Sunday, July 19, 2015

காசி மன்னனின் மகள்களைக் கடத்திய பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 174

Bhishma took away the daughters of the Kasi king! | Udyoga Parva - Section 174 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களைக் கொல்வதாகத் தனக்கு உறுதியளித்துவிட்டு, சிகண்டியுடன் போரிடமாட்டேன் என்று பீஷ்மர் சொல்வதன் காரணம் என்ன என்று துரியோதனன் கேட்பது; அதற்கான பதிலாகப் பழைய நிகழ்வொன்றை பீஷ்மர் சொல்வது; சுயம்வரத்திற்குக் காத்திருந்த காசி மன்னனின் மகள்களைப் பீஷ்மர் கடத்துவது; அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களை வீழ்த்துவது; ஹஸ்தினாபுரம் திரும்பிய பீஷ்மர், காசி மன்னன் மகள்களைச் சத்தியவதியிடம் ஒப்படைப்பது...

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு எதிரியாகச் சிகண்டி உம்மை அணுகிவருவதைக் கண்டாலும் அவனைக் கொல்ல மாட்டீரா? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, "நான் சோமகர்களுடன் கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வேன்" என்று என்னிடம் முன்பு சொன்னீரே. ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, (தற்போதைய உமது மாற்றத்துக்கான காரணத்தை) எனக்குச் சொல்லும்" என்றான்.


பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, போர்க்களத்தில் சிகண்டியைக் கண்டாலும், நான் ஏன் அவனைக் கொல்ல மாட்டேன் என்பதை இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக!

ஓ! மன்னா {துரியோதனா}, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த அறம் சார்ந்த மன்னன் {சந்தனு}, உரிய நேரத்தில் இயற்கையின் கடனைத் தீர்த்தார் {இயற்கை ஏய்தினார்}. எனது உறுதி மொழியை நோற்ற நான், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, எனது தம்பியான சித்திராங்கதனை, குருக்களின் பரந்த நாட்டின் அரியணையில் நிறுவினேன்.

சித்திராங்கதனின் மறைவுக்குப் பின், சத்தியவதியின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தும், விதியின் படியும் விசித்திரவீரியனை மன்னனாக நிறுவினேன். வயதில் இளையவனாக இருப்பினும் என்னால் முறையாக நிறுவப்பட்ட அந்த அறம்சார்ந்த விசித்திரவீரியன், ஓ! ஏகாதிபதி அனைத்திலும் என்னையே எதிர்பார்த்திருந்தான். அவனுக்கு {விசித்திரவீரியனுக்கு} திருமணம் செய்ய விரும்பிய நான், தகுந்த குடும்பத்தில் இருந்து மகள்களை {மருமகள்களை} அடையவதில் எனது இதயத்தை நிலைநிறுத்தினேன்.

(அந்த நேரத்தில்), ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, காசி ஆட்சியாளனின் மகள்களும், ஒப்பற்ற அழகுடையவர்களுமான அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய மூன்று கன்னிகைகள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்றும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, பூமியின் மன்னர்கள் அனைவரும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் அம்பை மூத்தவளாகவும், அம்பிகை இரண்டாவதாகவும், அம்பாலிகை இளையவளாகவும் இருந்தனர். காசியின் ஆட்சியாளனின் நகரத்திற்கு {வாராணசிக்கு} நானே தனித்தேரில் சென்று, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மூன்று கன்னிகையரையும், அந்த நிகழ்வுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும் கண்டேன்.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மோதலுக்குத் தயாராயிருந்த மன்னர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி, அந்தக் கன்னிகையரை எனது தேரில் ஏற்றிக்கொண்டு, அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவரிடமும் மீண்டும் மீண்டும், "சந்தனுவின் மகனான பீஷ்மன் இந்த மங்கையரைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்கிறான். மன்னர்களே, உங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி இவர்களை மீட்க முயற்சிப்பீராக! மனிதர்களில் காளைகளே, எனது செயல்பாட்டால் உங்கள் அனைவரையும் பார்வையாளர்களாக்கிவிட்டு, பலவந்தமாகவே நான் இவர்களைத் தூக்கிச் செல்கிறேன்," என்று சொன்னேன்.

இந்த எனது வார்த்தைகளைக் கேட்டவர்களும், பூமியின் ஆட்சியாளர்களுமான அவர்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்கள். பிறகு கோபத்துடன் தங்கள் தேரோட்டிகளிடம் அவர்கள், "தேரைத் தயார் செய்யுங்கள். தேரைத் தயார் செய்யுங்கள்" என்றனர். அப்படி மீட்க எழுந்த அந்த ஏகாதிபதிகளில், தேர்வீரர்கள் மேகத் திரள் போன்ற தங்கள் தேர்களிலும், யானையில் இருந்து போரிடுபவர்கள் தங்கள் யானைகளிலும், பிறர் தங்கள் பருத்த குதிரைகளிலும் ஏறினார்கள்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பலவாக இருந்த தேர்களில் ஏறி அனைத்துப் புறத்திலும் இருந்து என்னைச் சூழ்ந்தார்கள். தானவர்கள் கூட்டத்தை வீழ்த்தும் தேவர்களின் தலைவனைப் போல நான், அனைத்துப் புறங்களிலும் இருந்து விரைந்து வந்த அவர்களை எனது கணைமாரியால் தடுத்தேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே, சிரித்துக் கொண்டே, நான், முன்னேறி வந்த அந்த மன்னர்களுடையதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் பல்வேறு நிறங்களிலானதுமான கொடிக்கம்பங்களை வெட்டினேன். அந்த மோதலில், குதிரைகள், யானைகள், தேரோட்டிகள் ஆகிய ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் வீழ்த்தினேன். எனது (கர) வேகத்தைக் கண்ட அவர்கள் (போரில் இருந்து) விலகி ஓடினர். பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரையும் வீழ்த்திய நான் ஹஸ்தினாபுரம் திரும்பி, எனது தம்பிக்காகக் {விசித்திரவீரியனுக்காகக்} கொண்டு சென்றிருந்த அந்தக் கன்னிகையரை சத்தியவதியிடம் ஒப்படைத்து, நான் செய்தவை அத்தனையையும் அவளிடம் {சத்தியவதியிடம்} தெரிவித்தேன்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்