Sunday, July 26, 2015

பீஷ்மரின் நினைவில் வந்த பிரஸ்வாப ஆயுதம்! - உத்யோக பர்வம் பகுதி 187

Praswapa weapon came to the mind of Bhishma | Udyoga Parva - Section 187 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : அந்த நாளும், அதற்கு முந்தைய நாளும் தான் கண்ட காட்சிகளால் கோபம் அடைந்த பரசுராமர் வஜ்ரம் போன்ற கடினமான வேலாயுதம் ஒன்றைப் பீஷ்மர் மேல் வீசியது; அவ்வாயுதத்தால் தாக்குண்ட பீஷ்மரின் உடலில் இரத்தம் பெருகியது; பீஷ்மரால் அடிக்கப்பட்ட கணையால் மார்பில் காயம்பட்ட பரசுராமர் நடுங்கத் தொடங்கியது; அகிருதவரணரால் தேற்றப்பட்ட பரசுராமர் பிரம்மாஸ்த்திரத்தை ஏவியது; பீஷ்மரும் பிரம்மாஸ்திரத்தையே ஏவியது; முழு ஆகாயமும் தீப்பற்றி எரிந்தது; அந்த நேரத்தில் பீஷ்மருக்கு பிரஸ்வாபாஸ்திரமும், அதை எழுப்பும் மந்திரமும் நினைவுக்கு வந்தது...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும் எழுந்த நான், ஓ! பாரதா {துரியோதனா}, எனது கனவைக் குறித்து நினைத்து பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன். பிறகு, ஓ! பாரதா {துரியோதனா}, எனக்கும், அவருக்கும் {பரசுராமருக்கும்} இடையிலான மோதல் ஆரம்பித்தது. ஒரு போராக அது கடுமையானதாகவும், ஒப்பற்றதாகவும், அனைத்து உயிர்களுக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. பார்கவர் {பரசுராமர்} என் மீது பொழிந்த கணைமாரியை, என் கணைமாரி கொண்டு நான் கலங்கடித்தேன். அந்த நாளும், அதற்கு முந்தைய நாளும் தான் கண்டதை நினைத்துக் கோபம் நிரம்பிய ராமர் {பரசுராமர்}, என் மீது இந்திரனின் வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், யமனின் கதாயுதத்தைப் போன்று பிரகாசமிக்கதுமான வேலாயுதம் ஒன்றை என் மீது வீசினார்.


சுடர்மிகும் தழலைக் கொண்ட நெருப்பு போலவும், அந்தப் போர்க்களத்தின் அனைத்து திசைகளையும் குடித்துவிடுவது {விழுங்கிவிடுவது} போலவும், அது {அந்த வேல்} என்னை நோக்கி வந்தது. பிறகு, ஓ! குருக்களில் புலியே, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே {துரியோதனா}, வானத்தில் செல்லும் மின்னலின் நெருப்பைப் போன்ற அது {அந்த வேல்}, எனது தோளில் விழுந்தது. ராமரால் {பரசுராமரால்}, இப்படிக் காயம்பட்ட எனக்கு, ஓ! சிவந்த கண்களை உடையவனே {துரியோதனா}, (மழைக்குப் பிறகு) மலையில் இருந்து வரும் சிவந்த மணலோடையைப் போல, எனது {என் உடலில் இருந்து} இரத்தம் அதிகமாக வெளிவரத் தொடங்கியது.

பெருங்கோபத்தால் நிறைந்த நான், பாம்பின் விஷத்தைப் போன்று அபாயகரமான ஒரு கொடிய கணையை ஜமதக்னியின் மகன் {பரசுராமரின்} மீது ஏவினேன். அதனால் நெற்றியில் அடிக்கப்பட்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வீரர் {பரசுராமர்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அதன் பிறகு, சிகரம் கொண்ட மலையைப் போல அழகாகத் தோன்றினார். பெரும் கோபம் கொண்ட அந்த வீரர் {பரசுராமர்}, தனது நிலையை மாற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் வில்லின் நாணை இழுத்து, அனைத்தையும் அழிக்கும் மரணத்தைப் {காலனைப்} போன்றதும், எதிரிகள் அனைவரையும் வாட்டவல்லதுமான ஒரு பயங்கரக் கணைக்கு என்னை இலக்காக்கினார். (காற்றின் ஊடாக) பாம்பைப் போலச் சீறிக்கொண்டு வந்த அந்தக் கடுங்கணை என் மார்பில் விழுந்தது.

இப்படித் தாக்கப்பட்ட நான், இரத்தத்தில் நனைந்து, பூமியில் விழுந்தேன். சுயநினைவை மீண்டும் அடைந்த நான், வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்கப் பயங்கரக் கணையொன்றை ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} மீது ஏவினேன். அந்தக் கணை, அந்தணர்களில் முதன்மையான அவரது {பரசுராமரின்} மார்பில் விழுந்தது. இதனால் உணர்வை இழந்த ராமர் {பரசுராமர்}, பெரிதும் நடுங்கத் தொடங்கினார். பிறகு, அந்தப் பெருந்துறவியின் {பரசுராமரின்} நண்பரும், மறுபிறப்பாளருமான அகிருதவரணர், அவரை {பரசுராமரை} அணைத்துக் கொண்டு பல்வேறு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி அவரைத் தணித்தார்.

இப்படித் தைரியமூட்டப்பட்டவரும், உயர் நோன்புகளைக் கொண்டவருமான ராமர் {பரசுராமர்}, பிறகு, கோபத்தாலும், பழிவாங்கும் உணர்வாலும் நிறைந்தார். பெரும் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அவர் அழைத்தார். அதைக் கலங்கடிப்பதற்காக நானும் அதே அற்புத ஆயுதத்தைப் {பிரம்மாயுதத்தையே} பயன்படுத்தினேன். ஒன்றின் மேல் ஒன்று மோதிக் கொண்ட அந்த ஆயுதங்கள் இரண்டும் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி, யுகத்தின் முடிவில் என்ன நடக்கும் என்பதைக் காட்டின. என்னையோ, ராமரையோ {பரசுராமரையோ} அடைய முடியாத அந்த ஆயுதங்கள் இரண்டும், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடுவானில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன.

பின்னர், முழு ஆகாயமும், தீக்கிரையானது போலத் தோன்றியது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உயிரினங்கள் அனைத்தும் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாயின. அந்த ஆயுதங்களின் சக்தியால் பீடிக்கப்பட்ட, முனிவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் பெரிதும் துன்புற்றனர். பிறகு, மலைகள், கடல்கள் மற்றும் மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள். உயிரினங்கள் அனைத்தும் அந்த ஆயுதங்களின் சக்தியால் சுடப்பட்டுப் பெரிதும் துன்புற்றன. ஆகாயம் பற்றி எரிந்தது. ஓ! மன்னா {துரியோதனா}, அடிவானத்தின் பத்து புள்ளிகளும் {திக்குகளும்} புகையால் நிரம்பின. எனவே, ஆகாயத்தில் திரியும் உயிரினங்களால் ஆகாயத்திலேயே தங்க முடியவில்லை.

இவை யாவற்றினாலும், தேவர்கள், அசுரர்கள், ராட்சர்களுடன் கூடிய உலகம் முழுமையும் துன்பத்தில் கூக்குரலிட ஆரம்பித்த போது, "இதுவே நேரம்" என நினைத்த நான், ஓ! பாரதா {துரியோதனா}, (எனது கனவில் எனக்குத் தோன்றிய) அந்தப் பிரம்மத்தை உரைப்பவர்களின் {அந்த எட்டு 8 பிராமணர்களின்} உத்தரவின் பேரில் பிரஸ்வாப ஆயுதத்தை விரைந்து அடிக்க விரும்பினேன். அந்த அற்புத ஆயுதத்தை அழைக்கும் மந்திரமும் திடீரென எனது மனதில் தோன்றிற்று" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்