Thursday, March 13, 2014

கயன் செய்த வேள்விகள் - வனபர்வம் பகுதி 121

The sacrifices preformed by Gaya | Vana Parva - Section 121 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கயன் செய்த வேள்விகள்; பயோஷ்ணி ஆறின் பெருமை; நர்மதை ஆறு; நீலரத்தின மலை; சியவனர் கோபம்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிருகன் {மன்னன் கயன்} இங்கே வேள்வி செய்த போது, அவன் சோமச் சாறைக் கொடுத்து எதிரிகளின் நகரங்களை அழிக்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். இதனால் இந்திரன் புத்துணர்ச்சி பெற்று மிகவும் திருப்தி கொண்டான். இங்கே தேவர்களோடு சேர்ந்த இந்திரனும், அனைத்து உயிரினங்களின் பாதுகாவலர்களும், புரோகிதர்களுக்குப் பெரும் அளவில் பரிசுகள் கொடுத்து அந்த வேள்வியைக் கொண்டாடினர். இங்கே உலகத்தின் தலைவனான மன்னன் அமிர்தராயசன் {கயன்} ஏழு குதிரை வேள்விகளைச் செய்தபோது, சோமச் சாறால் இடியைத் {வஜரத்தை} தாங்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். மற்ற வேள்விகளில் மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட இன்றியமையாத பொருட்கள் அனைத்தும், அவனால் செய்யப்பட்ட ஏழு வேள்விகளிலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. ஏழு குச்சி கட்டுகள், வேள்வி வளையங்கள், இடங்கள், அகப்பைகள், பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன அவனால் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு வேள்வி குச்சியின் மேலும், ஏழு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.


ஓ! யுதிஷ்டிரா, இந்திரனுடன் கூடிய தேவர்கள் சேர்ந்து அவனது புனித சடங்குக்குத் தேவையான வேள்விக் குச்சிகளைப் பளபளக்கும் தங்கத்தில் செய்தார்கள். பூமியின் பாதுகாவலனான கயன் நடத்திய அந்தச் சிறப்பு வாய்ந்த வேள்விகளிலெல்லாம், சோமச்சாற்றைக் குடித்து இந்திரன் திருப்தியடைந்தான். அந்த வேள்விகளை நடத்திய புரோகிதர்களும் அவர்களுக்குக் கிடைத்த பணிக்கொடையில் திருப்தி கொண்டார்கள். சொல்லொணா செல்வத்தைப் பெற்ற அந்தப் புரோகிதர்கள் அவற்றை எண்ணிப் பார்த்தனர். பூமியின் மண் துகள்கள் போல, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல, மழையில் விழும் துளிகள் போல, அவை எவராலும் எண்ண முடியாதவையாக இருந்தன. கயன் கொடுத்த செல்வங்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாதவையாக இருந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு வேள்விகளில் அவற்றை நடத்திய புரோகிதர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் மேற்சொன்னவையைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், அவனால் அளிப்பட்ட பணிக்கொடைகளின் நிறைவை யாராலும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.

தேவதச்சனால் {விஸ்வகர்மாவால்} கல்வித் தேவதையின் {சரஸ்வதியின்} உருவம் தங்கத்தில் பொறிக்கப்பட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் வந்திருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்குக் {அந்தணர்களுக்கு} பரிசாகக் கொடுக்கப்பட்டன. ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த உயரான்ம கயன் தனது வேள்விச் சடங்குகளைச் செய்த போது, பல இடங்களில் வேள்வித்தூண்கள் நாட்டப்பட்டதால், பூமியின் பரப்பில் சிறிது இடமே எஞ்சியிருந்தது. ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்தப் புனிதச் செயலால் அவன் {கயன்} இந்திரலோகத்தை அடைந்தான். இந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடும் எவரும் கயன் அடைந்த உலகங்களை அடைகிறார்கள். ஆகையால், ஓ! மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஓ! தடுமாற்றம் இல்லாத இளவரசே! நீயும் உனது தம்பிகளும் இந்த நதியில் நீராட வேண்டும். ஓ! பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அப்போதுதான் நீ இந்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், அந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடினான். பிறகு ஓ! பாவமற்ற இளவரசே {ஜனமேஜயா}, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து நீலரத்தின மலைக்கும், பெரும் ஆறான நர்மதைக்கும் பயணப்பட்டான். அருளப்பட்ட தவசியான லோமசர் அவனிடம் மகிழ்ச்சிகரமான பல புண்ணிய இடங்களையும், தேவர்களின் புனிதக் கோவில்களையும் சொன்னார். பிறகு அவன் தனது தம்பிகளுடன் அந்த இடங்களுக்குத் தனது விருப்பப்படியும், வசதிக்குத்தக்கவாறும் பயணப்பட்டான் பல இடங்களில் அந்தணர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்து ஆயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றனர்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! நீலரத்தின மலையை அடைந்து, நர்மதையாற்றில் மூழ்குபவன் தேவர்களும் மன்னர்களும் வசிக்கும் உலகங்களை அடைவான். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே! {யுதிஷ்டிர}னே இந்தக் காலம் திரேதா யுகத்துக்கும், கலியுகத்துக்கு இடைப்பட்ட காலமாகும். ஓ! குந்தியின் மகேன {யுதிஷ்டிரா}, இதுவே ஒரு மனிதன் தனது பாவங்களைத் தொலைக்கும் காலமாகும். ஓ மரியாதைக்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான், சர்யாதி வேள்விச்சடங்குகளைச் செய்த போது, இரு தேவ மருத்துவர்களுடன் {அசுவின் தேவர்களுடன்} காணும் உருவத்தில் இந்திரன் வந்து, சோமச்சாற்றைப் பருகினான். கடும் தவமிருந்த பிருகுவின் மகன் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டு, அவனை அசைவற நிற்கச் செய்து, இந்த இடத்தில் தான் சுகன்யா என்ற இளவரசியை மனைவியாக அடைந்தார்."

யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "பகாசுரனைத் தண்டித்தவனான ஆறு குணங்களைக் கொண்டவன் {இந்திரன்}, சியவனரால் எப்படி அசைவற்று நிற்க வைக்கப்பட்டான்? எக்காரணத்திற்காக அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசியானவர் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டார்? ஓ அந்தணரே {லோமசரே}, அவர் தான் தேவ மருத்துவர்களைச் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதிக்கு உயர்த்தியவரா? இவை அனைத்தையும், சரியாக அது நடந்த படியே மதிப்பிற்குரிய நீர் மறுபடி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன் லோமசரிடம்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்