Saturday, October 22, 2016

துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்! - துரோண பர்வம் பகுதி – 168

Vrishasena made Drupada to swoon! | Drona-Parva-Section-168 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : சித்திரசேனனுக்கும், சதாநீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்திரசேனனை வென்ற நகுலன் மகன் சதாநீகன்; கிருதவர்மனின் தேரில் தஞ்சமடைந்த சித்திரசேனன்; விருஷசேனனுக்கும், துருபதனுக்கும் இடையில் நடந்த மோதல்; துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்திய விருஷசேனன்; துச்சாசனனால் வெல்லப்பட்ட பிரதிவிந்தியன், தன் சகோதரர்களால் காக்கப்படுவது; பிரதிவிந்தியனிடம் இருந்து துச்சாசனனை மீட்க விரைந்து வந்த கௌரவப் படையினர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனான சித்திரசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், ஒன்பது கூரிய கணைகளால் சதானீகனை மார்பில் துளைத்தான்.(3) பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, நேரான கணைகளால் பலவற்றால் சித்திரசேனனின் உடலில் இருந்து அவனது கவசத்தை அறுத்தான். அவனது இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) தன் கவசத்தை இழந்த உமது மகன் {சித்திரசேனன்}, உரிய காலத்தில் சட்டையை உதிர்த்த பாம்பொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(5)



பிறகு அந்த நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் போராடிக் கொண்டிருந்த சித்திரசேனனின் கொடிமரத்தையும், அவனது வில்லையும் கூரிய கணைகள் பலவற்றால் வெட்டினான்.(6) அம்மோதலில் வில் அறுபட்டு, தன் கவசத்தையும் இழந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து எதிரிகளையும் துளைக்கவல்ல மற்றொரு வில்லை எடுத்தான்.(7) பிறகு பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சித்திரசேனன், நேரான கணைகள் பலவற்றால் நகுலனின் மகனை {சதாநீகனை} வேகமாகத் துளைத்தான்.(8) சினத்தால் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான சதாநீகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றான்.(9) பெரும் பலம் கொண்ட சிறப்புமிக்கச் சித்திரசேனன், அந்தத் தேரில் இருந்து கீழே குதித்து, இருபத்தைந்து கணைகளால் நகுலனின் மகனை {சதாநீகனைப்} பீடித்தான். பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் இப்படித் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த சித்திரசேனனின், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் வெட்டினான்.(11) வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன சித்திரசேனன் விரைவாக ஹிருதிகனின் சிறப்புமிக்க மகனுடைய {கிருதவர்மனின்} தேரில் ஏறிக் கொண்டான்.(12)

விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முன்னணியில் நின்று துரோணரை எதிர்த்துச் சென்ற வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே பெரும் வேகத்துடன் விரைந்தான்.(13) அம்மோதலில் யக்ஞசேனன் {துருபதன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணன் மகனுடைய {விருஷசேனனின்} கரங்களையும், மார்பையும் அறுபது கணைகளால் துளைத்தான்.(14) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட விருஷசேனன், தன் தேரில் நின்று கொண்டிருந்த யக்ஞசேனனின் {துருபதனின்} நடு மார்பைப் பல கணைகளால் துளைத்தான்.(15) அந்தக் கணைகளாலும், தங்கள் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்த கணைகளாலும் சிதைக்கப்பட்ட அவ்விரு போர்வீரர்களும், முள்விறைத்த இரண்டு முள்ளம்பன்றிகளைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(16) கூரிய முனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட அந்த நேரான கணைகளால் உண்டான காயங்களின் விளைவால் குருதியில் குளித்த அவர்கள், அந்தப் பயங்கர மோதலில் மிக அழகாகவே தெரிந்தனர்.(17) உண்மையில் அவர்கள் வழங்கிய காட்சியானது, அழகும், பிரகாசமும் கொண்ட கல்ப மரங்கள் இரண்டைப் போன்றோ, மலர்க்கொத்துகளால் செழித்திருக்கும் கின்சுகங்கள் {பலாச மரங்கள்} இரண்டைப் போன்றோ இருந்தது.(18)

அப்போது விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒன்பது கணைகளால் துருபதனைத் துளைத்து, மீண்டும் எழுபதாலும், பிறகு மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனை {துருபதனைத்} துளைத்தான்.(19) பிறகு ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகம் ஒன்றைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தான். பிறகு சினத்தால் எரிந்த துருபதன், கூரியதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான ஒரு பல்லத்தைக் கொண்டு விருஷசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(21) பிறகு புதியதும், பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்து, பலமானதும், கூராக்கப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும் கூரியதுமான ஒரு பல்லத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து எடுத்து, அதைத் தன் நாணில் பொருத்திய அவன் {விருஷசேனன்}, துருபதனை நோக்கிக் கவனமாகக் குறிபார்த்து, சோமகர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி பெரும் சக்தியுடன் அதை {அந்த பல்லத்தை} விடுத்தான்.(22,23) துருபதனின் மார்பைத் துளைத்துக் கடந்த அந்தக் கணை {பல்லம்} பூமியின் பரப்பில் விழுந்தது. பிறகு அந்த (பாஞ்சாலர்களின்) மன்னன் {துருபதன்}, விருஷசேனனின் கணையால் இப்படித் துளைக்கப்பட்டு மயக்கமடைந்தான்.(24) தன் கடமையை நினைவு கூர்ந்த அவனது சாரதி, களத்தை விட்டு வெளியே அவனை {துருபதனைக்} கொண்டு சென்றான்.

பாஞ்சாலர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துருபதன்} பின்வாங்கியதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய மழைக்காலத்து மேகத்திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(28) கர்ணனின் மகன் {விருஷசேனன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்போரில் இந்திரனைக் கண்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(29)

போரில் இப்படி விருஷசேனனால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32)  ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்கள் பலரையும், சோமகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் வீழ்த்திய அவன் {விருஷசேனன்}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான்.(33)

உமது மகன் துச்சாசனன், போரில் தன் எதிரிகளை எரித்தபடியே (துரோணரை எதிர்த்து) முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பிரதிவிந்தியனை எதிர்த்துச் சென்றான்.(34) அவர்களுக்கிடையில் நடைபெற்ற அம்மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில்லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ! ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (தன் எதிராளியின் தேருடைய} கொடி, அம்பறாத்தூணிகள், நாண்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் எண்ணற்ற துண்டுகளாக வெட்டினான்.(41)

தன் தேரை இழந்தவனும், நற்குணம் கொண்டவனுமான பிரதிவிந்தியன், கையில் வில்லுடன், எண்ணற்ற கணைகளை இறைத்தபடி, உமது மகனுடன் {துச்சாசனனுடன்} மோதினான்.(42) பிறகு தன் கரநளினத்தை வெளிக்காட்டிய துச்சாசனன், பிரதிவிந்தியனின் வில்லை அறுத்தான். மேலும் அவன் {துச்சாசனன்} வில்லற்ற தன் எதிராளியை {பிரதிவிந்தியனைப்} பத்து கணைகளால் பீடித்தான்.(43) தங்கள் அண்ணனின் (பிரதிவிந்தியனின்} அந்த அவல நிலையைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவனது சகோதரர்கள் அனைவரும், ஒரு பெரும்படையுடன் அந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தனர்.(44) பிறகு அவன் {பிரதிவிந்தியன்}, {பீமனின் மகனான} சுதசோமனின் பிரகாசமிக்கத் தேரில் ஏறினான். மேலும் அவன் {பிரதிவிந்தியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யம அரசின் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், உமது துருப்புகளுக்கும் அவர்களது துருப்புகளுக்கும் இடையில் கடும்போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(47)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 168-ல் வரும் மொத்த சுலோகங்கள்-47
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்