Friday, October 21, 2016

விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்! - துரோண பர்வம் பகுதி – 167

Salya made Virata to swoon! | Drona-Parva-Section-167 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : விராடனுடன் மோதிய சல்லியன்; சல்லியனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட விராடன்; விராடனின் தம்பியான சதாநீகனைக் கொன்ற சல்லியன்; மீண்டும் சல்லியனை எதிர்த்து விரைந்த விராடன்; விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்; அர்ஜுனனுக்கும் அலம்புசனுக்கும் இடையிலான மோதல்; அர்ஜுனனால் வெல்லப்பட்ட அலம்புசன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)


பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)

வீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)

துருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)

[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அலாயுதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அலம்புசன் என்றே இவன் சொல்லப்பட்டிருக்கிறான். இவன் கடோத்கசனால் கொல்லப்பட்ட அலம்புசன் கிடையாது.

அந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)

அலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(27)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 167-ல் வரும் மொத்த சுலோகங்கள்-27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்