Sunday, November 29, 2015

"பீஷ்மரைக் கொல்வேன்!" என்ற கிருஷ்ணன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 059இ

"I will slay Bhishma!" said Krishna! | Bhishma-Parva-Section-059c | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : சாத்யகியை மெச்சிய கிருஷ்ணன், பீஷ்மரைத் தானே கொல்லப் போவதாகச் சொன்னது; கைகளில் சக்கரத்துடன் பீஷ்மரை எதிர்த்துச் சென்ற கிருஷ்ணன்; தன்னைக் கொல்லக் கிருஷ்ணனை வரவேற்ற பீஷ்மர்; கிருஷ்ணனின் காலைப் பிடித்துக் கெஞ்சிய அர்ஜுனன்; கோபம் தணிந்த கிருஷ்ணன் மீண்டும் தேரில் ஏறி கடிவாளத்தைப் பிடித்தது; கௌரவப் படையில் எழுந்த ஆரவாரம்...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "{பாண்டவத் தரப்பின்} அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஒன்றாகப் போர்க்களத்தை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டும், பார்த்தன் {அர்ஜுனன்} மென்மையாகப் போரிட்டதைக் குறித்துக் கொண்டும், போரில் பீஷ்மர் பெரும் பலத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்ததையும், அனைத்துப் புறங்களில் இருந்து விரையும் கௌரவர்களையும் கண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தாசார்ஹர்களின் உயர் ஆன்மப் பாதுகாவலனுமான அந்த வாசவனின் {இந்திரனின்} தம்பி {கிருஷ்ணன்}, சிநியின் புகழ்பெற்ற பேரனை {சாத்யகியை} மெச்சிப் பேசியபடி, "ஓ! சிநி குலத்து வீரா {சாத்யகி}, எவர் பின்வாங்கிச் செல்கிறார்களோ, அவர்கள் புறமுதுகிடுகிறார்கள் என்பது உண்மையே. எவர் இருக்கிறார்களோ, ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, அவர்களையும் வெளியேற விடுவாயாக. விரைவில் இப்போரில் தொண்டர்களோடு கூடிய பீஷ்மரையும், துரோணரையும் அவர்களது தேரில் இருந்து நான் வீழ்த்தப் போவதைப் பார். ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, குரு படையில் ஒருவரும் என் கோபத்திற்குத் தப்பப்போவதில்லை. எனவே, கடுமையான எனது சக்கரத்தை எடுத்து உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரை நான் கொல்லப்போகிறேன். தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும், அவர்களின் தொண்டர்களோடு சேர்த்துப் போரில் கொன்று, ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, மன்னரையும் {யுதிஷ்டிரரையும்}, பீமனையும், அஸ்வினி இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவனையும்} மகிழ்விக்கப் போகிறேன். திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும், அவர்களின் தரப்பை அடைந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்று, மகிழ்ச்சியாக நான் மன்னன் அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரரிடம்} நாட்டைக் கொடுப்பேன்" என்றான் {கிருஷ்ணன்}.


இதைச் சொன்ன அந்த வசுதேவர் மகன் {கிருஷ்ணன்}, குதிரைகளைக் (குதிரைகளின் கடிவாளத்தைக்) கைவிட்டு, ஆயிரம் வஜ்ராயுதங்களுக்கு நிகரான பலத்தைக் கொண்டதும், சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், கத்தியைப் போன்று கூர்மையான முனைகளைக் கொண்டதும், அழகிய துளை கொண்டதுமான சக்கரத்தைத் தன் (வலது) கரத்தில் சுழற்றிக் கொண்டே, தேரில் இருந்து கீழே குதித்தான். தனது நடையால் பூமியை நடுங்கச் செய்த உயர் ஆன்மக் கிருஷ்ணன், பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், தேவர்களின் தலைவனுடைய {இந்திரனின்} தம்பியுமான {விஷ்ணுவுமான} அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {கிருஷ்ணன்}, சினத்தால் குருடானதும், தாக்குதலுக்காகச் செருக்குடன் நிற்பதுமான யானைகளின் இளவரசனைக் {தலைமை யானையைக்} கொல்லும் விருப்பதுடன் செல்லும் சிங்கத்தைப் போல, தனது துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி விரைந்தான்.

காற்றில் ஆடிய அவனது மஞ்சள் ஆடையின் நுனி, வானத்தில் இருக்கும் மின்னலுடன் கூடிய மேகம் போலத் தோன்றியது. சுதர்சனம் என்றழைக்கப்படும் சக்கரமான அந்தத் தாமரை, சௌரியுடைய {கிருஷ்ணனுடைய} அழகிய கரத்தைத் தனது தண்டாகக் கொண்டு, காலைச் சூரியனைப் போல {பால சூரியனைப் போல} பிரகாசமானதும், நாராயணனின் நாபிக்கமலத்தில் உதித்ததுமான ஆதிகாலத்துத் தாமரை போல அழகுடன் திகழ்ந்தது. கிருஷ்ணனின் கோபமே காலைச் சூரியனாகி அந்தத் தாமரையை மலரச் செய்தது. அந்தத் தாமரையின் அழகிய இலைகள் கத்தியின் முனை போலக் கூர்மையாக இருந்தன. கிருஷ்ணனின் உடலே அழகியத் தடாகமாக இருந்தது. அவனது (வலது) கரமே அந்தத் தாமரை உதித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் தண்டானது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், உரக்க முழங்கியவனும், சக்கரத்தை ஏந்தியவனுமான மகேந்திரனின் {இந்திரனின்} தம்பியைக் {கிருஷ்ணனைக்} கண்ட உயிரினங்கள் அனைத்தும் குருக்களின் அழிவு நெருங்கிவிட்டதென எண்ணி உரக்க ஓலமிட்டன. தனது சக்கரத்தை ஏந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்}, உலகத்தை எரிப்பதற்காக யுக முடிவின் போது தோன்றும் சம்வர்த்த நெருப்பைப் {ஊழித்தீயைப்} போலத் தோன்றினான். உயிரினங்கள் அனைத்தையும் உட்கொள்ள உதித்த,  ஒரு கடும் விண்மீன் போல அண்டத்தின் ஆசான் {கிருஷ்ணன்} சுடர்விட்டெரிந்தான்.

இரண்டு கால் படைத்த உயிரினங்களில் {மனிதர்களில்} முன்மையானவனான அந்தத் தெய்வீக மனிதன் {கிருஷ்ணன்}, கைகளில் சக்கரத்துடன் முன்னேறி வருவதைக் கண்டச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, தனது தேரில் நின்றபடியே, கையில் வில் மற்றும் கணையுடன், அச்சமற்ற வகையில், "வா, ஓ! தேவர்களின் தலைவா {தேவநாதா, கிருஷ்ணா} வா. ஓ! அண்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவனே {ஜகந்நிவாசா, கிருஷ்ணா}, ஓ! கதாயுதம், வாள் மற்றும் சாரங்கம் தரித்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {லோகநாதா, கிருஷ்ணா}, இந்தப் போரில், ஓ! உயிர்களனைத்தின் புகலிடமானவனே {சர்வசரண்யனே, கிருஷ்ணா}. இந்த அற்புதத் தேரில் இருந்து என்னைப் பலவந்தமாகத் தூக்கி எறிவாயாக. உன்னால் இங்குக் கொல்லப்பட்டால் , ஓ! கிருஷ்ணா, இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்} நான் அடையும் நற்பேறு பெரியதாக இருக்கும். ஓ! விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ எனக்குக் கொடுக்கும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். எனது கண்ணியம் மூவுலகத்தாலும் கொண்டாடப்படும்" என்றார் {பீஷ்மர்}.

சந்தனுமகனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் மூர்க்கமாக அவரிடம் விரைந்து, "பூமியில் நடைபெறும் இந்தப் பெரும் படுகொலைக்கான வேர் நீரே. துரியோதனன் கொல்லப்படுவதை இன்று நீர் காண்பீர். நீதியின் பாதையில் நடக்கும் அறிவுள்ள அமைச்சன் ஒருவன், தீமையான சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கும் மன்னனைத் தடுக்க வேண்டும். விதியால் தவறாக வழிநடத்தப்பட்ட புத்தி கொண்டவன் கைவிடப்படுவதைப் போல, தன் குலத்தில் இழிந்தவனான கடமை மீறுபவன் எவனோ, அவன் கைவிடப்பட வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.

அரசனைப் போன்ற பீஷ்மர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, யதுக்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்}, "விதியே வலிமை நிறைந்தது. யதுக்கள், தங்கள் நன்மைக்காகக் கம்சனைக் கைவிட்டார்கள். இதை நான் மன்னனிடம் (திருதராஷ்டிரனிடம்) சொன்னேன். ஆனால், அவன் {திருதராஷ்டிரன்} அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பதில் பயனேதும் இல்லாமல் செவிகொடுப்பவன், (விதியின் ஆதிக்கத்தின்) மூலம் மாறுபட்ட புரிதலை அடைந்து, (தனது தனிப்பட்ட) துயரத்தைத் தானே ஈட்டிக் கொள்கிறான்" என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

அதேவேளையில், தனது தேரில் இருந்து குதித்தவனும், நீண்ட பருத்த கரங்களைக் கொண்டவனுமானப் பார்த்தன் {அர்ஜுனன்}, நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட யதுகுலத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} கால்நடையாகவே விரைந்தோடி, தன் இரு கரங்களாலும் அவனைப் {கிருஷ்ணனைப்} பிடித்துக் கொண்டான். தன்னில் {ஆத்மாவில்} அர்ப்பணிப்புக் கொண்ட தேவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன் அப்போது கோபத்தால் தூண்டப்பட்டிருந்தான். எனவே, இப்படிப் பிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, தனி மரத்தைச் சுமந்து செல்லும் புயலைப் போல, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தன் பின்னே இழுத்துச் சென்றான். எனினும், பீஷ்மரை நோக்கி வேகமாக நடந்த அவனது {கிருஷ்ணனின்} கால்களைப் பெரும்பலத்துடன் பற்றிய அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சிரமத்திற்குப் பிறகு பத்தாவது {10} அடியில் {எட்டில்} அவனைத் {கிருஷ்ணனைத்} தடுப்பதில் வென்றான்.

கிருஷ்ணன் நின்றதும், அழகிய பொன்மாலையைப் பூண்டவன் {அர்ஜுனன்} அவனை {கிருஷ்ணனை} மகிழ்ச்சியாக வணங்கி, "இந்த உனது கோபத்தைத் தணிப்பாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களின் புகலிடம் நீயே. ஓ கேசவா {கிருஷ்ணா}, உறுதியேற்றபடியே நான் செயல்களில் இருந்த விலக மாட்டேன் என்று எனது மகன்கள் மீதும், எனது சகோதரர்கள் மீதும் ஆணையிடுகிறேன். ஓ! இந்திரனின் தம்பியே {உபேந்திரனே, கிருஷ்ணா}, உனது கட்டளையின் பேரில், நிச்சயம் நான் குருக்களை நிர்மூலமாக்குவேன்" என்றான்.

அவனது {அர்ஜுனனின்} உறுதிமொழியையும், ஆணையையும் கேட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மனநிறைவை அடைந்தான். குருக்களில் சிறந்தவனான அர்ஜுனனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்வதில் ஈடுபடுபவனான அவன் {கிருஷ்ணன்} கைகளில் சக்கரத்துடன் மீண்டும் தனது தேரில் ஏறினான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {கிருஷ்ணன்}, (தான் கைவிட்ட) அந்தக் கடிவாளங்களை மீண்டும் பற்றினான். பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தனது சங்கை எடுத்த சௌரி {கிருஷ்ணன்}, திக்குகள் அனைத்தும், ஆகாயமும் நிறையும்படி முழக்கினான்.

ஆரம், தோள்வளை, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், வளைந்த இமைமயிர்கள் புழுதியடைந்தவனும், முற்றிலும் வெண்மையான பற்களையுடையவனுமான கிருஷ்ணன், மீண்டும் தனது சங்கை எடுத்ததைக் கண்ட குரு வீரர்கள் உரக்கக் கதறினர். மிருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகளும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், சிறிய வகைத் துந்துபிகளின் ஒலிகளும், குருவீரர்களின் படையணிகளுக்கு மத்தியில் இருந்து எழுந்த சிம்ம முழக்கங்களோடு கலந்து கடுமையான ஆரவாரத்தை உண்டாக்கின. இடியின் உறுமலை ஒத்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி ஆகாயத்தையும், அனைத்துத் திசைகளையும் நிறைத்தது. பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த அடிக்கப்பட்டவையும், பிரகாசமானவையும், சுடர்விடுபவையுமான கணைகள் அனைத்துப் புறங்களுக்கும் சென்றன" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்