Monday, November 30, 2015

குரு படையைச் சிதறடித்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 059ஈ

Arjuna shattered Kuru host! | Bhishma-Parva-Section-059d | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் செய்த போர்; மகேந்திர ஆயுதத்தைப் பயன்படுத்திய அர்ஜுனன்; களத்தில் இரத்த ஆறைப் பாய வைத்த அர்ஜுனன்; மூன்றாம் நாள் போர் முடிவு...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அப்போது பெரும் படையுடனும், பீஷ்மர் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோருடனும் கூடிய குரு மன்னன் {துரியோதனன்}, கையில் கணையுடன், நட்சத்திரத்தை எரிப்பதற்கு உதித்த எரிகல் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து சென்றான். அர்ஜுனனை நோக்கி பூரிஸ்ரவஸ், தங்கச் சிறகுகள் கொண்ட ஏழு பல்லங்களை {எறிவேல்களை} வீசினான். சல்லியன் ஒரு கதாயுதத்தையும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்} ஓர் ஈட்டியையும் வீசினர். அதன் பேரில், அர்ஜுனன், கணைகளைப் போல வேகத்துடன் வந்தவையும், பூரிஸ்ரவஸால் அடிக்கப்பட்டவையுமான அந்த ஏழு பல்லங்களை ஏழு கணைகளாலும், மற்றொரு கூரிய கணையால் துரியோதனனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட வேலையும் கலங்கடித்தான். சந்தனு மகனால் {பீஷ்மரால்} வீசப்பட்டதும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் ஈட்டியையும், மத்ரர்களின் ஆட்சியாளன் கரத்தால் வீசப்பட்ட கதாயுதத்தையும் (இன்னும்) இருகணைகளால் அந்த வீரன் {அர்ஜுனன்} துண்டித்தான்.


பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட தனது அழகிய வில்லான காண்டீவத்தைப் பெரும் பலத்துடனும், இரு கரங்களாலும் வளைத்து, உரிய மந்திரங்களால் அற்புதம் நிறைந்ததும், பயங்கரமானதுமான மகேந்திர ஆயுதத்தை {மஹேந்திராஸ்திரத்தை} வானத்தில் தோன்றச் செய்தான். உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடம் மற்றும் பொன்மாலை தரித்தவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்}, கணைகளின் பெரும் மழையை உற்பத்தி செய்வதும், சுடர்மிகும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்த வல்லமைமிக்க ஆயுதத்தை {மகேந்திராஸ்திரத்தைக்} கொண்டு மொத்த கௌரவப் படையையும் தடுத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த வந்த அந்தக் கணைகளானது,  {எதிரிகளின்} கரங்கள், விற்கள், கொடிமர நுனிகள், தேர்கள் ஆகியவற்றை வெட்டியபடி மன்னர்களின் உடல்களையும், எதிரியின் பெரும் யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் துளைத்தன.

திசைகளையும், துணைத் திசைகளையும் கூர்மையான அந்தப் பயங்கரக் கணைகளால் நிறைத்தவனும், கிரீடம், தங்கமாலை ஆகியவற்றைத் தரித்தவனுமானப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் காண்டீவத்தின் நாணொலியால் எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்தான். அச்சம் நிறைந்த அந்த ஆயுத வழியில் {போர்க்களத்தில்}, சங்கொலிகளும், துந்துபி ஒலிகளும், தேர்களின் ஆழ்ந்த சடசடப்பொலிகளும் காண்டீவத்தின் நாணொலியால் அமைதிப்படுத்தப்பட்டன {பேரொலியால் மறைக்கப்பட்டன}. அந்த நாணொலியைக் காண்டீவத்தின் ஒலி என உறுதிசெய்து கொண்ட மன்னன் விராடன், மனிதர்களில் இன்னும் சில வீரர்கள், துணிவு மிக்கப் பாஞ்சால மன்னன் துருபதன் ஆகிய அனைவரும் கட்டுப்படாத இதயங்களுடன் அந்த இடத்துக்கு முன்னேறினர். உமது போராளிகள் {கௌரவர்கள்} அனைவரும் அச்சத்தால் தாக்குண்டு, காண்டீவத்தின் நாணொலியை எங்கே கேட்டார்களோ அங்கேயே நின்றனர். அவர்களில் எவரும் எங்கிருந்த அந்த ஒலி கேட்டதோ அந்த இடத்திற்குச் செல்லத் துணியவில்லை.

மன்னர்களின் அந்த மோசமான படுகொலையில், வீரப் போராளிகளும், தேர்வீரர்களும், தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். பிரகாசமான பொற்கூடுகளைக் கொண்டவையும், (தங்கள் முதுகில்) மிக அழகிய கொடிகளைக் கொண்டவையுமான யானைகள், தங்கள் மேல் விழுந்த நாராசங்களால் பீடிக்கப்பட்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு உயிரிழந்து திடீரெனக் கீழே விழுந்தன. சிறகு படைத்த பெரும் கணைகள் மற்றும் கூரிய முனைகளைக் கொண்ட பல்லங்களால், யந்திரங்கள் மற்றும் இந்திரஜாலங்களின் [1] தலைமையில் நின்றிருந்த எண்ணிலடங்கா மன்னர்களின் கொடிமரங்கள், வேகமாகவும், பலமாகவும் அர்ஜுனனால் தாக்கப்பட்டு வெட்டிவீழ்த்தப்பட்டன.

[1] இவைகள் என்னவென்று தீர்மானிப்பது கடினமாக இருந்தது. பம்பாய் உரை வேறு மாதிரியாக இருக்கிறது. அதில் இந்திரஜாலம் என்பதற்குப் பதில் இந்திரகிலம் என்று இருக்கிறது. அதன் பொருளும் முன்னது போலவே விளங்கவில்லை என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு பதிப்பில் இந்த வரியே வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: படைமுகங்களில் பெரிய த்வஜங்கள் {கொடிமரங்கள்}, யந்திரங்கள் அறுக்கப்பட்டுப் பேர்த்துத் தள்ளப்பட்ட இந்திரத்வஜங்கள் போலக் கீழே விழுந்தன.

காலாட்படை கூட்டங்களும், தேர்வீரர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து களத்தில் வேகமாக விழ்ந்தன, அல்லது, விரைவாகத் தங்கள் உயிரை விட்டன. அந்தப் பயங்கரச் சண்டையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் பெயரைக் கொண்ட அந்த வலிமைமிக்க ஆயுதத்தால் {மகேந்திராஸ்திரத்தால்}, தங்கள் கவசங்களும் உடல்களும் பிளக்கப்பட்ட வீரர்கள் பலராவர். பயங்கரமாவையும், கூர்மையானவையுமான அந்தத் தனது கணைகளால், கிரீடி {அர்ஜுனன்}, போராளிகளின் சிதைந்த உடல்களில் இருந்து பாய்ந்த இரத்தத்தை நீராகவும், அவற்றின் கொழுப்பை நுரையாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறை அங்குத் தோன்றச் செய்தான். அதன் ஓடை அகலமானதாகவும் மூர்க்கமானதாகவும் பாய்ந்தது.

அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்கள் அதன் கரைகளாயின. மனிதர்களின் மஜ்ஜைகளும், சதைகளும் கரையோரத்தின் சேறாகின. இயல்புக்கு மாறான பெரும் ராட்சசர்கள் (அதன் கரைகளில் நிற்கும் உயர்ந்த) மரங்களானார்கள். அதிக அளவில் இருந்த மயிர் நிறைந்த மண்டையோடுகளை அதில் மிதக்கும் கழிவுகளாகவும், குவியல்களாகக் கிடந்த மனித உடல்கள் அதன் மணற்கரைகளாகவும் கொண்ட அந்த ஓடை ஆயிரம் திசைகளில் பாய்ந்தன. எங்கும் பரவி கிடந்த கவசங்கள் அதன் கடினமான கூழாங்கற்களாயின. அதன் கரைகள் பெரும் எண்ணிக்கையிலான நரிகள், ஓநாய்கள், நாரைகள், கழுகுகள், ராட்சசக் கூட்டங்களாலும், கழுதைப் புலிகளாலும் மொய்க்கப்பட்டன. அர்ஜுனனின் கணைமாரியால் உண்டான அந்த ஆற்றை, எவரெல்லாம் உயிரோடு இருந்தார்களோ, அவர்கள், கொழுப்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவற்றால் ஆனதும்,  கொடூரத்தின் உருவமுமான அந்தப் பயங்கர நதியைப் பெரும் வைதரணீயைப் [2] போல (தம் மனதில்) கண்டார்கள்.

[2] வைதரணீ என்பது இவ்வுலகத்தையும், அடுத்த உலகத்தையும் {இம்மையையும், மறுமையையும்} பிரிக்கும் ஓர் அற்புதமான நதியாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட குருக்கள் படையின் முதன்மை வீரர்களைக் கண்டவர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கரூஷர்கள், மத்ஸ்யர்கள், பாண்டவத் தரப்பின் போராளிகள் அனைவருமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் வெற்றியால் உற்சாகமடைந்து கௌரவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் உரக்க முழக்கமிட்டார்கள். சிறு விலங்குகளின் கூட்டங்களை அச்சுறுத்தும் சிங்கத்தைப் போல (குரு) படையின் முதன்மையான போராளிகளை அச்சுறித்தியவனும், எதிரிகளுக்குப் பயங்கரமானவனுமான கிரீடி {அர்ஜுனன்}, {கௌரவப்} படைப்பிரிவின் வலிமைமிக்கத் தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தத் துருப்புகளைக் கொன்றதைக் கண்டு வெற்றியைக் குறிக்கும் வகையில் முழக்கமிட்டார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் கூட மிகவும் மகிழ்ந்து சிங்க முழக்கம் செய்தார்கள்.

(அர்ஜுனனின்) ஆயுதங்களால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களான பீஷ்மர், துரோணர், துரியோதனன், பாஹ்லீகன் ஆகியோருடன் கூடிய குருக்கள், சூரியன் தனது கதிர்களை நிறுத்துவதைக் கண்டும், இந்திரனின் பெயரால் அழைக்கப்பட்டதும், தடுக்கப்பட முடியாததும், அச்சத்தைத் தரவல்லவதும், யுகத்தின் முடிவல் தோன்றும் விளைவுகளை உண்டாக்குவதுமான அந்த ஆயுதத்தைக் கண்டும், இரவு ஓய்வுக்காகத் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். பெரும் சாதனையை அடைந்தவனும், தனது எதிரிகளை நசுக்குவதால் புகழ்பெற்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சூரியன் சிவப்பு நிறம் கொள்வதையும், மாலை சந்தி தொடங்கியதையும் கண்டு, தனது வேலையை முடித்துக் கொண்டு, இரவு ஓய்வுக்காகத் தன் சகோதரர்களுடன் பாசறைக்குச் சென்றான்.

இருள் தொடங்குவதற்குச் சற்று முன்னர், குரு துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஒலி பெரியதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அனைவரும், "இன்றைய போரில் மட்டும் அர்ஜுனன் பத்தாயிரம் {10000} தேர்வீரர்களையும், எழுநூறு {700} யானைகளையும் கொன்றிருக்கிறான். மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகிய அனைவரும் கொல்லப்பட்டவிட்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்} அடைந்திருக்கும் சாதனையானது மகத்தானதாகும். அதை அடைய யாராலும் முடியாது" என்றனர்.

உலகின் வல்லமைமிக்கத் தேர்வீரனும், கோபம் நிறைந்த பிருதையின் மகனுமான கிரீடி {குந்தியின் மகனுமான அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான பெரும் பிற வீரர்களுடன் கூடிய சுருதாயுஸ், அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், துர்மர்ஷணன், சித்ரசேனன், துரோணர், கிருபர், சிந்துக்களின் ஆட்சியாளன், பாஹ்லீகன், பூரிஸ்ரவஸ், சல்லியன், சலன் ஆகியோர் மற்றும் பீஷ்மரையும் சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தனிப்பட்ட கரங்களின் ஆற்றலால் இன்று வீழ்த்தியிருக்கிறான்" என்றனர்.

இப்படிப் பேசிய உமது தரப்பின் வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர். கிரீடியிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட குரு படையின் போராளிகள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொள்ளிகளால் ஒளியூட்டப்பட்டவையும், எண்ணிலடங்கா தீவட்டிகளால் அழகூட்டப்பட்டவையுமான தங்கள் பாசறைக்குள் நுழைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்