Sunday, July 26, 2015

"நான் வீழ்ந்தேன்!" என்ற பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 188

"I am vanquished" said Parasurama! | Udyoga Parva - Section 188 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைப் போரில் இருந்து விலகுமாறு தேவர்கள் கேட்டும், பீஷ்மர் பிரஸ்வாபனாஸ்திரத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தது; அதைக் கண்ட நாரதர் பீஷ்மரை வந்து தடுத்தது; அந்த எட்டு அந்தணர்களும் பீஷ்மரிடம் ஆயுதத்தை விலக்குமாறு வேண்டியது; பிரஸ்வாபனாஸ்திரத்தைத் திரும்பப் பெற்ற பீஷ்மர், பிரம்மாஸ்திரத்தை எழுப்பியது; தான் வீழ்ந்ததாகப் பரசுராமர் பீஷ்மரிடம் சொன்னாலும், போரைக் கைவிடாதிருந்தது; பரசுராமரின் மூதாதையர் வந்து பரசுராமரைத் தடுத்தது; பின்வாங்காத பரசுராமரை விட்டுப் பீஷ்மரிடம் விலகுமாறு வேண்டிய நாரதரும் பரசுராமரின் மூதாதையரும்; இருவரும் கேட்காததால் போர்க்களத்தின் நடுவில் இருவரையும் தடுத்துக் கொண்டு அவர்கள் நின்றது; பரசுராமர் விலகியது; பரசுராமரை வணங்கிய பீஷ்மர்...

பரசுராமர் (அம்பையினால் பீஷ்மருடன் எற்பட்ட பெரும்போரின்போது)
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "நான் இத்தீர்மானத்தை எடுத்தபோது, ஓ! மன்னா {துரியோதனா}, ஆகாயத்தில் பெரிதான கலவரக்குரல்கள் {கூக்குரல்கள்} எழுந்தன. அவை {அந்தக் குரல்கள்}, "ஓ! குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிரஸ்வாப ஆயுதத்தை {பிரஸ்வாபனாஸ்திரத்தை} ஏவி விடாதே" என்றன. அவற்றைத் தவிர்த்த {அலட்சியம் செய்த} நான், பிருகுவின் வழித்தோன்றலின் {பரசுராமரின்} மீது அதைக் குறி வைத்தேன். நான் அப்படிக் குறி வைத்தபோது, நாரதர் என்னிடம், "ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, இதோ வானத்தில் தேவர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கூட உன்னை இன்று தடுக்கிறார்கள்! பிரஸ்வாப ஆயுதத்தைக் குறி வைக்காதே! ராமர் {பரசுராமர்}, பிரம்மத் தகுதி படைத்த தவசியும், உனது ஆசானும் ஆவார். கௌரவ்யா {பீஷ்மா}, அவரை எப்போதும் {எவ்விதத்திலும்} அவமதிக்காதே" என்றார்.


நாரதர் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, பிரம்மத்தை உச்சரிக்கும் {பிரம்மவாதிகளான} அந்த எட்டு {8} பேரும் வானத்தில் நிற்பதைக் கண்டேன். ஓ! மன்னா {துரியோதனா}, புன்னகைத்தபடியே அவர்கள் என்னிடம் மெதுவாக, "ஓ! பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, நாரதர் சொல்வதை அப்படியே செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {பீஷ்மா}, அதுவே உலகத்துக்கு உயர்ந்த நன்மையுமாகும்" என்றனர். பிறகு, பிரஸ்வாபம் என்று அழைக்கப்பட அந்தப் பெரும் ஆயுதத்தை விலக்கிக் கொண்ட நான், பிரம்மம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை}, அந்த மோதலில் விதிப்படி எழுப்பினேன்.

பெருங்கடுப்புடன் இருந்த ராமர் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் சிங்கமே {துரியோதனா}, பிரஸ்வாபாயுதம் திரும்பப் பெறப்பட்டதைக் கண்டு திடீரென, "இழிந்தவன் நான், ஓ! பீஷ்மா! நான் வீழ்த்தப்பட்டேன்" என்று உரத்துக் கூறினார். பிறகு அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தனது மதிப்பிற்குரிய தந்தையையும், தனது தந்தையரின் தந்தையரையும் {மூதாதையரையும்} தன் முன்னிலையில் கண்டார். அவரை {பரசுராமரைச்} சூழ்ந்து நின்ற அவர்கள், அவரிடம் {பரசுராமரிடம்} இந்த ஆறுதல் வார்த்தைகளைப் பேசினார்கள். அவர்கள், "ஓ! ஐயா {பரசுராமா}, பீஷ்மனிடமோ, குறிப்பாக வேறு எந்த க்ஷத்திரியனிடமோ போரில் ஈடுபடும் துடுக்குத்தனமான இது போன்ற தகாத துணிச்சலை மீண்டும் எப்போதும் வெளிக்காட்டாதிருப்பாயாக. ஓ! பிருகு குலத் தோன்றலே {பரசுராமா}, போரிடுவது க்ஷத்திரியனின் கடமையாகும்! (வேத) கல்வியும், நோன்புகளில் பயிற்சியுமே அந்தணர்களுக்கு உயர்ந்த செல்வமாகும்! இதற்கு முன்பு, ஆயுதங்களை எடுக்கும்படி எங்களால் உனக்குச் சொல்லப்பட்டது ஒரு காரியத்தின் நிமித்தமாக மட்டுமே. அந்தக் கொடூரமான, செயற்கரிய சாதனையை நீ செய்துவிட்டாய். பீஷ்மனுடனான இந்தப் போரே உனது கடைசிப் போராகட்டும். ஏனெனில், போதுமென்ற அளவுக்கு நீ ஏற்கனவே போர் செய்துவிட்டாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பரசுராமா}, போரை விட்டுவிடு. நீ அருளப்பட்டிருப்பாயாக! இதுவே நீ வில்லை எடுக்கும் கடைசித் தருணமாக இருக்கட்டும்! ஓ! யாராலும் வெல்லப்பட முடியாதவனே {பரசுராமா}, வில்லை ஒரு புறமாகத் தூக்கியெறிந்துவிட்டு, ஓ! பிருகு குலத்தோனே {பரசுராமா}, தவத்துறவுகளைப் பயில்வாயாக!

சந்தனுவின் மகனான பீஷ்மன், தேவர்கள் அனைவராலும் தடுக்கப்படுவதைப் பார்! அவர்கள் அவனிடம் {பீஷ்மனிடம்} "இந்தப் போரில் இருந்து விலகுவாயாக! உனது ஆசானான ராமரிடம் {பரசுராமரிடம்} நீ போரிடாதே! ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, போரில் ராமரை {பரசுராமரை} வீழ்த்துவது உனக்கு முறையாகாது. ஓ! கங்கையின் மைந்தா {பீஷ்மா}, இந்த அந்தணருக்கு, போர்க்களத்தில் அனைத்து மரியாதைகளைச் செய்வாயாக! உன்னைப் பொறுத்தவரை நாங்கள் உனக்கு மூத்தவர்களானதால், உன்னைத் தடுக்கிறோம்!" என்கின்றனர். பீஷ்மனோ, வசுக்களில் முதன்மையானோரில் ஒருவனாவான். ஓ! மகனே {பரசுராமா}, நீ இன்னும் உயிரோடு இருப்பது நற்பேறாலேயே! கங்கையிடம் பிறந்த சந்தனுவின் மகனும், கொண்டாடப்படும் வசுவுமான அவனை உன்னால் எப்படி வீழ்த்த முடியும்? எனவே, ஓ! பார்கவா {பரசுராமா}, {போரில் இருந்து} விலகுவாயாக! பாண்டவர்களில் முதன்மையானவனும், இந்திரனின் வலிமைமிக்க மகனுமான அர்ஜுனனே பீஷ்மனைக் கொல்பவனாகச் சுயம்புவால் விதிக்கப்பட்டிருக்கிறான்" என்றனர்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "தனது மூதாதையரால் இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "என்னால் போரை விட முடியாது. இதுவே நான் மனப்பூர்வமாக நோற்றுவரும் நோன்பாகும். இதற்கு முன்பு, போரைக் கைவிட்டு நான் களத்தை விட்டு அகன்றதில்லை. பாட்டன்களே, நீங்கள் விரும்பினால், கங்கையின் மகனைப் {பீஷ்மனைப்} போரில் இருந்து விலகச் செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரை, எவ்வகையிலும், என்னால் போரை விட முடியாது" என்றார் {பரசுராமர்}. அவரது வார்த்தைகளைக் கேட்டவர்களும், ரிசீகரைத் தலைமையாகக் கொண்டவர்களுமான அந்தத் தவசிகள், நாரதரின் துணையோடு என்னிடம் வந்து, "ஓ! ஐயா, போரில் இருந்து விலகுவாயாக! அந்தணர்களில் முதன்மையானவனை {பரசுராமனை} மதிப்பாயாக!" என்றனர். க்ஷத்திரிய அறநெறியின் நிமித்தமாக நான் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "போரில் இருந்து புறமுதுகிட்டு திரும்புவதில்லை என்பதும், கணைகளால் முதுகில் காயம்படேன் என்பதும் இவ்வுலகில் நான் ஏற்கனவே நோற்றிருக்கும் நோன்பாகும். சலனத்தாலோ, துன்பத்தாலோ, அச்சத்தாலோ, செல்வத்தின் நிமித்தமாகவோ என்னால் எனது நித்திய கடமையைக் கைவிடமுடியாது! இதுவே எனது நிலையான தீர்மானமாகும்" என்றேன்.

பிறகு, நாரதரைத் தலைமையாகக் கொண்ட அந்தத் தவசிகளும், ஓ! மன்னா {துரியோதனா}, எனது தாய் பாகீரதியும் {கங்கையும்}, போர்க்களத்தில் எனக்கு முன்பாகப் {எங்கள் இருவருக்கு நடுவில்} நின்று கொண்டனர். எனினும், நான் முன்பு போலவே, போரிடும் தீர்மானத்துடன் வில் மற்றும் அம்புகளுடன் அமைதியாக நின்றேன். பிறகு அவர்கள் மீண்டும் ஒரு முறை ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அவரிடம், "அந்தணர்களின் இதயம் நெய்யாலானவை {மென்மையானவை}. எனவே, ஓ! பிருகு குலத்தோனே, அமைதியடைவாயாக! ஓ! ராமா, ஓ! ராமா, ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {பரசுராமா}, போரில் இருந்து விலகுவாயாக! பீஷ்மன் உன்னால் கொல்லப்பட இயலாதவன். அதேபோல, ஓ! பார்கவா {பரசுராமா}, நீயும் பீஷ்மனால் கொல்லப்பட இயலாதவன்" என்றார்கள்.

(போரைத்) தடைசெய்யும் வகையில் களத்தில் நின்று கொண்டே இவ்வார்த்தைகளைப் பேசிய பித்ருக்கள், பிருகு குலத்தின் வழித்தோன்றலை {பரசுராமரை}, தனது ஆயுதங்களை ஒரு புறம் வைக்கும்படி செய்தார்கள். சரியாக அதே நேரத்தில், சுடர்மிகும் பிரகாசம் கொண்டவர்களும், ஆகாயத்தில் எழுந்த பிரகாசமான நட்சத்திரங்களைப் போன்றவர்களும், பிரம்மத்தை உச்சரிப்பவர்களுமான அந்த எண்மரைக் {எட்டு (8) பேரைக்} கண்டேன். போருக்காக நின்றிருந்த என்னிடம், பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, உனது ஆசானான ராமரிடம் {பரசுராமரிடம்} செல்வாயாக. உலகங்கள் அனைத்துக்கும் நன்மையானதைச் செய்வாயாக", என்றனர். பிறகு, தனது நலன்விரும்பிகளின் சொற்களை ஏற்று ராமர் {பரசுராமர்} விலகியதைக் கண்ட நான், உலகங்களின் நன்மைக்காக, எனது நலன்விரும்பிகளின் சொற்களை ஏற்றேன். மிகவும் சிதைவுக்குள்ளாயிருந்தாலும் நான் ராமரை {பரசுராமரை} அணுகி அவரை வழிபட்டேன்.

பிறகு அந்தப் பெரும் தவசியான ராமர் {பரசுராமர்}, புன்னகையுடனும், பெரும்பாசத்துடனும் என்னிடம், "பூமியில் உனக்கு இணையான க்ஷத்திரியன் எவனும் கிடையாது! இந்தப் போர் எனக்கு மிகவும் மகிழ்வூட்டியது. ஓ! பீஷ்மா, இப்போது நீ போகலாம்" என்றார். பிறகு எனது முன்னிலையிலேயே அந்தக் கன்னிகையை (காசியின் மகளை) {அம்பையை} அழைத்த பார்கவர் {பரசுராமர்}, அந்த உயர் ஆன்மா கொண்டோர் அனைவரின் மத்தியிலும் கவலை நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னார்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்