Monday, August 31, 2015

"துச்சாசனா, பீஷ்மரைக் காப்பாயாக!" என்ற துரியன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 015

"O Dussasana, protect Bhishma!" said Duryodhana! | Bhishma-Parva-Section-015 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : நடக்கும் போருக்காகத் திருதராஷ்டிரன் துரியோதனனைக் குற்றஞ்சுமத்தலாகாது என்று திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; துரியோதனன் துச்சாசனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீர் தகுதியானவரே. எனினும், இந்தத் தவறுக்காகத் துரியோதனனைக் குற்றஞ்சாட்டுவது உமக்குத் தகாது. தவறான தனது சொந்த நடத்தையின் விளைவால் உண்டான தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறான நடத்தைகளுக்கு மற்றவர்களைக் காரணமாக்கக் கூடாது. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிற மனிதர்களுக்கு அனைத்து விதத்திலும் தீங்கிழைக்கும் ஒரு மனிதன், கண்டிக்கத்தக்க அவனது அந்தச் செயல்களின் விளைவாக, மனிதர்கள் அனைவராலும் கொல்லப்படத் தகுந்தவன் ஆவான்.

தீய வழிகளை அறியாதவர்களான பாண்டவர்கள், நெடுங்காலமாகத் தங்கள் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன், உமது முகத்தைப் பார்த்தபடியே, (தங்களுக்கு இழைக்கப்பட்ட) தீங்குகளைப் பொறுத்துக் கொண்டு, அவற்றை மன்னித்து, காட்டில் வசித்தார்கள்.

யோக சக்தியின் துணை கொண்டு காணப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் அளவிலா சக்தி கொண்ட மன்னர்களைக் குறித்துக் கேட்டு, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, உமது இதயத்தில் கவலை கொள்ளாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவும் முன்பே விதிக்கப்பட்டவையே.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருடைய அருளால் (யார் கொடுத்த வரத்தால்),  அற்புதமான தெய்வீக அச்சத்தையும், பார்வைப் புலனை விஞ்சிய காட்சியையும், பெரும் தொலைவுக்கான கேள்வியையும் {கேட்கும் திறனையும்}, பிற மக்களின் இதயங்களைக் {மனங்களைக்} குறித்த அறிவையும், கடந்த மற்றும் எதிர் காலங்களையும், விதிகளை மீறும் மனிதர்கள் அனைவரின் மூலம் குறித்த அறிவையும் [1], வானத்தின் ஊடாகச் செல்லக்கூடிய இனிமையான சக்தியையும், போர்க்களங்களில் ஆயுதங்களால் தொடப்பட முடியாத சக்தியையும், அடைந்தேனோ, அந்த (ஞானியும், உயர் ஆன்மா கொண்டவரும் [2]), பராசரர் மைந்தருமான உமது தந்தையை {வியாசரை} வணங்கி, அழகானதும், பாரதர்களுக்கு இடையில் ஏற்பட்டதும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதும், உயரிய அற்புதம் நிறைந்ததுமான அந்தப் போரைக் குறித்து என்னிடம் இருந்து கேட்பீராக.

[1] இங்கே மூலத்தில் Vyotthiopatti vijananam என்றிருக்கிறது. அதில் Vyutthita என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய வார்த்தையாகும் என்கிறார் கங்குலி.

[2] "உயர்-ஆன்மா கொண்டவர்" மற்றும் "யாரால் எனக்கு வரம் அளிக்கப்பட்டதோ" என்ற வார்த்தைகளும், தொடர்ந்து வரும் 9வது ஸ்லோகத்ததில் தோன்றுகின்றன என்கிறார் கங்குலி.

விதிப்படி போராளிகள் அணிவகுக்கப்பட்டு, அவர்கள் போருக்குத் தயாராக இருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம் துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். "ஓ! துச்சாசனா, பீஷ்மரின் பாதுகாப்புக்காகத் தேர்கள் விரைந்து செலுத்தப்படட்டும். நீ நமது படைப்பிரிவுகள் அனைத்தையும் (முன்னேறும்படி) விரைந்து ஏவுவாயாக. பாண்டவர்கள் மற்றும் குருக்களின் தலைமையிலான துருப்புகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பல வருடங்களாக நான் நினைத்து வந்த அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது. பீஷ்மரைப் பாதுகாப்பதை விட, இந்தப் போரில் (நமக்கு) மிக முக்கியமான செயலாக நான் வேறு எதையும் நினைக்கவில்லை. {அப்படி பீஷ்மர்} பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களை அவர் {பீஷ்மர்} கொல்வார்.

அந்தத் தூய ஆன்மா கொண்ட வீரர் {பீஷ்மர்}, "நான் சிகண்டியைக் கொல்ல மாட்டேன். முன்பு அவன் பெண்ணாக இருந்தவன் என்று கேள்விப்படப் படுகிறது. இக்காரணத்திற்காக அவன் இந்தப் போரில் என்னால் கைவிடத் {புறக்கணிக்கப்படத்} தக்கவனாவான்" என்று சொல்லியிருக்கிறார். இதற்காகவே, பீஷ்மர் குறிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். எனது வீரர்கள் அனைவரும் சிகண்டியைக் கொல்லத் தீர்மானித்துத் தங்கள் நிலைகளை ஏற்க வேண்டும். அனைத்து வகை ஆயுதங்களுடன் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கில் இருக்கும் துருப்புகள் அனைத்தும் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாக்கட்டும்.

பாதுகாக்கப்படாமல் இருந்தால், பெரும் பலம் படைத்த சிங்கத்தைக்கூட ஓநாய் வேட்டையாடிவிடக்கூடும். எனவே, நரியால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் பீஷ்மர் கொல்லப்பட நாம் விடலாகாது. பல்குனனின் {அர்ஜுனனின்} இடது சக்கரத்தை {இடது பக்க படையை} யுதாமன்யுவும், வலது சக்கரத்தை {வலது பக்க படையை} உத்தமௌஜசும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் இருவரால் பாதுகாக்கப்படும் பல்குனனே {அர்ஜுனனே} சிகண்டியைப் பாதுகாத்து வருகிறான். ஓ! துச்சாசனா, பீஷ்மரால் துறக்கப்பட்டு {புறக்கணிக்கப்பட்டு}, பல்குனனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டுவரும் அந்தச் சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} கொல்ல முடியாத வகையில் செயல்படுவாயாக" என்றான் {துரியோதனன்}".


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்