Wednesday, March 30, 2016

அர்ஜுனனின் புகழ் சொன்ன கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 003

Karna’s eulogy on Arjuna! | Drona-Parva-Section-003 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்; பீஷ்மரிடம் அர்ஜுனனின் பெருமைகளைச் சொல்லி, போரிட அனுமதி வேண்டிய கர்ணன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்பவரும், நீதிமிக்க ஆன்மாவும், அளவிலா சக்தியும் கொண்ட வீரரும், பெரும் வில்லாளியும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} (தன் தேரில் இருந்து) வீழ்த்தப்பட்டவருமான மதிப்புக்குரிய பாட்டன் பீஷ்மர், வலிமைமிக்கக் காற்றால் வற்ற செய்யப்பட்ட பரந்த பெரும் கடலைப் போலக் கணைகளின் படுக்கையில் கிடப்பதைக் கண்டு, உமது மகன்களுக்கு வெற்றி மீதான நம்பிக்கையும், மன அமைதியும் அவர்களது கவசங்களோடு காணாமல் போனது.


அடியற்ற பெருங்கடலைக் கடக்க முயன்று அதில் மூழ்குபவர்களுக்கு ஒரு தீவாக எவர் இருந்தாரோ அவரை {பீஷ்மரை} கண்டு, யமுனையின் ஊற்று போலத் தொடர்ச்சியான கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் எவர் சூழப்பட்டிருந்தாரோ அந்த வீரரை {பீஷ்மரை} கண்டு, பெரும் இந்திரனால் பூமியில் தள்ளப்பட்ட தாங்க முடியாத சக்தி கொண்ட மைநாக மலையைப் போல எவர் இருந்தாரோ அந்த வீரரை, ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்திருக்கும் சூரியனைப் போல எவர் கிடந்தாரோ அந்த வீரரை, பழங்காலத்தில் விருத்திரனிடம் வீழ்ந்துக் காணப்படா நிலையில் இருந்த இந்திரனைப் போல எவர் இருந்தாரோ அவரை, போர் வீரர்கள் அனைவரின் புலன்களையும் எவர் மயங்கச் செய்தாரோ அவரை, போராளிகள் அனைவரிலும் முதன்மையான அவரை, வில்லாளிகள் அனைவருக்கும் அடையாளமான {கொடி போன்ற} அவரை, மனிதர்களில் காளையும், வீரரும், உமது தந்தையுமான அந்தப் பீஷ்மர், போரில் வீழ்த்தப்பட்டு, அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டு, வீரப் படுக்கையில் கிடக்கும் அந்தப் பாரதர்களின் பாட்டனைக் கண்டு, துயரால் நிறைந்து, கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையில் இருந்த அந்த அதிரதன் மகன் (கர்ணன்), பெரும் பாசத்துடன் தன் தேரில் இருந்து இறங்கினான். (சோகத்தால்) பீடிக்கப்பட்டு, கண்ணீரால் கலங்கிய கண்களுடன் இருந்த அவன் {கர்ணன்} கால்நடையாக {நடந்தே} சென்றான்.

கூப்பிய கரங்களுடன் அவரை {பீஷ்மரை} வணங்கிய அவன் {கர்ணன்}, அவரிடம் {பீஷ்மரிடம்}, “நான் கர்ணன்! நீர் அருளப்பட்டிருப்பீராக! ஓ! பாரதரே {பீஷ்மரே}, புனிதமான, மங்கலகரமான வார்த்தைகளை என்னிடம் பேசுவீராக, கண்களைத் திறந்து என்னைக் காண்பீராக. முதிர்ந்தவரும், மரியாதைக்குரியவரும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நீரே கொல்லப்பட்டுத் தரையில் கிடைப்பதால், எந்த மனிதனும் தன் நற்செயல்களின் கனிகளை {புண்ணியப் பலன்களை} இவ்வுலகில் அனுபவிக்கமாட்டான் என்பது நிச்சயமாகிறது.

ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அவர்களில் {குருக்களில்} கருவூலத்தை நிரப்புவதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும், துருப்புகளைப் போர்வியூகத்தில் அணிவகுக்கச் செய்வதிலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் (உம்மைப் போல) வேறு யாரையும் நான் காணவில்லை. ஐயோ, நீதிமிக்கப் புரிதல் கொண்ட ஒருவர், ஆபத்துகள் அனைத்திலும் குருக்களை எப்போதும் பாதுகாக்கும் ஒருவர், எண்ணற்ற போர்வீரர்களைக் கொண்ட ஒருவர் பித்ருக்களின் உலகிற்குச் செல்கிறார். இந்நாளிலிருந்து, ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, கோபத்தில் தூண்டப்படும் பாண்டவர்கள் மான்களைக் கொல்லும் புலிகளைப் போலக் குருக்களைக் கொல்லப் போகின்றனர்.

இன்று, காண்டீவ நாணொலியின் சக்தியை அறியும் கௌரவர்கள், வஜ்ரதாரியை {இந்திரனை} அச்சத்துடன் கருதும் அசுரர்களைப் போல, இன்று சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} மதிக்கப் போகின்றனர் [1]. இன்று காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் இடிக்கொப்பான ஒலி, குருக்களையும், பிற மன்னர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தப்போகிறது. இன்று, ஓ! வீரரே {பீஷ்மரே}, கொடுந்தழல்களாலான நெருப்பு ஒரு காட்டை எரிப்பது போல, கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகள் தார்தராஷ்டிரர்களை எரிக்கும்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி பின்வருமாறு இருக்கிறது, “சவ்யசாசியின் வீரத்தை அறிந்தவர்களான கௌரவர்கள், அசுரர்கள் வஜ்ராயுதத்தின் ஒலியினால் பயத்தை அடைவதைப் போல, காண்டீவத்தின் ஒலியினால் இன்று அச்சமடையப்போகிறார்கள்”

காற்றும் நெருப்பும் சேர்ந்து காட்டின் எந்தப் பகுதிகளிலெல்லாம் செல்லுமோ, அப்பகுதிகளிலுள்ள செடிகள், கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தையும் அவை எரிக்கின்றன. பார்த்தன் {அர்ஜுனன்}, பற்றியெரியும் நெருப்பைப் போன்றவன் என்பதில் ஐயமில்லை, ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, கிருஷ்ணன் காற்றைப் போன்றவன் என்பதிலும் ஐயமில்லை. ஓ! பாரதரே {பீஷ்மரே}, பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்கும் கௌரவத் துருப்புகள் அனைத்தும் அச்சத்தால் நிறையப் போகின்றன.

அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {அர்ஜுனன்} (மன்னர்களை நோக்கி) முன்னேறும்போது, அவனுக்குச் சொந்தமானதும், குரங்குக் கொடிக் கொண்டதுமான அந்தத் தேரின் சடசடப்பொலியை {பீஷ்மரான} நீரில்லாமல் அவர்களால் {மன்னர்களால்} தாங்கிக் கொள்ள இயலாது. விவேகிகளால் விவரிக்கப்படுவதைப் போல மனிசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனை எதிர்க்க உம்மைத் தவிர மன்னர்களில் வேறு யார் தகுந்தவர்?

உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான்.

தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான்.

போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்