Friday, June 03, 2016

மன்னன் கயன்! - துரோண பர்வம் பகுதி – 066

King Gaya! | Drona-Parva-Section-066 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 36)

பதிவின் சுருக்கம் : மன்னன் கயனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, அமார்த்தரயசின் {Amartarayas} [1] மகன் கயனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {கயன்}, வேள்வி நெருப்பில் காணிக்கையாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யில் எஞ்சுவதைத் தவிர வேறு எதையும் நூறு ஆண்டுகள் உண்ணாதிருந்தான். (அவனது பெரும் அர்ப்பணிப்பின் சான்றால் மனம் நிறைந்த) அக்னி அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முன்வந்தான்.


[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அதூர்த்தரஜஸ் என்று குறிக்கப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவன் பெயர் அமூர்த்தரஜஸ் {Amurtarajas} என்று இருக்கிறது. Puranic Encyclopedia புத்தகத்தில் இவன் பெயர் அமூர்த்தரயஸ் {AmUrtarayas} என்றிருக்கிறது.

[2] வனபர்வம் பகுதி 95லும், பகுதி 121லும் கயன் செய்த வேள்விகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கயன், "தவத்துறவுகளாலும், பிரம்மச்சரியம் பயில்வதன் மூலமும், நோன்புகள், விதிகள் மற்றும் எனக்கு மேன்மையானவர்களின் அருளின் மூலமும் வேதங்களைக் குறித்த முற்றான அறிவை நான் அடைய விரும்புகிறேன் [3]. என் வகைக்குரிய {க்ஷத்திரியக்} கடமைகளைச் செய்து, பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் வற்றாத செல்வத்தை அடைய விரும்புகிறேன். பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் பரிசளிக்கவும் விரும்புகிறேன். என் வகையைச் சேர்ந்த {க்ஷத்திரிய} மனைவியரிடமே நான் மகன்களைப் பெற வேண்டுமே அன்றி வேறெவரிடமும் வேண்டாம். அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உணவைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும். என் இதயம் எப்போதும் அறத்திலேயே {நீதியிலேயே} மகிழ்வடைய வேண்டும். ஓ! உயர்வான தூய்மையாளனே (அக்னியே), அறத்தகுதியை {புண்ணியங்களை} ஈட்ட நான் செயல்களில் ஈடுபடும்போது எந்த இடையூறும் என்னை அணுகாதிருக்கட்டும்" என்று கேட்டான் {கயன்}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அக்னி அங்கேயே அப்போதே மறைந்தான்.

[3] வேத அறிவை அடைய அவன் விரும்பிய வழிமுறைகள் இவை என இங்கே விளக்குகிறார் கங்குலி.

தான் கேட்ட அனைத்தையும் அடைந்த கயன், நியாயமான போரில் தன் எதிரிகளை அடக்கினான். பிறகு மன்னன் கயன், முழுமையாக நூறு வருடங்களுக்கு, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளுடனும், சாதுர்மாஸ்யங்கள் என்று அழைக்கப்படும் நோன்புகளுடனும் இன்னும் பிறவற்றுடனும் பல்வேறு வகைகளிளான வேள்விகளைச் செய்தான்.

ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும், அந்த மன்னன் {கயன்} (தன் வேள்விகளின் முடிவில்) எழுந்து (பிராமணர்களுக்கு) நூற்று அறுபதாயிரம் {1,60,000 ஒரு லட்சத்து அறுபதாயிரம்} பசுக்களையும், பத்தாயிரம் குதிரைகளையும், ஒரு கோடி தங்கத்தையும் (நிஷ்கங்களையும்) கொடுத்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தின் போதும் அவன் {கயன்} அந்தச் சந்தர்ப்பத்திற்கு விதிக்கப்பட்ட பரிசுகளைத் தானமளித்தான். உண்மையில் அந்த மன்னன் {கயன்} மற்றொரு சோமனைப் போலவோ, மற்றுமொரு அங்கீரசைப் போலவோ பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

மன்னன் கயன், அவனது பெரும் குதிரை வேள்வியில் ஒரு தங்கப் பூமியை உண்டாக்கி அவளை {அந்தப் பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவ்வேள்வியில் மன்னன் கயனின் வேள்விக்கம்புகள் {யூபஸ்தூபங்கள்} அனைத்தும் தங்கத்தாலானவையாக, மிகுந்த விலைமதிப்புள்ளனவையாக, அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிக்கும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையாக இருந்தன. அனைத்து ஆசைகளையும் கொல்ல {அழிக்க} இயன்ற கயன், மனம் நிறைந்திருந்த பிராமணர்களுக்கும், பிற மக்களுக்கும் அந்த வேள்விக்கம்புகளை {யூபஸ்தம்பங்களைக்} கொடுத்தான்.

பெருங்கடல், காடுகள், தீவுகள், ஆறுகள், நீர்நிலைகள், நகரங்கள், மாகாணங்கள், சொர்க்கம் ஆகியவற்றில் வசித்த ஆண் மற்றும் பெண் உயிரினங்களில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்தவர் அனைவரும் கயனின் வேள்விகளில் விநியோகிக்கப்பட்ட செல்வத்தாலும் உணவாலும் மிகவும் மனம்நிறைந்தனர். அவர்கள் அனைவரும், "கயனின் இந்த வேள்வியைப் போல வேறு எந்த வேள்வியும் கிடையாது" என்றனர். கயனின் வேள்விப்பீடமானது முப்பது யோஜனைகள் நீளமும், இருபத்தாறு யோஜனைகள் அகலமும், இருபது யோஜனைகள் உயரமும் கொண்டதாக இருந்தது. மேலும் அது முற்றிலும் தங்கத்தாலானதாகவும், முத்துகள், வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவன் {கயன்} இந்த வேள்விப்பீடத்தையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

அந்த மகத்தான ஏகாதிபதி {கயன்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டுள்ள பிறவகைப் பரிசுகளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த வேள்வியின் முடிவில், ஆடைகளையும், ஆபரணங்களையும் தவிர, இருபத்தைந்து உணவு மலைகளும், பல தடாகங்களும், சுவைமிக்கச் சாறுகள் கொண்ட பானகங்களால் அழகாகப் பாய்ந்து கொண்டிருந்த பல ஓடைகளும் தொடப்படாமல் எஞ்சின. அந்த வேள்வியின் புண்ணியத்தின் விளைவாக, மூவுலகிலும் கயன் நன்றாக அறியப்பட்டான். அந்த வேள்வியின் காரணமாகவே நித்தியமான ஆலமரமும், புனிதமான பிரம்மசரசும் இருக்கின்றன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {கயனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்