Tuesday, May 17, 2016

வசாதீயனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 042

Abhimanyu killed Vasatiya! | Drona-Parva-Section-042 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : தேரோட்டியைக் கொன்று விருஷசேனனைக் களத்தை விட்டு விரட்டிய அபிமன்யு; வசாதீயனைக் கொன்றது; கௌரவ வீரர்களை மூர்க்கமாகத் தாக்கி களத்தை உயிரற்ற சடலங்களாலும் போர்க்கருவிகளாலும் நிறைத்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வெற்றியை விரும்பிய பாண்டவர்களைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தடுத்தபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது அச்சந்தரும் வகையில் இருந்தது. வெல்லப்பட முடியாதவனும், இலக்கில் துல்லியம், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்டவனுமான அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரத்தைப் போலக் (கௌரவ) வியூகத்திற்குள் {சக்கரவியூகத்திற்குள} ஊடுருவி அதைக் கலங்கடித்தான். எதிரிகளைத் தண்டிப்பவனும், தன் கணை மழையால் இப்படிப் பகைவரின் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்தவனுமான சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை}, கௌரவப் படையின் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தரத்துக்கும், முன்னுரிமைக்கும் தக்கபடி {வரிசை முறைப்படி} எதிர்த்து விரைந்தனர்.


பெரும் பலத்துடன் தங்கள் கணை மழையை இறைத்த அந்த அளவிலா சக்தி கொண்டவர்கள் ஒரு புறமும், தனியனான அபிமன்யு ஒருபுறமும் என நடந்த அந்த மோதல் அச்சந்தருவதாகவே இருந்தது. தேர்க்கூட்டங்களுடன் கூடிய அவ்வெதிரிகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {கர்ணன் மகனான} விருஷசேனனின் தேரோட்டியைக் கொன்று, அவனது வில்லையும் அறுத்தான். பிறகு, வலிமைமிக்க அந்த அபிமன்யு தன் நேரான கணைகளால் விருஷசேனனின்  குதிரைகளைத் துளைத்தான். காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், இதனால், போர்க்களத்திற்கு வெளியே விருஷசேனனைச் சுமந்து சென்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அபிமன்யுவின் தேரோட்டி, அந்த நெருக்கமான போரில் இருந்து, களத்தின் வேறு பகுதிக்குக் கொண்டு சென்று அவனது தேரை விடுவித்துக் கொண்டான். (இந்த அருஞ்செயலைக்) கண்ட எண்ணற்ற தேர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து "நன்று! நன்று!" என்றனர்.

சிங்கத்தைப் போன்ற அபிமன்யு, தன் கணைகளால் எதிரிகளைக் கோபத்துடன் கொல்வதைக் கண்ட வசாதீயன் {வஸாதீயன்} [1], தூரத்தில் இருந்து முன்னேறி வந்து, பெரும்பலத்துடன் அவன் மீது வேகமாகப் பாய்ந்தான். பின்னவன் {வசாதீயன்}, தங்கச் சிறகுகள் கொண்ட அறுபது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்து, அவனிடம் {வசாதீயன் அபிமன்யுவிடம்}, "நான் உயிரோடு உள்ளவரை, உன்னால் உயிருடன் தப்ப முடியாது" என்றான். அவன் {வசாதீயன்} இரும்புக் கவசத்தை அணிந்திருந்தாலும், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}  நீண்ட தூரம் செல்லும் கணை ஒன்றால் அவனது மார்பைத் துளைத்தான். அதன் பேரில் வசாதீயன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

[1] இவன் யாரெனத் தெரியவில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} வசாதீயன் கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியக் காளையர் பலர், கோபத்தால் நிறைந்து, உமது பேரனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், பல்வேறு விதங்களிலான தங்கள் எண்ணற்ற விற்களை வளைத்தபடியே அவனை அணுகினர். அதன் பிறகு, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.

கோபத்தால் நிறைந்த பல்குனன் மகன் {அபிமன்யு}, அவர்களின் விற்கள், கணைகள், அவர்களது உடலின் பல்வேறு அங்கங்கள், குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தலைகள் ஆகியவற்றை வெட்டி வீழ்த்தினான்.

பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், வாள்கள், பரிகங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டவையும், தோல் கையுறைகள் அணிந்த விரல்களுடன் கூடியவையுமான {வீரர்களின்} கரங்கள் வெட்டப்பட்டு அங்கே காணப்பட்டது. மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், விழுந்திருக்கும் கொடிமரங்கள், கவசங்கள், கேடயங்கள, தங்க ஆரங்கள், கிரீடங்கள், குடைகள், சாமரங்கள், உபஷ்கரங்கள் {பிற கருவிகள்}, அதிஸ்தானங்கள் {தேர்வீரர் அமரும் பீடங்கள்}, தண்டகங்கள் {ஏர்க்கால்கள்}, வந்தூரங்கள் {தேரோட்டி அமரும் பீடங்கள்}, நொறுக்கப்பட்ட அக்ஷங்கள் {அச்சுக்கள்}, ஆயிரக்கணக்கில் உடைந்து கிடந்த சக்கரங்கள் மற்றும் நுகத்தடிகள், அனுகரஷங்கள் {அண்டைமரங்கள்}, கொடிகள், தேரோட்டிகள், குதிரைகள், உடைக்கப்பட்ட தேர்கள், கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை பூமியில் பரவிக் கிடந்தன.

வெற்றியில் உள்ள விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவர்களும், (உயிரோடு இருந்த போது) வீரத்துடன் கூடிய க்ஷத்திரியர்களுமான பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு {அவர்களின் உடல்களால்} பரவிக் கிடந்த போர்க்களமானது அச்சந்தரும் காட்சியை அளித்தது.

அபிமன்யு கோபத்துடன் போர்க்களத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்த போது, அவனது வடிவமே காணப்படாமல் போனது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது கவசம், அவனது ஆபரணங்கள், வில், கணைகள் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. உண்மையில், அவன் தன் கணைகளால் பகை வீரர்களைக் கொன்று வருகையில், அவர்களுக்கு மத்தியில் சூரியனைப் போலச் சுடர்மிகும் பிரகாசத்துட்ன இருந்த அவனை, எவராலும் தங்கள் கண்களால் காண முடியவில்லை" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்