறார்கள். உடற்கட்டில் பிற மனிதர்களைவிட அரை முழம் உயரமாக இருக்கும் பாண்டுவின் மகன்கள் அனைவரும், சிங்கம் போன்ற வீரத்தையும், பெரும் பலத்தையும் கொண்டவர்களாவர். ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் அனைவரும் பிரம்மச்சரிய நோன்புகளையும், பிற தவத்துறவுகளையும் பயின்றவராவர்.

அடக்கமுடையவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்}, உண்மையான புலியின் கடும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேகத்தில், அடிப்பதில், (எதிரிகளை) நசுக்குவதில், அவர்கள் அனைவரும், {சாதாரண} மனிதனைவிட மேலானவர்களாக இருக்கிறார்கள். உலகளாவிய கைப்பற்றல் இயக்கத்தின் போது, அவர் அனைவரும் பெரும் மன்னர்களை வீழ்த்தினார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அவர்களுடைய ஆயுதங்கள், கதைகள், கணைகள் ஆகியவற்றை வேறு எந்த மனிதனாலும் தரிக்கமுடியாது. உண்மையில், ஓ! கௌரவா {துரியோதனா}, அவர்களது வில்லில் நாணேற்றவோ, அவர்களது கதாயுதங்களை உயர்த்தவோ, அவர்களது கணைகளைப் போரில் அடிக்கவோ வேறு எந்த மனிதனாலும் முடியாது.

வேகத்தில், இலக்கை அடிப்பதில், உண்பதில், புழுதியில் விளையாடுவதில் என அவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே உங்கள் அனைவரையும் வீழ்த்தினார்கள். கடுமையும் பலமும் கொண்ட அவர்கள், இந்தப் படையுடன் மோதும்போது, போரில் அதை நிர்மூலமாக்குவார்கள். எனவே, அவர்களுடன் ஒரு மோதல் விரும்பத்தக்கது அல்ல. அவர்களில் ஒவ்வொரும் தனியாகவே பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் ஆவர். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, ராஜசூய வேள்வியின் போது உனது கண்களுக்கு எதிராகவே அது நடந்தது. திரௌபதியின் பாடுகளையும், பகடையாட்டத்தின் போது பேசப்பட்ட கடுமொழிகளையும் நினைவு கூரும் அவர்கள் {பாண்டவர்கள்}, பல ருத்ரர்களைப் போலப் போர்களத்தில் உலவுவார்கள்.

நாராயணனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டிருக்கும், கண்கள் சிவந்த குடகேசனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இரு படைகளிலும் அவனுக்கு இணையாகக் கருதும்படி துணிச்சல் மிக்க வீரன் எவனும் கிடையாது. மனிதர்களை விட்டுவிடு, தேவர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களில் இதுவரை பிறந்தவர்களிளோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிலோ அவனைப் போன்ற தேர்வீரன் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை.

ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, குரங்குக் கருவி {ஹனுமன் உருவம்} தாங்கிய கொடி பொருத்திய தேரைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன் கொண்டிருக்கிறான்}; அந்தத் தேரைச் செலுத்துபவனோ வாசுதேவனாவான் {கிருஷ்ணனாவான்}. அதில் இருந்து போரிடும் வீரன் தனஞ்சயனாவான் {அர்ஜுனனாவான்}; அவனது வில்லோ காண்டீவமாகும்; காற்றைப் போன்ற வேகமாகக் குதிரைகளை அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கிறான்; தெய்வீக வடிவமைப்பிலான அவனது கவசம் துளைக்கமுடியாததாகும்; அவனது அம்பறாதூணிகள் இரண்டும் வற்றாதனவாக இருக்கின்றன.; பெரும் இந்திரன், ருத்ரன், குபேரன், யமன், வருணன் ஆகியோரிடம் இருந்து தனது ஆயுதங்களை அவன் பெற்றிருக்கிறான்; அவனது தேரில் பயங்கரத் தோற்றம் கொண்ட கதாயுதங்களும், தங்களுக்கிடையே வஜ்ரத்தையும் கொண்டுள்ள பிற பெரும் ஆயுதங்களும் இருக்கின்றன.

ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான தானவர்களை, தனித்தேரில் நின்று கொன்ற அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையாகக்கருத வேறு எந்தத் தேர்வீரன் இருக்கிறான்? பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான அந்த ஆயுதம் தாங்கிய வீர்ன் {அர்ஜுனன்}, தனது படையைக் காத்துக் கொண்டே, உனது துருப்புகளை நிச்சயம் அழித்துவிடுவான். ஓ! பெரும் மன்னா, கணைமாரியை {அம்பு மழையைச்} சிதறடிக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக முன்னேறத்தக்கவர்கள், {பீஷ்மனான} நானும், ஆசானும் {துரோணரும்} மட்டுமே; மூன்றாவதாக வேறு எந்தத் தேர்வீரனும் கிடையாது. மழைக்காலத்தில் காற்றால் உந்தப்பட்ட மேகங்களைப் போலக் கணைமாரியைப் பொழியும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனக்கு அடுத்தவனாகக் கொண்டு போரில் நுழைகிறான்! அவனோ {அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்டு, பாண்டு மகன்களின் நன்கறியப்பட்ட வீரத்தை நடுங்கும் இதயத்துடன் நினைவுப்படுத்திக் கொண்டு, அதைத் தங்கள் கண்கள் முன்பாகவே கண்டதுபோல நினைத்துப் பார்த்த அந்த மன்னர்களின் சந்தனக்குழம்பு பூசப்பட்ட, தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் கரங்கள், பலம் இழந்து தொங்குவது போலத் தோன்றிற்று".


{அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.
மேலும் விவரங்களுக்கு:
13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது 
யுதிஷ்டிரனுக்கு வயது   :89 
பீமனுக்கு வயது         :88 
அர்ஜுனனுக்கு வயது    :87 
நகுல சகாதேவர்களுகு   :86 
துரியோதனனுக்கு வயது :88 
கர்ணனுக்கு வயது       :105 
கிருஷ்ணனுக்கு வயது   :87

"இந்தக் கிழவனைக் கைவிடு!" என்ற கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 169

"Abandon this superannuated man!" said Karna! | Udyoga Parva - Section 169 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கர்ணனை இகழ்ந்து கூறுவது; கர்ணன் பாதி ரதனே என்று பீஷ்மர் சொல்வது; கர்ணன் பீஷ்மரை நிந்திப்பது; பீஷ்மரைக் கைவிடும்படி கர்ணன் துரியோதனனிடம் சொல்வது; பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை தான் போரிடுவத்தில்லை என்று கர்ணன் சொல்வது; பீஷ்மர் மீண்டும் கர்ணனை நிந்திப்பது; பீஷ்மரைச் சமாதானப்படுத்திய துரியோதனன், பாண்டவப் படையின் பலம் மற்றும் பலவீனங்களைச் சொல்லுமாறு கேட்டது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "அசலன், விருஷன் {விருஷகன்} ஆகிய இரு சகோதரர்களும் ரதர்கள் ஆவர். (போரில்) வெல்லப்பட முடியாதவர்களான அவர்கள் உனது எதிரிகளைக் கொல்வார்கள். பெரும் பலம் கொண்டோரான அந்த மனிதர்களில் புலிகள், அந்தக் கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், கோபத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இளமையும் அழகும் பொருந்திய அவர்கள் பெரும் பலத்தை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

எப்போதும் உனக்கு அன்பு நண்பனாய் இருப்பவனும், போரில் தனது திறன் குறித்து எப்போதும் தற்புகழ்ச்சி பேசுபவனும், எப்போதும் உன்னைத் தூண்டி விடுபவனும், ஓ! மன்னா {துரியோதனா}, கேவலமாகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனும், சூரியனின் மகனுமான இந்தக் கர்ணன்; உனது ஆலோசகனும், வழிகாட்டியும், நண்பனும், மதிகெட்ட வீணனுமான இந்தக் கர்ணன் ரதனோ, அதிரதனோ கிடையாது.


அறிவுகெட்ட இவன் {கர்ணன்}, தனது இயற்கைக் கவசத்தை இழந்தான். எப்போதும் அன்பாக இருக்கும் இவன், தனது தெய்வீகக் காது குண்டலங்களையும் இழந்தான். (ஆயுதங்களில் {ஆயுதப் பயிற்சியில்} தனது ஆசானான) ராமரின் {பரசுராமரின்} சாபத்தின் விளைவாகவும், (மற்றொரு சந்தர்ப்பத்தில் இவனைச் சபித்த) அந்தணருடைய வார்த்தைகளின் விளைவாகவும், போருக்கான தனது துணைப்பொருட்களை {போர்வீரனின் ஆயுதம், உடை தவிர்த்த மற்ற துணைச் சாதனங்களை} இழந்ததன் விளைவாகவும், எனது மதிப்பீட்டின் படி இவன் {இந்தக் கர்ணன்} பாதி ரதனே {அர்த்த ரதனே} ஆவான். (போரில்) பல்குனனை {அர்ஜுனனை} அணுகினால், நிச்சயம் இவன் {கர்ணன்} உயிரோடு தப்பமாட்டான்" என்றார் {பீஷ்மர்}.


இதைக் கேட்டவரும், ஆயுதங்கள் தரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர் {பீஷ்மரிடம்}, "நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது. அது பொய்யில்லை. இவன் {கர்ணன்} ஒவ்வொரு போரின் ஆரம்பத்திலும் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறான்; எனினும், ஒவ்வொரு செயலிலிருந்தும் இவன் பின்வாங்குவதையே {நம்மால்} பார்க்க முடிகிறது. (பருவம் கடந்து) அன்பாகவும், மூடத்தனமாகவும் இவன் இருக்கும் காரணத்தால் என் மதிப்பீட்டின் படி, கர்ணன் பாதி ரதனே {அர்த்த ரதனே}" என்றார் {துரோணர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் தனது விழிகளை விரித்து, கூரிய முட்கள் போன்ற வார்த்தைகளால் பீஷ்மரைத் துன்பறுத்தினான். அவன் {கர்ணன்} கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நான் அப்பாவியாக இருப்பினும் என் மீது நீர் கொண்ட வெறுப்பின் காரணமாகவும், உமது விருப்பத்தின்படியும், வார்த்தைக் கணைகளால் அடிக்கடி இப்படி என்னைச் சிதைக்கிறீர். எனினும், இவையாவையும் நான் துரியோதனனுக்காகவே பொறுக்கிறேன். என்னை வெறும் பாதி ரதனாகக் குறிப்பிடும் நீர், ஏதோ நான் கோழையாக இருந்ததைப் போல மதிப்பற்றவனாக என்னைக் கருதுகிறீர்.

நான் சொல்வதில் ஐயமென்ன? ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இந்த அண்டம் முழுமைக்கும், அதிலும் குறிப்பாகக் குருக்கள் அனைவருக்கும் நீர் ஓர் எதிரி எனச் சொல்வதில் நான் பொய்யுரைக்கவில்லை. எனினும், மன்னன் {துரியோதனன்} இதை அறியவில்லை. சமமான வீரம் கொண்டு, சமமானவர்களாக இருக்கும் இந்த மன்னர்களின் ஆற்றலைக் குறைக்கவும், இவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தவும், {இவர்களின்} சிறப்புகளில் வெறுப்பைக் கொண்டுள்ள நீர் முயல்வது போல வேறு எவன் முயல்வான்?

ஓ! கௌரவரே {பீஷ்மரே}, வயதோ, {தோல்} சுருக்கங்களோ, செல்வமோ, நண்பர்களைக் கொண்டிருப்பதோ, ஒரு க்ஷத்திரியன் மகாரதன் ஆவதற்குப் போதிய தகுதியாக அமையாது. மந்திரங்களின் மேன்மையால் அந்தணர்களும், செல்வத்தால் வைசியர்களும், வயதால் சூத்திரர்களும் அடையும் முக்கியத்துவத்தைப் {மேன்மையைப்} போல, ஒரு க்ஷத்திரியன் தனது பலத்தால் முக்கியத்துவத்தை {மேன்மையை} அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஆசை, பொறாமை, அறியாமையுடன் செயல்படுவது ஆகியவற்றின் தாக்கத்தால், உமது சொந்த சபலத்தின் படி {உம்மிஷ்டப்படி}, ரதர்கள் மற்றும் அதிரதர்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்.

நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, முறையாக மதிப்பிடுவாயாக! உனக்கு அநியாயத்தை மட்டுமே செய்பவரான இந்தத் தீய பீஷ்மர் உன்னால் கைவிடப்படட்டும். ஒருமுறை பிரிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, உனது முக்கியப் படையை {வேண்டுமானால்} இத்தகு சந்தர்ப்பங்களில், பெரும் சிரமத்தோடு ஒருங்கிணைத்து விடலாம்; ஆனால் பல்வேறு மாகாணங்களில் {நாடுகளில்} இருந்து கூடியிருக்கும் ஒரு படையை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, உனது வீரர்களின் இதயங்களில் (வெற்றி குறித்த) சந்தேகம் ஏற்கனவே முளைத்துவிட்டது. இந்தப் பீஷ்மர், நம் முன்னிலையிலேயே நமது சக்தியை பலவீனமாக்குகிறார். ரதர்களின் தகுதியை உறுதி செய்யும் பணி எங்கே? சிறுமதி படைத்த இந்தப் பீஷ்மர் எங்கே?

பாண்டவர்களின் படையை நான் மட்டுமே தாக்குப்பிடிப்பேன். குறி தப்பாத கணைகளைக் கொண்ட என்னிடம் நெருங்கும் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், புலியிடம் நெருங்கிய எருதுகளைப் போல நாலா பக்கமும் சிதறி ஓடுவார்கள். ஓ..!, போரும், ஆயுதம் தாங்கிய மோதலில் எதிர்ப்பும், நல்ல ஆலோசனைகளும், நன்கு வெளிப்படுத்தப்படும் வார்த்தைகளும் எங்கே? கிழவரும், தீய ஆன்மா கொண்டவரும், விதிக்குப் பலியாவதற்கு அவ்விதியாலேயே தூண்டப்பட்டவருமான பீஷ்மர் எங்கே? இவர் தனியராக முழு அண்டத்திற்கும் சவால்விடுகிறார். தவறான பார்வை கொண்ட இவர் {பீஷ்மர்}, வேறு எவனையும் ஆண்மையுள்ளவனாகக் கருதவில்லை.

முதிர்ந்தவர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் கற்பிப்பது உண்மையே. எனினும், அது மிக முதிர்ந்தவர்களைக் குறிக்காது; ஏனெனில், அவர்கள் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். தனியனாக, பாண்டவர்களின் படையை நான் நிர்மூலமாக்குவேன். எனினும், அத்தகு சாதனையின் புகழ் பீஷ்மரையே அடையும். ஏனெனில், ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, இந்தப் பீஷ்மரைத் தானே நீ உனது படைகளின் தலைவராக நியமித்திருக்கிறாய். புகழ் எப்போதும் தலைவர்களையே சாரும்; அவருக்குக் கீழ் போரிடுபவரை அது சார்வதில்லை. எனவே, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} உயிரோடு இருக்கும் வரை நான் போரிடமாட்டேன். ஆயினும், இந்தப் பீஷ்மர் கீழே கிடத்தப்பட்ட பிறகு, ஒன்றிணைந்து வரும் எதிரியின் மகாரதர்கள் அனைவரிடமும் நான் போரிடுவேன்" என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, "(பாண்டவர்களுடன்) துரியோதனனின் போர் குறித்த காரியத்தில், பரந்த கடலைப் போன்ற இந்தச் சுமையை நான் ஏற்கப்போகிறேன். இதைப் பல வருடங்களாக நான் நினைத்து வந்தேன். அந்தப் பயங்கர மோதலுக்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. என்னால் நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது. இதன் காரணமாகவே, சூதனின் மகனே {கர்ணா}, நீ வாழ்கிறாய். இல்லையென்றால், கிழவனாக நான் இருந்தாலும், வயதால் இளையவனாகவே நீ இருந்தாலும், போருக்கான உனது விருப்பத்தை அடக்கி, உயிரின் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை நான் நசுக்கியிருப்பேன்.

(உனது ஆசானான) ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, தனது பெரும் ஆயுதங்களை அடித்த போது, சிறு வலியைக் கூட அவற்றால் என்னிடம் ஏற்படுத்த முடியவில்லை. எனவே {அப்படியிருக்கும்போது}, உன்னால் எனக்கு என்ன செய்துவிட முடியும்? நல்லோர் எவரும், தற்புகழ்ச்சியை அங்கீகரிப்பதில்லை. உனது குலத்தில் புகழற்ற இழிந்தவனே {கர்ணா}, சினமுற்று இருப்பதாலேயே நான் {பின்வரும்} இந்தச் சிறு தற்புகழ்ச்சியைச் செய்கிறேன் என்று அறிவாயாக. *காசியின் ஆட்சியாளனுடைய மகள்களின் சுயம்வரத்தின் போது, தனித்தேரில் சென்று, அங்குக் கூடியிருந்த உலகக்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தி, அந்த மங்கையரைக் கடத்தினேன். போர்க்களத்தில் எண்ணிலடங்கா மன்னர்களும், அவர்களது வீரர்கள் விரைந்து வருகையில், தனியனாகவே நான் அவர்களைத் தடுத்தேன். கலவரத்தின் உருவமான உன்னை அடைந்ததாலேயே, குருக்களைத் தாக்க இந்தப் பேரிடர் தயாராக இருக்கிறது. நமது எதிரிகளைக் கொல்ல முயற்சி செய்வாயாக. நீ எப்போதும் சவால்விடுவாயே, அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} ஆண்மையோடு போரிடுவாயாக. ஓ! தீய புரிதல் கொண்டவனே {கெட்டபுத்தி உடையவனே}, அந்த மோதலில் இருந்து உயிருடன் நீ வெளி வருவதைக் காண நான் விரும்புகிறேன்!" என்றார் {பீஷ்மர்}.

பிறகு மன்னன் துரியோதனன், பெரும் ஆற்றல் கொண்ட பீஷ்மரிடம், "ஓ !கங்கையின் மைந்தரே, என் மீது உமது கண்களைச் செலுத்தும். கையருகில் நெருங்கி வரும் காரியம் பெரியது! நான் அதிகப் பயனடைவது எப்படி என்று ஊக்கத்துடன் சிந்திப்பீராக. நீங்கள் இருவரும் எனக்கும் பெரும் சேவையைச் செய்வீர்கள்! எதிரியிடம் உள்ள தேர்வீரர்களில் சிறந்தவர்களையும், அவர்களில் அதிரதர்களையும், தேர்ப்பிரிவின் தலைவர்களையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! கௌரவரே {பீஷ்மரே}, இந்த இரவு விடியும்போது நமது பெரும்போர் நடைபெறும் என்பதால், எனது எதிரிகளின் பலம் மற்றும் பலவீனங்களையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.

 *காசியின் ஆட்சியாளனுடைய மகள்களின் சுயம்வரத்தின் போது,

Thursday, July 16, 2015

அஸ்வத்தாமனின் பெருங்குறை! - உத்யோக பர்வம் பகுதி 168

The great defect of Aswatthaman! | Udyoga Parva - Section 168 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தாய்மாமன் சகுனி, துரோணரின் மகன் அஸ்வத்தாமன், க்ஷத்திரியர்கள் அனைவரின் ஆசான் துரோணர், பிருஹத்பலன், கர்ணனின் மகன் விருஷசேனன், ஜலசந்தன், பாஹ்லீகர், சத்யவான், ராட்சசத் தலைவன் அலம்புசன், பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன் பகதத்தன் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்தும், அவரவரின் தன்மைகள் குறித்தும் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, இந்த உனது தாய்மாமன் சகுனி, ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். அவன் {சகுனி}, பாண்டுவின் மகன்களிடம் (தற்போதைய) பகைமைகளுடன் (அதை வெடிக்கச் செய்யும் வகையில்) போரிடுவான். இதில் ஐயமில்லை. போருக்கு விரையும் அவனது {சகுனியின்} துருப்புகள் தடுக்கமுடியாதனவாகும். பல்வேறு விதமான ஆயுதங்களை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் அவை {அந்தத் துருப்புகள்}, வேகத்தில் காற்றுக்கு இணையானவை ஆகும்.


வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), வில்லாளிகள் அனைவரையும் விஞ்சியிருக்கிறான். போர்முறைகள் அனைத்தையும், கலங்கடிக்கமுடியாத ஆயுதங்களையும் அறிந்து வைத்திருக்கும் இவன் ஒரு மகாரதனாவான். காண்டீவதாரியை {அர்ஜுனனைப்} போன்றே, இந்த வீரனின் வில்லில் இருந்து அடிக்கப்படும் இவனது {அஸ்வத்தாமனின்} கணைகள், ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு தொடர்ந்து நேர்கோட்டில் சரமாகச் செல்லும். இந்த மகாரதன் {அஸ்வத்தாமன்} விரும்பினால், மூன்று உலகங்களையும் அழித்துவிடுவான். தனது ஆசிரமத்தில் தவத்தில் ஈடுபட்ட இவன் {அஸ்வத்தாமன்}, தனது கடுமையையும், ஆற்றலையும் அதிகரித்திருக்கிறான். பெரும் புத்திக்கூர்மை கொண்ட இவன் {அஸ்வத்தாமன்}, (பரிசாக அளிக்கப்பட்ட அனைத்து) தெய்வீக ஆயுதங்களின் மூலம் துரோணரின் ஆதரவைப் பெற்றிருக்கிறான்.

எனினும், இவனை {அஸ்வத்தாமனை} ரதன் என்றோ, மகாரதன் என்றோ நான் கருதாதபடிக்கு, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இவனிடம் ஒரு பெரும் குறை இருக்கிறது. வாழ்க்கையை மிகவும் விரும்புவதால், இந்த மறுபிறப்பாள மனிதன் {வேதியனான அஸ்வத்தாமன்} வாழ்க்கையை {உயிர் வாழ} {ஆயுளை} மிகவும் விரும்புகிறவனாக இருக்கிறான். இரு படை வீரர்களுக்கு மத்தியிலும், இவனுக்கு ஈடாகக் கருதுவதற்கு ஒருவனும் இல்லை. தனித்தேரில் இருந்தாலும், இவன், தேவர்களின் படையையே நிர்மூலமாக்கவல்லவனாவான். பலம்வாய்ந்த உடற்கட்டுக் கொண்ட இவன், தனது வில் நாணை {வலது கரத்தால் இழுத்து} தனது இடது கரத்தின் கையுறையில் அடித்து {அதனால் உண்டாகும் ஒலியால்} மலைகளையே பிளந்துவிட வல்லவனாவான்.

எண்ணிலடங்கா பண்புகளைக் கொண்டவனும், பயங்கரப் பிராகாசத்தைக் கொண்டவனும், {எதிரிகளை} அடிப்பவனுமான இவன் {அஸ்வத்தாமன்}, கையில் கதாயுதம் தரித்து, யமனாலும் தாங்க முடியாத படி (போர்க்களத்தில்) உலவுவான். யுகமுடிவின் போது ஏற்படும் நெருப்பைப் போன்ற கோபமும், சிங்கம் போன்ற பிடரியும், பெரும் காந்தியும் கொண்ட இந்த அஸ்வத்தாமன், பாரதர்களுக்கு இடையிலான இந்தப் போரில் உள்ள நீரு பூத்த நெருப்பை அணைப்பான். {யுத்தத்தின் மிச்சத்தை முடிப்பான்}.

வயதானாலும், பெரும் சக்தியுடன் இருக்கும் இவனி்ன் {அஸ்வத்தாமனின்} தந்தை (துரோணர்), இன்னும் கூடப் பல இளைஞர்களை விட மேன்மையானவராகவே இருக்கிறார். போரில் அவர் பெருஞ்செயல்களைச் சாதிப்பார். இதில் எனக்கு ஐயமில்லை. (போர்க்களத்தில்) அசையாமல் இருக்கும் அவர் {துரோணர்}, யுதிஷ்டிரனின் துருப்புகளை எரிப்பார்.

நெருப்பு உற்பத்தியாகும் உலர்ந்த புல் மற்றும் விறகின் பங்கைப் பாண்டவப் படை ஆற்றுகையில், இவரது {துரோணருடைய} ஆயுதங்களின் செயலூக்கம் காற்றாக வீசி அதில் (வலிமைமிக்கப் பெரிய) நெருப்பை உண்டாக்கி விடும். மனிதர்களில் காளையான இவர் {துரோணர்}, தேர்வீரர்கள் கூட்டத்தின் தலைவராவார். இந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} உனது நன்மைக்காகக் கடுஞ்செயல்களைச் சாதிப்பார். அரசபரம்பரையில் வந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் குருவான இந்த மரியாதைக்குரிய ஆசான் {துரோணர்}, சிருஞ்சயர்களை {பாஞ்சாலர்களை} நிர்மூலமாக்குவார்.

எனினும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவரது அன்புக்குரியவனாவான். எனவே, தன்னால் கொண்டாடப்படுவதும், தனக்கு உயர்ந்த தகுதியைத் தருவதுமான ஆசிரியச் சேவையை நினைவு கூரும் இந்த வலிமைமிக்க வில்லாளி {துரோணர்}, எந்தத் தொல்லையுமில்லாமல் பெரும் செயல்களைச் சாதிக்கவல்ல பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்ல இயலாதவராக இருக்கிறார். ஓ! வீரா {துரியோதனா}, பார்த்தனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா சாதனைகளுக்காகத் துரோணர் எப்போதும் தற்பெருமை கொள்கிறார். உண்மையில் இந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனது மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} தான் கொண்டுள்ளதைவிட அதிகப் பாசத்துடன் அவனை {அர்ஜுனனைக்} காண்கிறார்.

பெரும் ஆற்றலையுடைய இவர் {துரோணர்}, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்தாலும், தனித்தேரில் நின்று, தனது தெய்வீக ஆயுதங்களின் மூலம் போரில் அவர்களைத் தோற்கடிப்பார். மன்னர்களில் புலியான அவர் {துரோணர்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உனது மகாரதர்களில் ஒருவராவார். பகையணி வீரர்களின் தேர்ப்படையை உடைக்கவல்ல இவர் {துரோணர்}, எனது கருத்தின் படி, உனது தேர்வீரர்களில் முதன்மையானவர்களில் ஒருவராவார். தனது சொந்தப் படையின் தலைமையில் நின்று, எதிரியின் படையணிகளைத் துன்புறுத்தும் இவர் {துரோணர்}, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரித்துவிடுவார்.

உண்மையான புகழைக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் அவன் {பிருஹத்பலன்} மரணத்தைப் போலவே உலவுவான். ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, பல்வேறுவிதமான கவசங்களையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் தரித்திருக்கும் இவனது {பிருஹத்பலனின்} துருப்புகள், தங்களை எதிர்க்கும் வீரர்கள் அனைவரையும் கொன்றபடி போர்க்களத்தில் உலவிக்கொண்டிருக்கும்.

கர்ணனின் மகனான விருஷசேனன் முதன்மையான உனது தேர்வீரர்களில் ஒருவனும், மகாரதனுமாவான். வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் {விருஷசேனன்}, உனது எதிரியின் துருப்புகளை எரித்துவிடுவான்.

பெரும் சக்தியை உடைய ஜலசந்தன், ஓ! மன்னா {துரியோதனா}, முதன்மையான உனது ரதர்களில் ஒருவனாவான். மது குலத்தில் பிறந்தவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான இவன் {ஜலசந்தன்}, போரில் தனது உயிரைவிடத் தயாராக இருக்கிறான். போரில் திறம்பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான இந்த வீரன் {ஜலசந்தன்}, தனக்கு எதிரே உள்ள எதிரியின் படையணிகளைச் சிதறடித்து, தேரில் இருந்தோ, யானையின் முதுகில் இருந்தோ போரிடுவான். இந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜலசந்தன்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது கருத்தின் படி ஒரு ரதனாவான். கடும் போரில், இவன் {ஜலசந்தன்}, தனது துருப்புகள் அனைத்துடனும் கூடி உன் நிமித்தமாகத் தனது உயிரையே விடச் சித்தமாக இருக்கிறான். பெரும் ஆற்றலைக் கொண்டும், அனைத்து போர்முறைகளை அறிந்தும் இருக்கும் இவன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் உனது எதிரிகளுடன் அச்சமற்றுப் போரிடுவான்.

எப்போதும் போரில் புறமுதுகிடாதவரும், வீரரும், யமனைப் போன்றவருமான பாஹ்லீகர், ஓ! மன்னா {துரியோதனா}, எனது கருத்தின்படி, ஓர் அதிரதராவார். மோதலுக்கு விரையும் அவர் எப்போதும் திரும்புவதில்லை. உண்மையில், வாயுத் தேவனைப் போல அவர் {பாஹ்லீகர்} பகைவீரர்களைக் கொல்வார்.

பகையணியின் தேர்ப்படையை நிர்மூலமாக்குபவனும், போரில் அற்புதச் செயல்களைச் செய்யும் தேர்வீரனும், உனது படைகளின் தளபதியுமான சத்யவான், ஓ! மன்னா {துரியோதனா}, ஒரு மகாரதனாவான். போரை நோக்கமாகக் கொண்ட இவன் {சத்யவான்}, எப்போதும் துயரடைவதே இல்லை. தனது தேரின் குறுக்கே வரும் வீரர்களைக் குழப்பி அவர்கள் மீது இவன் விழுவான். பகைவர்களின் மீது எப்போதும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மனிதர்களில் சிறந்தவன் {சத்யவான்}, ஒரு நல்ல க்ஷத்திரியன் அடையத்தக்க அனைத்தையும் உனக்காகச் சாதிப்பான்.

கொடுஞ்செயல்கள் புரிபவனான ராட்சசர்கள் தலைவன் அலம்புசன் ஒரு மகாரதனாவான். (பாண்டவர்களுடனான) தனது பகைமைகளை நினைவு கூரும் அவன், எதிரிக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்துவான். ராட்சச வீரர்கள் அனைவரிலும் இவனே ரதர்களில் சிறந்தவனாவான். மாய சக்திகளைக் கொண்டவனும், பகைமையில் உறுதியுடன் இருப்பவனுமான இவன் {அலம்புசன்} போர்க்களத்தில் கடுமையுடன் உலவுவான்.

பிராக்ஜோதிஷ {நாட்டின்} ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான பகதத்தன், யானையின் அங்குசம் ஏந்தியவர்களில் முதன்மையானவனும், தேரில் இருந்து போரிடுவதில் திறம்பெற்றவனும் ஆவான். இவனுக்கும் {பகதத்தனுக்கும்}, காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நெடுநாட்கள் போர் நடந்தது. ஒருவரை வெல்ல மற்றொருவர் விரும்பினர். பிறகு, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, இந்திரனைத் தனது நண்பனாகக் கருதிய பகதத்தன், (இந்திரனின் மகனான) அந்த உயர் ஆன்ம பாண்டவனிடம் {அர்ஜுனனிடம்} நட்பு கொண்டான். யானையின் கழுத்தில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற இந்த மன்னன் {பகதத்தன்}, தேவர்களுக்கு மத்தியில் ஐராவதத்தில் இருந்து போரிடும் வாசவனைப் {இந்திரனைப்} போலப் போர்க்களத்தில் போரிடுவான்" என்றார் {பீஷ்மர்}.


Wednesday, July 15, 2015

துரியோதனனின் மகன் லட்சுமணன்! - உத்யோக பர்வம் பகுதி 167

Lakshmana, the son of Duryodhana! | Udyoga Parva - Section 167 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், மஹிஷ்மதியின் மன்னன் நீலன், அவந்தியின் மன்னர்கள் விந்தன் மற்றும் அனுவிந்தன், திரிகார்த்தத்தின் ஐந்து இளவரசர்கள், துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், துச்சாசனின் மகன் லட்சுமணன், தண்டதாரன், கோசல மன்னன் பிருஹத்பலன், கிருபர் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்து பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் என் கருத்தின்படி ஒரு தனி ரதனுக்கு {Ratha} {ரதிக்னன்} இணையானவன். உனது நோக்கத்தின் வெற்றியை விரும்பும் அவன் {சுதஷிணன்}, போர்க்களத்தில் எதிரியுடன் போரிடுவது உறுதி. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, போர்க்களத்தில் இருக்கும் இந்திரனுக்கு இணையாக உனக்காக உழைக்கும் தேர்வீரர்களில் சிங்கமான இவனது ஆற்றலை கௌரவர்கள் காண்பார்கள். இந்த மன்னனின் {சுதக்ஷிணனின்} தேர்ப்படையைப் பொறுத்தவரை, கடும் செயலூக்கத்துடன் அடிப்பவர்களான அந்தக் காம்போஜர்கள், ஒரு பெரிய பகுதியை மூடும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவர்களாவர்.


நீலக் கவசம் தரித்திருப்பவனும், மஹிஷ்மதி (மாகாணத்தில்) இருந்து வந்திருப்பவனுமான நீலன், உனது ரதர்களில் ஒருவன் ஆவான். அவனது தேர்ப்படையைக் கொண்டு அவன் {நீலன்} பெரிய அழிவை ஏற்படுத்துவான். ஓ! குழந்தாய் {துரியோதனா}, அவனுக்குச் சகாதேவனிடம் பகைமை இருக்கிறது.

போரில் சாதித்தவர்களும், கடும் சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களும், அவந்தியை {அவந்தி நாட்டைச்} சேர்ந்தவர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும் அற்புதமான ரதர்களாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்களில் வீரர்களான இந்த இருவரும், தங்கள் கையில் இருந்து விடப்பட்ட கதாயுதங்கள், நாராசம், தோமரம், வாள், ஈட்டிகளால் உனது எதிரியின் துருப்புகளை எரிப்பார்கள். இரு (யானைகளை) தலைவர்களைப் போல, தங்கள் கூட்டத்துடன் விளையாடி, போருக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, யமனைப் போலவே போர்க்களத்தில் உலவுவார்கள்.

திரிகார்த்தத்தின் ஐந்து (அரசச்) சகோதரர்களும், எனது கருத்தின்படி, ரதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவார்கள். (நன்கு அறியப்பட்ட) விராட நகர் சம்பவத்தின் போது, பிருதையின் {குந்தியின்} மகன்கள் அவர்களுடன் பகைமை கொண்டார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உயர்ந்த அலைகளைக் கொண்ட கங்கையின் ஓடையைக் கலக்கும் பெரும் மகரங்களைப் போல, போர்க்களத்தில் பார்த்தர்களின் அணியைக் கலங்கடிப்பார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, சத்தியரதனைத் (தங்களில்) மூத்தவனாகக் கொண்ட அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்} ஐவரும் ரதர்களாவர் {ரதிக்னர்கள்}. வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் செல்பவனும், பாண்டுவின் மகனான பீமனின் தம்பி {அர்ஜுனன்}, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கியபோது, தங்களுக்கும் தீங்கிழைத்ததை நினைவு கூரும் அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்}, ஓ! பாரதா {துரியோதனா}, போர்க்களத்தில் தங்கள் வீரத்தை நிச்சயம் காட்டுவார்கள். பாண்டவர்கள் பக்கம் உள்ள வில்லாளிகளின் தலைவர்களான பல மகாரதர்களையும், க்ஷத்திரியத் தலைவர்களையும் அவர்கள் நிச்சயம் கொல்வார்கள்.

{துரியோதனா} மனிதர்களில் புலிகளான உனது மகன் லக்ஷ்மணன், துச்சாசனனின் மகன் ஆகிய இருவரும் போரில் புறமுதுகிடாதவர்களாவர்.. இளமையின் துவக்கத்தில், மென்மையான உறுப்புகளுடனும், பெரும் சுறுசுறுப்புடனும் இருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும் போர்களை அறிந்தவர்களாகவும், அனைவரையும் தலைமைதாங்க இயன்றவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்களில் புலிகளான அந்த இரு தேர்வீரர்களையும், நம்மிடம் இருக்கும் ரதர்களில் சிறந்த இருவர் என நான் நினைக்கிறேன். க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த இரு வீரர்களும் பெரும் சாதனைகளைப் புரிவார்கள்.

ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, தண்டதாரன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். தனது சொந்த வீரர்களால் பாதுகாக்கப்படும் அவன், போர்க்களத்தில் உனக்காகப் போரிடுவான்.

பெரும் வேகமும், ஆற்றலும் கொண்டவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான மன்னன் பிருஹத்பலன், ஓ! ஐயா, எனது கருத்தின்படி, ஒரு ரதனுக்கு இணையானவனாவான். ஆயுதங்களில் கடுமை கொண்ட இந்த வலிமைமிக்க வில்லாளி, தார்தராஷ்டிரர்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்து, தனது நண்பர்களை மகிழ்வூட்டும்படி, போர்க்களத்தில் பலமாக உழைப்பான்.

சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா, தேரணி தலைவர்களின் தலைவராவார் {அதிரதராவார்}. அன்புக்குரிய உயிரையோ துச்சமாக மதிக்கும் அவர் {கிருபர்} உனது எதிரிகளை எரிப்பார். சரத்வான் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவரும், பெரும் தவசியும், ஆசானுமான கௌதமருக்கு நாணற்கட்டில் பிறந்த அவர் {கிருபர்}, கார்த்திகேயனை {முருகனைப்} போன்றே வெல்லப்பட முடியாதவராவார். பல்வேறு ஆயுதங்களையும், விற்களையும் தரித்த சொல்லப்படாத வீரர்களையும் எரிக்கும் அவர் {கிருபர்}, ஓ! ஐயா, சுடர்மிகும் நெருப்பு போலப் போர்க்களத்தில் உலவி வருவார்" என்றார் பீஷ்மர்.


பீஷ்மரின் முருக வழிபாடு! - உத்யோக பர்வம் பகுதி 166

Kumara worship of Bhishma! | Udyoga Parva - Section 166 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் தனது திறமைகளையும், தான் அறிந்தவற்றையும், துரியோதனனிடம் சொல்வது; தன் தரப்பிலும் பாண்டவர்கள் தரப்பிலும் உள்ள ரதர்கள் மற்றும் அதிரதர்களின் பட்டியலைச் சொல்லுமாறு துரியோதனன் பீஷ்மரிடம் வேண்டுவது; துரியோதனன், கிருதவர்மன், சல்லியன், பூரிஸ்ரவஸ், ஜெயத்ரதன் ஆகியோரது நிலை குறித்துப் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "போரில் பீஷ்மரைக் கொல்வேன் என்று பல்குனன் {அர்ஜுனன்} சூளுரைத்த பிறகு, துரியோதனன் தலைமையிலான எனது தீய மகன்கள் என்ன செய்தனர்? ஐயோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டவனும், உறுதியான பிடி கொண்ட வில்லாளியுமான பார்த்தன் {அர்ஜுனன்}, எனது தந்தையான {பெரியப்பாவான}, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} ஏற்கனவே கொன்றுவிட்டதாகவே நான் காண்கிறேன். அளவிலா அறிவுடையவரும், அடிப்பவர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு என்ன செய்தார்? அதீத புத்திக்கூர்மை மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டவரும், போர்வீரர்களில் முதன்மையானவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கௌரவர்களின் படைத்தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகு என்ன செய்தார்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன், குருக்களில் மூத்தவரும், அளவிலா சக்தி படைத்தவருமான பீஷ்மர் சொன்னது அனைத்தையும் சொன்னான்"

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தலைமையை ஏற்றுக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், துரியோதனனிடம் அவனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டும்படி இந்த வார்த்தைகளைச் சொன்னார். "தேவர்களின் படைத்தலைவனும், வேலாயுதம் தரித்தவனுமான குமரனை {முருகனை} வழிபட்டு, இன்று உனது படையின் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை. வலிமை சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும், பல்வேறு விதமான படை அணிவகுப்புகளிலும் நான் நன்கு தேர்ச்சிபெற்றவனாவேன். படைவீரர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அவர்கள் பங்குக்கு முறையாகச் செயல்பட வைப்பதையும் நான் அறிவேன். துருப்புகளை நடத்துதல் மற்றும் அவற்றை அணிவகுக்கச் செய்தல், மோதல்கள், பின்வாங்கல் ஆகிய காரியங்களில், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, (தேவர்களின் ஆசான்) பிருஹஸ்பதி அளவுக்குத் தேர்ச்சி பெற்றவன் நான். தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாகக் காணப்படும் அணிவகுப்பு முறைகள் அனைத்தையும் நான் அறிவேன். இவற்றைக் கொண்டு நான் பாண்டவர்களைக் குழப்புவேன். உனது (இதயத்தின்) நோய் அகலட்டும். (இராணுவ) அறிவியல் விதிகளின் படி நான் உனது படைகளை முறையாகக் காத்து, (உனது எதிரியுடன்) போரிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, உனது இதயதின் நோய் அகலட்டும்" என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வந்தாலும் கூட நான் அஞ்ச மாட்டேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். வெல்லப்பட்ட முடியாத நீர் எனது படைகளின் தலைவராகவும், மனிதர்களில் புலியான துரோணர் போருக்கான விருப்பத்துடன் காத்திருக்கும்போதும், எனது அச்சம் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும். மனிதர்களில் முதன்மையானவர்களான நீங்கள் இருவரும் போரில் எனது பக்கத்தில் இருக்கும்போது, வெற்றி என்ன? தேவர்களின் ஆட்சி கூட என்னால் அடையப்பட முடியாதது அல்ல என்பது நிச்சயம். எனினும், ஓ! கௌரவரே {பீஷ்மரே}, எதிரியின் போர்வீரர்கள் மற்றும் எனது போர்வீரர்கள் அனைவரிலும் எவரெவர் ரதர்கள் என்றும் எவரெவர் அதிரதர்கள் என்றும் அறிய நான் விரும்புகிறேன். ஓ! பாட்டா, எங்களைப் போலவே, பகையணி போராளிகளை (அவர்களின் ஆற்றலை) நீர் நன்கு அறிந்து வைத்திருப்பீர். இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, கேள். ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, உனது படையில் உள்ள ரதர்களின் கணக்கைக் கேள்! ஓ! மன்னா {துரியோதனா}, எவரெவர் ரதர்கள் என்றும், எவரெவர் அதிரதர்கள் என்றும் கேட்பாயாக. உனது படையில், பல ஆயிரங்களும், பல லட்சங்களும், பல நூறு லட்சங்களுமாக ரதர்கள் இருக்கிறார்கள். எனினும், அவர்களில் முக்கியமானவர்களை நான் பெயரிட்டுச் சொல்கையில் கேட்பாயாக.

முதலாவதாக, துச்சாசனனுடன் கூடிய நூறு சகோதரர்கள் மற்றும் பிறருக்கு மத்தியில், {துரியோதனனான} நீ ரதர்களில் முதன்மையாவனாக இருக்கிறாய்!

நீங்கள் அனைவரும் அடிப்பதில் திறனும், தேர்களைப் பிளப்பதிலும், துளைப்பதிலும் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தேரோட்டியின் பகுதியில் அமர்ந்து தேரை ஓட்டவல்லவர்களும், யானையின் கழுத்தில் அமர்ந்து அவற்றை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். கதாயுதங்கள், இறகுபடைத்த கணைகள், வாள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு அடிப்பதில் நீங்கள் அனைவரும் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். பொறுப்புடன் கூடிய சுமைகளைத் தாங்கவல்லவர்களாகவும், ஆயுதங்களில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் துரோணர் மற்றும் சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரிடம் கணைகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயின்று அவர்களின் சீடர்களாக இருக்கிறீர்கள். பாண்டுவின் மகன்களால் பாண்டவர்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களும் [1], சக்தி கொண்டவர்களுமான இந்தத் தார்த்தராஷ்டிரர்கள், பாஞ்சாலர்களுடன் ஏற்படும் தவிர்க்க முடியாத போரில் மோதும் போது அவர்களை நிச்சயம் கொல்வார்கள்.

[1] இங்கே சம்ஸ்க்ருதத்தில் இருக்கும் மூலச் சொல் "பாண்டவேயை" என்பதாகும்; "பாண்டவர்களைச் சேர்ந்தவர்களால்" என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

பிறகு, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது துருப்புகள் அனைத்துக்கும் தலைவனான நான், உனது எதிரிகளை அழித்துப் பாண்டவர்களை வீழ்த்துவேன். எனது சொந்த தகுதிகளை நானே பேசிக் கொள்வது எனக்குத் தகாது. என்னை நீ அறிவாய்.

ஆயுதம் தரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனா போஜன் (போஜர் தலைவன்) கிருதவர்மன் அதிரதனாவான். உனது காரியத்தைப் போரில் அவன் சாதிப்பான் என்பதில் ஐயமில்லை. ஆயுதங்களை அறிந்தோராலும் இழிவு செய்யப்பட முடியாத அவன் {கிருதவர்மன்}, தனது ஆயுதங்களைப் பெருந்தூரத்திற்கு அடிக்கும்போதோ, வீசும்போதோ, தானவர்களை அழிக்கும் பெரும் இந்திரனைப் போலப் பகையணியை அழிப்பான்.

வலிய வில்லாளியான மத்ர ஆட்சியாளன் சல்லியனை, ஓர் அதிரதன் என நான் நினைக்கிறேன். அந்தப் போர்வீரன், (தான் போரிடும்) போர்கள் அனைத்திலும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையாகத் தன்னைப் புகழ்ந்து கொள்கிறான். தனது சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களை {நகுல சகாதேவர்களைக்} கைவிட்டு வந்திருக்கும் அந்த மன்னர்களில் சிறந்த சல்லியன் உனதாகியிருக்கிறான். போரில், கடல் அலைகள் போன்ற கண்களால் பகைவர் கூட்டத்தை நனையச்செய்தபடி, அவன் {சல்லியன்} பாண்டவர்கள் தரப்பின் மகாரதர்களுடன் மோதுவான்.

ஆயுதங்களை அறிந்தவனும், உனது நல்ல நண்பர்களில் ஒருவனும் சோமதத்தனின் மகனுமான வலிமைமிக்க வில்லாளி பூரிஸ்ரவஸ், தேர்ப்படை பிரிவிகளின் தலைவர்களின் தலைவனாக இருக்கிறான். அவன் {பூரிஸ்ரவஸ்}, நிச்சயமாக, உன்னுடைய எதிரியின் போராளிகளுக்கு மத்தியில் ஒரு பெரிய அழிவை ஏற்படுத்துவான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, என் தீர்மானத்தின்படி இரு ரதர்களுக்கு இணையானவனாவான். அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவன், போரில் போராடி, பெரும் ஆற்றலை வெளிப்படுத்துவான். ஓ! மன்னா {துரியோதனா}, திரௌபதியைக் கடத்தும்போது பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அந்த அவமதிப்பை மனதில் தாங்கியிருக்கும் அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (உனக்காகப்) போரிடுவான். ஓ! மன்னா {துரியோதனா}, அதன் பிறகு {பாண்டவர்களிடம் அவமானப்பட்ட பிறகு} கடுந்தவம் பயின்ற அவன் {ஜெயத்ரதன்}, போரில் பாண்டவர்களுடன் போராட, அடைவதற்கு மிகவும் அரிதான ஒரு வரத்தை அடைந்திருக்கிறான். எனவே, தேர்வீரர்களில் புலியான அவன் {ஜெயத்ரதன்}, பழைய பகையை நினைவுக்கூர்ந்து, ஓ! ஐயா {துரியோதனா}, விடுவதற்குக் கடினமான தனது உயிரைத் துச்சமாகக் கருதி, போரில் பாண்டவர்களுடன் போரிடுவான்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்