Saturday, July 25, 2015

இரத்தத்தை அதிகமாகச் சிந்திய பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 184

Parasurama began to bleed copiously! | Udyoga Parva - Section 184 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் இடையில் நடைபெற்ற போரின் வர்ணனை; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பரசுராமரும், பீஷ்மரும்; பரசுராமரின் வேலை மூன்றாக வெட்டிய பீஷ்மர்; ராமரின் மேலும் பனிரெண்டு வேலாயுதங்களைப் பீஷ்மர் கலங்கடித்தது; பரசுராமரின் கணைகளைக் கேடயம் மற்றும் வாளால் கலங்கடித்த பீஷ்மர்; பீஷ்மரின் கணைமழையால் துளைக்கப்பட்ட பரசுராமருக்கு இரத்தம் அதிகமாகக் கொட்டியது; சூரியன் மறைந்ததும் அந்த நாளின் போர் முடிவுக்கு வந்தது...

பீஷ்மர் - பரசுராமர்
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, எனக்கும் ராமருக்கும் {பரசுராமருக்கும்} இடையில் மீண்டும் ஒரு முறை நடைபெற்ற மோதல் அச்சந்தருவதாக இருந்தது. தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், அறம்சார்ந்த ஆன்மா கொண்ட வீரருமான தலைவன் ராமர் {பரசுராமர்}, நாளுக்கு நாள் பல்வேறு விதங்களிலான தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். தியாகம் செய்வதற்குக் கடினமான உயிரையே துச்சமாக மதித்த நான், அந்தக் கடும் மோதலில், ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றைக் கலங்கடிக்கச் செய்யும் அதே போன்ற எனது ஆயுதங்களால் அவற்றைக் கலங்கடித்தேன்.


மேலும், ஓ! பாரதா {துரியோதனா}, பல்வேறு விதமான ஆயுதங்களும் இவ்வழியில் மட்டுப்படுத்தப்பட்டு, பதில் ஆயுதங்களின் மூலம் கலங்கடிக்கப்பட்ட போது, பெரும் சக்தி கொண்ட ராமர் {பரசுராமர்}, உயிரைத் துச்சமாக மதித்து எனக்கெதிராகப் போரிட ஆரம்பித்தார். தனது ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, சுடர்விடும் வாயுடன் கூடியதும் எரிந்து கொண்டு வருவதுமான எரிநட்சத்திரத்திரம் போன்றதுமான ஒரு கடும் வேலாயுதத்தை என் மீது வீசினார். மரணத்தால் {காலனால் - எமனால்} வீசப்பட்ட கணையைப் போன்று, தனது பிரகாசத்தால் உலகையே நிறைத்தபடி அது வந்தது. எனினும் நான், எனக்கு எதிராக விரைந்து வந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் வேலை எனது கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டினேன்.

அப்போது, நறுமணம் நிரம்பிய தென்றல் (என்னைச் சுற்றி) வீச ஆரம்பித்தது. தனது வேல் வெட்டப்பட்டதைக் கண்ட ராமர், எரியும் கோபத்துடன், பனிரெண்டு {12} கடும் வேலாயுதங்களை வீசனார். அவற்றின் {அந்த 12 வேலாயுதங்களின்} வடிவங்களை, ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றின் பிரகாசம் மற்றும் வேகத்தின் விளைவாக நான் விபரிக்க இயலாதவனாக இருக்கிறேன். உண்மையில், அவற்றின் வடிவங்களை நான் விளக்குவது எப்படி? நெருப்பின் நீள நாக்குகளைப் போலவும், பிரளய காலத்தில் உதிக்கும் பனிரெண்டு சூரியனைகளைப் போலவும் கடும் சக்தியுடன் சுடர்விட்டுக் கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் என்னை அணுகிய அந்த வித்தியாசமானவற்றைக் கண்டு, நான் அச்சத்தால் நிறைந்தேன். ஒரு கணை வலையே என்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட நான், எனது கணை மழையால் அவற்றைக் கலங்கடித்து, மேலும் பனிரெண்டு {12} கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} அந்தக் கடுமையான சக்தி கொண்ட கணைகளை எரித்தேன்.

பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பார்க்கக் கடுமையானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுப் பலவண்ணங்களில் இருந்தவையும், தங்கச் சிறகுகள் படைத்தவையும், சுடர்மிகும் எரிகற்களைப் போல இருந்தவையுமான எண்ணற்ற கணைகளை என் மீது அடித்தார். எனது கேடயம் மற்றும் வாளினால் அந்தக் கடும் கணைகளைக் கலங்கடித்து, அந்த மோதலில் அவற்றைத் தரையில் விழ வைத்த நான், சிறந்தவையான கணை மேகங்களால் ராமரின் {பரசுராமரின்} அற்புதக் குதிரைகளையும், அவரது தேரோட்டியையும் மூழ்கடித்தேன்.

பிறகு, ஹேஹயர்களின் தலைவனை {கார்த்தவீரியார்ஜுனனைக்) [1] கொன்ற அந்த உயர் ஆன்ம தலைவர் {பரசுராமர்}, தங்கப் பிடி கொண்டவையும், பொந்துகளில் இருந்து வெளிவரும் பாம்புகளைப் போன்றவையுமான எனது வேலாயுதங்களைக் கண்டு கோபத்தால் நிறைந்து, மீண்டும் ஒருமுறை தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றிருந்த அந்தக் கடுங்கணைகளின் கூட்டம் என் மேல் விழுந்து, என்னையும், எனது குதிரைகளையும், எனது தேரோட்டியையும், எனது தேரையும் மூழ்கடித்தது.

[1] கார்த்தவீரியார்ஜுனன் என்றும் அழைக்கப்பட்டவனும், ராவணனை வீழ்த்தியவனும், ஹேஹய குல க்ஷத்திரியர்களின் தலைவனும், நர்மதைக் கரையில் உள்ள மாஹிஷ்மதி என்ற தலைநகரைக் கொண்டவனுமான ஆயிரங் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், ராமரால் {பரசுராமரால்} கொல்லப்பட்டவனாவான். என்கிறார் கங்குலி.

உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, எனது தேர், குதிரைகள், தேரோட்டி ஆகிய அனைத்தும் அந்தக் கணைகளால் மறைக்கப்பட்டன! அந்தக் கணை மழையால், எனது தேரின் நுகத்தடி, மூக்கணை {தேரின் ஏர்க்கால்}, சக்கரங்கள், அச்சுமரம் ஆகியன அறுக்கப்பட்டு உடனே முறிந்தன. எனினும், அந்தக் கணைமழையின் முடிவில், நானும் எனது ஆசானை {பரசுராமரை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தேன். பிரம்மத் தகுதியின் இருப்பிடமான அவர் {பரசுராமர்}, அந்தக் கணை மழையால் சிதைக்கப்பட்டதால், அவரது உடலில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாகக் கொட்டத் தொடங்கியது. உண்மையில், எனது கணை மேகங்களால் ராமர் {பரசுராமர்} துன்புற்றது போலவே, அவரது கணைகளால் நானும் அடர்த்தியாகத் துளைக்கப்பட்டு இருந்தேன். இறுதியாக மாலையில், மேற்கு மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறைந்ததும், எங்கள் மோதல் ஒரு முடிவுக்கு வந்தது" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்