Monday, March 28, 2016

கர்ணனின் புறப்பாடு! - துரோண பர்வம் பகுதி – 002

The setting out of Karna! | Drona-Parva-Section-002 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படைவீரர்களுக்கு ஆறுதல் கூறிய கர்ணன்; படைவீரர்கள் மத்தியில் கர்ணன் செய்த சூளுரை; போருக்குப் புறப்படத் தயாரான கர்ணன்; வேண்டிய உபகரணங்களைத் தன் தேரோட்டியிடம் கேட்ட கர்ணன்; பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்...

கர்ணன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த அதிரதன் மகன் {கர்ணன்}, துயரத்தில் விழுந்திருந்ததும், அடியற்ற கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பானதுமான உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஒரு சகோதரனைப் போலக் காக்க விரும்பினான். [உண்மையில்], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வில் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரும், மனிதர்களில் முதன்மையானவரும், மங்காப் புகழ் கொண்ட வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} (அவரது தேரிலிருந்து) வீழ்த்தப்பட்டதைக் கேள்விப்பட்டு (போர்க்களத்திற்கு) விரைந்து வந்தான். தேர்வீரர்களில் சிறந்தவரான பீஷ்மர் எதிரியால் கொல்லப்பட்ட பிறகு, தன் பிள்ளைகளைக் காக்க விரும்பும் தந்தையைப் போல, கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பான அந்தப் படையைக் காக்க விரும்பி கர்ணன் அங்கே வந்தான்.

கர்ணன் (படைவீரர்களிடம்), “உறுதி, புத்திக்கூர்மை, ஆற்றல், வீரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, வீரர்களின் அனைத்து அறங்கள், தெய்வீக ஆயுதங்கள், பணிவு, அடக்கம், ஏற்புடைய பேச்சு, தீமையில் இருந்து விடுதலை ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீஷ்மர், சந்திரனில் லட்சுமி இருப்பது போல இத்தகைய குணங்களை நிரந்தரமாகப் பெற்றவரும், எப்போதும் நன்றியுடன் இருந்தவரும், பிராமணர்களின் எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பீஷ்மர், ஐயோ, பகை வீரர்களைக் கொல்பவரான அந்தப் பீஷ்மர் எப்போது தன் விடுதலையை {மரணத்தை} அடைந்தாரோ, அப்போதே பிற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.


செயலுடன் (பொருள்கள் அனைத்தும்) கொண்ட நிலையான தொடர்பின் விளைவால், இவ்வுலகில் அழிவில்லாதது என எதுவும் இருப்பதில்லை. {வினைப்பயன் என்பது நிலையற்றதாகையால், ஒரு பொருளும் இவ்வுலகில் அழிவில்லாமல் இருப்பதில்லை}. உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரே கொல்லப்பட்டாரெனில், சூரியன் நாளை உதிப்பான் என எவன்தான் உறுதியாகச் சொல்வான்? வசுக்களின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவரும், வசுக்களின் சக்தியால் பிறந்தவரும், பூமியின் ஆட்சியாளருமான அவர் {பீஷ்மர்} மீண்டும் வசுக்களுடன் இணைந்துவிட்டார், எனவே, உங்கள் உடைமைகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், இந்தப் பூமிக்காவும், குருக்களுக்காகவும், இந்தப் படைக்காகவும் துயரடைவீராக [1].

[1] இந்தப் பத்தி “இத்தகைய ஒருவர் கொல்லப்பட்டாரெனில் இந்தப் பூமியில் அழிவுக்கு உட்படாதது எதுதான் உள்ளது. எனவே, உங்கள் செல்வங்கள், பிள்ளைகள் மற்றும் அனைத்தும் ஏற்கனவே அழிந்துவிட்டன என்று கவலையடைவீராக” என்ற பொருளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பெரும் வலிமைமிக்கவரும், வரமளிக்கும் வீரரும், உலகத்தின் தலைவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்ததும், அதன் தொடர்ச்சியாகப் பாரதர்கள் வீழ்ந்ததும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடிய கர்ணன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் (தார்தராஷ்டிரர்களுக்கு) ஆறுதல் சொல்லத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன்களும் உமது துருப்புகளும் உரக்க அழத்தொடங்கி, அந்த அழுகையின் பேரொலியால் அதிக வருத்தத்தை அடைந்து கண்ணீரை அதிகமாக வடித்தனர் [2]. எனினும், அந்தப் பயங்கரப் போர் மீண்டும் தொடங்கி, மன்னர்களால் தூண்டப்பட்ட கௌரவப் படைப்பிரிவுகள் பேரொலியோடு மீண்டும் முழங்கிய போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களில் காளையான கர்ணன், (கௌரவப் படையின்) பெரும் தேர்வீரர்களிடம் பேசி, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:

[2] இந்தச் சுலோகத்தின் பம்பாய் உரையில் சிறு வேறுபாடு காணப்படுகிறது. அனைவரும் இறக்கவேண்டிய நிர்பந்தம் இருப்பதால், கடமையைச் செய்ய நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்ற பொருளில் அஃது இருக்கிறது என்று இங்கே கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு உமது மகன்களும், படைவீரர்களும் ஒருவரையொருவர் அலறி அழைத்தார்கள்; அடிக்கடி அழுகைக்குரலோடு கூடவே துக்கத்தினால் உண்டான கண்ணீரையும் கண்களால் அப்போது வடித்தார்கள்” என்று இருக்கிறது.

{கர்ணன்}, “நிலையற்ற இந்த உலகில் (காலனின் {மரணத்தின்} கோரப் பற்களை நோக்கியே) அனைத்தும் {அனைத்துப் பொருட்களும்} தொடர்ந்து வலம் வருகின்றன. இஃதை எண்ணி, அனைத்தையும் குறுகிய காலம் கொண்டவையே என நான் கருதுகிறேன். எனினும், நீங்கள் அனைவரும் இங்கிருந்த போதே, மலைபோல அசையாமல் நிற்கும் குருக்களில் காளையான பீஷ்மர் எவ்வாறு தனது தேரில் இருந்து வீசப்பட்டார்? வலிமைமிக்கத் தேர்வீரரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்த்தப்பட்டு, (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போல இப்போது தரையில் கிடக்கிறார் என்றால், மலைக்காற்றைத் தாங்கவொண்ணா மரங்களைப் போலவே, குரு மன்னர்கள் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கிஞ்சிற்றும் தாங்க இயன்றவர்கள் இல்லை [3].

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, “மலையைத் தூக்கிச் செல்லும் காற்றை மரங்களால் தாங்க முடியாததைப் போல, மன்னர்கள் தனஞ்சயனைத் தாங்க சக்தியற்றவர்களே” என்று இருக்கிறது. 

எனினும், இப்போது அந்த உயர் ஆன்மா கொண்டவர் {பீஷ்மர்} செய்ததைப் போலவே, {படையின்} முதன்மையான வீரர்கள் எதிரியால் கொல்லப்பட்டதும், உற்சாகமற்ற முகங்களைக் கொண்டதுமான ஆதரவற்ற இந்தக் குரு படையை நான் காப்பேன். இந்தச் சுமை இப்போது என் பொறுப்பாகட்டும். அந்த வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டதால் இந்த அண்டமே நிலையற்றதென நான் காண்கிறேன். {எனவே}, போருக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? ஆகவே, களத்தில் திரிந்த படியே என் நேரான கணைகளால் அந்தக் குரு குலக் காளைகளை (பாண்டவர்களை) நான் யமலோகம் அனுப்புவேன். இவ்வுலகில் புகழையே உயர்ந்த நோக்கமாகக் கருதும் நான், போரில் அவர்களை {பாண்டவர்களை} கொல்வேன், அல்லது எதிரியால் கொல்லப்பட்டுக் களத்தில் உறங்குவேன்.

யுதிஷ்டிரன், உறுதியும், புத்திக்கூர்மையும், அறமும், வலிமையும் கொண்டவனாவான். விருகோதரன் {பீமன்}, ஆற்றலில் நூறு யானைகளுக்கு இணையானவனாவான், அர்ஜுனனோ இளமையானவனாகவும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகனாகவும் இருக்கிறான். எனவே, அந்தப் பாண்டவப் படை தேவர்களாலும் எளிதாக வீழ்த்தப்பட முடியாததாகும். யமனுக்கு நிகரான இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} எந்தப் படையில் இருக்கிறார்களோ, தேவகியின் மகனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் எந்தப் படையில் இருக்கிறார்களோ, அந்தப் படை காலனின் {மரணத்தின்} கோரப் பற்களைப் போன்றதாகும். அஃதை அணுகும் எந்தக் கோழையும் உயிருடன் திரும்ப மாட்டான்.

பெருகியிருக்கும் தவச் சக்தியை தவத் துறவுகளாலேயே விவேகிகள் எதிர்கொள்வதைப் போல, படையும் {சக்தியும்} படையாலேயே {சக்தியாலேயே} எதிர்க்கப்பட வேண்டும். எதிரியை எதிர்த்து, என் தரப்பைக் காப்பதில் என் மனத்தில் உறுதியடைந்திருக்கிறேன். ஓ! தேரோட்டியே, அன்று நான் எதிரியின் வல்லமையைத் தடுத்து, போர்க்களத்தை அடைந்ததுமே அவனை வீழ்த்தப் போகிறேன். இந்த உள் {குடும்பப்} பகையை நான் பொறுக்க மாட்டேன். துருப்புகள் பிளக்கப்படும்போது, அணிவகுக்க (உதவ) முயற்சி செய்யும் ஒருவனே நண்பனாவான் {நான் அந்தச் சிறந்த நண்பனாகவே இருப்பேன்}.

ஒன்று, நான் ஒரு நேர்மையான மனிதனுக்குத் தகுந்த நீதிமிக்கச் சாதனையை அடைவேன், அல்லது என் உயிரைத் துறந்து பீஷ்மரைத் தொடர்வேன். ஒன்று, நான் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் என் எதிரிகள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களுக்குச் செல்வேன்.

ஓ! தேரோட்டியே, பெண்களும், குழந்தைகளும் உதவிக்காகக் கூச்சலிடும்போதோ, துரியோதனனின் ஆற்றல் தடுக்கப்படும்போதோ நான் இதையே செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன் [4]. எனவே, எதிரியை நான் இன்று வெல்வேன். இந்தப் பயங்கரப் போரில் என் உயிரைக் குறித்துக் கவலை கொள்ளாமல், குருக்களைப் பாதுகாக்கும் நான், பாண்டுவின் மகன்களைக் கொல்வேன். என் எதிரிகள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துப் போரில் கொல்லும் நான், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} (மறுப்பதற்கிடமில்லா) அரசுரிமையை அளிப்பேன்.

[4] மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ! தேரோட்டியே, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவிக்காக உரக்க அலறும்போதும், தார்தராஷ்டிரர்களின் {செருக்கு} பெருமை இழிவுபடுத்தப்படும்போதும் இதைச் செய்யவே நான் கடமைப்பட்டுள்ளதாக உண்மையில் நான் கருதுகிறேன்.” என்று இருக்கிறது.

அம்பறாத்தூணி
தங்கத்தாலானதும், பிரகாசமானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களோடு ஒளிர்வதுமான அழகிய என் கவசம் எனக்குப் பூட்டப் படலாம்; சூரியனுக்கு இணையான பிரகாசம் கொண்ட என் தலைக்கவசமும் {கிரீடமும்}, விற்களும், நெருப்பு, நஞ்சு அல்லது பாம்புகளுக்கு ஒப்பான என் கணைகளும் தரிக்கப்படலாம். (என் தேரில்) உரிய இடங்களில் பதினாறு {16} அம்பறாத்தூணிகள் கட்டப்படட்டும், மேலும் சிறந்த விற்கள் பலவும் கொண்டு வரப்படட்டும். கணைகள், ஈட்டிகள், கனமான கதாயுதங்கள், பல்வேறு வண்ணங்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட என் சங்கு ஆகியவை தயாராகட்டும்.

பல்வேறு வண்ணங்களிலானதும், சிறந்ததும் தங்கத்தாலானதும், தாமரையின் பிரகாசத்தைக் கொண்டதும், யானை கட்டும் சங்கிலி பொறிக்கப்பட்ட {கொடியைக் கொண்டதுமான} என் அழகிய கொடிமரம், மென்மையான துணியால் துடைக்கப்பட்டு, அற்புதமான மாலைகளாலும், மெல்லிய இழைகளாலும் அலங்கரிப்பட்டு என்னிடம் கொண்டு வரப்படட்டும். ஓ! தேரோட்டியின் மகனே, பழுப்பு மேகங்களின் நிறத்தாலானவையும், மெலிதாக இல்லாதவையும் {பருத்தவையும்}, மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரில் குளித்தவையும், பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும்.

தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனையோ, சந்திரனையோ போலப் பிரகாசமானதும், ஆயுதங்கள், மற்றும் சிறந்த விலங்குகள் பூட்டப்பட்டுத் தேவையான அனைத்தையும் கொண்டதுமான சிறந்த தேர் ஒன்றும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். பெரும் தாங்கும் திறனைக் கொண்ட பல சிறந்த விற்களும், (எதிரியைத்) தாக்க வல்ல சிறந்த நாண்கயிறுகள் பலவும், பெரியதும், கணைகள் நிறைந்ததுமான அம்பறாத்தூணிகள் சிலவும், என் உடலுக்கான கவசங்கள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். தயிர்க்கடைசல்கள் நிறைந்தவையும், பித்தளை மற்றும் தங்கத்தாலானவையுமான குடங்களும், வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் (மங்கலமான) பொருட்கள் அனைத்தும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். மலர்களாலான மாலைகள் கொண்டுவரப்படட்டும், அவை என் உடலின் (தகுந்த) அங்கங்களில் சூடப்படட்டும். வெற்றிக்கான பேரிகைகள் முழங்கப்படட்டும்.

ஓ! தேரோட்டியே, கிரீடியும் (அர்ஜுனனும்), விருகோதரனும் {பீமனும்}, தர்மனின் மகனும் (யுதிஷ்டிரனும்), இரட்டையர்களும் {நகுலனும், சகாதேவனும்} எங்கிருக்கிறார்களோ, அந்த இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. அவர்களோடு போரில் மோதி, ஒன்று நான் அவர்களைக் கொல்வேன், அல்லது எதிரிகளான அவர்களால் கொல்லப்படும் நான் பீஷ்மரைப் பின்தொடர்வேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை மன்னர்களால் வெல்லப்படமுடியாதது என நான் நினைக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் காலனே, முரட்டுத்தனமான கண்காணிப்புடன் கிரீடியை {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவனுடன் மோதி அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரின் வழியில் நானும் யமனுலகு செல்வேன். அவ்வீரர்களுக்கு மத்தியில் நானே செல்வேன் என்று நிச்சயமாக நான் சொல்கிறேன். உட்பகையைத் தூண்டாதோரும், என்னிடம் பலவீனமான பற்று கொள்ளாதோரும், நீதியற்ற ஆன்மா கொள்ளாதோருமே (மன்னர்களே) எனக்குக் கூட்டாளிகளாவர்[5]” {என்றான் கர்ணன்}.

[5] உட்பகையைத் தூண்டுபவர்களோ, என்னிடம் உறுதியான பற்றில்லாதவர்களோ, கெட்ட எண்ணம் கொண்டவர்களோ எனக்குக் கூட்டாளிகளாக மாட்டார்கள் என்பது இங்கே பொருள்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறந்த ஏர்க்காலைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலகரமானதும், கொடிமரத்துடன் கூடியதும், காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், பெரும் பலம் கொண்டதும், விலையுயர்ந்ததுமான சிறந்த தேரைச் செலுத்திய கர்ணன் வெற்றிக்காக (போரிடச்) சென்றான்.

இந்திரனை வழிபடும் தேவர்களைப் போலக் குரு தேர்வீரர்களில் முதன்மையானோரால் வழிபடப்பட்டவனும், சூரியனைப் போல அளவிலா சக்தி கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அந்தக் கடும் வில்லாளி {கர்ணன்}, தங்கம், ரத்தினம் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த கொடிமரத்தைக் கொண்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், மேகங்களின் முழக்கத்திற்கு இணையான சடசடப்பொலி கொண்டதுமான தேரில், போர்க்களத்தின் எவ்விடத்தில் அந்தப் பாரதக் குலக்காளை (பீஷ்மர்) இயற்கைக்கான தன் கடனைச் செலுத்தினாரோ {ஆன்ம விடுதலையை விரும்பி உயிர் துறந்தாரோ} அந்த இடத்திற்குச் சென்றான். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அழகான மேனியுடன் கூடியவனும், பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தெய்வீகத் தேரைச் செலுத்தும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல, நெருப்பின் ஒளியைக் கொண்ட தன் அழகிய தேரில் ஏறி ஒளிர்ந்தான்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்