Friday, September 04, 2015

"பீஷ்மரிடம் போரிடு அர்ஜுனா!" என்ற கிருஷ்ணன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 022

"Arjuna, Seek to fight Bhishma!" said Krishna! | Bhishma-Parva-Section-022 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கு எதிராக அணிவகுப்பை ஏற்படுத்திய யுதிஷ்டிரன், தனது படையை உற்சாகப்படுத்தியது. யுதிஷ்டிரனும் புறப்பட்டது; முனிவர்கள் யுதிஷ்டிரனைத் துதித்து, அவனது வெற்றிக்காக வேண்டியது; பீமனைக் கண்டு கௌரவப் படை நடுங்கியது; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன் ஆகிய தகவல்களைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் படைப்பிரிவுகளுக்கு எதிரான வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்து அனுப்பிய மன்னன் யுதிஷ்டிரன், "(சாத்திரங்களில்) சொல்லப்பட்டவைக்கு ஏற்புடைய வகையில் நமது படைகளை எதிர்வியூகத்தில் பாண்டவர்களாகிய நாங்கள் அனுப்புகிறோம். பாவமற்றவர்களே, உயர்ந்த சொர்க்கத்தை (அடைய) விரும்பி, நல்ல முறையில் போரிடுவீராக" என்று அவர்களைத் துரிதப்படுத்தினான் {யுதிஷ்டிரன்}.


(அந்தப் பாண்டவப் படையின்) நடுவில், தனது துருப்புகளுடன் கூடிய சிகண்டி அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டு இருந்தான். பீமனால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் படையின் முன்னணியில் நகர்ந்தான். (அந்தப் பாண்டவப் படையின்) தெற்குப் பிரிவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளியும், அழகனும், சாத்வத குலத்தின் போராளிகளில் முதன்மையானவனும், இந்திரனுக்கு ஒப்பானவனுமான யுயுதானனால் பாதுகாக்கப்பட்டு இருந்தது.

மகேந்திரனையே சுமக்கத் தகுந்ததும், அற்புதமான கொடிக்கம்பத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தாலும் ரத்தினங்களாலும் பலவண்ணங்களைக் கொண்டதும், (குதிரைகளுக்கான) தங்கக் கட்டுக்கயிறுகளைக் கொண்டதுமான தேரில், தனது யானைப் பிரிவுகளுக்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, தந்தக் கைப்பிடியுடன் கூடிய தன் தூய வெண்குடை தனது தலைக்கு மேல் உயர்த்தப்பட்டு மிகவும் அழகாக இருந்தான். மன்னனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தியபடி பல பெருமுனிவர்கள் அவனை வலம் வந்தனர். பல புரோகிதர்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர், அவனது {யுதிஷ்டிரனின்} புகழைச் சொல்லும் துதிபாடல்களைப் பாடி, அவனை வலம் வந்தபடியே, ஜபங்கள், மந்திரங்கள், பயனளிக்கும் மருந்துகள் மற்றும் பல்வேறு பிராயச்சித்த சடங்குகளின் துணையுடன், அவனது {யுதிஷ்டிரனின்} எதிரிகளுடைய அழிவை விரும்பினார்கள். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, பசுக்கள், கனிகள், மலர்கள், பொற்காசுகள், ஆடைகள் ஆகியவற்றை அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்தபடி, தேவர்களின் தலைவனான சக்ரனைப் {இந்திரனைப்} போல முன்னேறிச் சென்றான்.

நூறு மணிகளால் இணைக்கப்பட்டதும், சிறந்த வகையிலான ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அற்புதமான சக்கரங்களைக் கொண்டதும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருப்பதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டிருப்பதுமான அர்ஜுனனின் தேர், ஆயிரம் சூரியன்களைப் போல அதீதப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. இந்த உலகத்தில், எவனுக்கு இணையான வில்லாளி இப்போதும் எப்போதும் இல்லையோ, அந்த அர்ஜுனன் காண்டீவத்துடன் நின்றிருந்ததும், குரங்கு {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டதுமான அந்தத் தேரின் கடிவாளங்கள் கேசவனால் {கிருஷ்ணனால்} பிடிக்கப்பட்டது.

உமது மகன்களின் படைகளை நசுக்குவதற்காக எவன் பயங்கர வடிவைக் கொள்வானோ, ஆயுதங்களற்ற எவன், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைத் தனது வெறுங்கரங்களைக் கொண்டே தூசிகளாகப் பொடியாக்குவானோ, விருகோதரன் என்றும் அழைக்கப்படும் அந்த வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், இரட்டையர்களுடன் {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, (பாண்டவர்களின்) தேர்ப்படைப் போர் வீரர்களைப் பாதுகாத்தான். விளையாட்டு நடை நடக்கும் சீற்றமிகு சிங்கங்களின் இளவரசனை {தலைமை சிங்கத்தைப்} போலவோ, பூமியில், (பூலோக) உடல் கொண்டு வந்த பெரும் இந்திரனைப் போலவோ இருந்தவனும், யானை மந்தையின் பெருமைமிக்கத் தலைவனைப் போன்றவனுமான ஒப்பற்ற விருகோதரனை {பீமனை}, (அந்தப் படையின்) முன்னணியில் கண்ட உமது தரப்புப் போர்வீரர்கள், சேற்றில் {அகப்பட்டு} மூழ்கும் யானைகளைப் போல, தங்கள் பலத்தை இழந்து அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தனர்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த ஒப்பற்ற இளவரசனான குடகேசனிடம் {அர்ஜுனனிடம்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, "தனது படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கோபத்தால் எவர் நம்மை எரிப்பாரோ, சிங்கத்தைப் போல நமது துருப்புகளை எவர் தாக்குவரோ, முன்னூறு {300} குதிரை வேள்விகள் எவர் செய்தாரோ, குருக்குலத்தின் கொடியான அந்தப் பீஷ்மர், அதோ இருக்கிறார்! மேகங்களால் மூடப்படும் பிரகாசமான பேரொளி போல, அவ்விடத்தில், அனைத்துப் புறங்களிலும், பெரும் வீரர்கள் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்திருக்கின்றனர். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அதோ அந்தத் துருப்புகளைக் கொன்று, அந்தப் பாரதக் குலத்துக் காளையிடம் {பீஷ்மரிடம்} போரிட முயல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்