Tuesday, September 01, 2015

கௌரவர்களின் படை! - பீஷ்ம பர்வம் பகுதி - 016

The army of the Kauravas! | Bhishma-Parva-Section-016 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் தயாரிப்புகள் மற்றும் கௌரவத் தரப்பில் பதினோரு பிரிவுகளில் நின்றவர்கள் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் விவரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்ததும், "அணிவகுப்பீர்! அணிவகுப்பீர்!" என்று மன்னர்கள் அனைவரும் எழுப்பிய குரலொலி பெரிதாக இருந்தது. சங்கொலிகள் மற்றும் சிங்க கர்ஜனையை ஒத்திருந்த துந்துபி ஒலிகளோடும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கனைப்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள், ஆரவாரமிக்க யானைகள் மற்றும் {வீரர்களின்} கூக்குரல்களோடும், கைக்கொட்டல் ஒலிகளோடும், போராளிகளின் முழக்கங்களோடும் எழுந்த ஆரவாரம் எங்கும் பெரிதாக இருந்தது.


குருக்கள் மற்றும் பாண்டவர்களின் பெரும்படைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்தில் எழுந்து, தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்தனர். பிறகு சூரியன் எழுந்ததும், உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பிலும், தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் உரிய கடும் ஆயுதங்களும், கவசங்களும், இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும் முழுமையாகக் காட்சியளித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல அங்கே காட்சியளித்தன. அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தன.

அங்கே இருந்த உமது தந்தை {பெரியப்பா பீஷ்மர்}, முழு நிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தார். விற்கள், வாள்கள், ரிஷ்டிகள் {இருபுறக் கூர் கொண்ட கத்திகள்}, கதாயுதங்கள், ஈட்டிகள், வேல்கள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிரகாசமிக்க ஆயுதங்களைத் தரித்தபடி படைவீரர்கள் (தங்களுக்கு) உரிய அணிகளில் தங்கள் நிலைகளை ஏற்றனர். {கௌரவர்களாகிய} நமக்கும், எதிரிக்கும் சொந்தமான பிரகாசமிக்கக் கொடிமரங்கள் பல்வேறு வடிவங்களிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன. தங்கத்தால் செய்யப்பட்டு, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரும் பிரகாசம் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள், போருக்காகக் காத்திருக்கும் வீரப் போராளிகள் கவசம் தரித்துக் கொண்டு கொடிக்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அழகாக இருந்தன. காளைகளைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்ட மனிதர்களில் முதன்மையானோர் பலர், அம்பறாத்தூணிகளுடனும், தோலுறைக் கவசங்கள் கொண்ட கைகளுடனும், தங்கள் பிரகாசமிக்க ஆயுதங்களை உயர்த்திய படி தங்கள் படைப்பிரிவின் தலைமையில் நின்று கொண்டிருந்தனர்.

சுபலனின் மகன் சகுனி {1}, சல்லியன் {2}, ஜெயத்ரதன் {3}, விந்தன் மற்றும் அனுவிந்தன் என்ற அவந்தியின் இளவரசர்கள் இருவர் {4}, கேகயச் சகோதரர்கள் {5}, கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் {6}, கலிங்கர்களின் ஆட்சியாளன் சுருதாயுதன் {7}, மன்னன் ஜயத்சேனன் {8}, கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் {9}, சத்வ குலத்துக் கிருதவர்மன் {10} ஆகிய மனிதர்களில் புலிகளும், (அந்தணர்களுக்கு) அபரிமிதமான தானங்களை அளித்து வேள்விகளைச் செய்தவர்களுமான இந்தப் பத்துப் பேரும் {பத்து அணிகளைச் சேர்ந்தவர்களும்}, கதாயுதங்களைப் போன்று தோற்றமளித்த கரங்களுடனும், பெரும் துணிவுடனும் ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைமையில் நின்றார்கள்.

இவர்களும், இன்னும் பல மன்னர்கள் மற்றும் இளவரசர்களும், கொள்கைகளை அறிந்த வலிமைமிக்கத் தேர் வீரர்களும், துரியோதனனின் உத்தரவுக்குப் பணிந்து, கவசம் தரித்தபடி, தங்கள் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் நின்றார்கள். கருப்பு மான் தோல் உடுத்தியவர்களும், பெரும் பலம் உடையவர்களும், போரில் சாதித்தவர்களுமான அவர்கள் அனைவரும் துரியோதனனின் நிமித்தமாகத் திறன்மிக்கப் பத்து அக்ஷௌஹிணிகளின் தலைமையில் நின்று உத்தரவிட்டபடியே பிரம்மனின் உலகத்தை அடைவதற்கு மகிழ்ச்சியாகத் தயாரானார்கள்.

தார்தராஷ்டிரத் துருப்புகளை உள்ளடக்கிய, கௌரவர்களின் பதினோராவது {11} பெரும் படைப்பிரிவானது, அந்த முழுப் படைக்கும் முன்னணியில் நின்றது. அந்தப் படைப்பிரிவின் முன்னணியிலேயே சந்தனுவின் மகன் {பீஷ்மர்} நின்றார். தனது வெள்ளைத் தலைப்பாகை {வெண்கிரீடம்}, வெண்குடை, வெண்கவசம் ஆகியவற்றைத் தரித்திருந்த பீஷ்மர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தவறாத ஆற்றலுடன் உதிக்கும் சந்திரனைப் போல இருப்பதை நாங்கள் கண்டோம்.

தங்கப் பனை மரம் பொறித்த கொடியுடன், வெள்ளியாலான தேரில் வீற்றிருந்த அந்த வீரரைக் {பீஷ்மரைக்}, குருக்களும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் வெண்மையான மேகங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலக் கண்டார்கள். திருஷ்டத்யும்னன் தலைமையில் நின்ற சிருஞ்சயர்களுக்கு மத்தியில் உள்ள பெரும் வில்லாளிகள், (பீஷ்மரைக் கண்டு), வலிமைமிக்கச் சிங்கம் ஒன்று கொட்டாவி விடுவதைக் காணும் சிறு விலங்குகளைப் போலத் தெரிந்தார்கள். உண்மையில், திருஷ்டத்யும்னன் தலைமையில் இருந்த போராளிகள் அனைவரும், அச்சத்தால் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே உமது படையின் அற்புதமான பதினோரு {11} பிரிவுகளாகும். அப்படியே பாண்டவர்களின் ஏழு {7} பிரிவுகளும் மனிதர்களில் முதன்மையானோராலேயே பாதுகாக்கப்பட்டது. உண்மையில், ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் படைகள் இரண்டும், பெரும் முதலைகள் நிறைந்தவையும், கடுமையான மகரங்களால் கலங்கடிக்கப்பட்டவையுமான யுக முடிவின் இரு கடல்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும், இது போன்ற, இந்தக் கௌரவர்களுடையதைப் போன்ற இரு படைகள் மோதியதை நாம் கண்டதோ, கேட்டதோ இல்லை" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்