Sunday, July 26, 2015

கனவில் தோன்றிய எட்டு பிராமணர்கள்! - உத்யோக பர்வம் பகுதி 186

The eight Brahmanas who appeared in dream | Udyoga Parva - Section 186 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : நெடுநாட்களாகியும் தன்னால் பரசுராமரை வீழ்த்த முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டு படுத்துறங்கிய பீஷ்மரின் கனவில் அந்த எட்டுப் பிராமணர்கள் வந்தது; பிரஸ்வாபம், சம்போதனம் ஆகிய ஆயுதங்களைக் குறித்துப் பீஷ்மருக்கு அவர்கள் நினைவூட்டியது; அவ்வாயுதத்தால் பரசுராமர் வீழ்வாரேயன்றி மாளமாட்டார் என்று அந்த அந்தணர்கள் உறுதி கூறி மறைந்தது...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இரவின்போது, அந்தணர்கள், முனிவர்கள், தேவர்கள், இரவில் நடமாடும் அனைத்து உயிரினங்கள் {பூதங்கள்} மற்றும் பூமியின் அனைத்து மன்னர்கள் ஆகியோரை வணங்கியபின், எனது படுக்கையில் என்னைக் கிடத்திக் கொண்ட நான், எனது அறையில் தனிமையில் பின்வருமாறு சிந்தித்தேன். "பயங்கர விளைவுகளைக் கொடுக்கவல்லதும், எனக்கும், ஜமதக்னிக்கும் {பரசுராமருக்கும்} இடையில் நடைபெறுவதுமான இந்தப் போர் நெடுநாட்களாக நீடிக்கிறது. எனினும், வலிமையும் சக்தியும் கொண்ட ராமரை {பரசுராமரை} போர்க்களத்தில் என்னால் வீழ்த்த இயலவில்லை. உண்மையில், வலிமைமிக்க அந்தணரும், பெரும் ஆற்றலும் கொண்டவருமான ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} நான் வீழ்த்தவல்லவனெனில், இவ்விரவில், தேவர்கள் அன்புடன் எனக்குத் தங்களைக் காட்டிக் கொள்ளட்டும் {தரிசனம் அளிக்கட்டும்}" என்று சிந்தித்தேன்.


கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த நான், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அவ்விரவில் வலப்பக்கமாகப் படுத்து உறங்கிய போது, காலையின் நெருக்கத்தில் {அதிகாலையில்}, அந்தணர்களில் முதன்மையானோரும், தேரில் இருந்து விழுந்த என்னைத் தூக்கிப் பிடித்து எனக்கு ஆறுதல் அளித்தவர்களான அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, கனவில் தங்களை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டு "அஞ்சாதே" என்றனர். மேலும் அவர்கள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {துரியோதனா}, அவற்றை நான் திரும்பச் சொல்கிறேன்; கேட்பாயாக.

அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, "ஓ! கங்கையின் மகனே {பீஷ்மா} எழுவாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை! நாங்கள் உன்னைக் காப்போம், ஏனெனில் நீ எங்கள் சொந்த உடலே ஆவாய்! ஜமதக்னியின் மகனான ராமரால் {பரசுராமரால்}, போரில் உன்னை வீழ்த்த இயலாது! ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மா}, போரில் நீயே ராமரை {பரசுராமரை} வெல்வாய்! ஓ பாரதா {பீஷ்மா}, விருப்பத்திற்குரியதும், பிரஸ்வாபம் என்று அழைக்கப்படுவதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுக்குச் {பிரம்மாவுக்குச்} சொந்தமானதும், தெய்வீகக் கைவினைஞனால் {விஸ்வகர்மாவால்} காய்ச்சி வடிக்கப்பட்டதுமான இந்த ஆயுதம் உனது நினைவுக்கு வரும். ஏனெனில், முந்தைய வாழ்வில் {முற்பிறவியில்} நீ இதை அறிந்திருந்தாய். ராமரோ {பரசுராமரோ}, பூமியில் உள்ள எவருமோ இதை அறிந்ததில்லை. எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அதை நினைவுகூர்ந்து, பலத்துடன் பயன்படுத்துவாயாக!

ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பாவமற்றவனே {பீஷ்மா}, அது {பிரஸ்வாப ஆயுதம்} தானாகவே உன்னிடம் வரும். அதைக் கொண்டு, ஓ! கௌரவா {பீஷ்மா}, வலிமையுத் சக்தியும் கொண்ட அனைவரையும் நீ தடுக்க இயன்றவனாவாய். ஓ! மன்னா {பீஷ்மா}, அந்த ஆயுதத்தால் ராமர் {பரசுராமர்} முற்றிலுமாகக் கொல்லப்படமாட்டார். எனவே, ஓ! மதிப்புகளை அளிப்பவனே {பீஷ்மா}, அதைப் பயன்படுத்துவதால் நீ எந்தப் பாவத்தையும் அடையமாட்டாய்! இந்த உனது ஆயுதத்தின் {பிரஸ்வாபத்தின்} சக்தியால் பீடிக்கப்படும் அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} உறக்கத்தில் வீழ்வார்.

இப்படி அவரை {பரசுராமரை} வீழ்த்தும் நீ, ஓ! பீஷ்மா, சம்போதனம் என்று அழைக்கப்படும் விருப்பத்திற்குரிய ஆயுதத்தால் போரில் மீண்டும் அவரை எழுப்புவாய். ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, காலையில் தேரில் நிலைத்து நின்று நாங்கள் சொன்னதைச் செய்வாயாக! உறக்கத்தையும், மரணத்தையும் நாங்கள் சமமாகவே மதிக்கிறோம். ஓ! மன்னா, ராமர் {பரசுராமர்} நிச்சயம் இறக்கமாட்டார்! எனவே, பிரஸ்வாபம் என்ற இந்த ஆயுதத்தை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து அதைப் பயன்படுத்துவாயாக!" என்றனர். ஓ! மன்னா {துரியோதனா} இதைச் சொன்னவர்களும், எண்ணிக்கையில் எட்டாக {8} இருந்தவர்களும், ஒருவரை ஒருவர் ஒத்திருந்தவர்களும், பிரகாசமிக்க உடல்களைக் கொண்டவர்களுமான அந்த அந்தணர்களில் முதன்மையானோர் அனைவரும் எனது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்