Saturday, July 25, 2015

இருபத்து மூன்று நாட்கள் நீடித்த போர்! - உத்யோக பர்வம் பகுதி 185

The Battle lasted for Twenty Three days! | Udyoga Parva - Section 185 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பரசுராமரால் துளைக்கப்பட்ட பீஷ்மர் மயங்கி விழுந்தது; பீஷ்மர் இறந்துவிட்டதாக மகிழ்ந்த பரசுராமர்; உணர்வற்றுக் கிடந்த பீஷ்மரை எட்டு அந்தணர்கள் சுமந்து கொண்டு அவருக்கு ஆறுதலளித்தது; கங்கா தேவியே பரசுராமரின் தேரை வழிநடத்தியது; மூர்ச்சை தெளிந்த பீஷ்மரால் அடிக்கப்பட்ட கணையொன்றால் தாக்கப்பட்ட பரசுராமர் முழங்காலை ஊன்று சுயநினைவற்றுப் பூமியில் விழுந்தது; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; திடீரென எழுந்த பரசுராமர் பீஷ்மரைத் தாக்கியது; மாலை வந்ததும் போர் நின்றது...

அம்பையால், பரசுராமர் - பீஷ்மர் மோதல்
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள் காலையில், ஓ! மன்னா {துரியோதனா}, சூரியன் பிரகாசமாக உதித்த போது, எனக்கும், பிருகு குலத்தவருக்கு {பரசுராமருக்கும்} இடையிலான போர் மீண்டும் தொடங்கியது. பிறகு, அந்த அடிப்பவர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, விரைவாக நகரும் தனது தேரில் நிலைபெற்று, மலையின் மார்பில் விழும் மேகங்களைப் போல, என் மீது கணைமாரியைப் பொழிந்தார். அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட எனது அன்புக்குரிய தேரோட்டி, தேரில் தனது இடத்தில் இருந்து நழுவி விழுந்ததால், அவன் {தேரோட்டி} நிமித்தமாகத் துயரம் என்னை நிறைத்தது. அவனோ சுய நினைவு முழுவதையும் இழந்தான். இப்படி அந்தக் கணைமாரியால் காயமடைந்த அவன் {தேரோட்டி}, மயங்கி பூமியில் சாய்ந்தான். ராமரின் {பரசுராமரின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {தேரோட்டி}, விரைவில் தனது உயிரையும் விட்டான்.


பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அச்சம் எனது இதயத்தில் நுழைந்தது. எனது தேரோட்டியின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தின் விளைவாக நான் அழுது கொண்டிருந்த போதே, ராமர் {பரசுராமர்}, மரணத்தைக் கொடுக்கும் பல கணைகளை என் மீது தொடுத்தார். உண்மையில், ஆபத்திலிருந்த நான் எனது தேரோட்டியின் மரணத்துக்காக அழுது கொண்டிருந்த போது, தனது வில்லைப் பலங்கொண்டமட்டும் இழுத்த அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கணை ஒன்றால் என்னை ஆழத் துளைத்தார். ஓ! மன்னா {துரியோதனா}, இரத்தத்தைக் குடிக்கும் அந்தக் கணை என் மார்பின் மீது விழுந்து என்னை ஆழமாகத் துளைத்ததன் தொடர்ச்சியாக நான் பூமியில் விழுந்தேன்.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நான் இறந்ததாக நினைத்த ராமர் {பரசுராமர்}, மேகங்களைப் போல மீண்டும் மீண்டும் கர்ஜித்து மிகவும் மகிழ்ந்தார். உண்மையில் ஓ! மன்னா {துரியோதனா}, நான் அப்படிப் பூமியில் விழுவதைக் கண்டு, எனக்குப் பின்னால் இருந்த கௌரவர்களும், அந்தப் போரைச் சாட்சியாகக் காண வந்தவர்களும் பெரிதும் வருந்திக் கொண்டிருக்கையில், மகிழ்ச்சி நிறைந்த ராமர் {பரசுராமர்}, தனது தொண்டர்களுடன் சேர்ந்து உரத்த கர்ஜனைகளை வெளியிட்டார். அப்படி நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த போது, ஓ! மன்னர்களில் சிங்கமே {துரியோதனா}, சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ பிரகாசம் கொண்ட எட்டு {8} அந்தணர்களை நான் கண்டேன். அந்தப் போர்க்களத்தில் என்னைச் சூழ்ந்திருந்த அவர்கள், தங்கள் கரங்களால் என்னைச் சுமந்து கொண்டிருந்தனர். உண்மையில் அந்த அந்தணர்களால் சுமக்கப்பட்டதால், நான் தரையைத் தொடவேண்டிய நிலையில் இல்லை.

நண்பர்கள் தாங்கிக் கொள்வது போல, பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த என்னை ஆகாயத்தில் அவர்கள் {8 அந்தணர்கள்} தாங்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் நீர்த்துளிகளை என் மீது தெளித்தனர். நின்று கொண்டே என்னைச் சுமந்த அவர்கள், ஓ! மன்னா {துரியோதனா}, என்னிடம் மீண்டும் மீண்டும், "அஞ்சாதே! செழிப்பு உனதாகட்டும்" என்றனர். அவர்களது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த நான், விரைவாக எழுந்தேன்.

பிறகு நான், நதிகளில் முதன்மையான எனது தாய் கங்கை, என் தேரில் நிலைபெற்றிருப்பதைக் கண்டேன். உண்மையில், ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, (எனது தேரோட்டி விழுந்த பிறகு) பெரும் நதியான அந்தத் தேவியே {கங்காதேவியே} எனது குதிரைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். பிறகு எனது தாயின் பாதங்களையும், எனது மூதாதையர்களின் ஆவிகளையும் வழிபட்ட நான், எனது தேரில் ஏறினேன். பிறகு எனது தாய் எனது தேர், குதிரைகள் மற்றும் போருக்கான அனைத்து கருவிகளுக்கும் தனது பாதுகாப்பை அளித்தாள். கூப்பிய கரங்களுடன் நான் அவளைச் செல்லுமாறு வேண்டினேன். இப்படி அவளை வழியனுப்பிய நானே, காற்றின் வேகம் கொண்ட எனது குதிரைகளைக் கட்டுப்படுத்தி, ஓ! பாரதா {துரியோதனா}, அந்த நாளின் முடிவு வரை ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} போரிட்டேன்.

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, அந்தப் போரின் போக்கில் நான் பலமிக்க ராமரின் {பரசுராமரின்} மேல், இதயத்தைத் துளைக்கும் பெருவேகம் கொண்ட கணையொன்றை அடித்தேன். அந்தக் கணையால் பீடிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, பிறகு, வில்லில் இருந்த தனது பிடியைத் தளர்த்தி, முழந்தாழ்களை ஊன்றியபடி பூமியில் சுயநினைவின்றி விழுந்தார்.

பல்லாயிரம் (தங்க நாணயங்களைத்) தானமளித்த ராமர் {பரசுராமர்} விழுந்த போது, ஆகாயத்தில் மேகத்திரள் சூழ்ந்து, இரத்த மழையை அதிகமாகப் பொழிந்தது. நூற்றுக்கணக்கான எரிகற்கள் விழுந்தன. அனைத்தையும் நடுங்கச் செய்யும் இடிமுழக்கங்கள் கேட்டன! சுடர் மிகும் சூரியனைத் திடீரென ராகு மறைத்தான். கடுங்காற்று வீசத்தொடங்கியது! இந்தப் பூமியே நடுங்கத் தொடங்கியது. கழுகுகள், காகங்கள், நாரைகள் ஆகியன மகிழ்ச்சியால் விழத் தொடங்கின. அடிவானத்தின் புள்ளிகள் {திசைகள்} பற்றி எரிவதாகத் தோன்றின. நரிகள் மீண்டும் மீண்டும் கடுமையாக ஊளையிடத் தொடங்கின. (மனித கரங்களால்) அடிக்கப்பட்ட துந்துபிகள் கடுமையான ஒலியை வெளியிடத் தொடங்கின. உண்மையில், அந்த உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்}, சுயநினைவை இழந்து, பூமியை அரவணைத்த போது, அச்சந்தரும் இந்தத் தீய சகுனங்கள் அனைத்தும் காணப்பட்டன.

பிறகு, திடீரென எழுந்த ராமர் {பரசுராமர்}, ஓ! கௌரவா {துரியோதனா}, அனைத்தையும் மறந்துவிட்டு, கோபத்தால் உணர்வுகளை இழந்து மீண்டும் ஒரு முறை என்னை அணுகினார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவர் {பரசுராமர்}, பெரும் வலுவுடைய தனது வில்லையும், மரணத்துக்கு ஒப்பான ஒரு கணையையும் எடுத்தார். எனினும், நான் அவரை வெற்றிகரமாகத் தடுத்தேன். அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்} பெரும் கோபத்துடன் இருந்தாலும், (அங்கே நின்று கொண்டிருந்த) பெருமுனிவர்க்ள அனைவரும் அந்தக் காட்சியைக்கண்டு பரிதாபத்தால் நிறைந்தனர். யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்மிகும் நெருப்பைப் போன்ற கணையொன்றை நான் எடுத்தேன், எனினும், அளவிலா ஆன்மா கொண்ட அந்த ராமர் {பரசுராமர்} அந்த எனது ஆயுதத்தைக் கலங்கடித்தார்.

புழுதி மேகத்ததால் மறைக்கப்பட்டிருந்த சூரிய வட்டிலின் பிரகாசம் மங்கியது; சூரியனும் மேற்கு மலைக்குச் சென்றுவிட்டான். குளிர்ந்த இனிய தென்றலுடன் இரவும் வந்தது. பிறகு நாங்கள் இருவரும் போரில் இருந்து விலகினோம். இவ்வழியிலேயே, ஓ! மன்னா {துரியோதனா}, மாலை வந்ததும் கடும்போர் நின்றது. மேலும் (அடுத்த நாளில்) சூரியன் மீண்டும் தோன்றிய போது, அது {போர்} தொடங்கியது. அது {அந்தப் போர்} தொடர்ச்சியாக இருபத்து மூன்று {23} நாட்களுக்கு நீடித்தது" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்