Thursday, June 02, 2016

மன்னன் மாந்தாதா! - துரோண பர்வம் பகுதி – 062

King Mandhatri {Mandhata}! | Drona-Parva-Section-062 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : மன்னன் மாந்தாதாவின் கதையைச் சொன்ன நாரதர்; மாந்தாதா பிறந்த விதம்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வன் மகனான மாந்தாதாவும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கருவறையில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர்.


[1] மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், அவனது குதிரைகளும் மிகவும் களைத்துப் போயிருந்தன. {தூரத்தில்} புகைச்சுருளைக் கண்ட அம்மன்னன் {யுவனாஸ்வன்}, (அதனைப் பின்பற்றி) ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் [2]. (இதனால் அந்த மன்னன் கருவுற்றான்). குழந்தையைக் கொண்டிருக்கும் அந்த மன்னன் யுவனாஸ்வனைக் கண்டு, தேவர்களில் சிறந்த மருத்துவர்களான அசுவினி இரட்டையர்கள்,  அவனது கருவறையில் இருந்து அந்தக் குழந்தையை வெளிக்கொணர்ந்தனர்.

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "புகையைக் கண்டு சென்று ஒரு யாகசாலையை அடைந்து, தயிர்த்துளிகள் கலந்த நெய்யைப் பானஞ்செய்தான்" என்று இருக்கிறது.

தன் தந்தையின் {யுவனாஸ்வனின்} மடியில் தெய்வீகப் பிரகாசத்துடன் இருந்த அந்தக் குழந்தையை {மாந்தாதாவைக்} கண்ட தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், "இந்தக் குழந்தை எதனால் {எதை உண்டு} வாழும்?" என்று வினவினர். அப்போது வாசவன் {இந்திரன்}, "குழந்தை என் விரல்களை உறிஞ்சட்டும்" என்றான். அதன் பேரில், அமுதம் போன்ற இனிமையான பாலை இந்திரனின் விரல்கள் சுரந்தன. இந்திரன் தன் கருணையால், "இவன், தன் பலத்தை என்னிடமே பெற்றுக் கொள்வான்" என்று சொல்லி அவனிடம் {மந்தாதாவிடம்} அன்பு கொண்டதால் தேவர்கள் அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயரிட்டனர் [3]. பிறகு, உயர் ஆன்ம இந்திரனின் கரங்களில் இருந்து யுவனாஸ்வன் மகனுடைய {மந்தாதாவினுடைய} வாயில் தாரை தாரையாகப் பாலும், தெளிந்த நெய்யும் கொட்டின.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "இந்திரன் கருணையினால், "என்னை அடைந்து பானஞ்செய்யப்போகிறான்" என்று அன்போடு கூறியதால், "மாந்தாதா" என்றே அக்குழந்தைக்கு அற்புதமான பெயர் ஏற்படுத்தப்பட்டது" என்று இருக்கிறது.

அந்தச் சிறுவன் {மாந்தாதா}, இந்திரனின் கரத்தைத் தொடர்ச்சியாக உறிஞ்சி, அதன் மூலமே வளர்ந்தான். பனிரெண்டு {12} நாட்களிலேயே அவன் {மந்தாதா} பனிரெண்டு {12} முழ உயரத்தையும், பெரும் ஆற்றலையும் அடைந்தான் [4]. அவன் முழு உலகத்தையும் ஒரே நாளில் வென்றான். அறம் சார்ந்த ஆன்மாவும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்டு, வீரனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமாக இருந்த அந்த மாந்தாதா, தன் வில்லைக் கொண்டு, ஜனமேஜயன், சூதன்வான், ஜயன் {கயன்}, சுனன் {பூரு} [5], பிருஹத்ரதன், நிருகன் ஆகியோரை வென்றான். சூரியன் உதிக்கும் மலைக்கும் {உதய மலைக்கும்}, அவன் {சூரியன்} மறையும் மலைக்கும் {அஸ்த மலைக்கும்} இடையில் கிடக்கும் நிலம் மாந்தாதாவின் ஆட்சிப்பகுதி {மாந்தாதாக்ஷேத்ரம்} என்றே இந்நாள் வரை அறியப்படுகிறது.

[4] வேறொரு பதிப்பில் இவ்வரி, "வீரியமுள்ள அக்குழந்தை பனிரெண்டு நாளில் பனிரெண்டு வயதுடையவனுக்குச் சமனாக ஆயிற்று" என்று உள்ளது.

[5] பம்பாய் பதிப்பில் இது பூரு என்றிருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். அப்படியெனில் மேற்கண்டது வங்கப் பதிப்பில் உள்ளதாக இருக்க வேண்டும்.

நூறு குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்த அவன் {மாந்தாதா}, ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, பத்து யோஜனை நீளமும், ஒரு யோஜனை அகலமும் உள்ள தங்கத்தாலான ரோகித மீன்களைக் பிராமணர்களுக்குத் தானமளித்தான் [6]. பிராமணர்களை உபசரித்த பிறகு, (அவனது வேள்விகளுக்கு வந்த) பிறர், சுவையான உணவு மற்றும் பல வகைத் தின்பண்டங்களாலான மலைகளை உண்டு, மேலும் {தங்களுக்குக் கிடைத்த} பங்களிப்புகளாலும் மனம் நிறைந்தனர். பெரும் அளவிலான உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவையும், அரிசிகளாலான {சோற்று} மலைகளும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தன. தெளிந்த நெய்யைத் தடாகங்களாகவும், பல்வேறு வகைகளிலான ரசங்களைத் தங்கள் சேறாகவும், தயிரைத் தங்கள் நுரையாகவும், பாயசங்களைத் தங்கள் நீராகவும் கொண்டு அழகாகத் தெரிந்த பல {பான} ஆறுகள், தேனையும் பாலையும் வீசிக்கொண்டு, உணவுப் பொருள்களாலான திடமான மலைகளைச் சுற்றி வளைத்தன.

[6] வேறொரு பதிப்பில், "நூறு அஸ்வமேதங்களாலும், நூறு ராஜசூய யாகங்களாலும் தேவர்களைப் பூஜித்த அந்த அரசன், பத்மராகரத்னம் விளையக்கூடியதும், பொன்னுக்கு விளைவிடமாயுள்ளதும், மேன்மை தங்கிய ஜனங்களுக்கு இருப்பிடமானதும் நூறு யோசனை தூரம் நீண்டிருக்கிறதுமா மத்ஸ்ய தேசத்தைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்தான்" என்று இருக்கிறது.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் மற்றும் பறவைகளும், வேதங்களையும் அவற்றின் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்த பிராமணர்கள் பலரும், முனிவர்கள் பலரும் அவனது {மாந்தாதாவின்} வேள்விக்கு வந்தனர். அங்கே இருந்தவருள் கற்றறியாதவர்களாக எவரும் இல்லை. ஆழி சூழ் உலகையும் {கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்}, செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கு அளித்த மன்னன் மாந்தாதா, இறுதியாகத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் தன் புகழால் நிறைத்தபடி, அறவோர் உலகங்களை அடைந்து, சூரியனைப் போல மறைந்து போனான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாந்தாதாவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்