Friday, October 16, 2015

முதலில் தாக்கியது யார்? - பீஷ்ம பர்வம் பகுதி - 044

Who struck first? | Bhishma-Parva-Section-044 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : துச்சாசனன் முதலான கௌரவர்கள் முழங்கிக் கொண்டு முன்னேறி வந்த பீமனின் மீது பாய்வது; அவர்களின் மீது திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பாய்வது; போர் ஆரம்பமாவது; போர்க்களத்தைக் குறித்த சஞ்சயனின் வர்ணனை...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் தரப்பு மற்றும் எதிரி தரப்பு ஆகிய இரண்டு படைப்பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட போது, யார் முதலில் அடித்தது? குருக்களா? பாண்டவர்களா?" என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தன் அண்ணனின் {துரியோதனனின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரைத் தங்கள் தலைவராகக் கொண்ட தனது துருப்புகளுடன் முன்னேறினான். பீஷ்மருடன் போரிட விரும்பிய பாண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முன்னேறினர். பிறகு, இரு படைகளில் இருந்தும், சிங்க முழக்கங்களும், ஆரவாரவொலிகளும், ஜயமங்களைகளின் {கிரகசங்களின் Krakachas} ஒலிகளும், மாட்டுக் கொம்புகளின் {மாட்டுக் கொம்பால் செய்யப்பட்ட இசைக்கருவிகளின்} ஒலிகளும், பேரிகைகள், மிருதங்கங்கள், மேளங்கள் ஆகியவற்றின் ஒலிகளும் எழுந்தன. எதிரிகளின் வீரர்கள் நம்மை {கௌரவர்களை} நோக்கி விரைந்தார்கள். நாமும் அவர்களை {பாண்டவர்களை} எதிர்த்துப் பேரொலிகளுடன் விரைந்தோம். இந்த (விரைவின் விளைவால் எழுந்த) ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது.

அந்த அச்சந்தரும் கொலைகார மோதலில், காற்றினால் அசைக்கப்பட்ட காடுகளைப் போல, சங்குகள் மற்றும் மிருதங்கங்களால் எழுந்த அமளியின் விளைவால் பாண்டவ மற்றும் திருதராஷ்டிரப்படைகள் நடுங்கின. அந்தத் தீய வேளையில் ஒருவருக்கு எதிர் மற்றொருவராக விரைந்த மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன நிறைந்த அந்தப் படைகள் செய்த ஆரவாரம், புயலால் கலங்கடிக்கப்படும் கடலின் பேரொலியைப் போன்று இருந்தது.

பேரொலியாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆரவாரம் எழுந்த போது, வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், காளையைப் போல உரத்து முழங்கத் தொடங்கினான். பீமசேனனின் அந்த முழக்கம், போராளிகளின் சிங்கமுழக்கங்கள், யானையின் பிளிறல்கள், சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகள் ஆகியவற்றை மீறி மேலே எழுந்தது. உண்மையில், பீமசேனனின் முழக்கங்கள் இருதரப்பு படைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான குதிரைகளின் கனைப்பொலிகளையும் விஞ்சியிருந்தது. சக்ரனின் {இந்திரனின்} இடியைப் போன்றும், மேகங்களைப் போன்றும் முழங்கிக் கொண்டிருந்த பீமசேனனின் அந்த ஒலியைக் கேட்டு, உமது வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர். அந்த வீரனின் {பீமனின்} கர்ஜனையால், சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட பிற விலங்குகளைப் போல, குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தும் சிறுநீர் மற்றும் மலத்தைக் கழித்தன. மேகங்களின் திரள்களைப் போல ஆழமான முழக்கத்தைச் செய்து, பயங்கர உருவம் ஏற்ற {பயங்கர உருவத்தை அடைந்த} அந்த வீரன் {பீமன்}, உமது மகன்களை அச்சுறுத்தி அவர்கள் மீது பாய்ந்தான்.

அதன் பேரில், சகோதரர்களும் உமது மகன்களுமான துரியோதனன், துர்முகன், துஸ்ஸஹன், சலன், வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், துர்மர்ஷணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விவிம்சதி, சித்ரசேனன், பெரும் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன், புருமித்ரன், ஜயன், போஜன் ஆகியோரும் சோமதத்தனுடைய வீரமிக்க மகனும் {பூரிஸ்ரவசும்} மேகங்களின் திரள்கள் மின்னல் கீற்றுகளை வெளிப்படுத்துவதைப் போல, தங்கள் அற்புதமான விற்களை அசைத்து, (தங்கள் அம்பறாத்தூணிகளில் இருந்து) சமீபத்தில் சட்டை உதிர்த்த பாம்புகளைப் போன்ற நீண்டிருந்த கணைகளை எடுத்தனர். (தங்களை நோக்கி) விரைந்து வந்த அந்த வலிமைமிக்க வில்லாளியை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, தங்கள் கணைகளால் அவனை {பீமனை} மறைத்தார்கள்.

திரௌபதியின் (ஐந்து) மகன்கள், வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரன் {அபிமன்யு}, நகுலன், சகாதேவன் மற்றும் பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் ({பீமனை நோக்கி விரைந்த} அந்த) தார்தராஷ்டிரர்களை நோக்கி விரைந்து, சொர்க்கத்தின் மூர்க்கமான கணைகளால் {வஜ்ராயுதங்களால்} பிளக்கப்படும் மலைச்சிகரங்களைப் போல, கூர்மையான தங்கள் கணைகளால் அவர்களைக் கிழித்தார்கள். வில் நாண்களின் பயங்கர நாணொலி மற்றும் (வீரர்களின்) கையுறைகள் ஒன்றோடொன்று மோதும் ஒலியாலும் வகைப்படுத்தப்பட்ட அந்த முதல் மோதலில் உமது தரப்பிலோ, எதிரி தரப்பிலோ எந்தப் போராளியும் புறமுதுகிடவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா கணைகளால், குறியை அடித்து எப்போதும் வெல்பவர்களாக இருந்தவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (குறிப்பாக) துரோணருடைய சீடர்களின் கை வேகத்தை {லாகவத்தை} நான் கண்டேன். வில்நாண்களின் நாணொலி ஒருக்கணமும் நிற்கவில்லை, (காற்றில்) அடிக்கப்பட்ட சுடர்மிகும் அம்புகள், வானத்தின் (வானத்திலிருந்து விழும்) விண்கற்களைப் போல வெளிப்பட்டன. பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொந்தங்களுக்கிடையில் நடந்ததும், பயங்கரம் நிறைந்ததும், கவனத்தைக் கவர்வதுமான அந்தப் போரை பார்வையாளர்களாகக் கண்டு (அமைதியாக) நின்றனர். பிறகு வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள், சினம் தூண்டப்பட்ட நிலையில், ஒருவரிடம் மற்றொருவர் அடைந்த காயங்களை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து அந்தக்களத்தில் போரிட்டனர்.

யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்தவையான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் இரு படைகளும் திரையில் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போல அந்தப் போர்க்களத்தில் மிக அழகாகத் தோற்றமளித்தன. அதன் பிறகு, (பிற) மன்னர்கள் அனைவரும் தங்கள் விற்களை எடுத்தனர். போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியினால் சூரியன் மறைந்தான். (தங்கள் தங்கள்) துருப்புகளின் தலைமையில் இருந்தவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரால் ஒருவரின் மேல் மற்றவர் பாய்ந்தனர். மோதலுக்கு விரைந்த அந்த மன்னர்களின் யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்பட்ட பேரொலிகள், போராளிகளின் சிம்ம முழக்கங்களுடனும், சங்கு முழக்கம் மற்றும் பேரிகைகளின் ஒலி ஆகியவற்றில் எழுந்த ஆரவாரத்துடனும் கலந்தது.

கணைகளை முதலைகளாகவும், விற்களைப் பாம்புகளாகவும், வாள்களை ஆமைகளாகவும், போர் வீரர்களின் சாடல்களைப் புயலாகவும் கொண்ட அந்தப் பெருங்கடலின் {படைகளின்} பேரொலி, (உண்மையான) கடல் கலங்கிய நிலையில் ஏற்படுத்தும் அமளியையே ஒத்திருந்தது. யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னர்கள், (தங்கள் தங்கள்) துருப்புகளுடன் உமது மகனின் படையணியினர் மீது பாய்ந்தனர். அந்த இருபடைகளின் போராளிகளுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது.

போரிடும்போதோ, உடைந்த அணிவகுப்பில் {வியூகத்தில்} [1] இருந்து திரும்பும்போதோ, மீண்டும் போரிடச் செல்லும்போதோ நமது தரப்பு மற்றும் எதிரி தரப்புப் போராளிகளுக்கிடையில் எந்த வேற்றுமையையும் காண முடியவில்லை. அச்சந்தரும் அந்தப் பயங்கரப் போரில், கணக்கிடமுடியாத அந்தக் கூட்டத்தை விஞ்சி உமது தந்தை (பீஷ்மர்) ஒளிர்ந்து கொண்டிருந்தார்" {என்றான் சஞ்சயன்}.

[1] முதல் நாள் போரில் படைகளின் வியூகத்தைப் பொறுத்தவரை, பீஷ்ம பர்வம் பகுதி 17ல் கௌரவர்கள் தரப்பில் வெறுமனே கௌரவ வியூகம் என்று இருக்கிறது. பீஷ்ம பர்வம் பகுதி 19ல் பாண்டவர்கள் தரப்பில் சூசிமுக {ஊசி போன்ற கூர்முனை கொண்ட} வியூகம் அமைக்கப்பட்டதாக இருக்கிறது.  வில்லிபாரதத்தில் பாண்டவர்கள் அசல வியூகத்தை அமைத்ததாக  குறிப்பு உள்ளது. அசலம் என்பது ஆப்பு போன்ற ஒரு கருவியாகும்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்