Sunday, October 18, 2015

தாக்குதலும் எதிர் தாக்குதலும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 045அ

Attack and counter attack! | Bhishma-Parva-Section-045a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்தப் பயங்கர நாளின் மத்திய வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பற்பல) மன்னர்களின் உடல்களைச் சிதைத்த அந்தப் பயங்கரப் போர் தொடங்கியது. போரில் வெற்றியை விரும்பியவர்களான குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களின் பேரொலிகள் சிம்ம முழக்கங்களை ஒத்திருந்தது. அது வானத்திலும் பூமியிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தோல் கையுறைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதிய ஒலிகளும், சங்கொலிகளும் கலந்த அந்த அமளி, ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது. சிம்ம முழக்கங்களைச் செய்த பலர் ஒருவரை நோக்கி ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்தவையான, (கையில் பொதிந்த) கையுறைகளுடன் நீட்டி இழுக்கப்பட்ட வில் நாண்களின் ஒலிகளும், யானைப்படையின் கனமிக்க நடையின் ஒலியும், குதிரைகளின் மூர்க்கமான கனைப்பொலிகளும், அங்குசங்கள் மற்றும் தடிகள் விழும் ஒலிகளும், ஆயுதங்கள் மோதும் ஒலிகளும், ஒன்றை நோக்கி மற்றொன்றாக விரையும் யானைகளின் மணியோசைகளும் ஏற்படுத்திய ஆரவாரம் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தங்கள் உயிரையே துச்சமாகக் கருதிய குரு வீரர்கள் அனைவரும், கொடிக்கம்பங்களை உயர்த்திவயாறும், கொடிய நோக்கங்களோடும் பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர்.


சந்தனுவின் மகனும் {பீஷ்மனும்} கூட, மரணக் கோலுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைந்தார். பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு கங்கையின் மைந்தருக்கு {பீஷ்மருக்கு} எதிராகப் போர்க்களத்தில் விரைந்தான். குருக்களுக்கு மத்தியில் புலிகளான அந்த இருவரும் {பீஷ்மரும், அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் கொல்லவே விரும்பினர். வலிமைமிக்கவரான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் என்னதான் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} துளைத்துக் கொண்டிருந்தாலும், அவரால் அவனை {பீஷ்மரால் அர்ஜுனனை} நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனாலும் {அர்ஜுனனாலும்} போரில் பீஷ்மரை நடுங்கச் செய்ய முடியவில்லை.

வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி, கிருதவர்மனை எதிர்த்து விரைந்தான். இந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போரானது (காண்போருக்கு) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும்வண்ணம் கடுமையானதாக இருந்தது. சாத்யகி, கிருதவர்மனைத் துன்புறுத்தினான். கிருதவர்மனும், சாத்யகியைத் துன்புறுத்தினான். பேரொலிகளால் ஒருவரை ஒருவர் என இருவரும் தங்களைப் பலவீனப் படுத்தினர். உடலெங்கும் அம்புகளால் துளைக்கப்பட்ட அவ்விரு வலிமைமிக்க வீரர்களும் (சாத்யகியும், கிருதவர்மனும்} வசந்த காலத்தில் பூக்கும் கின்குசக மலர்களைப் போலக் காட்சியளித்தனர்.

வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு, பிருஹத்பலனுடன் போரிட்டான். எனினும், விரைவில் அந்த மோதலில், ஓ, மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, சுபத்திரையின் மகனுடைய {அபிமன்யுவுடைய} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, அவனது தேரோட்டியையும் வீழ்த்தினான். தனது தேரோட்டியின் வீழ்ச்சியில் பெரும் கோபம் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் பிருஹத்பலனைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன், மேலும் இரு கணைகளால் (பிருஹத்பலனின்) கொடிக்கம்பத்தை வெட்டி  வீழ்த்தினான். (மேலும்) ஒரு கணையால், அவனது {பிருஹத்பலனின்} தேர்ச்சக்கரங்களைக் காப்பவன் ஒருவனையும், இன்னும் ஒன்றால் {ஒரு கணையால்} அவனது தேரோட்டியையும் வெட்டினான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அபிமன்யு} தனது கூரிய கணைகளால் எதிரிகள் ஒவ்வொருவரையும் பலவீனப்படுத்தினான்.

ஏற்கனவே (பாண்டு மகன்களைக்) காயப்படுத்தியவனும், செருக்குடையவனும், வீண்பெருமிதம் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனுடன் பீமசேனன் போராடினான். குருக்களின் மத்தியில் முதன்மையான அந்த (இளவரசர்கள்) இருவரும் மனிதர்களில் புலியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். அந்தப் போர்க்களத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் கணை மழையால் நிறைத்தனர். பாரதரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்மா கொண்டவர்களும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், சாதித்த போர்வீரர்களுமான அவர்களை {பீமனையும், துரியோதனனையும்} அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்துடன் பார்த்தன.

வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனை எதிர்த்து விரைந்த துச்சாசனன், கூரிய பல கணைகளால் அவனது {நகுலனின்} உயிர்ப்பகுதிகளைத் துளைத்தான். அதே வேளையில் சிரித்துக் கொண்டிருந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, (தனது) எதிரியின் கொடிக்கம்பத்தையும், வில்லையும் தனது கூரிய கணைகளால் அறுத்து, இருபத்தைந்து சிறுதலைக் கணைகளால் {க்ஷூத்ரகப் பாணங்களால்} அவனை {துச்சாசனனை} அடித்தான். எனினும், வீழ்த்தப்படக் கடினமான உமது மகன் {துச்சாசனன்}, அந்தக் கடும் மோதலில் நகுலனின் குதிரைகளையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.

அந்தப் பயங்கர மோதலில் வலிமைமிக்கச் சகாதேவனை எதிர்த்து விரைந்த துர்முகன், அவனை {சகாதேவனை} கணைகளின் மழையால் துளைத்தான். வீரனான சகாதேவனும், அச்சந்தரும் அந்தப் போரில், பெரும் கூர்மை வாய்ந்த ஒரு கணையால் துர்முகனின் தேரோட்டியை வீழ்த்தினான். போரில் ஒடுக்க முடியாத அவ்விருவரும் மோதலுக்காக ஒருவரை ஒருவர் அணுகித் தாக்கி, அடுத்தவரை விரட்டியடிக்க விரும்பி, கொடூரமான கணைகளால் ஒருவருக்கொருவர் தாக்கத் தொடங்கினர்.

மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதினான். பிறகு, அந்த மத்ரத் தலைவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனின் வில்லை அவன் பார்வையிலேயே இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், துண்டான அந்த வில்லை வீசி எறிந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் வலிமையானதும், வேகத்தைக் கொடுப்பதுமான ஒரு வில்லை எடுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நேரான அம்புகளைக் கொண்டு அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} மறைத்து, பெரும் கோபத்துடன், "நில்லும், நில்லும்" என்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்து விரைந்தான். பெரும் கோபம் கொண்ட துரோணர், எதிரிகளின் உயிரை எப்போதும் எடுக்க வல்ல அந்த உயர் ஆன்ம பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} கடினமான வில்லைத் துண்டித்தார். அதே வேளையில் மரணத்தின் இரண்டாவது கோல் போன்ற பயங்கரக் கணையையும் அந்த மோதலின் போது அவர் {துரோணர்} அடித்தார். அந்தக் கணை இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} உடலைத் துளைத்தது. பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} அந்த மோதலின் போது பதினான்கு கணைகளால் துரோணரைத் துளைத்தான். ஒருவரின் மேல் மற்றவர் எனக் கோபம் மூண்ட அவர்கள் தங்களுக்குள் கடுமையாகப் போரிட்டனர்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்