Wednesday, June 15, 2016

தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 079

The speech of Krishna to Daruka! | Drona-Parva-Section-079 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் படுக்கையைத் தயாரித்து, சிவனுக்கான அவனது இரவுப்பலியை முடிக்கச் செய்த கிருஷ்ணன்; நடு இரவில் தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் ஒப்பற்ற மாளிகைக்குள் நுழைந்து நீரைத் தொட்டு {ஆசமனம் செய்து} [1], மங்கலகரமான சம தரையில், வைடூரியத்திற்கு ஒப்பான குச {தர்ப்பைப்} புற்களைப் படுக்கையாகப் பரப்பினான். அந்தப் படுக்கையைச் சுற்றிலும் சிறந்த ஆயுதங்களை வைத்த அவன் {கிருஷ்ணன்}, மேலும் அதை மலர்மாலைகள், அவல் {fried paddy}, நறுமணத் திரவியங்கள், பிற மங்கலப் பொருட்கள் ஆகியவற்றால் முறையாக அலங்கரித்தான். பார்த்தனும் நீரைத் தொட்ட {ஆசமனம் செய்த} [1] பிறகு, அமைதியும், பணிவும் கொண்ட பணியாட்கள் முக்கண்ணனுக்கு (மஹாதேவனுக்கு) உரிய வழக்கமான இரவு பலியைக் கொண்டு வந்தனர். அப்போது, மகிழ்ச்சியான ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நறுமணப்பொருட்களை மாதவன் {கிருஷ்ணன்} மேல் பூசி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகாதேவனுக்கு இரவுப்பலியைச் செய்தான் [2]. பிறகு, கோவிந்தன் {கிருஷ்ணன்} மங்கிய புன்னகையுடன் பார்த்தனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, படுத்துக் கொள்வாயாக, நான் உன்னிடம் விடைபெறுகிறேன்” என்றான். பிறகு நன்கு ஆயுதம் தரித்த வாயில் காப்போரையும், காவலாளிகளையும் நிறுத்திய அந்த அருளப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்} (தன் தேரோட்டியான) தாருகன் பின் தொடரத் தன் பாசறைக்குச் சென்றான்.


[1] ஆசமனம்: மந்திரப்பூர்வமாக வலது உள்ளங்கையால் {குடம்போலக் கையைக் குவித்து} மும்முறை நீரை உட்கொள்தல்.

[2] இந்த வரியில் tasmai என்று குறிப்பிடப்படுவது முக்கண்ணனைத்தானே ஒழிய கிருஷ்ணனை அல்ல என்று நீலகண்டர் சொல்வதாகவும், அது சரியாகவே படுவதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, “பார்த்தன் சந்தோஷமடைந்து, மாதவரைக் கந்தங்களாலும், பூமாலைகளாலும் அலங்காரஞ்செய்து, இராத்திரியில் செய்வதான அந்தப் பலியை அந்தத் திரியம்பகருக்கு நிவேதனஞ்செய்தான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கிட்டத்தட்ட இதே போன்ற வரிதான் இருக்கிறது.

வெண்படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களைக் குறித்து ஆலோசித்தான். பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் (கேசவன்), (பார்த்தனின்) துயரையும், கவலையையும் களைவதற்காகவும், அவனது {அர்ஜுனனின்} ஆற்றலையும் காந்தியையும் அதிகரிப்பதற்காகவும் பல்வேறு வழிகளைக் குறித்துப் பார்த்தனுக்காக {அர்ஜுனனுக்காகச்} சிந்தித்தான். யோகத்தில் பொதிந்த ஆன்மா கொண்டவனும், அனைவரின் உயர்ந்த தலைவனும், பரந்த புகழைக் கொண்டவனும், ஜிஷ்ணுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவனுமான அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, (அர்ஜுனனுக்கு) நன்மை செய்ய விரும்பி, யோகத்திலும், தியானத்திலும் லயித்தான்.

பாண்டவ முகாமில் அவ்விரவில் உறங்கியவர் எவரும் இல்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான்? உயர் ஆன்மப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உண்மையில் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கிறான்.

மன்னன் ஜெயத்ரதன் வலிமையும் சக்தியும் கொண்டவனாவான். ஓ!, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவலர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று, தனஞ்சயன் {அர்ஜுனன்} (முகாமுக்குத்) திரும்பட்டும். தன் எதிரிகளை வீழ்த்தி அர்ஜுனன் தனது உறுதிமொழியைச் சாதிக்கட்டும்.

நாளை சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் அவன் {அர்ஜுனன்} தோற்றால், சுடர்மிகும் நெருப்புக்குள் நிச்சயம் அவன் நுழைவான். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியைப் பொய்யாக்க மாட்டான். அர்ஜுனன் இறந்தால், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு தன் நாட்டை மீட்பான்? உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ! தலைவா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இவ்வாறு (நாளைய) வெற்றி குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவர்களது நீண்ட இரவு கடந்து போனது.

நடு இரவில் விழித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனின் {அர்ஜுனனின்} உறுதிமொழியை நினைவுகூர்ந்து, (தன் தேரோட்டியான) தாருகனிடம், “அர்ஜுனன், தன் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துயரால் உறுதிமொழி செய்தான். இதைக் கேட்ட துரியோதனன், பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு தன் நோக்கத்தை அடைவதில் தோல்வியுறுவான் என்று தன் அமைச்சர்களிடம் நிச்சயம் ஆலோசித்திருப்பான். அவனது {துரியோதனனின்} பல அக்ஷௌஹிணி துருப்புகள் ஜெயத்ரதனைப் பாதுகாக்கும். ஆயுதங்கள் அனைத்தையும் ஏவும் வழிகளை முழுமையாக அறிந்த துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்} அவனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பார்கள். ஒப்பற்ற வீரனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் செருக்கை அழித்தவனுமான ஆயிரம் கண்ணனே {இந்திரனே} கூட, போரில் துரோணரால் பாதுகாக்கப்படும் ஒருவனைக் கொல்லத் துணியமாட்டான்.

எனவே, குந்தியின் மகனான அர்ஜுனன், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். என் மனைவியர், என் சொந்தங்கள், என் உறவினர்கள் ஆகியோரிலும் கூட அர்ஜுனனை விட மிகுந்த அன்புக்குரியவர் எவருமில்லை. ஓ! தாருகா, அர்ஜுனன் இல்லாத பூமியில் ஒரு கணமும் நான் என் கண்களைச் செலுத்த மாட்டேன். பூமி அர்ஜுனன் அற்றதாகாது என நான் உனக்குச் சொல்கிறேன். குதிரைகளோடும், யானைகளோடும் கூடியவர்கள் அனைவரையும், அர்ஜுனனுக்காக நானே என் பலத்தைப் பயன்படுத்தி வீழ்த்தி, அவர்களோடு சேர்த்து கர்ணனையும், சுயோதனனையும் {துரியோதனனையும்} கொல்வேன்.

ஓ! தாருகா, பெரும்போரில் தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} நாளை என் வீரத்தை நான் வெளிப்படுத்தும்போது, என் ஆற்றாலை மூன்று உலகங்களும் காணட்டும். ஓ! தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ! தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ! தாருகா, தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியவர்களுடன் கூடிய (மூன்று) உலகங்கள் என்னைச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} (உண்மை) நண்பனாக நாளை அறியும். எவன் அவனை {அர்ஜுனனை} வெறுக்கிறானோ, அவன் {கிருஷ்ணனாகிய} என்னை வெறுக்கிறான். எவன் அவனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னைப் பின்பற்றுகிறான். புத்திக்கூர்மை கொண்ட நீ, அர்ஜுனன் என்னில் பாதியானவன் என்பதை அறிவாயாக.

ஓ! தாருகா, இரவு கழிந்து காலை வந்ததும், என் சிறந்த தேரில் கௌமோதகி என்றழைக்கப்படும் என் தெய்வீகக் கதாயுதத்தையும், என் ஈட்டி மற்றும் சக்கரத்தையும், என் வில் மற்றும் கணைகளையும், இன்னும் தேவையான பிற அனைத்தையும் படை அறிவியலின் படி தரிக்கச் செய்து, கவனத்துடன் என்னிடம் கொண்டு வருவாயாக. ஓ! சூதா {தாருகா}, என் தேர்த்தட்டில் எனது குடையை அலங்கரிக்கும் என் கொடிமரத்துக்கும், அதில் இருக்கும் கருடனுக்குமான இடத்தை ஒதுக்கி, வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்று அழைக்கப்படும் என் முதன்மையான குதிரைகளை அதில் பூட்டி, சூரியன் மற்றும் நெருப்பின் காந்தியுடன் கூடிய தங்கக் கவசத்தால் அவற்றை அலங்கரித்து, நீயும் உன் கவசத்தை அணிந்து கொண்டு, கவனமாக அதில் நிற்பாயாக. ரிஷப சுரத்தின் [3] ஒலியை உமிழும் என் சங்கான பாஞ்சஜன்யத்தின் உரத்த, பயங்கரமான வெடிப்பொலியைக் கேட்டதும் விரைவாக நீ என்னிடம் வருவாயாக.

[3] இஃது, இந்து வண்ணத்தில் இரண்டாவது இசைச்சுரம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! தாருகா, ஒரே நாளில் என் தந்தைவழி அத்தையின் {வசுதேவர் தங்கை குந்தியின்} மகனான என் மைத்துனனின் {அர்ஜுனனின்} பல்வேறு துயரங்களையும் கோபத்தையும் நான் விலக்கப் போகிறேன். திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீபத்சு {அர்ஜுனன்} போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்காக அனைத்து வழிகளிலும் நான் முயல்வேன். ஓ! தேரோட்டியே {தாருகா}, பீபத்சு இவர்களில் யாரையெல்லாம் கொல்ல முயல்வானோ, அவர்களைக் கொல்வதில் நிச்சயம் வெல்வான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

தாருகன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நீ யாருடைய தேரைச் செலுத்துகிறாயோ, அவனது வெற்றி உறுதியே. உண்மையில், அவனுக்கு எவ்விடத்தில் இருந்து தோல்வி வரும்? என்னைப் பொறுத்தவரை, நீ என்ன உத்தரவிடுகிறாயோ, அதையே நான் செய்வேன். இந்த இரவு (அதன் தொடர்ச்சியாக) அர்ஜுனனின் வெற்றிக்காக மங்கலமான காலைப் பொழுதைக் கொண்டுவரும்” என்றான் {தாருகன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்