Sunday, June 19, 2016

கிருஷ்ணனின் சொற்கள்! - துரோண பர்வம் பகுதி – 083

The words of Krishna! | Drona-Parva-Section-083 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும், மற்றப் பாண்டவவீரர்களையும் வரவேற்ற யுதிஷ்டிரன்; கிருஷ்ணனிடம் தன் கவலையைச் சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேவகியின் மகனான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அவனிடம், "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரவை வசதியாகக் கடத்தினாயா? ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் நோக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவா?" என்று கேட்டான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அதே போன்ற விசாரிப்புகளை யுதிஷ்டிரனிடம் செய்தான். அப்போது வாயில் காப்போன் வந்து, பிற க்ஷத்திரியர்கள் {பிரகிருதிகள் = அரசு அங்கத்தினர்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான்.


மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதன் {வாயில்காப்போன்}, {வந்திருந்த} அந்த வீரர்களின் கூட்டத்தில் அடங்கிய விராடன், பீமசேனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, சேதிகளின் ஆட்சியாளர் திருஷ்டகேது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துருபதன் மற்றும் சிகண்டி, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), கேகயர்களின் ஆட்சியாளன் சேகிதானன், குரு குலத்தின் யுயுத்சு, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், யுதாமன்யு, சுபாகு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரை உள்ளே அனுமதித்தான். இவர்களும், க்ஷத்திரியர்கள் பிறரும் க்ஷத்திரியர்களில் காளையான அந்த உயர் ஆன்மாவை {யுதிஷ்டிரனை} அணுகி சிறந்த இருக்கைகளில் அமர்ந்தனர். வலிமைமிக்கவர்களும், பெரும் காந்தி கொண்ட உயர் ஆன்ம வீரர்களுமான கிருஷ்ணன் மற்றும் யுயுதானன் {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, யுதிஷ்டிரன், தாமரைக்கண்ணனான மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்} இனிய வார்த்தைகளில், "ஆயிரங்கண் தேவனான தெய்வீகமானவனை {இந்திரனைப்} போல உன்னை மட்டுமே நம்பி நாங்கள் போரில் வெற்றிக்கும், நித்தியமான மகிழ்ச்சிக்கும் முயற்சி செய்கிறோம். ஓ! கிருஷ்ணா, எங்கள் நாட்டை இழக்கச்செய்து எதிரிகளால் நாங்கள் நாடுகடத்தப்பட்டதையும், எங்களது பல்வேறு துன்பங்களையும் நீ அறிவாய். ஓ! அனைவருக்கும் தலைவனே, ஓ! உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் கருணை கொண்டவனே, ஓ! மதுசூதனா, எங்கள் அனைவரின் மகிழ்ச்சியும், எங்கள் இருப்பும் கூட உன்னிடமே {உன்னை நம்பியே} இருக்கிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் இதயம் உன்னிலேயே நிலைத்திருக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. ஓ! தலைவா, அர்ஜுனன் ஏற்ற உறுதி மொழி எதனால் நிறைவேறுமோ அதையும் செய்வாயாக. ஓ!, துன்பம் மற்றும் சினம் ஆகியவற்றின் இந்தக் கடலில் இருந்து எங்களை இன்று மீட்பாயாக. ஓ! மாதவா, (அந்தக் கடலைக்) கடக்க விரும்பும் எங்களுக்கு இன்று நீ ஒரு படகாவாயாக.

போரில் எதிரியைக் கொல்லவிரும்பும் தேர்வீரர்களுக்கு, ஒரு தேரோட்டியானவன் கவனமாக முயன்றால் என்ன செய்ய முடியுமோ, அஃதை (அவனது நோக்கத்தின் வெற்றிக்காகச்) செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, பேரிடர்கள் அனைத்திலும் இருந்து நீ விருஷ்ணிகளை எப்போதும் காப்பதைப் போலவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இந்தத் துயரில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தாங்குபவனே, அடியற்ற குரு கடலில் படகற்று மூழ்கும் பாண்டுவின் மகன்களுக்கு ஒரு படகாகி, அவர்களை மீட்பாயாக. ஓ! தேவர்களின் தலைவனுக்குத் தேவனே {தேவதேவேசனே}, ஓ! நித்தியமானவனே, ஓ! அழிப்பவர்களில் உயர்ந்தவனே, ஓ! விஷ்ணுவே, ஓ! ஜிஷ்ணுவே, ஓ! ஹரியே, ஓ! கிருஷ்ணா, ஓ! வைகுண்டா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா} உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவரும், சாரங்க வில்லைத்தரிப்பவரும், அனைவரில் முதன்மையானவருமான (நாராயணன் என்று அழைக்கப்படும்) புராதனமான சிறந்த முனிவர் என்று நாரதர் உன்னைச் சொல்லியிருக்கிறார். ஓ! மாதவா, அவ்வார்த்தைகளை மெய்யாக்குவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

அந்தச் சபைக்கு மத்தியில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், பேசுவபவர்களில் முதன்மையானவனுமான கேசவன் {கிருஷ்ணன்} மழை நிறைந்த மேகங்களின் ஆழ்ந்த குரலில் யுதிஷ்டிரனிடம், "ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்களையும் சேர்த்து அடங்கிய உலகங்கள் அனைத்திலும், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான எந்த வில்லாளியும் கிடையாது. மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் சக்தி, ஆயுதங்களில் சாதனை, பெரும் ஆற்றல், பெரும்பலம், போரில் கொண்டாடப்படுதல், எப்போதும் கோபம் நிறைந்திருத்தல், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவனாவான். வயதில் இளமையையும், காளையின் கழுத்தையும், நீண்ட கரங்களையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் பலத்தைக் கொண்டவன் ஆவான். சிங்கத்தைப் போலவோ, காளையைப் போலவோ நடப்பவனும், பெரும் அழகனுமான அவன் {அர்ஜுனன்}, உமது எதிரிகள் அனைவரையும் கொல்வான்.

என்னைப் பொறுத்தவரை, பெருகும் காட்டுத்தீயைப் போலக் குந்தியின் மகனான அர்ஜுனன், திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} துருப்புகளை எரிக்கச்செய்யும்படி செய்வேன். பாவச் செயல்களைச் செய்தவனும், சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றவனுமான அந்த இழிந்த ஈனனை (ஜெயத்ரதனை), தன் கணைகளால், எந்தச் சாலையில் இருந்து பயணிகள் எவரும் திரும்புவதில்லையோ அங்கே இந்நாளே அர்ஜுனன் அனுப்புவான். இன்று, கழுகுகளும், பருந்துகளும், மூர்க்கமான நரிகளும், ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனது {ஜெயத்ரதனது} சதையை உண்ணப்போகின்றன.

ஓ! யுதிஷ்டிரரே, அவனது பாதுகாவலர்களாக இந்திரனுடன் கூடிய அனைத்துத் தேவர்களும் வந்தாலும் கூட, நெருக்கமானப் போரில் கொல்லப்படும் ஜெயத்ரதன் யமனின் தலைநகரத்திற்குச் செல்வான். சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பிறகு, (மாலையில்) ஜிஷ்ணு {அர்ஜுனன்} உம்மிடம் வருவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துயரையும் (உமது இதய) நோயையும் கைவிட்டுச் செழிப்பால் அருளப்பட்டிருப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்