Thursday, August 25, 2016

பீமனால் மலைத்த கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 132

Karna stupefied by Bhima! | Drona-Parva-Section-132 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 48)

பதிவின் சுருக்கம் : பீமனைப் புகழ்ந்த திருதராஷ்டிரன்; கர்ணனை மீண்டும் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆக்கிய பீமன்; கர்ணனைக் காக்கத் தன் தம்பி துர்ஜயனை அனுப்பிய துரியோதனன்; கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துர்ஜயனைக் கொன்ற பீமன்; துயரால் அழுத கர்ணன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பீமசேனன், கர்ணனுடன் போரிடுவதில் செயல்பாட்டு ஒருமையுடனும், சக்தியுடனும் வென்றதால், நான் அவனது ஆற்றலை மிக அற்புதமானதாகக் கருதுகிறேன்.(1) உண்மையில், ஓ! சஞ்சயா, யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய தேவர்களையே தடுக்க வல்லவனும், அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவனுமான அந்தக் கர்ணனால், சுடர்மிகு பிரகாசத்துடன் கூடியவனும், பாண்டுவின் மகனுமான பீமனைப் போரில் ஏன் வெல்ல முடியவில்லை என்பதை எனக்குச் சொல்வாயாக.(2,3) உயிரையே பணயமாக வைத்த அவர்களுக்குள் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்வாயாக. அவ்விருவருக்குள்ளான மோதலில், உண்மையில், இருவருக்கும் வெற்றி அடையத்தக்க தொலைவிலேயே இருக்கிறது, அதே போல இருவரும் தோற்கவும் வாய்ப்பிருக்கிறது [1].(4)


[1] "4ஆம் சுலோகத்தின் இரண்டாம் வரியை மிகச் சாதாரணமாக வழங்கியிருக்கிறேன். இரு மனிதர்கள் போரிடும்போது, எவர் வெல்வார் என்பதை ஒருவனால் முன்கூட்டியே சொல்ல முடியாது. வெல்வதற்கும், தோற்பதற்கு இருவருக்கும் சமமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே பொருளாக இங்கே தெரிகிறது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! சூதா {சஞ்சயா}, போரில் கர்ணனை அடைந்த என் மகன் சுயோதனன் {துரியோதனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்களை எப்போதும் வெல்லத் துணிகிறான்.(5) எனினும், பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனால் போரில் கர்ணன் அடையும் தொடர் தோல்விகளைக் கேட்டு, எனக்கு மயக்கமே வருவதாகத் தெரிகிறது.(6) என் மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் விளைவால் கௌரவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வலிமைமிக்க வில்லாளிகளான பிருதையின் {குந்தியின்} மகன்களை வெல்வதில் கர்ணன் வெற்றி அடையவே மாட்டான்.(7) கர்ணன், பாண்டுவின் மகன்களுடன் போரிட்ட அனைத்துப் போர்களிலும், பின்னவர்களே {பாண்டவர்களே} அவனை {கர்ணனை} எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.(8) உண்மையில் அந்தப் பாண்டவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஐயோ, என் தீய மகன் துரியோதனன் இஃதை அறியவில்லையே.(9) கருவூலங்களின் தலைவனை {குபேரனைப்} போல இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} செல்வத்தைக் களவாடிய சிறுமதி கொண்ட என் மகன் {துரியோதனன்}, (மலைகளில்) தேனைத் தேடுபவனைப் போல வீழ்ச்சியைக் காணாதிருக்கிறான்.(10) வஞ்சகம் அறிந்த அவன் {துரியோதனன்}, அதைத் திரும்பப் பெற இயலாத அளவுக்குத் தன்னுடையது எனக் கருதி, எபோதும் பாண்டவர்களை அவமதிக்கிறான் [2].(11) தூய்மையற்ற ஆன்மா கொண்ட நானும், உயர் ஆன்ம பாண்டுவின் மகன்கள் அறநெறி நோற்பவர்களாக இருப்பினும், என் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் மனவுறுத்தல் கொள்ளவில்லை.(12)

[2] வேறொரு பதிப்பில், "வஞ்சனையில் புத்தியுள்ளவனான என் புத்திரன் மகாத்மாக்களான பாண்டவர்களுடைய ராஜ்யத்தைக் கபடத்தால் கவர்ந்து கொண்டு, "ஜயம் அடையப்பட்டது" என்றே எண்ணிக் கொண்டு பாண்டவர்களை அவமதிக்கிறான்" என்றிருக்கிறது.

பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரன், சமாதானத்தை விரும்புபவனாகவே தன்னை எப்போதும் காட்டிக் கொண்டான். எனினும் என் மகன்கள் அவனைத்  {யுதிஷ்டிரனைத்} திறனற்றவனாகக் கருதி, அவனை இகழ்ந்தனர்.(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், அந்தத் துயரங்கள் அனைத்தையும் (பாண்டவர்களால் தாக்குப்பிடிக்கப்பட்ட) தீங்குகள் அனைத்தையும் மனத்தில் கொண்டு, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டான்.(14) எனவே, ஓ! சஞ்சயா, போர்வீரர்களில் முதன்மையான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரும், ஒருவர் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று கொல்லவிரும்பிய இரண்டு காட்டு யானைகளுக்கு ஒப்பாகக் கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையிலான போர் எவ்வாறு நடந்தது என்பதைக் கேட்பீராக.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன் ஆற்றலை முன்னெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கோபக்கார பீமனை முப்பது கணைகளால் துளைத்தான்.(17) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கூர்முனை கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் பீமனைத் தாக்கினான்.(18) எனினும், பீமன், தன்னைத் தாக்குவதில் கர்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான். மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து கீழே பூமியில் விழ வைத்தான்.(19)

அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய விகர்த்தனன் மகன், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை ஏந்தினான்.(20) காலனின் இரண்டாவது ஈட்டியைப் போல இருந்த அந்தக் கடும் ஈட்டியைப் பிடித்து உயர்த்திக் குறி பார்த்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமனின் உயிரை எடுக்கப் போதுமான பலத்துடன் அதைப் பீமசேனன் மீது ஏவினான். பெரும்பலம் கொண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, வஜ்ரத்தை {இடியை} ஏவும் இந்திரனைப் போல அந்த ஈட்டியை ஏவி பெருமுழக்கம் செய்தான். அம்முழக்கத்தைக் கேட்ட உமது மகன்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(21-23) எனினும் பீமன், கர்ணனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அவ்வீட்டியை ஏழு கணைகளைக் கொண்டு ஆகாயத்திலேயே வெட்டினான்.(24) அப்போதுதான் சட்டையுரிந்து வந்த பாம்புக்கு ஒப்பான அவ்வீட்டியை வெட்டிய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடைய உயிரை எடுக்கப் பார்ப்பவனைப் போலப் பெரும் கோபத்துடன் அந்தப் போரில், மயிலின் இறகுகள் மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், ஒவ்வொன்றும் யமனின் கோலுக்கு ஒப்பானவையுமான பல கணைகளை ஏவினான்.(25, 26)

பெரும் சக்தியைக் கொண்ட கர்ணனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, அதைப் பலத்துடன் வளைத்துக் கணைகள் பலவற்றை ஏவினான்.(27) எனினும், பாண்டுவின் மகன் {பீமன்}, ஒன்பது நேரான கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் வெட்டினான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, வசுசேனனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளை வெட்டிய பீமன், ஓ! ஏகாதிபதி, ஒரு சிங்கத்தைப் போலப் பெருமுழக்கம் செய்தான். பருவ காலத்தில் பசுவுக்காக முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளைப் போல, அல்லது ஒரே இறைச்சித் துண்டுக்காக முழங்கும் இரு புலிகளைப் போல, அடுத்தவனின் மட்டுமீறிய தாமதத்தைக் காண விரும்பி அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(28-30) சில நேரங்களில் அவர்கள் மாட்டுக் கொட்டகையிலுள்ள இரு வலிமைமிக்கக் காளைகளைப் போல ஒருவரையொருவர் கோபக் கண்களால் பார்த்துக் கொண்டனர். பிறகு இரு பெரும் யானைகள் தங்கள் தந்தங்களின் கூர்முனைகளைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போல, முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து கணைகளை ஏவி ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணை மாரியால் ஒருவரையொருவர் எரித்த அவர்கள், பெரும் கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒருவரின் மேலொருவர் தங்கள் ஆற்றலைச் செலுத்தினர். (31,32) சிலநேரங்களில் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்டும், சில நேரங்களில் தங்கள் சங்குகளை முழங்கிக் கொண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர்.(33)

அப்போது பீமன், கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, சங்கு போன்ற வெண்மையாக இருந்த பின்னவனின் {கர்ணனின்} குதிரைகளைத் தன் கணைகளின் மூலம் யமனுலகு அனுப்பினான்.(34) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியையும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகு, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கப்பட்டு, அந்தப் போரில் (கணைகளால்) மறைக்கப்பட்டிருந்த விகர்த்தனன் மகன் கர்ணன், பெரும் துன்பத்தில் மூழ்கினான். பீமனின் கணைமாரியால் மலைத்துப் போன அவன் {கர்ணன்}, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(35, 36)

துன்பம் நிறைந்த அவல நிலையில் கர்ணன் நிறுத்தப்பட்டதைக் கண்ட மன்னன் துரியோதனன், கோபத்தால் நடுங்கி, (தன் தம்பியான) துர்ஜயனிடம், "ஓ! துர்ஜயா, செல்வாயாக. அங்கே அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனை {கர்ணனை} விழுங்கப் போகிறான். அந்தத் தாடியற்ற அலியை {பீமனை} விரைவாகக் கொன்று, கர்ணனை வலுப்படுத்துவாயாக" என்றான்.(37, 38) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் துர்ஜயன், துரியோதனனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி (கர்ணனுடன்) போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்து கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(39) அந்தத் துர்ஜயன், பீமனை ஒன்பது கணைகளாலும், அவனது குதிரைகளை எட்டாலும், அவனது சாரதியை ஆறாலும், அவனது கொடிமரத்தை மூன்றாலும் தாக்கி, மீண்டும் பீமனை ஏழாலும் {ஏழு கணைகளாலும்} தாக்கினான்.(40)

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், தன் கணைகளால் துர்ஜயனின் உயிர் நிலைகளையும், அவனது குதிரைகளையும், சாரதியையும் துளைத்து, அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தான் [3].(41) அப்போது துயரால் அழுத கர்ணன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், பாம்பைப் போல நெளிந்தபடி பூமியில் கிடந்த அந்த உமது மகனை {துர்ஜயனை} வலம்வந்தான்.(42) பீமன், தனது கொடிய எதிரியான கர்ணனைத் தேரற்றவனாகச் செய்த பிறகு, சிரித்துக் கொண்டே கணைகளால் அவனை மறைத்து, எண்ணற்ற கூர்முனைகளைக் கொண்ட சதாக்னியைப் போல அவனை ஆக்கினான்.(43) எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த அதிரதன் கர்ணன், இப்படிக் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போரில் தன்னுடன் போரிடும் பீமனைத் தவிர்க்கவில்லை" {என்றான் சஞ்சயன்}.(44)

[3] இந்தத் துர்ஜயனோடு சேர்த்து, இதுவரை பீமன், துரியோதனன் தம்பிகளில் 36 பேரைக் கொன்றிருக்கிறான்.
-----------------------------------------------------------------------------------------------------------
 துரோண பர்வம் பகுதி – 132ல் வரும் மொத்த சுலோகங்கள் 44


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்