Saturday, September 05, 2015

அர்ஜுனன் சொன்ன துர்க்கைத் துதி! - பீஷ்ம பர்வம் பகுதி - 023

Hymn of Durga said by Arjuna! | Bhishma-Parva-Section-023 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் துர்க்கையைத் துதிக்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனன் துர்க்கையம்மனுக்குச் செய்த துதி; அர்ஜுனனின் துதிக்குச் செவிசாய்ந்த துர்க்கை அர்ஜுனனுக்கு, வெற்றியை அருளியது; துர்க்கைத்துதியின் பலன்கள்; துரியோதனாதிகளின் அறியாமை ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரிட அணுகும் தார்தராஷ்டிரப் படையைக் கண்ட கிருஷ்ணன், அர்ஜுனனின் நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (திட்டமிட்டு) பகைவர்களை வீழ்த்த, போருக்கு முன்னதாக, துர்க்கையைத் துதிப்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}."

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "போருக்கு முன்னதாகப் பெரும் புத்திக்கூர்மையுடைய வாசுதவேனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனன், தனது தேரில் இருந்து இறங்கி, குவிந்த கரங்களுடன் பின் வரும் துதியைக் சொன்னான்.



அர்ஜுனன், "ஓ! யோகிகளின் தலைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பிரம்மனுக்கு ஒப்பானவளே {பிரம்மஸ்வரூபிணியே}, ஓ! மந்தர வனத்தில் வசிப்பவளே, ஓ! பலவீனத்திற்கும், சிதைவுக்கும் அப்பாற்பட்டவளே, ஓ! காளி, ஓ! கபாலனின் {சிவனின்} மனைவியே, ஓ! கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டவளே {துர்க்கையே}, உன்னை நான் வணங்குகிறேன்.

ஓ! பக்தர்களுக்கு நன்மைகளை அளிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! மகாகாளி, ஓ! அண்டத்தை அழிப்பவனின் {சிவனின்} மனைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பெருமை மிக்கவளே, ஓ! ஆபத்துகளில் இருந்து காப்பவளே, ஓ! மங்கலக் குணங்கள் அனைத்தையும் கொண்டவளே.

ஓ! காத்ய குலத்தில் உதித்தவளே, ஓ! மரியாதைமிக்க வழிபாட்டுக்குத் தகுந்தவளே, ஓ! கடுமையானவளே, ஓ! வெற்றியைக் கொடுப்பவளே, ஓ! வெற்றியே ஆனவளே {வெற்றியின் உருவமே, ஜெயஸ்வரூபிணி}, ஓ! மயில்தோகைகளைக் கொடியாகக் கொண்டவளே, ஓ! அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளே, ஓ! மிகக் கொடிய சூலத்தை {சூலம் ஆயுதத்தைத்} தாங்குபவளே, ஓ! வாளும், கேடயமும் ஏந்தியவளே, ஓ! மாட்டிடையர்த் தலைவனின் {கிருஷ்ணனின்} தங்கையே, ஓ! மூத்தவளே, மாட்டிடையன் நந்தன் குலத்தில் பிறந்தவளே!

ஓ! எருமையின் {மகிஷாசுரனின்} குருதியில் எப்போதும் மகிழ்பவளே, ஓ! குசிக குலத்தில் பிறந்தவளே, ஓ! மஞ்சளாடை உடுத்தியவளே, ஓ! ஓநாய் முகத்தை ஏற்று அசுரர்களை விழுங்கியவளே [1], போரை விரும்பும் உன்னை நான் வணங்குகிறேன். ஓ! உமையே, சகம்பரி {சகம்பரனின் மகளே}, ஓ வெண்ணிறம் கொண்டவளே {மகேஸ்வரஸ்வரூபிணி}, ஓ! கருநிறம் கொண்டவளே {வாசுதேவஸ்வரூபிணி}, ஓ! கைடபனாசுரனைக் கொன்றவளே, ஓ! மஞ்சள் கண்களை உடையவளே, ஓ! பல்வேறு கண்களைக் கொண்டவளே, ஓ! புகையின் நிறம் {தூம்ரவர்ணம்} கொண்ட கண்களை உடையவளே, உன்னை நான் வணங்குகிறேன்.

[1] "இதில் தோன்றும் பல பெயர்களை ஒழுங்கமைப்பதிலும், தொடர்ந்து வரும் சுலோகங்களிலும் நான் நீலகண்டரையே பின்பற்றியிருக்கிறேன். எனினும், சந்தேகத்திற்கிடமான சொற்பிறப்பியலைக் {இலக்கணத்தைக்} கொண்டிருக்கும் பெயர்களையும், மிகவும் பொதுவாக வழங்கப்படும் பெயர்களையும் நான் அப்படியே இட்டிருக்கிறேன் {தக்க வைத்திருக்கிறேன்}" என்கிறார் கங்குலி.

ஓ! வேதங்களும், சுருதிகளும், உயர்ந்த அறமும் ஆனவளே, ஓ! வேள்வியில் ஈடுபடும் அந்தணர்களுக்கு நன்மையைச் செய்பவளே, ஓ! கடந்த காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டவளே, ஜம்பூத்வீபத்தின் {நாவலந்தீவின்} நகரங்களில் கட்டப்பட்டுள்ள புனிதமான வசிப்பிடங்களில் {கோவில்களில்} எப்போதும் வசிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன்.

அறிவியல்களில் பிரம்ம அறிவியலானவளே {வித்தைகளில் பிரம்ம வித்தையானவளே}, உயிரினங்களின் விழிப்பில்லா உறக்கமே {மகா நித்திரையே}, ஓ! ஸ்கந்தனின் {முருகனின்} தாயே, ஓ! ஆறு (உயர்ந்த) குணங்களைக் கொண்டவளே, ஓ! துர்க்கையே, ஓ! அடைய முடியாத பகுதிகளில் {காட்டில்} வசிப்பவளே, சுவாகா என்றும், சுவதை என்றும், கலை என்றும், காஷ்டை என்றும், வேதங்கள் மற்றும் வேதாந்த அறிவியலின் தாயான சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் நீயே விளக்கப்படுகிறாய்.

உள் ஆன்மத் தூய்மையுடன் {பரிசுத்தமான மனத்தினால்} நான் உன்னைத் துதிக்கிறேன். ஓ! பெரும் தேவியே {மகாதேவியே}, உனது அருளால் போர்க்களத்தில் எப்போதும் வெற்றி என்னைச் சந்திக்கட்டும். அச்சம் தரும் அடைய முடியாத இடங்களிலும், கடினமான இடங்களிலும் {பயங்கரமான துர்க்கங்களிலும்}, உனது வழிபாட்டாளர்களின் {பக்தர்களின்} வசிப்பிடங்களிலும், பாதாள லோகத்திலும் நீ எப்போதும் வசிக்கிறாய். போரில் எப்போதும் தானவர்களை வீழ்த்துபவள் நீயே.

(அனைத்து உயிர்களின்) அதிலம் {உணர்வற்ற நிலை} {ஜம்பினி-ஆலஸ்யம்}, உறக்கம் {மோஹினி-நித்திரை}, மாயை, அடக்கம் {ஹ்ரீ-லஜ்ஜை}, அழகு ஆகியவை நீயே. அந்தி {சந்தியை} நீயே, நாள் நீயே, சாவித்ரி நீயே, தாயும் நீயே. மனநிறைவு {துஷ்டி} நீயே, வளர்ச்சி {புஷ்ணி} நீயே, ஒளியும் {தைரியம்} நீயே. சூரியனையும் சந்திரனையும் தாங்கி அவற்றை ஒளிரச் செய்பவள் நீயே. வளமானவர்களின் வளமை {செழிப்பு} நீயே. சித்தர்கள் மற்றும் சாரணர்களால் தியானத்தில் {சமாதி நிலையில்} காணப்படுபவள் நீயே" என்றான் {என்று துர்க்கையைத் துதித்தான் அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பக்தியை (பக்தியின் அளவைப்) புரிந்து கொண்டவளும், மனிதர்களுக்கு எப்போதும் அருள்பாலிப்பவளுமான துர்க்கை, கோவிந்தனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் ஆகாயத்தில் தோன்றி, இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

அந்தத் தேவி {துர்க்கை - அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டவா {அர்ஜுனா}, குறுகிய காலத்தில் நீ உனது எதிரிகளை வெற்றி கொள்வாய். ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, (மேலும்) நீ நாராயணனையே உனது துணைவனாகக் கொண்டிருக்கிறாய். எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவனாக நீ இருக்கிறாய். ஏன் வஜ்ரந்தாங்கியாலும் {இந்திரனாலும்} கூட உன்னை வீழ்த்த இயலாது" என்றாள்.

இதைச் சொன்ன அந்த வரமருளும் தேவி {துர்க்கை}, விரைவில் மறைந்துபோனாள். எனினும், வரத்தைப் பெற்றவனான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வெற்றி அடைந்தவனாகவே தன்னைக் கருதி, அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தனது சிறந்த தேரில் ஏறிக் கொண்டான். ஒரே தேரில் அமர்ந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் தங்கள் தெய்வீகச் சங்குகளை ஊதினர்.

விடியலில் எழுந்து இந்தத் {மேற்கண்ட துர்க்கைத்} துதியை உரைக்கும் மனிதனுக்கு, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களிடம் இருந்து எப்போதும் அச்சமில்லை. அவனுக்கு எந்த எதிரியும் இல்லை; பாம்புகள், கொடுக்குகள் மற்றும் பற்களைக் கொண்ட விலங்குகள் ஆகியவை அனைத்திடம் இருந்தும் மற்றும் மன்னர்கள் ஆகியோரிடம் இருந்தும் அவனுக்கு அச்சமென்பதே கிடையாது. அனைத்து சச்சரவுகளிலும் அவன் வெல்வான்; தனது கட்டுக்கள் அனைத்திலும் இருந்து அவன் விடுபடுவான். சிரமங்கள் அனைத்தில் இருந்தும், திருடர்களிடம் இருந்தும் விடுபட்டு, போரில் எப்போதும் வெற்றி பெற்று, செழிப்பின் தேவியை அவன் எப்போதும் வெல்வான் என்பது உறுதியாகும். உடல்நலம் மற்றும் பலத்தோடு அவன் நூறு வருடங்கள் வாழ்வான்.

பெரும் அறிவைக் கொண்ட வியாசரின் அருளால் இவை அனைத்தையும் நான் அறிந்தேன். மரண வலையில் சிக்கிய உமது தீய மகன்கள் {துரியோதனாதிகள்}, அறியாமையின் காரணமாக, அவர்களை, நரன் என்றும், நாராயணன் என்றும் அறியாமல் இருக்கிறார்கள். மேலும் மரண வலையில் சிக்கியிருக்கும் அவர்கள், இந்த நாட்டின் {முடிவு} முடிவுக்காலம் நெருங்கிவிட்டதையும் அறியாதிருக்கிறார்கள்.

துவைபாயனர் {வியாசர்}, நாரதர், கண்வர், பாவமற்ற ராமர் {பரசுராமர்} ஆகிய அனைவரும் உமது மகனைத் {துரியோதனனைத்} தடுத்தார்கள். ஆனால் அவனோ {துரியோதனனோ} அவர்களது வார்த்தைகளை ஏற்கவில்லை. எங்கு நீதியிருக்கிறதோ {அறமிருக்கிறதோ} அங்கே புகழும், அழகும் இருக்கும். எங்கே பணிவு இருக்கிறதோ, அங்கே செழிப்பும் புத்திக்கூர்மையும் {அறிவும்} இருக்கும். எங்கே நீதி இருக்கிறதோ, அங்கே கிருஷ்ணன் இருப்பான்; எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கும்" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்