Monday, June 20, 2016

அர்ஜுனனின் சொற்கள்! - துரோண பர்வம் பகுதி – 084

The words of Arjuna! | Drona-Parva-Section-084 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த அர்ஜுனன் தான் கண்ட கனவைச் சொன்னது; பாண்டவ வீரர்கள் ஆச்சரியமடைந்து உற்சாகம் கொண்டது; அர்ஜுனனுக்குத் தோன்றிய மங்கலச் சகுனங்கள்; சாத்யகிக்கு அர்ஜுனன் இட்ட பணி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யுதிஷ்டிரன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் பிறர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, பாரதக் குலத்தின் முதன்மையானவனான அந்த மன்னனையும் {யுதிஷ்டிரனையும்}, தனது நண்பர்களையும், நலன்விரும்பிகளையும் காண விரும்பி தனஞ்சயன் {அர்ஜுனன்} அங்கே வந்தான். அவன் {அர்ஜுனன்}, அந்த மங்கலகரமான அறைக்குள் நுழைந்து, மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, அவனுக்கு முன்பு நின்ற பிறகு, அந்தப் பாண்டவர்களில் காளை (மன்னன் யுதிஷ்டிரன்) தன் இருக்கையில் இருந்து எழுந்து, பெரும் பாசத்துடன் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டான். தன் கரங்களால் அவனை அணைத்துக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அவனை {அர்ஜுனனை} இதயப்பூர்வமாக வாழ்த்தினான்.


பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {அர்ஜுனனிடம்} சிரித்துக் கொண்டே, "ஓ! அர்ஜுனா, (பிரகாசமான, மகிழ்ச்சியான) உன் முகம் மற்றும் உன்னிடம் மிகவும் நிறைவுடன் இருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} என்ற உண்மைச் செய்திகளைக் கொண்டு தீர்மானிக்கையில், போரில் உனக்கு வெற்றியே நிச்சயம் காத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.

அப்போது ஜிஷ்ணு {அர்ஜுனன்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அருளப்பட்டிருப்பீராக. கேசவனின் {கிருஷ்ணனின்} அருளால், மிக ஆச்சரியமான ஒன்றை நான் கண்டேன்" என்று சொல்லி தனக்கு நேர்ந்ததும், மிக உயர்ந்த அற்புதமுமான அந்தச் சம்பவத்தை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, முக்கண் தேவனுடன் {சிவனுடன்} ஏற்பட்ட தனது சந்திப்பைத் தன் நண்பர்களுக்கு உறுதி செய்யும் வகையில், தான் கண்டவாறே அனைத்தையும் சொன்னான். அப்போது அதைக் கேட்டவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்து, தங்கள் தலைகளைத் தரைவரை தாழ்த்தினர். மேலும் காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனை {சிவனை} வணங்கியபடியே அவர்கள், "நன்று, நன்று!" என்றனர்.

பிறகு (பாண்டவர்களின்) நண்பர்களும், நலன்விரும்பிகள் அனைவரும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} ஆணைக்கிணங்க, தங்கள் இதயங்களில் (எதிரிக்கு எதிராக) சினத்தால் நிறைந்து, விரைவுடனும், கவனத்துடனும் போருக்குச் சென்றனர். மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கிய யுயுதானன் {சாத்யகி}, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகியோர், மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தை விட்டுப் புறப்பட்டனர். வெல்லப்பட முடியாத இரு வீரர்களான யுயுதானன் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருவரும் ஒரே தேரில் சென்று அர்ஜுனனின் பாசறையை அடைந்தனர். அங்கே வந்த கிருஷ்ணன், (தொழிலால்) ஒரு தேரோட்டியைப் போலவே, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு (அர்ஜுனனுக்குச்) சொந்தமானதும், குரங்குகளின் இளவரசனை {அனுமனை} அடையாளமாகத் தாங்குவதுமான {குரங்குக் கொடியைக் கொண்டதுமான} அந்தத் தேரைத் தயார்ப்படுத்தத் தொடங்கினான். புடம்போட்ட தங்கத்தின் பிரகாசத்தைக் கொண்டதும், மேகங்களுக்கு ஒத்த ஆழமான முழக்கத்துடன் கூடிய சடசடப்பொலியைக் கொண்டதும், (கிருஷ்ணனால்} தயார் நிலையில் நிறுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேர், காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. அப்போது கவசம் பூண்ட அந்த மனிதர்களில் புலி (வாசுதவேன்), காலை வேண்டுதல்களை முடித்திருந்த பார்த்தனிடம், அவனது தேர் முறையாகத் தயாரிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொன்னான். பிறகு, இவ்வுலக மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தங்கக் கவசம் பூண்டு, கையில் தன் வில் மற்றும் கணைகளுடன் அந்தத் தேரை வலம் வந்தான்.

தவத்துறவுகள், அறிவு மற்றும் வயது ஆகிவற்றில் முதிர்ந்தோரும், அறச்சடங்குகள் மற்றும் வேள்விகள் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களுமான பிராமணர்களால் வெற்றி குறித்த வாழ்த்தும், அருளும் ஆசிகளுடன் சொல்லப்பட்ட பின்பு, போரில் வெற்றியைத் தரவல்ல மந்திரங்களால் முன்பே தூய்மையாக்கப்பட்டிருந்த அற்புத வாகனமான அந்தத் தேரில், சுடர்மிகும் கதிர்களைக் கொண்ட சூரியன் கிழக்கு மலையில் ஏறுவதைப் போலவே அர்ஜுனன் ஏறினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, தன் தங்க ஆபரணங்களின் விளைவால், மேருவின் சாரலில் சுடர்மிகும் காந்தி கொண்ட சூரியனைப் போலவே அந்தத் தேரில் தெரிந்தான். சர்யாதி வேள்விக்கு இந்திரனுடன் ஒரே தேரில் சென்ற அசுவினி இரட்டையர்களைப் போல, பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பிறகு, யுயுதானனும் {சாத்யகியும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, அந்தத் தேரில் ஏறினர். போரில் விருத்திரனைக் கொல்வதற்காக இந்திரன் சென்ற போது, அவனது தேரின் கடிவாளங்களைப் பிடித்த மாதலியைப் போலவே, தேரோட்டிகளில் சிறந்தவனான கோவிந்தன் (அந்தக் குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடித்தான்.

அந்த இரு நண்பர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் சாத்யகியுடன்} சிறந்த தேரில் ஏறியவனும், எதிரிகளின் பெரும் படைகளைக் கொல்பவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, புதனுடனும், சுக்கிரனுடனும் கூடி இரவின் இருளை அழிப்பதற்காக (ஆகாயத்தில்) எழும் சோமனைப் போலவோ, (பிருஹஸ்பதியின் மனைவியான) தாரகை கடத்தப்பட்ட நிகழ்வின் போது, வருணன் மற்றும் சூரியனுடன் கூடி (அசுரர்களுக்கு எதிராகப்) பெரும்போருக்குச் சென்ற இந்திரனைப் போலவோ சென்றான். அப்படிப் புறப்பட்ட வீர அர்ஜுனனை, இசைக்கருவிகளின் ஒலியாலும், நற்சகுனம் குறித்த மங்கலப் பாடல்களாலும், மாகதர்களும், இசைவல்லுனர்களும் நிறைவு கொள்ளச் செய்தனர். வெற்றிக்கான வாழ்த்தையும், {அந்த நாள்} நல்ல நாளாக அமைவதற்கான வாழ்த்தையும் பாடிய சூதர்கள் மற்றும் மாகதர்களின் குரல்கள் இசைக்கருவிகளின் ஒலியோடு கலந்து அவ்வீரர்களை நிறைவு கொள்ளச் செய்தன.

பார்த்தனை {அர்ஜுனனை} மகிழ்வித்து, அவனது எதிரிகளின் சக்திகளை உறிஞ்சியபடியே நறுமணம் மிக்க மங்கலமான தென்றல் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பின்னால் இருந்து வீசியது. அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் வெற்றியையும், உமது வீரர்களின் தோல்வியையும் குறிக்கும் வகையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான பல மங்கலச் சகுனங்கள் அங்கே தோன்றின. வெற்றியின் அந்தக் குறியீடுகளைக் கண்ட அர்ஜுனன், தன் வலப்பக்கத்தில் இருந்த பெரும் வில்லாளியான யுயுதானனிடம் {சாத்யகியிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! யுயுதானா {சாத்யகி}, (மங்கலகரமான) சகுனங்களாக இவை அனைத்தும் காணப்படுவதால், ஓ! சினி குலத்தின் காளையே {சாத்யகி}, இன்றைய போரில் என் வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, என் சக்திக்காகவும் (என் சக்தி வெளிப்படுவதைப் பார்ப்பதற்காகவும்), யமலோகம் செல்வதற்காகவும் காத்திருக்கும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன்.

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, இன்று மன்னரின் {யுதிஷ்டிரரின்} பாதுகாவலனாக நீ இருப்பாயாக. நான் பாதுகாப்பதைப் போலவே நீயும் அவரைப் பாதுகாப்பாயாக. உன்னை வெல்லக்கூடிய மனிதர் எவரையும் நான் இவ்வுலகில் காணவில்லை. போரில் நீ வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனாவாய். தேவர்களின் தலைவனே {இந்திரனே கூட} உன்னை வீழ்த்த இயலாது. இந்தச் சுமையை உன் மீதோ, வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன் மீதோ வைத்துவிட்டு, ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, கவலையில்லாமல் என்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல முடியும்.

ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, என்னைக் குறித்த எந்தக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. உன் முழு இதயத்தோடு நீ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கிருக்கிறானோ, நான் எங்கிருக்கிறேனோ, அங்கே அவனுக்கோ, எனக்கோ சிறு ஆபத்தும் ஏற்பட முடியாது என்பதில் ஐயமில்லை" என்றான் {அர்ஜுனன்}. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சாத்யகி, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு, பின்னவன் {சாத்யகி}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.

பிரதிஜ்ஞா பர்வம் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்