Wednesday, February 24, 2016

யுதிஷ்டிரனிடம் விரைந்த பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 106

Bhima rushed to Yudhishthira! | Bhishma-Parva-Section-106 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 64)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைப் பாதுகாக்கத் துச்சாசனனை ஏவிய துரியோதனன்; நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரன் ஆகியோரைச் சூழ்ந்து கொண்ட சகுனி; துரியோதனன் அனுப்பிய குதிரைகள்; குதிரைப்படையை முறியடித்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனுக்கு எதிராகச் சல்லியனை ஏவிய துரியோதனன்; யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும், சல்லியனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனைக் காக்க விரைந்து வந்த பீமன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் முடிவில் ஆகாயத்தில் மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட துரியோதனன் துச்சாசனனிடம், “பெரும் வில்லாளியும், எதிரிகளைக் கொல்பவருமான இந்த வீரப் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துச்சாசனா}, துணிச்சல்மிக்கப் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {துச்சாசனா}, அந்த ஒப்பற்றவரைப் பாதுகாப்பதே உன் கடமை. நமது பாட்டனான பீஷ்மர், போரில் நம்மால் பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்களுடன் சேர்த்துப் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வார். எனவே, பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது உயர்ந்த கடமை என நான் நினைக்கிறேன். ஏனெனில், நோன்புகளுடன் கூடியவரும், பெரும் வில்லாளியுமான இந்தப் பீஷ்மர் பதிலுக்கு நம்மையும் பாதுகாப்பார். எனவே, போரில் மிகக்கடினமான சாதனைகளை எப்போதும் அடையும் பாட்டனை {பீஷ்மரை} நம் துருப்புகள் அனைத்தாலும் சூழ்ந்து கொண்டு அவரைப் பாதுகாப்பாயாக” என்றான் {துரியோதனன்}.


இப்படித் துரியோதனனால் சொல்லப்பட்ட துச்சாசனன், ஒரு பெரும்படையால் அனைத்துப் புறங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு {போரில்} தன் நிலையை எடுத்துக் கொண்டான். கையில் பளபளக்கும் ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களைக் கொண்டிருந்தவர்களும், செருக்குடையவர்களும், நன்கு உடுத்தியிருந்தவர்களும், கொடிகளைத் தாங்கும் பலமான உடல் கொண்டவர்களும், நன்கு பயிற்சிபெற்ற, போரில் திறம்பெற்ற சிறந்த காலாட்படை வீரர்களுடன் கலந்து நின்றவர்களுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குதிரைவீரர்களுடன் கூடிய சுபலனின் மகன் சகுனி, மனிதர்களில் சிறந்தோரான நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன் ஆகியோரை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவர்களைத் தடுக்கத் தொடங்கினான்.

பிறகு மன்னன் துரியோதனன், பாண்டவர்களைத் தடுப்பதற்காகத் துணிச்சல்மிக்க (வேறு) குதிரைவீரர்கள் பத்தாயிரம் {10000} பேரை அனுப்பினான். பெரும் மூர்க்கத்துடன் எதிரியை நோக்கிப் பல கருடர்களைப் போல இவை {துரியோதனன் அனுப்பிய குதிரைகள்} விரைந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைக்குளம்புகளால் தாக்கப்பட்ட பூமி நடுங்கி பேரொலியை எழுப்பியது. தீப்பிடித்த மலையில் உள்ள ஒரு பெரும் மூங்கில்காட்டின் ஒலியை ஒத்ததாக அவற்றின் குளம்புகளின் உரத்த சடசடப்பொலிகள் கேட்கப்பட்டன. களத்தில் இவை மோதிய போது, மேகம் போல அங்கே எழுந்த புழுதி, ஆகாயத்தை அடைந்து அந்தச் சூரியனையே மறைத்தது. ஒரு பெரிய தடாகத்தின் மார்பில் {பரப்பில்} அன்னப்பறவை கூட்டங்கள் திடீரென வேகமாக இறங்கி, அது கலக்கப்படுவது போல, மூர்க்கமான அந்தக் குதிரைகளின் விளைவால் அந்தப் பாண்டவப் படை கலக்கப்பட்டது. அவற்றின் கனைப்பொலிகளின் விளைவாக அங்கே வேறு எதையும் கேட்க முடியவில்லை.

பிறகு மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, மழைக்காலத்தில் நீர் பெருகி, அலை நிரம்பியபடி ஆர்ப்பரிக்கும் கடலின் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை {கரையைப்} போலப் போரில் அந்தக் குதிரைவீரர்களின் தாக்குதலை விரைவாகத் தடுத்தனர். பிறகு அந்த (மூன்று) தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் நேரான கணைகளால் அந்தக் குதிரைவீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். உறுதிமிக்க அந்த வில்லாளிகளால் கொல்லப்பட்ட அவர்கள் {குதிரைவீரர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளால் கொல்லப்படும் வலிமைமிக்க யானைகள் மலைக்குகைகளில் விழுவதைப் போலக் கீழே விழுந்தனர்.

உண்மையில், (பாண்டவப் படையின்) அந்த வீரர்கள் களம் முழுவதும் உலாவி கூர்மையான பராசங்கள் {முள்பதித்த கணைகள்} மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் அந்தக் குதிரைப்படை வீரர்களின் தலையை அறுத்தார்கள். வாள்களால் தாக்கப்பட்ட அந்தக் குதிரைவீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நெடும் மரங்கள் தங்கள் கனிகளை உதிர்ப்பதைப் போலத் தங்கள் தலைகளை உதிர்த்து துன்புற்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓட்டுநர்களோடு கூடிய குதிரைகள் களமங்கும் உயிரற்று விழுந்ததோ, விழுவதோ காணப்பட்டது. (இப்படிக்) கொல்லப்பட்ட போது, பீதியால் பீடிக்கப்பட்ட குதிரைகள், சிங்கத்தைக் கண்டு தங்கள் உயிரைக் காக்க விரும்பும் சிறு விலங்குகளைப் போலத் தப்பி ஓடின. அந்தப் போரில் தங்கள் எதிரிகளை வீழ்த்திய பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை ஊதி, தங்கள் பேரிகைகளையும் முழக்கினர்.

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன், தன் துருப்புகள் வீழ்த்தப்பட்டதைக் கண்டு துயரில் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! தலைவா {சல்லியரே}, அங்கே பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, உமது பார்வைக்கு முன்பாகவே போரில் நமது துருப்புகளை முறியடிக்கிறான். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, கடலைத் தடுக்கும் நிலத்தை {கரையைப்} போல அவனை {யுதிஷ்டிரனைத்} தடுப்பீராக. வல்லமை உள்ளவர் என்றும், உமது ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என்றும் பெரிய அளவில் நீர் நன்கு அறியப்பட்டிருக்கிறீர்” என்றான் {துரியோதனன்}.

உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வீரச் சல்லியன், யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தன் பெரும் தேர்ப்படையுடன் சென்றான். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க அலையைப் போன்ற சக்தியுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் சல்லியனின் அந்தப் பெரும்படையைப் போரில் தடுக்க ஆரம்பித்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் பத்து {10} கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} விரைவாகத் துளைத்தான். நகுலனும், சகாதேவனும் அவனை நேரான ஏழு {7} கணைகளால் தாக்கினர்.

பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான். மீண்டும் அவன் {சல்லியன்}, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சல்லியன்}, மாத்ரியின் மகன்கள் ஒவ்வொருவரையும் இரு {2} கணைகளால் தாக்கினான். அப்போது, எதிரிகளை வீழ்த்துபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தப் போரில், காலனின் கோரப்பற்களுக்கு இடையில் இருப்பதைப் போல, சல்லியனின் தேர் அடையத்தக்க தூரத்தில் {அருகிலேயே} இருப்பதைக் கண்டு, யுதிஷ்டிரனின் பக்கம் விரைவாகச் சென்றான் [1].

[1] வேறு ஒரு பதிப்பில் இந்த வரியைத் தாண்டி மேலும், “பீமன் வரும்போதே முழுமையாக உருக்கினால் செய்யப்பட்ட கூர்மையான நாராசங்களால் மத்ர மன்னனைத் தாக்கினான். பிறகு பீஷ்மர், துரோணர் இருவரும் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டும், விரைவாகக் கணைகளைப் பொழிந்து கொண்டும் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்த்து வந்தார்கள்” என்று இருக்கிறது.

பிறகு, சூரியன் உச்சிவானைக் கடந்து மூழ்கிக் கொண்டிருந்த போது, கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் அங்கே (களத்தின் அந்தப் பகுதியில்) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்