Sunday, February 16, 2014

கயனின் வேள்விகள்! - வனபர்வம் பகுதி 95

The sacrifices of Gaya! | Vana Parva - Section 95| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனும் அவனைத் தொடர்பவர்களும் பிரம்மசிரசை அடைவது;  யுதிஷ்டிரனுக்கு ஷாமந்தர், கயனின் வேள்விகளைக் குறித்துச் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் வீர மகன்கள், தங்களைத் தொடர்பவர்களுடன் ஒரு இடம் விட்டு மறு இடம் முன்னேறி கடைசியாக நைமிசத்தை அடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோமதியை {கோமதி நதியை} அடைந்த பாண்டவர்கள், அந்த ஓடையிலிருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடி, நீர்க்கடன் செலுத்தி ஓ! பாரதா பசுக்களையும், செல்வங்களையும் தானம் அளித்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, கன்யா, அஸ்வ, கோ தீர்த்தங்களில் தொடர்ச்சியாகத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும் நீர்க்கடன்கள் செலுத்தி, காலகோடியிலும் மற்றும் விஷப்பிரஸ்த மலைகளிலும் தங்கிய கௌரவர்கள் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா, பாகுதா {நதியை} அடைந்து அந்த ஓடையில் தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.


ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அடுத்ததாக, தேவர்களின் வேள்விப்பகுதியான பிரயாகைக்குச் சென்று, கங்கை யமுனையின் சங்கமத்தில் நீராடி பெரும் பலன்களைக் கொடுக்கும் தவ நோன்புகளைப் பயின்றார்கள். உண்மை நிறைந்த சத்தியங்களுடைய பாண்டவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தங்களுடைய அனைத்துப் பாவங்களையும் கழித்துக் கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் மன்னா {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன்கள் அந்தணர்களுடன் சேர்ந்து, படைப்பாளனுக்கே {பிரம்மாவுக்கே} புனிதமானதும், தவசிகளால் வழிபடப்படுவதுமான வேதி என்ற தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கே சிறிது காலம் தங்கி அந்தணர்களுக்குப் பழங்களும், கிழங்குகளும், தெளிந்த நெய்யும் கொடுத்து திருப்தி செய்த அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, பெரும் பலன்கள் தரக்கூடிய தவ நோன்புகளை அங்கே பயின்றனர்.

பிறகு அவர்கள், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அறம்சார்ந்த அரச முனி கயனால் புனிதப்படுத்தப்பட்ட {பிரதிஷ்டை செய்யப்பட்ட} மஹிதரத்திற்குச் சென்றனர். அந்தப் பகுதியில் கயசிரஸ் என்ற மலையும், பிரம்பு புதர்கள் நிறைந்த அழகிய கரைகளுடைய காண்பதற்கினிய நதியான மஹாநதியும் இருக்கின்றன. அந்தத் தெய்வீக மலையின் புனிதமான சிகரங்களில் தவசிகளால் பெரிதும் வழிபடப்படும் பிரம்மசிரஸ் என்ற புனிதமான தீர்த்தம் இருக்கிறது. அங்கிருக்கும் தடாகத்தின் கரைகளில், பழங்காலத்தில், தர்மத்தின் நித்திய தேவன் {தர்ம தேவன் = யமன்} வசித்தான். அங்கேதான் சிறப்புமிக்க முனிவரான அகஸ்தியர் அந்தத் தெய்வத்தைக் {யமனைக்} காண வந்தார். அந்தத் தடாகத்தில்தான் அனைத்து ஆறுகளும் உற்பத்தியாகின்றன. அந்தத் தீர்த்தத்தில்தான் பிநாக தாங்கியான மகாதேவன் {சிவன்} வசித்திருக்கிறான்.

அந்தப் பகுதிக்கு வந்த பாண்டுவின் வீர மைந்தர்கள், ரிஷியக்ஞப் பெரு வேள்விக்கான முறைப்படியும் சடங்குகளின் படியும் சாதுர்மாஸ்ய நோன்பைப் பயின்றனர். அங்கேதான் நித்திய ஆலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் மரம் நிற்கிறது. அங்கே செய்யப்படும் எந்த வேள்வியும் நித்தியமான பலன்களை அளிக்கிறது. நித்திய பலன்களை அருளும் தேவர்களின் அந்த வேள்வி மேடையில், ஒருமித்த ஆன்மாவுடன் பாண்டவர்கள் உண்ணா நோன்பிருக்க ஆரம்பித்தனர். மேலும் அங்கே தவத்தைச் செல்வமாகக் கொண்ட அந்தணர்கள் நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தனர். முனிவர்களால் அருளப்பட்ட விதிப்படி சாதுர்மாஸ்ய வேள்வியை அங்கு வந்த அந்தணர்களும் மேற்கொண்டனர். வேதமறிந்தவர்களும், ஞானத்திலும் தவப்பயன்களிலும் முதிர்ந்தவர்களுமான அந்தணர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் புனிதமான காரியங்கள் குறித்த விவரங்களை அத்தீர்த்தத்தில் வைத்து விவாதித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில்தான், நோன்பு நோற்பவரும் கற்றவரும், பிரம்மச்சாரியுமான புனிதமான ஷாமந்தர் அவர்களிடம் ஆமூர்த்தராயனின் மகன் கயனைக் குறித்துப் பேசினார்.

ஷாமந்தர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஆமூர்த்தராயனின் மகனான கயன் அரச முனிகளில் முதன்மையானவனாக இருந்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் அவனது நற்செயல்களைக் குறித்துக் கேள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் கயன் (விநியோகிப்பதற்கு) அபரிமிதமான உணவுடனும் (அந்தணர்களுக்கு) பெரும் பரிசுகளுடனும் பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமைத்த அரிசி {சோறு} நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மலைகளாகவும், தெளிந்த நெய் தடாகமாகவும், தயிர் நூற்றுக்கணக்கான ஆறுகளாகவும், ஆடம்பரமான குழம்புகள் ஓடைகளாகவும் இருந்தன. நாளுக்கு நாள் இவை அனைத்து மூலைகளுக்கும், அந்தணர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைவரும் சுத்தமான உணவைப் பெற்றனர். (அனைத்து வேள்விகளின்) முடிவில் அந்தணர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்ட போது, வேத ஒலி சொர்க்கத்தை அடைந்தது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவ்வளவு சத்தமாக வேத மந்திரங்களைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே அந்தப் புனிதமான ஒலி அனைத்துப் புள்ளிகளையும், பூமியையும், விண்ணையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தன.

சிறப்புமிக்கக் கயனால் அளிக்கப்பட்ட அற்புதமான உணவுப்பொருட்களாலும், பானங்களாலும் திருப்தியடைந்த மனிதர்கள், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இந்த வரிகளைப் பாடிக் கொண்டே சென்றனர். "கயனின் பெரும் வேள்வியில் இன்று இருக்கும் எந்த உயிரினம் தான் இன்னும் உண்ண விரும்புகின்றன? அனைவரும் உண்ட பிறகும், இன்னும் இருபத்தைந்து மலைகள் உணவு இருக்கின்றன! மகத்தான பிரகாசமிக்க அரச முனி கயனால் அடையப்பட்ட வேள்விப் பயனை இதுவரை எந்த மனிதனும் அடைந்ததில்லை. இனி அடையப்போவதுமில்லை. கயன் அளித்த தெளிந்த நெய்யால் தெவிட்டிப் போய் இருக்கும் தேவர்கள், இனியும் யார் கொடுக்கும் படையலையும் ஏற்கும் நிலையில் இல்லை. பூமியில் மணற்துகள்களைப் போல, ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் போல, மழையால் நிறைந்திருக்கும் மேகங்கள் பொழியும் துளிகளைப் போல, வேள்வியில் கயன் அளிக்கும் பரிசுகளை ஒருவனால் எண்ண முடியாதே" என்று பாடினர்.

"ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த வர்ணனைகளுக்கு ஏற்ற பல வேள்விகளை மன்னன் கயன், இந்தப் பிரம்மசிரசின் அருகில் செய்திருக்கிறான்" என்றார் {ஷாமந்தர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்