Wednesday, August 24, 2016

கர்ணன் பீமனுக்கிடையில் பயங்கரப் போர்! - துரோண பர்வம் பகுதி – 131

A terrible war between Karna and Bhima! | Drona-Parva-Section-131 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 33)

பதிவின் சுருக்கம் : மற்றொரு தேரில் ஏறி பீமனை எதிர்த்து மீண்டும் விரைந்த கர்ணன்; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கர்ணனாலும், திருதராஷ்டிரன் மகன்களாலும் பாண்டவர்கள் இதுவரை அடைந்த துன்பங்களை எண்ணிப் பார்த்து மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கௌரவப் படையில் ஏற்பட்ட பேரழிவு...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, என் மகன்கள் எவனிடம் வெற்றிக்கான தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளனரோ அந்தக் கர்ணன் களத்தில் இருந்து புறங்காட்டிச் செல்வதைக் கண்டு, உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் சக்தியில் பெருமை கொண்ட பீமன் எவ்வாறு போரிட்டான்? கர்ணனும் இதன் பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, அந்தப் போரில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பீமசேனனைக் கண்டு என்ன செய்தான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.(2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முறையாக அமைக்கப்பட்ட மற்றொரு தேரில் ஏறிய கர்ணன், சூறாவளியால் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்துடன் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான்.(3) சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (கர்ண) நெருப்பில் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே {ஆகுதியாகவே) பீமசேனனைக் கருதினர்.(4) வில்நாண் கயிற்றின் சீற்றமிக்க நாணொலி மற்றும் தன் உள்ளங்கைகளின் பயங்கர ஒலிகள் ஆகியவற்றுடன் கூடிய ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனின் தேரை நோக்கி அடர்த்தியான கணைமாரியை ஏவினான்.(5)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வீரக் கர்ணனுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் மீண்டும் ஒரு பயங்கரமான மோதல் நடந்தது.(6) கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு போர் வீரர்களும், (கோபம்நிறைந்த) தங்கள் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரித்துவிடத் தீர்மானித்தவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(7) கோபத்தால் சிவந்திருந்த கண்களுடன் கூடிய அவ்விருவரும், இரண்டு பாம்புகளைப் போலச் சீற்றத்துடன் மூச்சுவிட்டனர். எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி சிதைத்தனர்.(8) உண்மையில் அவர்கள், பெரும் சுறுசுறுப்புக் கொண்ட இரு பருந்துகளைப் போல, அல்லது கோபத்தால் தூண்டப்பட்ட இரு சரபங்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர்.(9)

அப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், பகடையாட்டத்தின் போதும், நாடுகடத்தப்பட்டுக் காட்டில் இருந்தபோதும், விராடனின் நகரத்தில் வசித்த போதும் தான் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தும்,(10) செழிப்பிலும், ரத்தினங்களிலும் பெருகியிருந்த தங்கள் அரசு உமது மகன்களால் களவாடப்பட்டது, உம்மாலும், சூதனின் மகனாலும் {கர்ணனாலும்} பாண்டவர்களுக்கு எண்ணற்ற தீங்குகள் இழைக்கப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டும்,(11) அப்பாவியான குந்தியை நீர் அவளது மகன்களுடன் சேர்த்து எரிக்கச் சதி செய்த உண்மையை நினைத்தும், சபைக்கு மத்தியில் அந்த இழிந்தவர்களின் {திருதராஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் கர்ணன் ஆகியோரின்} கைகளில் கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த இன்னல்கள்,(12) துச்சாசனனால் அவளது குழல்கள் பற்றப்பட்டது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன், "உன் கணவர்கள் இறந்துவிட்டதால் {கணவனற்றவளானதால்}, நீ மற்றொரு கணவனைக் கொள்வாயாக; நரகத்தில் மூழ்கிவிட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் எள்ளுப்பதர்களைப் போன்றவர்களாவர்" என்ற அளவுக்குப் பேசிய பேச்சு ஆகியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டும்,(13, 14) ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது முன்னிலையில் கௌரவர்கள் உதிர்த்த பிற வார்த்தைகள், உமது மகன்கள் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தங்கள் அடிமையாய் அடைந்து அனுபவிக்க விரும்பிய உண்மை,(15) பாண்டுவின் மகன்கள் மான் தோலுடுத்தி காட்டுக்குச் செல்ல முற்படுகையில், கர்ணன் அவர்களிடம் பேசிய கடுஞ்சொற்கள்,(16) கோபம் நிறைந்தவனும், செழிப்பாக இருந்தவனும், மூடனுமான உமது மகன் {துரியோதனன்}, வருந்திக்கொண்டிருந்த பிருதையின் {குந்தியின்} மகன்களை வெறும் புற்களாக நினைத்து மகிழ்ச்சியோடு தற்புகழ்ச்சியில் ஈடுபட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்தும்,(17) உண்மையில் அறம்சார்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பீமன் இவற்றையும், குழந்தை பருவத்தில் இருந்து தானடைந்த இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, தன் உயிரையே துச்சமாக மதித்தான்.(18)

பாரதக் குலத்தின் புலியான அந்த விருகோதரன் {பீமன்}, தங்கமயமான கைப்பிடி கொண்டதும், வெல்லமுடியாததும், வல்லமைமிக்கதுமான தனது வில்லை வளைத்து, தன் உயிரை முற்றிலும் துச்சமாக மதித்து, கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) அந்தப் பீமன், கல்லில் கூராக்கப்பட்ட பிரகாசமான கணைமாரியை ஏவி சூரியனின் ஒளியையே மறைத்தான்.(20) எனினும் அந்த அதிரதன் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே, கல்லில் கூராக்கப்பட்டவையும், சிறகுபடைத்தவையுமான தன் கணைகளால், பீமசேனனின் அந்தக் கணைமாரியை விரைவாகக் கலங்கடித்தான்.(21) பிறகு, பெரும் பலமும், வலிமைமிக்கக் கரங்களும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான அதிரதன் மகன் {கர்ணன்}, ஒன்பது கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.(22) அங்குசத்தால் தாக்கப்பட்ட யானையைப் போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, அச்சமற்ற வகையில் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(23) எனினும் கோபத்துடன் கூடிய கர்ணன், மதம் கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, வேகமாகவும், சக்தியுடனும் தன்னை நோக்கி இப்படி விரைந்துவரும் அந்தப் பாண்டவக் காளையை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(24)

நூறு பேரிகைகளின் ஒலிக்கு ஒப்பான வெடிப்பொலி கொண்ட தன் சங்கை முழங்கிய கர்ணன், ஆர்ப்பரிக்கும் கடலைப் போலப் பீமனை ஆதரித்து வந்த படையை மகிழ்ச்சியாகக் கலங்கடித்தான்.(25) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொண்ட தனது படை கர்ணனால் இப்படிக் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட பீமன், முன்னவனை {கர்ணனை} அணுகி தன் கணைகளால் அவனை மறைத்தான்.(26) பிறகு கர்ணன் அன்னங்களின் நிறங்கொண்ட தன் குதிரைகளை, கரடிகளின் நிறங்கொண்ட பீமனுடையவையுடன் {பீமனின் குதிரைகளுடன்} கலக்கச் செய்து, தன் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) கரடிகளின் நிறத்தையும், காற்றின் வேகத்தையும் கொண்ட அக்குதிரைகள், அன்னங்களின் நிறத்தைக் கொண்ட கர்ணனுடையவையுடன் {கர்ணனின் குதிரைகளுடன்} கலந்ததைக் கண்டு உமது துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(28) காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இப்படி ஒன்றாகக் கலந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஒன்று கலந்திருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(29)

கர்ணன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட உமது படையின் பெரும் தேர்வீரர்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கினர்.(30) அவர்கள் போரிட்ட போர்க்களமானது விரைவில் யமனின் கொற்றங்களைப் போலப் பயங்கரமாக மாறியது. உண்மையில் அஃது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} நகரத்தைப் போலக் காண்பதற்கு மிகப் பயங்கரமாக மாறியது.(31) உமது படையின் பெரும் தேர்வீரர்கள், ஏதோ விளையாட்டுக் களத்தின் பார்வையாளர்களைப் போல அக்காட்சியைப் பார்த்தும், அந்தப் பயங்கர மோதலில் அந்த இருவரில் எவரும் மற்றவர் மேல் ஆதிக்கம் பெறுவதைக் காணவில்லை.(32) ஓ! மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள், உம்முடைய மற்றும் உமது மகன்களின் தீய கொள்கையின் விளைவால் அவ்விரு வீரர்களின் வலிமைமிக்க ஆயுதங்களின் மோதல்களையும், அந்தக் கலப்பையும் மட்டுமே கண்டனர்.(33) எதிரிகளைக் கொல்பவர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் மறைப்பதையே தொடர்ந்தனர். அற்புத ஆற்றலைக் கொண்ட அவ்விருவரும் தங்கள் கணைமாரியால் ஆகாயத்தையே நிறைத்தனர்.(34)

வலிமைமிக்க அவ்விரு தேர்வீரர்களும் ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பி ஒருவரின் மேல் ஒருவர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்ப்பதற்கு மிக அழகாக மாறினர்.(35) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க விண்கற்களைக் கொண்டுள்ளதைப் போல ஆகாயத்தைப் பிரகாசமாக்கினர்.(36) அவ்விரு வீரர்களாலும் ஏவப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், கூதிர்காலத்து வானில் திரியும் உற்சாகமான நாரைகளின் வரிசைகளைப் போலத் தெரிந்தன.(37)

அதேவேளையில், , கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} போரில் ஈடுபடுவதைக் கண்டு, அந்தச் சுமையானது பீமன் தாங்கிக் கொள்வதற்கு மிகப் பெரியது எனக் கருதினர்.(38) ஒருவரின் கணைகளை மற்றவர் கலங்கடிப்பதற்காகக் கர்ணனும், பீமனும் ஒருவர் மேல் ஒருவர் இக்கணைகளை ஏவியபோது, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்கள் பலர் இதனால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(39) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் அப்படி விழுந்ததன் விளைவாலும், விழுந்த உயிரினங்கள் உயிரை இழந்ததாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் படையில் ஒரு பேரழிவு ஏற்பட்டது.(40) விரைவில் அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களால் மறைக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.(41)


துரோண பர்வம் பகுதி – 131ல் வரும் மொத்த சுலோகங்களின் எண்ணிக்கை 41.

குறிப்பு: ஆசிரியரான கங்குலியின் பெயரில்லாமல், பதிப்பாளரான பிரதாப சந்திர ராய் அவர்களின் பெயரோடு பனிரெண்டு புத்தகங்களாக வந்த The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa இரண்டாம் பதிப்பின் பிடிஎஃப் கோப்புகள் இன்று கிடைத்தன. இந்தக் கோப்புகளில் துரோண பர்வத்தில் இருந்து உள்ள மொழிபெயர்ப்பு சுலோக எண்களுடன் கூடியதாக இருக்கிறது. மேலும் சில ஆயுதங்களின் பெயர்களும், சில பெயர்ச்சொற்களும் நேரடியான சம்ஸ்க்ருதச் சொற்களாகவே, தமிழ் வாசகருக்குப் புரியும் வகையில் இருக்கின்றன. நான் இதுவரை Sacred Texts வலைத்தளத்தில் வெளிவந்தவற்றையே மொழிபெயர்த்து வந்தேன். அஃது ஆங்கில வாசகருக்காகச் சில மாற்றங்களுடன் வந்ததாகத் தெரிகிறது. மற்றபடி இரண்டு பதிப்புகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. எனவே, இன்று கிடைத்த இந்தப் பிடிஎஃப் கோப்புகளின் உதவியுடன் இனி மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன். சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும். எனவே இப்பதிவில் இருந்து சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட மொழிபெயர்ப்பையும் இந்தக் கோப்புகளுடன் ஒப்புநோக்கி சுலோக எண்களைக் குறிக்க வேண்டும். முடியுமா என்று தெரியவில்லை.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்