Tuesday, February 23, 2016

சாத்யகி பீஷ்மர் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 105

The encounter of Satyaki and Bhishma! | Bhishma-Parva-Section-105 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 63)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன்,  தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.


அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீதியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.

அந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்றான். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.

அர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.

[1] [2] துரியோதனனின் தம்பி

வீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டியையும் துளைத்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.

[3] துரியோதனனின் மகன்

சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.

அதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.

பிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ! பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்