Friday, July 24, 2015

மயக்கமடைந்த பீஷ்மரும், பரசுராமரும்! - உத்யோக பர்வம் பகுதி 183

Bhishma and Parasurama swooned! | Udyoga Parva - Section 183 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் இடையில் நடைபெற்ற போரின் வர்ணனை; பரசுராமரின் தாக்குதலில் மயக்கமடைந்த பீஷ்மரை, அவரது தேரோட்டி களத்தைவிட்டு வெளியே கொண்டு சென்றது; களைப்புநீங்கி திரும்பி வந்த பீஷ்மர் தனது கணைகளால் பரசுராமரை மீண்டும் மயங்கிவிழச் செய்தது; அம்பையும் அந்தணர்களும் பரசுரைத் தேற்றியது; மாலை நெருங்கியதும் போரில் இருந்து விலகிய பரசுராமர்...

பரசுராமர் - பீஷ்மர் ( குருசேத்திரத்தில் அம்பையின் பொருட்டு கடும் போர்)
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "போர் நின்றதும், இத்தகு செயல்பாடுகளில் மிகவும் திறன் பெற்ற எனது தேரோட்டி, தன் உடலிலும், குதிரைகளின் உடல்களிலும், எனது உடலிலும் தைக்கப்பட்டிருந்த கணைகளை அகற்றினான். அடுத்த நாள் காலையில், சூரியன் உதித்து, போர் தொடங்கிற்று. (அதற்குச் சற்று முன்னரே) நீராடவும், தரையில் உருளவும் அனுமதிக்கப்பட்டிருந்த எனது குதிரைகள், தாகம் தணிக்கப்பட்டதன் மூலம் பலப்படுத்தப்பட்டிருந்தன.


கவசந்தரித்து, தேரில் நின்றபடி மோதலுக்கு விரைந்து வரும் என்னைக் கண்ட வலிமைமிக்க ராமர் {பரசுராமர்}, தனது தேரை மிகக் கவனத்துடன் தயார் செய்தார். போருக்கான விருப்பத்ததுடன் என்னை நோக்கி வந்த ராமரைக் {பரசுராமரைக்} கண்ட நான், எனது வில்லை ஒரு புறம் வைத்துவிட்டு, எனது தேரில் இருந்து விரைந்து இறங்கினேன். ராமரை {பரசுராமரை} வணங்கியபின், மீண்டும் அதில் ஏறி, ஓ! பாரதா {துரியோதனா}, போரை அவருக்குக் கொடுக்க விரும்பி, ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} முன்னிலையில் அச்சமற்று நின்றேன்.

பிறகு, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அவரை {பரசுராமரை} மூழ்கடித்தேன். பதிலுக்கு அவரும் {பரசுராமரும்} தனது கணை மாரியால் என்னை மறைத்தார். கோபத்தால் நிறைந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, வாயில் நெருப்புச் சுடர்களைக் கொண்ட உண்மையான பாம்புகளைப் போன்றனவும், பெரும் சக்தியுடையப் பல கடுங்கணைகளை என்மீது மீண்டும் ஒருமுறை அடித்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} கணைகள் என்னை அணுகுவதற்கு முன்னரே, நடு வானிலே அவற்றை மீண்டும் மீண்டும் வெட்டினேன். பிறகு, ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, என் மீது தெய்வீக ஆயுதங்களை வீசத் தொடங்கினார். பலமிக்கச் செயல்களைச் செய்ய விரும்பிய நான், ஓ! பலம் நிறைந்த கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அவற்றை எனது கணைகளின் மூலம் முறியடித்தேன். பிறகு ஆகாயம் எங்கும் பேரொலி எழுந்தது.

அந்நேரத்தில் நான், ராமர் {பரசுராமர்} மீது வாயவ்யம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை வீசினேன். ராமர் {பரசுராமர்} குஹ்யகம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். பிறகு நான், உரிய மந்திரங்களுடன் ஆக்னேயம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை அடித்தேன். ஆனால் தலைவன் ராமரோ {பரசுராமரோ}, வருணம் என்று அழைக்கப்பட்ட (தனது) ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். இவ்வழியிலேயே நான், ராமர் {பரசுராமர்} அடிக்கும் தெய்வீக ஆயுதங்களை மட்டுப்படுத்தினேன். அதே போல, எதிரிகளைத் தண்டிப்பவரும், பெரும் சக்தி கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவருமான ராமரும் {பரசுராமரும்}, என்னால் அடிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுப்படுத்தினார்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தணர்களில் சிறந்தவரும் வலிமைமிக்கவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, திடீரென வலது பக்கமாகச் சுழன்று வந்து, என்னை மார்பில் துளைத்தார். இதனால், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, எனது தேர்களில் சிறந்த அந்தத் தேரில் மயங்கிச் சாய்ந்தேன். உணர்விழந்த என்னைக் கண்ட எனது தேரோட்டி, போர்க்களத்தில் இருந்து என்னை விரைந்து வெளியே கொண்டு சென்றான். ராமரின் ஆயுதங்களால் பீடிக்கப்பட்டவனாகவும், துளைக்கப்பட்டவனாகவும், வாடிப் போய் மூர்ச்சையடைந்திருந்த என்னைக் கண்டவர்களும், அகிருதவரணவருடன் கூடிய ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மற்றும் பிறரும், காசியின் இளவரசியும் {அம்பையும்}, ஓ! பாரதா {துரியோதனா}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்க ஆரவாரம் செய்தனர்!

உணர்வை மீண்டும் அடைந்த நான், எனது தேரோட்டியிடம், "ராமர் {பரசுராமர்} எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக! எனது வலிகள் என்னை விட்டு அகன்று விட்டன. நான் போருக்குத் தயாராக இருக்கிறேன்" என்றேன். இப்படிச் சொல்லப்பட்ட எனது தேரோட்டி, (சமவெளியில்) ஆடிக்கொண்டு செல்வன போன்ற எனது மிக அழகான குதிரைகளின் உதவியால், காற்றின் வேகத்தில் என்னை ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்டு சென்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, கோபத்தில் நிறைந்த நான், அவரது {பரசுராமரது} கோபத்தை வீழ்த்தும் விருப்பத்தில், கணைமாரியில் அவரை மூழ்கடித்தேன். ஆனால், எனது ஒவ்வொரு கணைக்கும் மூன்று அம்புகளை அடித்த ராமர் {பரசுராமர்}, நேராகச் செல்லக்கூடிய எனது கணைகள் அவரை அடையும் முன்பே, நடுவானிலேயே அவற்றைத் துண்டு துண்டாக அறுத்தார்.

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது நல்ல கணைகள் ராமரின் கணைகளால் இரண்டாக அறுக்கப்படுவதைக் கண்ட ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஜமதக்னியின் மகனான ராமரை {பரசுராமரைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நான், தன் தலையில் மரணத்தையே {காலனே} அமர வைத்திருக்கும் ஓர் அழகிய கணையால் அவரை {பரசுராமரை} அடித்தேன். அதனால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அதன் வேகத்திற்குப் பலியான ராமர் {பரசுராமர்}, மயக்கத்தில் விழுந்து, தரையில் சாய்ந்தார். அப்படி ராமர் {பரசுராமர்} தரையில் விழுந்த போது, "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் ஆச்சரிய ஒலிகள் கேட்டன. ஓ! பாரதா {துரியோதனா}, ஆகாயத்தில் இருந்து சூரியன் விழுந்துவிட்டதைக் கண்டதைப் போல, இந்த முழு அண்டமும் குழப்பத்தாலும், அச்சத்தாலும் நிறைந்தன.

பிறகு காசியின் இளவரசியோடு {அம்பையோடு} இருந்த தவசிகள் அனைவரும்,  ஓ! குருகுலத்தின் மகனே {துரியோதனா}, ராமரை {பரசுராமரை} நோக்கி அமைதியுடனும், பெருந்துயரத்துடனும் சென்றனர். அவரை {பரசுராமரை} வாரி அணைத்துக் கொண்ட அவர்கள், ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் கரங்களின் மென்மையான தொடுதலாலும், நீரைச் சொரிந்து குளிரூட்டியும், வெற்றி குறித்த உறுதிகளைச் சொல்லியும், அவருக்கு ஆறுதல் அளிக்கத் தொடங்கினர். இப்படி ஆறுதலளிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, எழுந்திருந்து, தனது வில்லில் கணையைப் பொருத்திக் கொண்டே நடுங்கும் குரலில் என்னிடம், "ஓ! பீஷ்மா, நில்! நீ ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டாய்!" என்று சொன்னார். அவரால் செலுத்தப்பட்ட அந்தக் கணை, அந்தக் கடும் மோதலில் எனது இடது புறத்தைத் துளைத்தது. அதனால் தாக்கப்பட்ட நான், புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல நடுங்கத் தொடங்கினேன்.

அந்தப் பயங்கர மோதலில் எனது குதிரைகளைக் கொன்று, பெரும் நிதானத்துடன் போரிட்ட ராமர் {பரசுராமர்}, குறிப்பிடத்தகுந்த கரவேகத்துடன் அடிக்கப்பட்ட சிறகு படைத்த கணைகளின் கூட்டத்தால் என்னை மூழ்கடித்தார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ராமரின் {பரசுராமரின்} கணை மழையைத் தடுக்கும்பொருட்டு, பெரும் கரவேகத்துடன் நானும் கணைகளை அடிக்கத் தொடங்கினேன்.

பிறகு என்னாலும், ராமரால் {பரசுராமராலும்} அடிக்கப்பட்ட கணைகள் ஆகாயத்தையே மூடியபடி (கீழே விழாமல்) அங்கேயே தங்கின. அந்தக் கணைகளின் மேகத்தில் மறைந்த சூரியனால் அதனூடாகத் தனது கதிர்களைச் செலுத்த முடியவில்லை. அந்த மேகங்களால் தடுக்கப்பட்ட காற்றும், அவற்றைக் கடந்து செல்லும் திறனற்றதாக இருந்தது. காற்றின் அசைவும், சூரியனின் கதிர்களும் தடுக்கப்பட்டதாலும், கணைகளின் ஒன்றோடொன்றான மோதலாலும் ஆகாயத்தில் நெருப்பு உண்டானது. தங்களால் உண்டாக்கப்பட்ட நெருப்பின் விளைவாக எரிந்த அந்தக் கணைகள் அனைத்தும், சாம்பலாகப் பூமியில் விழுந்தன.

பிறகு, கோபத்தால் நிறைந்த ராமர் {பரசுராமர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, நூறாயிரக் கணக்கான {லட்சக்கணக்கான}, கோடிக்கணக்கான கணைகளால் என்னை மறைத்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போன்ற எனது கணைகால், ராமரின் {பரசுராமரின்} கணைகளைத் துண்டுகளாக அறுத்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்புகளைப் போல அவற்றைப் பூமியில் விழச் செய்தேன். இப்படியே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அந்த மோதல் நடைபெற்றது. எனினும், மாலையின் நிழல் வந்ததும், எனது ஆசான் {பரசுராமர்} போரில் இருந்து விலகினார்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்