Wednesday, May 18, 2016

அபிமன்யுவிடம் புறமுதுகிட்ட துரியோதனன்! - துரோண பர்வம் பகுதி – 043

Duryodhana turned back from fighting Abhimanyu! | Drona-Parva-Section-043 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : சத்தியசிரசைப் பீடித்த அபிமன்யு; அபிமன்யுவை நோக்கி விரைந்த ருக்மரதன்; அபிமன்யுவைப் பீடித்த ருக்மரதனின் நண்பர்கள்; நூற்றுக்கணக்கான இளவரசர்களைக் கொன்ற அபிமன்யு; அச்சத்தால் நிறைந்து அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன் புறமுதுகிட வேண்டிவந்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துணிவுமிக்க வீரர்களின் உயிரை எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அண்ட அழிவின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களின் உயிரையும் எடுக்கும் யமனுக்கு ஒப்பானவனாக இருந்தான். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்ட சக்ரனின் மகனுக்கு மகனான அந்த வலிமைமிக்க அபிமன்யு, கௌரவப் படையைக் கலங்கடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படைக்குள் ஊடுருவியவனும், யமனுக்கு ஒப்பானவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை அழிப்பவனுமான அவன் {அபிமன்யு}, சீற்றமிக்கப் புலியொன்று மானொன்றைப் பிடிப்பதைப் போலச் சத்தியசிரவசைப் பிடித்தான். சத்தியசிரவஸ் [1] அவனால் {அபிமன்யுவால்} பிடிக்கப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.


[1] இவன் யார் என்பது தெரியவில்லை. இவன் இங்கே அபிமன்யுவால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

உண்மையில், க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள், பகையுணர்வின் காரணமாக, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, “நான் முதலில் செல்கிறேன், நான் முதலில் செல்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை நோக்கி விரைந்தனர். கடலில் உள்ள திமிங்கலம் ஒன்று சிறுமீன்களின் கூட்டத்தை மிக எளிமையாகப் பிடிப்பதைப் போலவே, அபிமன்யுவும் விரைந்துவரும் அந்த க்ஷத்திரியர்களின் மொத்த படையணியையும் வரவேற்றான் {எதிர்த்தான்}. கடலை அடையும் நதிகள் திரும்பாததைப் போலவே, பின்வாங்காத அந்த க்ஷத்திரியர்களில் எவரும் அபிமன்யுவை அடைந்த பிறகு திரும்பவில்லை. வலிமைமிக்கச் சூறாவளியில் அகப்பட்டு, பலமான காற்றால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் தூக்கி வீசப்படும் (படகு குழுவினருடன்) படகைப் போல அந்தப் படை சுழன்றது.

அப்போது, மத்ரர்கள் ஆட்சியாளனுடைய {சல்லியனின்} மகனான வலிமைமிக்க ருக்மரதன், பீதியடைந்த துருப்புகளுக்கு நம்பிக்கையளிப்பதற்காக அச்சமற்ற வகையில், “வீரர்களே, அஞ்சாதீர்! நான் இங்கிருக்கும்போது, அபிமன்யுவினால் என்ன {செய்ய முடியும்}? இவனை நான் உயிருடன் பிடிப்பேன் என்பதில் ஐயங்கொள்ளாதீர்” என்றான். இவ்வார்த்தைகளைக் சொன்ன அந்த வீர இளவரசன் {ருக்மரதன்}, நன்கு தயாரிக்கப்பட்ட தன் அழகான தேரால் சுமக்கப்பட்டு அபிமன்யுவை நோக்கி விரைந்தான். மூன்று கணைகளால் அபிமன்யுவின் மார்பையும், மூன்றால் வலது கரத்தையும், மேலும் மூன்றால் இடது கரத்தையும் துளைத்த அவன் பெருமுழக்கம் முழங்கினான். எனினும் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ}, அவனது {ருக்மரதனின்} வில்லையும், அவனது வலது மற்றும் இடது கரங்களையும், அழகான கண்களும், புருவங்களும் கூடிய அவனது {ருக்மரதனது} தலையையும் விரைவாகப் பூமியில் வீழ்த்தினான்.

தன் எதிரியை {அபிமன்யுவை} எரிக்கவோ, உயிருடன் பிடிக்கவோ சபதம் செய்திருந்தவனும், சல்லியனின் மதிப்பு மிக்க மகனுமான அந்த ருக்மரதன், சுபத்திரையின் சிறப்புமிக்க மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டதைக் கண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களும் போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களும், சல்லியன் மகனின் {ருக்மரதனின்} நண்பர்களுமான இளவரசர்கள் பலர் {அபிமன்யுவை எதிர்த்துப்} போரிட வந்தனர். முழுதாக ஆறு முழம் நீளமுள்ள தங்கள் விற்களை வளைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்த படி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

தனியாக இருப்பவனும், துணிவுமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்}, இளமையும், பலமும், பயிற்சியால் அடையப்பட்ட திறனும், வீரமும் கொண்ட அந்தக் கோபக்கார இளவரசர்கள் அனைவரும் மோதி கணைகளின் மழையால் அவனை மறைப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற ஒரு விருந்தினன் என்றே அபிமன்யுவைக் கருதினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே, அந்த இளவரசர்கள், பல்வேறு வடிவங்களும், பெரும் வேகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட தங்கள் கணைகளின் மூலம் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} காண முடியாதபடி செய்தனர் {மறைத்தனர்}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனையும் {அபிமன்யுவையும்}, அவனது கொடிமரத்தையும், அவனது தேரையும் வெட்டுக்கிளிகள் நிறைந்த மரங்களைப் போலக் கண்டோம் [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அம்புகளால் நான்கு பக்கங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கிற அந்த அபிமன்யுவை, முட்களாலே நான்கு பக்கங்களிலும் வியாபிக்கப்பட்டிருக்கிற காட்டுப் பன்றியைப் போலக் கண்டோம்” என்று இருக்கிறது.

ஆழத்துளைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, அங்குசத்தால் தாக்கப்பட்ட யானை ஒன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு அவன் {அபிமன்யு}, காந்தர்வ ஆயுதத்தையும், அதன் தொடர்ச்சியான மாயையையும் {காந்தர்வாஸ்திரத்தையும், ரதம் சம்பந்தமான மாயையையும்} பயன்படுத்தினான். தவத்துறவுகள் பயின்ற அர்ஜுனன், அந்த ஆயுதத்தைக் கந்தர்வனான தும்புருவிடம் இருந்தும், {கந்தர்வர்கள்} பிறரிடம் இருந்தும் {தும்புரு முதலான கந்தர்வர்களிடம் இருந்து} அடைந்திருந்தான். அபிமன்யு, இப்போது அந்த ஆயுதத்தைக் கொண்டே தன் எதிரிகளைக் குழப்பினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களை விரைவாக வெளிப்படுத்திய அவன் {அபிமன்யு}, அந்தப் போரில் நெருப்பு வளையம் போலச் சுழன்று, சில நேரங்களில் தனி நபராகவும், சில நேரங்களில் நூற்றுக்கணக்கானோராகவும், சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோராகவும் காட்சியளித்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களுடைய விளைவின் மூலம் உண்டான மாயைக் கொண்டு வழிநடத்தப்பட்ட தன் தேரின் திறமையால் தன் எதிரிகளைக் குழப்பிய அவன் {அபிமன்யு}, (தன்னை எதிர்த்த) மன்னர்களின் உடல்களை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனது {அபிமன்யுவனது} கூரிய கணைகளின் விளைவால், உயிரினங்களின் உயிர்கள் வாங்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் உடல்கள் கீழே பூமியில் விழுகையில், அவை {உயிர்கள்} மறு உலகத்தை அடைந்தன.

அவர்களின் விற்கள், குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், தலைகள் ஆகியவற்றைப் பல்குனன் மகன் {அபிமன்யு} தன் கூரிய கணைகளால் அறுத்தான். ஐந்து வயதான மாமரங்களைக் கொண்ட {மாமரத்} தோப்பு ஒன்று, சரியாகக் கனி தாங்கும் சமயத்தில் (புயலால்) வீழ்த்தப்படுவதைப் போல, அந்த நூறு இளவரசர்களும் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொன்று வீழ்த்தப்பட்டனர்.

அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டவர்களும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவர்களும் இளமைநிறைந்தவர்களுமான அவ்விளவரசர்கள் அனைவரும் தனி ஒருவனான அபிமன்யுவால் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன் அச்சத்தால் நிறைந்தான். (தன்) தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் நொறுக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்துடன் அபிமன்யுவை எதிர்த்து வேகமாகச் சென்றான். அவர்களுக்கிடையில் குறுகிய காலமே நீடித்த அந்த முடிக்கப்படாத போர் மிக உக்கிரமடைந்தது. பிறகு, அபிமன்யுவின் கணைகளால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} போரில் இருந்து புறமுதுகிட வேண்டியிருந்தது” {என்றான் சஞ்சயன்} [3].

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி "அவ்விருவருக்கும் க்ஷண காலமே அபூர்வமான யுத்தம் நேர்ந்தது. பிறகு, உம்முடைய மகன் அபிமன்யுவின் அநேக அம்புகளால் அடிக்கப்பட்டுப் புறங்காட்டியோடினான்" என்று இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்